என் மலர்tooltip icon

    கார்

    கார் விற்பனையை ஊக்குவிக்க மாருதி சுசுகி நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
      


    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்க அதிரடி நிதி சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கென மாருதி சுசுகி நிறுவனம் சோலமண்டலம் நிதி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. 

    இத்துடன் வாகனத்தின் ஆன் ரோடு விலையில் 90 சதவீதம் நிதி சலுகையும், நீண்ட கால மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமைஸ் செய்யக்கூடிய வகையில் நிதி சலுகைகளை வழங்கும் நோக்கில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

    மாருதி சுசுகி

    பை நௌ பே லேட்டர் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்கிய 60 நாட்கள் கழித்து மாத தவணையை செலுத்த முடியும். எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசுகி மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 

    மேலும் இது ஜூன் 30 ஆம் தேதிக்குள் கடன் தொகை உறுதி செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற சலுகையை அறிவித்து இருக்கின்றன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய 2020 வெர்னா ஃபேஸ்லிப்ட் காரின் விற்பனை துவங்கியுள்ளது.

      

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனையை துவங்கியுள்ளது. ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும் 2020 வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடலின் துவக்க விலை ரூ. 9.30 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எணஅட் மாடல் விலை ரூ. 13.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக மார்ச் மாத வாக்கில் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடல் விலை அறிவிக்கப்பட்டது. எனினும், ஊரடங்கு காரணமாக இதன் விற்பனை தாமதமாகி வந்தது. தற்சமயம் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்படுவதால், முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது பணிகளை மெல்ல துவங்கி வருகின்றன.

    புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. புதிய 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  

    அதன்படி புதிய காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய வெர்னா மாடலில் கேஸ்கேடிங் கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், டி.ஆர்.எல். உள்ளிட்டவையும் மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய ORVMகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், மேம்பட்ட பூட் லிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்ட்

    காரின் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மல்டி ஃபங்ஷன் ஸ்டீரிங் வீல், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சென்ட்டர் கன்சோல் ஆம் ரெஸ்ட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆம்கிஸ் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹூண்டாய் செடான் மாடல்- 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 118 பிஹெச்பி மற்றும் 172 என்எம் டார்க் மற்ற இரு என்ஜின்களும் 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.

    இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.
    ஹோண்டா நிறுவனத்தின் 2020 செடான் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் காரின் விற்பனை கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தாமதமாகி வருகிறது. நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக வணிக நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனமும் விற்பனையாகவில்லை. 

    இதுபோன்ற சூழ்நிலைகளால் தொடர்ந்து ஹோண்டா சிட்டி விற்பனை தாமதமாகி வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு நிறைவுற்றதும் ஹோண்டா சிட்டி விற்பனை துவங்கும் என தெரியவந்துள்ளது. 

    ஹோண்டா சிட்டி

    புதிய கார் வெளியீட்டை வேண்டுமென்றே தாமதப்படுத்தவில்லை. வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டதும், அதற்கான அறிவிப்பு வெளியாகிவிடும் என ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தெரிவித்தார். 

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய சிட்டி மாடல் பெட்ரோல் என்ஜின் மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், இவற்றை முற்றிலும் மறுக்கும் வகையில் 2020 ஹோண்டா சிட்டி மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 
    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டிரைபர் ஏஎம்டி கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் டிரைபர் எம்பிவி காரின் ஏஎம்டி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெனால்ட் டிரைபர் ஏஎம்டி மாடல் துவக்க விலை ரூ. 6.18 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ரெனால்ட் டிரைபர் ஏஎம்டி- ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடலான ரெனால்ட் டிரைபர் ஆர்எக்ஸ்இசட் ஏஎம்டி விலை ரூ. 7.22 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மேனுவல் வெர்ஷனை விட ரூ. 40 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.

    ரெனால்ட் டிரைபர்

    ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், ரெனால்ட் டிரைபர் விலை தற்சமயம் ரூ. 4.99 லட்சத்தில் துவங்கி ரூ.7.22 லட்சம் வரை கிடைக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    புதிய ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் யூனிட் தவிர ரெனால்ட் டிரைபர் மாடலில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய எம்பிவி மாடலில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 63 பிஹெச்பி பவர், 91 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா முன்பதிவுகள் 25 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் இந்த காரை வாங்க இத்தனை பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    விட்டாரா பிரெஸ்ஸா மாடல் மிக குறைந்த காலகட்டத்தில் இத்தகைய மைல்கல்லை எட்டியிருக்கிறது. மேலும் தற்போதைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது என மாருதி சுசுகி இந்தியா விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா

    முன்னதாக விட்டாரா பிரெஸ்ஸா மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா விலை ரூ. 7.34 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    புதிய 2020 விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் புதிய எல்இடி ஹெட்லேம்ப் டிசைன், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ஆட்டோ டிம் ஆகும் ஐஆர்விஎம்கள், ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகியின் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை வாங்க இதுவரை சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கும் முன் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனை துவங்கியது. புதிய இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் ஏற்கனவே 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் முன்பதிவுகளை கடந்துவிட்டது என மாருதி சுசுகி நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தனியார் நிறுவன பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 

    மாருதி சுசுகி இக்னிஸ்

    மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் முன்னதாக நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய காரின் முன்புறம் கிரில் அப்டேட் செய்யப்பட்டு, க்ரோம் அக்சென்ட் மற்றும் சரவுண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புற பம்ப்பர் மாற்றப்பட்டு சற்று பெரியதாக காட்சியளிக்கிறது. 

    இதன் டெல்டா வேரியண்ட்டில் கூடுதலாக ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ரூஃப் ரெயில்கள் மற்றும் கிளாடிங் செய்யப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வாய்ஸ் கமாண்ட் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பி.எஸ்.6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் வசதியும் வழங்கப்படுகிறது.
    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேறுவழியின்றி மஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனம் டியுவி300 பிஎஸ்6 ஃபேஸ்லிப்ட் மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முன் டியுவி300 காம்பேக்ட் எஸ்யுவி மாடல் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. பின் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து பணிகளும் முடங்கின.

    2020 மஹிந்திரா டியுவி300 மாடல் மட்டுமின்றி டியுவி300 பிளஸ் மாடலின் வெளியீடும் தாமதமாகி உள்ளது. இரு மாடல்களிலும் பெரும்பாலான அம்சங்கள் ஒரேமாதிரி வழங்கப்பட்டுள்ளது. டியுவி300 பிளஸ் மாடலில் அதிக இருக்கைகளுக்கு தேவையான இடவசதி மட்டும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா டியுவி300 பிளஸ்

    இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் இரு மாடல்களும் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு மாடல்களிலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரின் முன்புறம் மாற்றப்பட்டு புதிய கிரில் மெல்லிய ஸ்லாட்கள், மேம்பட்ட பம்ப்பர் டிசைன், ஸ்போர்ட் வடிவமைப்பில் ஏர் டேம், புதிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா டியுவி300 மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்படுகிறது. இது 98 பிஹெச்பி பவர், 240 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    டியுவி300 பிளஸ் மாடலில் பிஎஸ்6 ரக 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 138 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா எஸ் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் எலான்ட்ரா செடான் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் எலான்ட்ரா எஸ் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 15.89 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதால், எலான்ட்ரா மாடலின் துவக்க விலை அதிகமாகி உள்ளது. அதன்படி எலான்ட்ரா எஸ் மாடலுக்கு மாற்றாக எலான்ட்ரா எஸ்எக்ஸ் என்ட்ரி லெவல் மாடலாக மாறியுள்ளது. புதிய பேஸ் வேரியண்ட் முந்தைய எஸ் வேரியண்ட்டை விட ரூ. 3 லட்சம் விலை அதிகம் ஆகும். 

    ஹூண்டாய் எலான்ட்ரா

    ஹூண்டாய் எலான்ட்ரா எஸ்எக்ஸ் விலை ரூ. 18.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெர்னா எஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதற்கான காரணத்தை ஹூண்டாய் அறிவிக்கவில்லை. எனினும், ஹூண்டாய் இந்தியா வலைதளத்தில் மாற்றப்பட்டுவிட்டது.

    சமீபத்தில் ஹூண்டாய் எலான்ட்ரா மாடல் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டது. புதிய பிஎஸ்6 எலான்ட்ரா மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 150 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ஹூண்டாய் எலான்ட்ரா 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 115 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    டேட்சன் நிறுவனத்தின் ரெடி கோ ஃபேஸ்லிப்ட் மாடல் அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வருகிறது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.



    டேட்சன் நிறுவனம் தனது ஹேட்ச்பேக் மாடலான ரெடிகோ காரில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களை புகுத்தி அறிமுகம் செய்ய உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பி.எஸ் 6 புகை விதி சோதனையை பூர்த்தி செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 

    புதிய கார் ஹெட்லேம்ப் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல முன்புற கிரில் மிகவும் பெரிதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபாக் விளக்குகள் இதில் புதிதாக இடம் பெற்றுள்ளன. இரட்டை வண்ணங்களில் சக்கர கவர்கள் அழகிய தோற்றப்பொலிவை அளிக்கின்றன. 

