என் மலர்
கார்
ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காருக்கான முன்பதிவுகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரமும், விற்பனையகம் செல்வோர் ரூ. 21 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும்.
ஜூன் 23 ஆம் தேதி முதல் ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா சிட்டி கார்களை விற்பனையகங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை துவங்கியது. இந்தியாவில் தற்தமயம் சுமார் 300 ஹோண்டா விற்பனை மையங்கள் செயல்பாட்டில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி மாடலான வென்யூ இந்திய சந்தையில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது. இதில் 97400 யூனிட்கள் இந்தியாவிலும், 7400 யூனிட்கள் சர்வதேச சந்தையில் விற்பனையாகி இருக்கிறது.
புதிய வென்யூ மாடல் இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் எஸ்யுவி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஹூண்டாய் வென்யூ மாடல் ஹூண்டாயின் பாரம்பரிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்புறம் டார்க் க்ரோம் முன்புற கிரில், பக்கவாட்டில் சாலிட் மற்றும் ஃபுல் வால்யூம் வீல் ஆர்ச் மற்றும் உறுதியான கேரக்டர் லைன் கொண்டிருக்கிறது.

ஹூண்டாய் வென்யூ பின்புறம் பம்பர், ரிவர்ஸ் விளக்கு, பாக் விளக்கு ஆகியன வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது. இதன் உள்பகுதியில் 8 அங்குல தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இயங்குதளங்களில் செயல்படக் கூடியது.
பாதுகாப்பு அம்சத்துக்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன. ரிவர்ஸ் கேமரா, மல்டி ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், காற்றோட்டமான இருக்கைகள், டயர் பிரஷர் மானிட்டர் ஆகியன இதில் முக்கியமான மாற்றங்களாகும். ஏபிஎஸ், இபிடி உள்ளிட்டவையும் உள்ளன.
இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ விலை ரூ.13.82 லட்சம் முதல் ரூ.18.92 லட்சம் வரை இருக்கும். இதில் டீசல் மாடல் விலை ரூ.15.13 லட்சத்தில் தொடங்கி ரூ.20.05 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் கார் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஹெக்டார் பிளஸ் ஆறு பேர் பயணிக்கக்கூடிய மாடல் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதிய ஹெக்டார் சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என மூன்று வேரியண்ட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஹெக்டார் பிளஸ் ஸ்டைல் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.

புதிய ஹெக்டார் பிளஸ் மாடல்களின் உற்பத்தி பணிகள் குஜராத் மாநிலத்தின் ஹலோல் பகுதியில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய ஹெக்டார் பிளஸ் காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.
ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் பிஎஸ்6 எலான்ட்ரா கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 எலான்ட்ரா செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎஸ்6 எலான்ட்ரா மாடல் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்ஒ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் துவக்க விலை ரூ. 18.7 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய எலான்ட்ரா பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட 1.5 லிட்டர் CRDi என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 114 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பேஸ் மாடலான எஸ்எக்ஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன், எஸ்எக்ஸ்ஒ மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
எலான்ட்ரா பிஎஸ்6 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், அழகிய டூயல் டோன் அலாய் வீல்கள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஹூண்டாயின் அதிநவீன புளூ லின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கார் துவக்க விலை ரூ. 5.13 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மிக குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அறிமுகம் செய்யும் மாருதி சுசுகி திட்டத்தின் கீழ் புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய காரில் மாருதி நிறுவனம் பொருத்திய எஸ் சிஎன்ஜி வேரியண்ட் அதிக பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது.

மாருதியின் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 31.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த காரின் டேன்க் கொள்ளளவு 55 லிட்டர்கள் ஆகும்.
எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 காரை அறிமுகம் செய்வதன் மூலம் நாட்டில் பசுமை வாகனங்களை ஊக்குவகிக்கும் முயற்சிக்கு கை கொடுக்கிறோம். புதிய எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி மாடல் அதிக செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வழங்குகிறது என மாருதி சுசுகி நிறுவனத்தின் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காரின் உற்பத்தி துவங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹோண்டா கார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் தனது 5 ஆம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் காரின் உற்பத்தியை துவங்கி இருக்கிறது. புதிய கார் உத்திர பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் உருவாக்கப்படுகிறது.
அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி புதிய கார் உற்பத்தி பணிகளை ஹோண்டா துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. புத்தம் புதிய ஹோண்டா சிட்டி மாடல் ஜூலை மாத வாக்கில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா கார்னிவல் கார் டெலிவரி செய்யப்படும் போது ஏற்பட்ட பரிதாப நிலை பற்றிய விவரங்களை பார்ப்போம்.
புத்தம் புதிய கியா கார்னிவல் கார் சுவரில் மோதும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வாடிக்கையாளர் ஒருவர் தனது புதிய கார்னிவல் காரை விற்பனை மையத்தில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் போது எடுக்கப்பட்டதாகும்.
கார் சுவரில் மோதும் முன், விற்பனை மைய ஊழியர் புதிய கார் விவரங்களை வாடிக்கையாளருக்கு விவரிக்கிறார். பின் வாடிக்கையாளர் கார் அக்சிலரேட்டரை அழுத்தியதும் அது சுவரில் மோதியது. கார் சுவரை நோக்கி நகரும் போது வாடிக்கையாளர் காரின் வேகத்தை அதிகரித்து இருக்கலாம் என தெரிகிறது.

