என் மலர்tooltip icon

    கார்

    ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது ஆலையில் உற்பத்தி பணிகளை மீண்டும் துவங்கியது. முதல் நாளில் இந்நிறுவனம் மொத்தம் 200 கார்களை உற்பத்தி செய்திருக்கிறது.

    கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த ஆலையில் நடைபெற்று வந்த பணிகள் மார்ச் 23 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், உற்பத்தி பணிகளை ஹூண்டாய் மீண்டும் துவங்கியுள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் 200 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

    ஹூண்டாய் ஐ20

    மாநில மற்றும் மத்திய அரசுகள் வெளியிட்ட வழிமுறைகளின்படி ஆலை பணிகளின் போது சமூக இடைவெளி 100 சதவீதம் பின்பற்றப்பட்டதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்கி இருப்பதால், ஹூண்டாய் நிறுவனம் இந்த மாதத்தில் மட்டும் சுமார் 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

    முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் நாடு முழுக்க 255 விற்பனையகங்களில் பணிகளை மீண்டும் துவங்கியது. இதுதவிர இரண்டே நாட்களில் 170 யூனிட்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 
    நிசான் நிறுவனத்தின் புதிய கிக்ஸ் பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    நிசான் நிறுவனம் இந்தியாவில் புதிய கிக்ஸ் பிஎஸ்6 காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்யுவி மாடலில் பல்வேறு அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நிசான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல் நான்கு வேரியண்ட்கள் மற்றும் இரு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய கிக்ஸ் பிஎஸ்6 கார் ஸ்டாண்டர்டு வாரண்டி பேக்கேஜுடன் வழங்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகள் வாரண்டி அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டியை வழங்குகிறது. கூடுதலாக வாரண்டியை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளும் வசதி வழங்க்படுகிறது.

    நிசான் கிக்ஸ்

    என்ஜினை பொருத்தவரை புதிய கிக்ஸ் எஸ்யுவி என்ட்ரி லெவல் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்குகிறது. டர்போ பெட்ரோல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பிரீமியம் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. 

    புதிய கிக்ஸ் பிஎஸ்6 மாடலில் கேஸ்கேடிங் கிரில், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதில் டூயல் டோன் இன்டீரியர் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரல் அங்கீகார வசதி மற்றும் நிசான் கனெக்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் ஐ10 கிராண்ட் நியோஸ் பிஎஸ்6 காரை அறிமுகம் செய்துள்ளது.
     


    ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐ10 மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 6.75 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    பிஎஸ்6 டீசல் என்ஜின் மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் மூன்று வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் ஆஸ்டா வேரியண்ட் விலை ரூ. 8.04 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் மாடலில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட டீசல் வேரியண்ட் விலை ரூ.7.90 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் ஐ10 கிராண்ட் நியோஸ்

    ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் மாடலில் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 74 பிஹெச்பி பவர், 190 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மேம்பட்ட என்ஜின் தவிர காரின் வடிவமைப்பு முழுக்க பிஎஸ்4 மாடலில் உள்ளது போன்றே வழங்கப்பட்டுள்ளது. இதில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் குரல் வழி கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் எஸ்யுவி மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் ஹூண்டாய் சாண்ட்ரோ கார் இந்திய சந்தையில் பேஸ் மாடலாக இருக்கிறது. புதிய கார் சான்ட்ரோ மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்வதற்கான ஆய்வினை ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அந்நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் தருன் கார்க் தெரிவித்தார். 

    புதிய என்ட்ரி லெவல் மாடல் மைக்ரோ எஸ்யுவியாக இருக்கும் என்றும் இது மாருதி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் ரெனால்ட் க்விட் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

    ஹூண்டாயின் புதிய என்ட்ரி லெவல் மாடல் இந்திய வாடிக்கையாளர்களில் முதல் முறை கார் வாங்குவோரை கவரும் வகையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் ஹேட்ச்பேக் பிரிவு அதிக விற்பனையை பெற்று வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ, நியோஸ் மற்றும் ஐ10 கிராண்ட் உள்ளிட்டவை அதிக விற்பனையாகி இருக்கிறது.

    இதுதவிர ஹூண்டாய் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் இயான் ஹேட்ச்பேக் மாடலை விற்பனை செய்து வந்தது. எனினும், இந்த மாடலின் விற்பனை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது.
    இந்திய சந்தையில் வாகனங்களை விற்பனை செய்வது மற்றும் சர்வீஸ் முன்பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வால்வோ நிறுவனம் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது.



    ஸ்வீடன் நாட்டு கார் உற்பத்தியாளரான வால்வோ தனது வானங்களை ஆன்லைனில் விற்பனை செய்யவும், சர்வீஸ் முன்பதிவுகளை மேற்கொள்ளவும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. 

    புதிய திட்டத்தை வால்வோ நிறுவனம் வால்வோ காண்டாக்ட்லெஸ் புரோகிராம் என அழைக்கிறது. புதிய திட்டத்தில் வால்வோ வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாகனங்களை வாங்க விரும்புவோர் பயன்பெற முடியும். இதில் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை சர்வீஸ் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    வால்வோ கார்

    இத்துடன் புதிய வால்வோ கார் வாங்குவோரும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான டெஸ்ட் டிரைவ் வழங்கப்படுவதாக வால்வோ தெரிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ் நிதி சேவைகள் டிஜிட்டல் முறையிலும், ஆன்லைனில் ஆவனங்களை சரிபார்ப்பது என வாகனத்தை முழுமையாக ஆன்லைன் மூலமாகவே வாங்க முடியும்.

    தற்போதைய கொரோனா பாதிப்பையொட்டி வால்வோ நிறுவன விற்பனையகங்கள் முழுக்க பாதுகாப்பானதாக மாற்ற கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்படுவதாக வால்வோ தெரிவித்துள்ளது. இத்துடன் கார்களை சுத்தம் செய்ய வால்வோ நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
    ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் இந்தியா நிறுவனம் ஜீப் மாடல்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் தளத்தை துவங்கியுள்ளது.



    ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் (எஃப்சிஏ) நிறுவனம் தனது ஜீப் மாடல்களை ஆன்லைனில் விற்பனை செய்ய புதிய தளத்தை துவங்கி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் புக் மை ஜீப் எனும் தளத்திற்கு சென்று வாங்க விரும்பும் எஸ்யுவி மாடலை மூன்றே வழிமுறைகளில் வாங்கிக் கொள்ள முடியும்.

    தற்சமயம் நாடுமுழுக்க கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய ஆன்லைன் தளத்தை எஃப்சிஏ நிறுவனம் துவங்கி உள்ளது. இந்த தளத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் நேரடியாக விற்பனையகம் செல்லாமல் புதிய வாகனத்தை தேர்வு செய்ய முடியும்.

    புக் மை ஜீப்

    ஜீப் இந்தியா வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ள புக் மை ஜீப் தளம் கொண்டு வாடிக்கையாளர்கள் விரும்பும் ஜீப் மாடலின் சரியான வேரியண்ட், பவர்டிரெயின் ஆப்ஷன், நிறம் மற்றும் இதர விவரங்களை தேர்வு செய்யலாம். வாகனம் கான்ஃபிகர் செய்யப்பட்டதும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

    ஆன்லைன் முன்பதிவு நிறைவுற்றதும் புக் மை ஜீப் தளம் வாடிக்கையாளருக்கென பிரத்யேக ஐடியை உருவாக்கி, அதனை வாடிக்கையாளர் வசிக்கும் விற்பனையாளருடன் இணைத்து விடும். பின் விற்பனை மைய அதிகாரி வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு டெஸ்ட் டிரைவ் ஏற்பாடு செய்யப்படும்.
    டொயோட்டா நிறுவனத்தின் மேம்பட்ட யாரிஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    டொயோடா நிறுவனம் வாடகைக் கார் உபயோகிப்பாளருக்கென மேம்படுத்தப்பட்ட யாரிஸ் மாடலை வாடகைக் கார் பிரிவினருக்கானதாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக வேகக் கட்டுப்பாடு செயல்பாட்டை கொண்ட கருவி பொருத்திப்படுகிறது. 

    டொயோட்டா யாரிஸ் செடான மாடல் மொத்தம் 7 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8.76 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப், பவர் அட்ஜெஸ்டபிள் மிரர், அட்ஜெஸ்டபிள் டிரைவர் சீட், ரிமோட் லாக்கிங், பவர் விண்டோ, பின் இருக்கை பயணிகள் கைகளை வைக்க வசதியான ஆர்ம் ரெஸ்ட் மற்றும் 3 ஏர் பேக்குகளைக் கொண்டிருக்கிறது.

    டொயோட்டா யாரிஸ்

    இது 107 ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலும் கிடைக்கிறது. வாடகைக் கார் உரிமையாளர்களுக்கென சில சுலப நிதி சலுகைத் திட்டங்களையும் இந்நிறுவனம் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    டொயோடா மாடல்களில் முன்னர் டீசல் மாடல் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இது சந்தையில் பெரும் வரவேற்பை பெறவில்லை. தற்போது பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. மாடல்களில் தயாரிக்கப்பட்டுள்ளது விற்பனையை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை கிரெட்டா கார் முன்பதிவில் 20 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறது.



    ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமுறை கிரெட்டா காரை வாங்க இந்தியாவில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து இருக்கின்றனர். இரண்டாம் தலைமுறை கிரெட்டா காரை வாங்க 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்பே புதிய ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்க 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதை தொடர்ந்து தற்சமயம் கிரெட்டா முன்பதிவு 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. ஊரடங்கு காலக்கட்டத்திலும் கிரெட்டா காருக்கு இத்தனை வரவேற்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என ஹூண்டாய் மோட்டார் நிறுவன விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு தலைவர் தருன் கார்க் தெரிவித்தார். 

    ஹூண்டாய் கிரெட்டா

    கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் புதிய தலைமுறை கிரெட்டா காருக்கான விநியோகம் துவங்கும் என ஹூண்டாய் நிறுவனம் உறுதியளித்து இருக்கிறது. கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் விநியோகம் துவங்கும் என தருன் கார்க் தெரிவித்து இருக்கிறார். இதுவரை இந்தியா முழுக்க பல்வேறு விற்பனையாளர்களுக்கு 6703 கிரெட்டா யூனிட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்6 எக்ஸ்யுவி500 எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்பட்ட மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 13.20 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், இதன் விநியோகம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நிறைவுற்றதும் துவங்கும் என கூறப்படுகிறது.  புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் W5, W7, W9 மற்றும் W11(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 13.20 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் W11(O) வேரியண்ட் விலை ரூ. 17.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6

    மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட ஆறாம் தலைமுறையை சேர்ந்த 2.2. லிட்டர் இவிஜிடி எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜன் 153 பிஹெச்பி பவரை 3750 ஆர்பிஎம்-இலும், 360 என்எம் டார்க் இழுவிசையை 1,750 முதல் 2800 விரையிலான ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. 

    இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள், உபகரணங்கள் போன்றவற்றிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
    ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனை மற்றும் சேவையை துவங்கி இருக்கிறது.
     


    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது வாகனங்களின் ஆன்லைன் விற்பனை மற்றும் சேவையை துவங்கி இருக்கிறது. ஆன்லைன் கார் விற்பனை மூலம் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் காலக்கட்டத்தில் பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தை வழங்க முடியும். 

    கார் வாங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ள முடியும் என ஃபோக்ஸ்வேகன் இந்தியா தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் மாடலை தேர்வு செய்வது, வாகனத்தை முன்பதிவு செய்வது மற்றும் அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

    ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி

    வாடிக்கையாளர்கள் வாங்கும் கார்களை வீட்டிற்கே விநியோகம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளருக்கு கார் விநியோகம் செய்யும் முன் விற்பனையாளரின் பணியாளர்கள் காரை முழுமையாக சுத்தம் செய்து வழங்குவர்.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 137 விற்பனை மற்றும் 116 சரீவாஸ் டச் பாயிண்ட்களும் ஆன்லைனில் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா வலைதளத்தில் வாடிக்கையாளர்கள் அனைத்து சேவைகளையும் இயக்க முடியும். 

    இந்தியாவில் மே 3 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததும், பணிகளை துவங்க ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டிகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் டி ராக் எஸ்யுவி மாடல்களின் விநியோகத்தை துவங்க இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் 2020 ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
     


    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சத்தமில்லாமல் பிஎஸ்6 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலுக்கான முன்பதிவுகள் ரூ. 5 ஆயிரம் தொகையில் மேற்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் புதிய காரை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

    புதிய ஸ்கார்பியோ மாடல் எஸ்5, எஸ்7, எஸ்9 மற்றும் எஸ்11 என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடலில் புதிய கிரில், க்ரோம் இன்சர்ட்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. 

    மஹிந்திரா ஸ்கார்பியோ

    பின்புறம் மேம்பட்ட டெயில்கேட், க்ரோம் அப்லிக், மெல்லிய எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் பியல் வைட், நபோளி பிளாக், மோல்டன் ரெட் மற்றும் சாட் சில்வர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

    2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் எம்ஹாக், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 40 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 பேஸ் மாடலின் விலை ரூ. 11.98 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.52 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 பிஎஸ்6 கார் முன்பதிவு ஆன்லைனில் துவங்கப்பட்டு இருக்கிறது.



    மஹிந்திரா நிறுவனம் தனது பிஎஸ்6 எக்ஸ்யுவி500 மாடல் காருக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள போதும், இவற்றின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய பிஎஸ்6 ரக எஸ்யுவி மாடலின் முழு விவரங்களும் மஹிந்திரா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், இதன் விற்பனை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின் துவங்கும் என தெரிகிறது. 
     
    மஹிந்திரா எக்ஸ்யுவி500

    மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட ஆறாம் தலைமுறையை சேர்ந்த 2.2. லிட்டர் இவிஜிடி எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜன் 153 பிஹெச்பி பவரை 3750 ஆர்பிஎம்-இலும், 360 என்எம் டார்க் இழுவிசையை 1,750 முதல் 2800 விரையிலான ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. 

    இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள், உபகரணங்கள் போன்றவற்றிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
    ×