    2020 டேட்சன் ரெடிகோ டீசர்

    டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் ஆறு நிறங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. உள்புறம் 8 அங்குல தொடு திரைகொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டது. இரட்டை வண்ணத்திலான இருக்கைகள் சவுகரியமான பயணத்தை அளிக்கிறது.

    பாதுகாப்பு அம்சமாக பயணிகள் பகுதியில் ஏர் பேக் கூடுதலாக உள்ளது. அதேபோல பின்புற பயணிகளுக்கும் சீட் பெல்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் கேமரா வசதி உள்ளது. இது 0.8 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டதாகவும் 5 கியர்களை உடையதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 

    ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதியோடு நான்கு மாடல்களில் இது வெளிவர உள்ளது. இந்தியாவில் மாருதி ஆல்டோ, ரெனால்ட் கிவிட், மாருதி எஸ் பிரஸ்ஸோ ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இது இருக்கும் என்பதால் விலையும் இந்த தயாரிப்புகளின் விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.
    ஆடி நிறுவனத்தின் மூன்று கார் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதன் விநியோக விவரங்களை பார்ப்போம்.



    ஆடி நிறுவனம் தனது ஏ6 செடான், ஏ8 எல் செடான் மற்றும் கியூ8 எஸ்யுவி மாடல்களுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. மூன்று மாடல்களையும் வாடிக்கையாளர்கள் ஆடி ஆன்லைன் வலைதளத்தில் ரூ. 50 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

    மூன்று ஆடி மாடல்களும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் முன்பதிவு மற்றும் விற்பனை நடைபெறாமல் இருந்தது. தற்சமயம் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படுவதால், ஆடி நிறுவனம் மீண்டும் முன்பதிவை துவங்கியுள்ளது. 

    ஆடி கியூ8

    தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் மாடல்கள் ஊரடங்கு நிறைவுற்றதும் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆடி ஏ6 துவக்க விலை ரூ. 54.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரண்டும் 45TFSI பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது.

    புதிய ஆடி ஏ8 எல் மாடலில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி6 பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆடி கியூ8 மாடலிலும் ஏ8 எல் மாடலில் உள்ளது போன்று 3.0 லிட்டர் டர்போ வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது பிஎஸ்6 கார் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரசி சலுகைகளை வழங்குகிறது.



    ரெனால்ட் நிறுவனம் தனது வாகனங்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி ரெனால்ட் டஸ்டர், க்விட் மற்றும் டிரைபர் போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை மே 31 ஆம் தேதிக்குள் புதிய வாகனம் வாங்குவோருக்கானது என ரெனால்ட் தெரிவித்துள்ளது.

    புதிய சலுகைகளில் ரெனால்ட் இந்தியா தள்ளுபடி, எக்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, லாயல்டி போனஸ் மற்றும் சிறப்பு தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்குகிறது. மேலும் இந்த மாடல்கள் 'பை நௌ பே லேட்டர்' எனும் பிரத்யேக நிதி திட்டத்திலும் வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் டிரைபர்

    இந்த நிதி திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் புதிய ரெனால்ட் காரை உடனடியாக வாங்கிக் கொண்டு அதற்கான மாத தவணையை வாகனம் வாங்கிய தேதியில் இருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு சலுகையின் கீழ் ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 60 ஆயிரம், அதாவது ரூ. 15 ஆயிரம் உடனடி தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ. 25 ஆயிரம் லாயல்டி சலுகை ஆகும். இதேபோன்று ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் ஆகும்.

    ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் ஆகும்.
    ஹோண்டா நிறுவனத்தின் பிஎஸ்6 கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    ஹோண்டா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத கட்டணத்தில் மூன்று ஆண்டுகளுக்கு கார் பராமரிப்பு சேவையும் வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் ஹோண்டா ஃபிரம் ஹோம் எனும் ஆன்லைன் விற்பனை மையம் மூலமாக சலுகைகளை பெற முடியும். கொரோனா பாதிப்பையொட்டி ஹோண்டா நிறுவனம் இந்த தளத்தினை துவங்கியது. ஹோண்டா நிறுவன பிஎஸ்6 மாடல்களுக்கு மே மாதம் 31 ஆம் தேதி வரை சலுகைகள், தள்ளுபடி மற்றும் பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. 

    ஹோண்டா சிட்டி

    ஹோண்டா சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை மற்றும் தள்ளுபடிகள் ஹோண்டா அமேஸ் மற்றும் சிட்டி போன்ற செடான் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்ட மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாறுபடும்.

    புதிய சலுகையின் படி ஹோண்டா சிட்டி மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ×