என் மலர்tooltip icon

    கார்

    • மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யுவி மாடலின் 4-வீல் டிரைவ் வேரியண்டிற்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • மஹிந்திரா தார் தவிர மஹிந்திராவின் எம்பிவி கார் மராசோ மாடலுக்கு அதிகபட்ச சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது கார்களில் தேர்வு செய்யப்பட்ட எஸ்யுவி மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 72 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் மராசோ, பொலிரோ, பொலிரோ நியோ, தார் 4 வீல் டிரைவ் மற்றும் XUV300 போன்ற மாடல்களை அசத்தல் சலுகைகளுடன் வாங்கிட முடியும். தற்போது அதிக பிரபலமாக இருக்கும் ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ N, தார் 2 வீல் டிரைவ், XUV400 EV மற்றும் XUV700 போன்ற மாடல்களுக்கு எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

    இந்த மாத சலுகைகளில் மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 72 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் டாப் எண்ட் M6 மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மிட் ரேஞ்ச் M4பிளஸ் மற்றும் பேஸ் M2 வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 34 ஆயிரம் மற்றும் ரூ. 58 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. மராசோ மாடல் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     

    மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 66 ஆயிரம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டாப் எண்ட் B6 (O) வேரியண்டிற்கு ரூ. 51 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மிட் ரேஞ்ச் மற்றும் எண்ட்ரி லெவல் வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 24 ஆயிரம் மற்றும் ரூ. 37 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    இதே போன்று XUV300 மாடலுக்கு ரூ. 52 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் W8 டீசல் வேரியண்டிற்கு ரூ. 42 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான அக்சஸீர்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா பொலிரோ நியோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 48 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. இதன் டாப் எண்ட் மாடல்களுக்கு ரூ. 36 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 12 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா தார் 4X4 மாடலை வாங்குவோருக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இது பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்திய சந்தையில் தார் 4X4 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    • கியா இந்தியா நிறுவனத்தின் 2023 EV6 எலெக்ட்ரிக் கார் முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது.
    • கியா EV விற்பனை மையங்கள் எண்ணிக்கை 44 நகரங்களில் 60-ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் 2023 EV6 மாடல் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய 2023 கியா EV6 GT லைன் மாடலின் விலை ரூ. 60 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இதன் GT லைன் AWD வேரியண்ட் விலை ரூ. 65 லட்சத்து 95 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய EV6 மாடலுக்கான முன்பதிவு ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்குகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கியா EV6 மாடலின் விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் EV6 காரின் இரண்டாம் கட்ட யூனிட்கள் இவை ஆகும். தற்போது எத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யலாம் என்பதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.

     

    முதலில் முன்பதிவு செய்யும் சிலருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படும் என கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. "விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சந்தையில் வாடிக்கையாளர்கள் பிரீமியம் காரை வாங்குவதை உறுதிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறோம்," என்று கியா இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டே-ஜின் பார்க் தெரிவித்தார்.

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கியா நிறுவனம் நாடு முழுக்க 432 EV6 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கியா நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டதை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும். தட்டுப்பாடை தக்கவைத்துக் கொள்ள கியா நிறுவனம் 12 நகரங்களில் செயல்பட்டு வரும் 15 விற்பனை மையங்கள் எண்ணிக்கையை 44 நகரங்களில் 60 விற்பனை மையங்களாக அதிகப்படுத்த இருக்கிறது.

    இதுதவிர அனைத்து விற்பனை மையங்களிலும் 150 கிலோவாட் அதிவேக சார்ஜர் இன்ஸ்டால் செய்ய கியா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் கியா நிறுவனத்தின் முதல் 150 கிலோவாட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 240 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இன்ஸ்டால் செய்யப்பட்டது.

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் மற்றும் ஸ்லேவியா மாடல்கள் கிராஷ் டெஸ்டில் பெற்ற முடிவு விவரங்கள் வெளியாகியுள்ளன.
    • முற்றிலும் புதிய விதிகளுக்கு உட்பட்டு தற்போதைய டெஸ்டிங் செய்யப்பட்டு உள்ளன.

    குளோபல் NCAP நிறுவனம் சார்பில் சமீபத்தில் நடத்திய கிராஷ் டெஸ்ட் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், ஸ்கோடா ஸ்லேவியா, மாருதி சுசுகி வேகன் ஆர் மற்றும் மாருதி சுசுகி ஆல்டோ K10 போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

     

    ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலை மேம்பட்ட குளோபல் NCAP விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்து நடசத்திர குறியீட்டை பெற்று அசத்தி இருக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கு இந்த கார் 49-க்கு 42 புள்ளிகளை பெற்றது. பெரியவர்கள் பாதுகாப்புக்கு விர்டுஸ் மாடல் 34-க்கு 29.71 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

    விர்டுஸ் செடான் மாடலுக்கான பாடி ஷெல் நிலையாக இருக்கிறது என சான்று பெற்றுள்ளது. இந்த மாடலில் டூயல் ஏர்பேக், முன்புற சீட் பெல்ட் பிரீ-டென்ஷனர்கள், லோட் லமிடர்கள், நான்கு கூடுதல் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சீட் மவுண்ட்கள், ஏபிஎஸ், ஏபிடி மற்றும் இஎஸ்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

    • சிட்ரோயன் நிறுவனத்தின் C3 ஹேச்பேக் மாடல் ஏற்றுமதி இந்தியாவில் இருந்து துவங்கி இருக்கிறது.
    • கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் சிட்ரோயன் C3 ஹேச்பேக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த C3 ஹேச்பேக் மாடலை ASEAN மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது. சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல் காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்கிறது. முதற்கட்ட யூனிட்கள் காமராஜர் துறைமுகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல் - 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இருவித எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சிட்ரோயன் முழுமையாக உற்பத்தி செய்த முதல் கார் இது ஆகும்.

     

    "2019 ஆண்டு முதல் எங்களது ஓசூர் ஆலையில் இருந்து பவர்டிரெயின்களை ஏற்றுமதி செய்ய துவங்கினோம். புதிய C3 மாடல்களை சிபியு யூனிட்களாக ஏற்றுமதி செய்ய துவங்கியதில் இருந்து இந்தியாவில் புதிதாக மிகமுக்கிய மைல்கல்லை துவங்குகிறோம்."

    "நாங்கள் உருவாக்கி இருக்கும் 360 டிகிரி அமைவு எங்களின் விற்பனையில் பிரதிபலிக்க துவங்கியுள்ளது. இதை கொண்டு எதிர்காலத்திலும் வளர்ச்சி பெறுவோம்." என்று ஸ்டெலாண்டிஸ் இந்தியா தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ரோலண்ட் பௌச்சாரா தெரிவித்து இருக்கிறார்.

    • மெர்சிடிஸ் மேபேக் EQS எஸ்யுவி மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் மெர்சிடிஸ் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய மேபேக் எலெக்ட்ரிக் எஸ்யுவி வெளிப்புற தோற்றம் EQS எஸ்யுவி போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

    மெர்சிடிஸ் மேபேக் EQS 680 எஸ்யுவி மாடலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. சீனாவில் ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறும் ஆட்டோ ஷாங்காய் நிகழ்வில் முற்றிலும் புதிய மேபேக் EQS மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மேபேக் மாடல் அதிக ஆடம்பரமாகவும், பெருமளவு இடவசதி கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    புதிய ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் வெளிப்புற தோற்றம் EQS எஸ்யுவி போன்றே காட்சியளிக்கும் என்றும் இந்த மாடலில் சற்றே நீண்ட வீல்பேஸ் மற்றும் பின்புறத்தில் பெரிய கதவுகள் வழங்கப்படும் என தெரிகிறது. மேபேக் EQS எஸ்யுவி மாடலின் லோயர் பம்ப்பரில் செங்குத்தான ஸ்லாட்கள் வழங்கப்படுகிறது.