புத்தம் புதிய கார் சுவரில் மோதிய போதும், அது காரில் உள்ள ஏர்பேக்குகள் செயல்படும் அளவு தீவிரமான பாதிப்பு ஏற்படவில்லை என்றே தெரிகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் அருகில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மோதலில் காரின் முன்புற பொனெட், பம்ப்பர் மற்றும் பக்கவாட்டுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் காரில் உள்ள கூலண்ட் அல்லது தண்ணீர் கசிந்திருக்கிறது. சேதமடைந்த காரின் உள்புற பாகங்களும் மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்தியாவில் புதிய என்ஜின் ஆப்ஷனை பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா மராசோ மாடலில் விரைவில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிஎஸ்6 என்ஜின் சங்யோங் கொராண்டோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய பிஎஸ்6 பவர்டிரெயினை மஹிந்திரா நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. புதிய 1.5 லிட்டர் ஜி5 டர்போ பெட்ரோல் என்ஜின் இந்தியாவில் மராசோ மாடலில் தான் முதலில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 162 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும் எதிர்காலத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது வாகனங்களுக்கு ஆன்லைன் ஃபைனான்ஸ் சலுகையை பயன்படுத்த புதிய கூட்டணி அமைத்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஆன்லைனில் கார் ஃபைனான்ஸ் வழங்க ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணி மூலம் வாடிக்கையாளர்கள் புதிய வாகனங்களுக்கு நிதி சலுகையை பெற்று கொள்ள முடியும்.
புதிய திட்டம் வாடிக்கையாளர்கள் நிதி சலுகையை பெற ஹெச்டிஎஃப்சி வங்கி கிளைகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியத்தை போக்குகிறது. முன்னதாக நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக ஹூண்டாய் நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய க்ளிக் டூ பை எனும் தளத்தை துவங்கியது.
இதன் தொடர்ச்சியாக கார் விற்பனையை ஊக்குவிக்கும் நிதி திட்டங்களையும் ஆன்லைனிலேயே வழங்க ஹூண்டாய் புதிய கூட்டணியை அமைத்து இருக்கிறது.

ஹூண்டாய் க்ளிக் டூ பை சேவையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களின் கேள்வி மற்றும் இதர சந்தேகங்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பதில்களை வீட்டில் இருந்தபடி அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் நிறுவன வாகனங்களை ஆன்லைனிலேயே வாங்கிக் கொள்ள முடியும். முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி பகுதியில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலில் இருந்து வருகிறது.
புதிய ஆன்லைன் சேவை மூலம் எதிர்கால வாகனங்கள் விற்பனையை டிஜிட்டல் முறையில் மாற்ற ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. ஆல்லைன் விற்பனை தளம் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிக விற்பனை மையங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலான இகியூசி வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யுவியான இகியூசி மாடலை விரைவில் இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்டின் ஸ்கிவென்க் புதிய இகியூசி இந்தியாவில் இரண்டு வாரங்களில் வெளியாக இருப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக மெர்சிடிஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான ஜிஎல்எஸ் காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

புதிய இகியூசி இந்தியாவில் வெளியாகும் முதல் ஆடம்பர எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். புதிய இகியூசி மாடலின் வடிவமைப்பு ஜிஎல்சி எஸ்யுவியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காரின் கிரில் பகுதியில் இலுமினேட் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பேட்ஜிங், புதிய ஹெட்லைட்களில் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் மெல்லிய டெயில் லேம்ப்கள் பூட் லிட் மீது பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் புதிய காரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் மாற்றங்களை செய்து கொள்ள கூடுதல் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் ஏஎம்ஜி மாடல்களில் உள்ளது போன்றே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி இ63 எஸ் 2021 ஆண்டிற்கான அப்டேட் பெற்றுள்ளது. எனினும் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. தற்சமயம் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ் மாடல் இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
புதிய 2021 மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் முன்புறம் புதிய ஏஎம்ஜி மாடலில் பான்-அமெரிக்கா கிரில் புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் பெரிய ஏர் கர்டெயின்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்புறம் லிப் ஸ்பாயிலர் மற்றும் குவாட் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 595 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
சக்திவாய்ந்த என்ஜினுடன் 9 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய பென்ஸ் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தினை 3.3 நொடிகளில் எட்டிவிடும்.
ஹோண்டா நிறுவனத்தின் 2020 ஹோண்டா சிட்டி மாடல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் 2020 ஹோண்டா சிட்டி மாடலின் முழு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. புதிய செடான் மாடல் இம்மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் ஜப்பான் நாட்டு பாரம்பரியத்தை பரைசாற்றும் கட்டானா ரக வாள் வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய சிட்டி மாடல் அதிநவீன ஏரோடைனமிக் வடிவம் கொண்டிருக்கிறது. இதில் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல் இன்டகிரேட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் எல்இடி டர்ன் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது.

காரின் பின்புறம் இசட் வடிவம் கொண்ட ராப்-அரவுண்ட் எல்இடி டெயில்-லேம்ப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.






