என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஜீப் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி நிதி சலுகைகள் அறிவிப்பு
Byமாலை மலர்29 May 2020 10:54 AM GMT (Updated: 29 May 2020 10:56 AM GMT)
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் ஜீப் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதி சலுகைகளை அறிவித்துள்ளது.
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (எஃப்சிஏ) நிறுவனம் ஜீப் ஃபார் ஆல் எனும் பெயரில் நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மிக எளிய மாத தவணை முறை வசதியை குறைந்த வட்டியில் வழங்குகிறது. இந்த சலுகையின் கீழ் பெண்களுக்கு 100 சதவீதம் ஆன்-ரோட் விலைக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது.
இத்துடன் திடீரென வேலையின்மை, விபத்து அல்லது உடல் நலம் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும் பட்சத்தில் காருக்கான கடன் தொகையில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த மாத தவணை வசதி முதல் 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
புதிய திட்டத்தின் மூலம் ஜீப் எஸ்யுவியை மேலும் அதிகளவு வாடிக்கையாளர்கள் வாங்குவர் என எஃப்சிஏ நம்புகிறது. குறைந்த வட்டி தொகை தேர்வு செய்யப்பட்ட வங்கிகளில் வழங்கப்படுகிறது. இதற்கென ஜீப் மற்றும் தனியார் துறை வங்கிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் கடன் தொகையை ஏழு ஆண்டுகளுக்கு மாத தவணை முறையில் செலுத்தலாம். புதிய சலுகையை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது எஃப்சிஏ-வின் புக் மை ஜீப் முன்பதிவு முனையத்திற்கு சென்று பயன்பெறலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X