     

    காரின் உள்புறத்தில் அதிக தரமுள்ள பியானோ பிளாக், லெதர், மரத்தால் ஆன பாகங்கள் மற்றும் மென்மையான இருக்கைகள், அதிக சவுகரியத்தை வழங்கும் தலையணைகள் வழங்கப்பட உள்ளன. பாதுகாப்பிற்கு அதிகபட்சம் 12 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் எலெக்ட்ரிக் அம்சங்களான டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு அசிஸ்ட், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ABS, EBD, BBA, டார்க் வெக்டாரிங், ADAS அம்சங்களான ப்ளைண்ட் ஸ்பாட் வார்னிங், லேன் அசிஸ்ட், கிராஸ் டிராஃபிக் அசிஸ்ட், கொலிஷன் வார்னிங், பார்கிங் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    EQS 580 எஸ்யுவி-இல் உள்ளதை போன்றே புதிய மேபேக் EQS மாடலிலும் டூயல் மோட்டார், ஆல் வீல் டிரைவ் செட்டப் வழங்கப்படும் என தெரிகிறது. இது 536 ஹெச்பி பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எஸ்யுவி தற்போது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.6 நொடிகளில் எட்டிவிடும்.

    மேபேக் வேரியண்டில் இதன் டியூனிங் மேலும் அதிக செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. ஸ்டாண்டர்டு EQS 580 எஸ்யுவி மாடல் முழு சார்ஜ் செய்தால் 671 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த எஸ்யுவி-இல் 107.8 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் தார் 4x4 மாடல் 2020 வாக்கில் பாதுகாப்புக்கு நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்றது.
    • மஹிந்திரா தார் 4x2 வெர்ஷன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    மஹிந்திரா நிறுவனம் தார் எஸ்யுவி உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை எட்டியது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் உற்பத்தி ஆலையில் இருந்து ஒரு லட்சமாவது யூனிட் வெளியிடப்பட்டது. இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 2.5 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளது.

    அக்டோபர் 2020 வாக்கில் மஹிந்திரா தார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2010 வாக்கில் அறிமுகமான முதல் தலைமுறை மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மஹிந்திரா தார் மாடல் அறிமுகமான முதல் மூன்று வாரங்களில் சுமார் 15 ஆயிரம் முன்பதிவுகளையும், முதல் ஆண்டிற்குள் 75 ஆயிரம் முன்பதிவுகளை பெற்றது.

     

    அறிமுகம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் தார் 4x4 மாடல் குளோபல் NCAP பாதுகாப்பு பரிசோதனையில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்றது. எனினும், இது பழைய டெஸ்டிங் வழிமுறைகளின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் தார் மாடலின் 4x2 வெர்ஷனை அறிமுகம் செய்தது.

    மஹிந்திரா தார் மாடல் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 118 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 152 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 130 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியக்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் டீசல் எஞ்சின் 4WD ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் 4WD மற்றும் 2WD ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட EV9 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் லெவல் 3 ADAS அம்சங்களை கொண்டுள்ளது.
    • புதிய கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 541 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    கொரிய கார் உற்பத்தியாளரான கியா தனது இரண்டாவது பிரத்யேக எலெக்ட்ரிக் வாகனம், கியா EV9 மாடலை அறிமுகம் செய்தது. இது மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட ஃபுல் சைஸ் எஸ்யுவி மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் வாகனமும் E-GMP பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் இது கியா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும்.

    கியா EV9 மாடலில் யுனைடெட் டிசைன் மற்றும் கியாவின் பாரம்பரியம் மிக்க டைகர் நோஸ் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பாடி நிறத்தின் பின் டிஜிட்டல் லைட் பேட்டன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவி நீண்ட வீல்பேஸ், குறைந்த ஓவர்ஹேங்குகளை கொண்டுள்ளது. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. காரில் கூர்மையான லைன்கள் மற்றும் ஃபெண்டர் ஃபிளேர்கள் வெளிப்புற ஹைலைட்களில் ஒன்றாக உள்ளன.

     

    உள்புறம் கட்டாயம் இருக்க வேண்டிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பத்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அம்சம் பெறும் முதல் கியா கார் என்ற பெருமையை கியா EV9 பெற்றுள்ளது. இத்துடன் டேஷ்போர்டு மினிமலிஸ்ட் டிசைன், கிடைமட்டமாக பொருத்தப்பட்ட டிஸ்ப்ளேவில் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் உள்ளது. இதன் இரண்டாவது அடுக்கில் சீரான தரை மற்றும் சுழலும் வகையான இருக்கைகள் உள்ளன.

    இதனால் பின்புற இருக்கையில் அமர்வோர் ஒவ்வொருத்தர் முகத்தை பார்த்த நிலையில் அமர்ந்து கொள்ள முடியும். இதுதவிர 14 ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் இலுமினேட் செய்யப்பட்ட லோகோ, ஆம்பியண்ட் லைட்டிங், ஸ்டீரிங் வீல் டேபிள், ரிலாக்சேஷன் இருக்கைகள், டிராயர் போன்று திறக்கக்கூடிய கன்சோல் உள்ளன. இத்துடன் லெவல் 3 ADAS தொழில்நுட்பம் கொண்ட முதல் கியா கார் EV9 ஆகும்.

     

    இதில் உள்ள 99.8 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர் வரை செல்லும். இத்துடன் 800 வோல்ட் சார்ஜர் மூலம் இந்த காரை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 239 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதன் ஆல் வீல் டிரைவ் லாங் ரேஞ்ச் மாடல் அதிகபட்சம் 283 கிலோவாட் மற்றும் 600 நியூட்டர் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எஸ்யுவியில் மேம்பட்ட டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோ டெரைன் மோட் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் கியா EV9 முன்பதிவு கொரியாவில் துவங்கவுள்ளது. பின் 2023 இறுதியில் ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் சில ஆசிய சந்தைகளில் கியா EV9 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் கியா EV9 அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ பிளாக் எடிஷன் மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளன.
    • புதிய பிளாக் எடிஷன் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது நெக்சா பிராண்டு பிளாக் எடிஷன் மாடல்களை இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிவித்து இருந்தது. தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய பிளாக் எடிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா போன்ற மாடல்கள் பியல் மிட்நைட் பிளாக் நிறம் கொண்டிருந்த நிலையில், தற்போது பலேனோ மாடலும் இதே நிறம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    விற்பனையகம் ஒன்றில் பலேனோ பிளாக் எடிஷன் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பிரீமியம் ஹேச்பேக் பலேனோ மாடலின் பிளாக் எடிஷன் சீட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்களில் மட்டும் கிடைக்கின்றன. இந்த காரின் வெளிப்புறம் பியல் மிட்நைட் பிளாக் நிறம் கொண்டிருக்கின்றன.

     

    இத்துடன் முன்புற கிரில், ஃபாக் லேம்ப் ஹவுசிங், விண்டோ சில், டோர் ஹேண்டில் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவைகளில் க்ரோம் எலிமண்ட்கள் உள்ளன. அம்சங்களை பொருத்தவரை பலேனோ ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ள அனைத்து அம்சங்களும் பிளாக் எடிஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மாருதி சுசுகி பலேனோ மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் CNG கிட் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மோடில் இது 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், CNG மோடில் இது 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    Photo Courtesy: Anubhav Chauhan

    • ஹூண்டாய் நிறுவனத்தின் 2023 வெர்னா டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 17 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.
    • புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது ஆறாவது தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடல் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2023 வெர்னா மாடலின் விலை அறிவிக்கும் போதே இதனை வாங்க சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். தற்போது 2023 ஹூண்டாய் வெர்னா கார் முன்பதிவில் 10 ஆயிரத்திற்கும் அதிக கடந்துள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதி புதிய ஹூண்டாய் காருக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

     

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX, மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் இரண்டு பெட்ரோல் என்ஜின்கள், அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முற்றிலும் புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதில் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் NA பெட்ரோல் என்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • மாருதி சுசுகியின் நெக்சா பிராண்டு இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டி அசத்தியுள்ளது.
    • 2022-23-இல் மாருதியின் ஒட்டுமொத்த விற்பனையில் நெக்சா பிராண்டு 20 சதவீத பங்குகளை எட்டியது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் விற்பனை பிரிவான நெக்சா இந்திய விற்பனையில் 20 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது நாட்டின் 280-க்கும் அதிக நகரங்களில் சுமார் 440 விற்பனை மையங்களை நெக்சா கொண்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு 5 சதவீதத்தில் துவங்கி 2022-23 ஆண்டு நெக்சா விற்பனை 20 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

    தற்போது இந்திய சந்தையில் இக்னிஸ், பலேனோ, சியாஸ், XL6 மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்கள் நெக்சா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுடன் முற்றிலும் புதிய ஜிம்னி மற்றும் Fronx மாடல்கள் விரைவில் இணைய உள்ளன. இரு மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போ 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    "வித்தியாசமான அனுபவங்கள், புதுமை-மிக்க, அதநவீன தொழில்நுட்பத்தை வழங்கும் நோக்கில் 2015 வாக்கில் நெக்சா துவங்கப்பட்டது. ஒவ்வொரு நெக்சா வாகனமும் அதிநவீன தொழில்நுட்பம், டிசைன் மற்றும் அம்சங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது."

    "நெக்சா பிராண்டு 20 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது, வாடிக்கையாளர்கள் எங்களின் உயர் ரக மற்றும் அதிக அம்சங்கள் நிறைந்த வாகனங்கள், பிரீமியம் அனுபவத்திற்கு வழங்கிய அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. மாருதி சுசுகியின் ஒட்டுமொத்த விற்பனையில் நெக்சா மட்டும் 20 சதவீத பங்குகளை பெற்றுள்ளது."

    "சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிம்னி மற்றும் Fronx மாடல்கள் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இரு மாடல்களை வாங்க இதுவரை சுமார் 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டை நெக்சா பிராண்டு வெற்றிகரமாக நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறோம்," என மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார். 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் Fronx மாடல் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
    • புதிய Fronx மாடல் நாடு முழுக்க விற்பனை மையங்களுக்கு வரத் துவங்கி உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய Fronx மாடலை இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. பின் இந்த மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய மாருதி Fronx மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், மாருதி Fronx மாடல் இதுவரை சுமார் 15 ஆயிரத்து 500-க்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. விற்பனையகம் வரத் துவங்கி இருக்கும் நிலையில், மாருதி Fronx மாடலின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

     

    2023 மாருதி Fronx மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை முறையே 99 ஹெச்பி பவர், 147 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், AMT யூனிட் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய மாருதி Fronx மாடல் சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், சீட்டா மற்றும் ஆல்ஃபா என ஐந்து விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் ஆர்க்டிக் வைட், கிராண்டியுர் கிரே, ஏர்தன் பிரவுன், ஒபுலண்ட் ரெட், ஸ்பிலெண்டிட் சில்வர், ஏதர்ன் பிரவுன் - புளூயிஷ் பிளாக் ரூஃப், ஒபுலண்ட் ரெட் - புளூயிஷ் பிளாக் ரூஃப் மற்றும் ஸ்பிலெண்டிட் சில்வர் - புளூயிஷ் பிளாக் ரூஃப் என எட்டுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    • லம்போர்கினி நிறுவனத்தின் புதிய உருஸ் எண்ட்ரி லெவல் மாடல் அறிமுக விவரம் வெளியானது.
    • சர்வதேச சந்தையில் உருஸ் S மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இத்தாலியை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான லம்போர்கினி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த உருஸ் S மாடலை இந்தியாவுக்கு கொண்டு வருகிறது. புதிய உருஸ் S எஸ்யுவி மாடல் ஏப்ரல் 13 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என லம்போர்கினி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக லம்போர்கினி உருஸ் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு லம்போர்கினி விற்பனை செய்த ஒட்டுமொத்த கார்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உருஸ் எஸ்யுவி யூனிட்கள் இடம்பிடித்தன. கடந்த ஆண்டு மட்டும் லம்போர்கினி நிறுவனம் 200-க்கும் அதிக உருஸ் மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது.

     

    புதிய லம்போர்கினி S மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புறம் குவாட் எக்சாஸ்ட் அவுட்லெட்கள், வெண்டெட் பொனெட் மற்றும் கார்பன் ஃபைபர் ரூஃப் உள்ளன. மேலும் டூயல் டோன் இண்டீரியர் தீம், செயற்கைக்கோள் சார்ந்த நேவிகேஷன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் டிஜிட்டல் கார் கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    லம்போர்கினி உருஸ் S மாடலில் 4.0 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 666 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ×