என் மலர்
கார்
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் பிளஸ் மாடல் கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மாடல் இந்தியாவில் ஜூலை 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. எம்ஜி ஹெக்டார் பிளஸ் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டேரி ஸ்கை புளூ, கேன்டி வைட், கிளேஸ் ரெட், ஸ்டேரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் அரோரா சில்வர் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஹைப்ரிட் மோட்டார் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதன் டர்போ பெட்ரோல் வெர்ஷன் டிசிடி யூனிட் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் டீசல் வெர்ஷன்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடலின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.
ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் காரின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் இந்திய சந்தையில் ஜூலை 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த கார் முன்பதிவுகள் கடந்த மாதம் துவங்கப்பட்டது.
புதிய கார் முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆடிஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், மேம்பட்ட கம்பீர தோற்றம் கொண்ட முன்புற பம்ப்பர், 21 இன்ச் அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்கள், டிஃப்யூசர் மற்றும் இரண்டு எக்சாஸ்ட்டிப்கள் பொருத்தப்பட்ட பின்புற பம்ப்பர் கொண்டிருக்கிறது.
ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும்.
இந்திய சந்தையில் அறிமுகமானதும் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
இந்திய சந்தையில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் மாடல் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மே மாதத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் முற்றிலும் முடங்கியிருந்த ஆட்டோமொபைல் துறை மே மாதத்தில் மீண்டும் பணிகளை படிப்படியாக துவங்கின.
அந்த வகையில் மே மாதத்தில் ஆட்டோமொபைல் விற்பனையும் துவங்கப்பட்டது. மே மாதத்தில் முதல் முறை விற்பனை துவங்கிய ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் அதே மாதத்தில் மட்டும் 3121 யூனிட்களை விற்பனை ஆனது. இது மே மாதத்தில் மற்ற நிறுவனங்களின் எஸ்யுவி விற்பனையை விட அதிகம் ஆகும்.

கிரெட்டா மாடலுக்கு போட்டியாளரான கியா செல்டோஸ் மே மாதத்தில் 1611 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்நிலையில், ஜூன் மாத விற்பனையிலும் ஹூண்டாய் கிரெட்டா 7202 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதனால் ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலாக கிரெட்டா இருக்கிறது.
இதே காலக்கட்டத்தில் கியா செல்டோஸ் 7114 யூனிட்கள் விற்பனையாகி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிக விற்பனை அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருந்த போதும், கியா செல்டோஸ் விற்பனை 342 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் 2020 சிட்டி மாடல் காரின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது புத்தம் புதிய சிட்டி செடான் மாடல் கார் இந்திய சந்தையில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய ஹோண்டா சிட்டி மாடல் முன்பதிவு கட்டணம் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம் என்றும் விற்பனையகம் செல்வோர் ரூ. 21 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய சிவிக் பிஎஸ்6 கார் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய வாகனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் ஹோண்டா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் செடான் மாடலான சிவிக் காரை பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
முந்தைய தகவல்களின்படி ஹோண்டா சிவிக் டீசல் வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் புதிய சிவிக் பிஎஸ் டீசல் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய டீசல் மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலில் மேம்பட்ட 1.6 லிட்டர் ஐ-டிடிஇசி நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்4 வெர்ஷனில் இந்த என்ஜின் 118 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருந்தது.
பிஎஸ்6 வெர்ஷனிலும் இந்த என்ஜின் இதேபோன்ற செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. எனினும், டீசல் வெர்ஷனில் மற்ற வேரியண்ட்களை விட அதிக மைலேஜ் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் 40 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை கடந்துள்ளது. புதிய எஸ்யுவி மாடல் அறிமுகமாகி சில மாதங்களிலேயே இந்த மைல்கல் எட்டியுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு துவங்கும் முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா வெளியீட்டிற்கு முன்பே 14 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை பெற்று இருந்தது. முன்பதிவு விவரங்களின் படி 67 சதவீத வாடிக்கையாளர்கள் டீசல் வேரியண்ட்டையும், 33 சதவீதம் பேர் பெட்ரோல் வேரியண்ட்டை தேர்வு செய்து இருக்கின்றனர்.

புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் கார் இந்திய சந்தை முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் மாடல் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எஸ்யுவி மாடல் விலை காரணமாக அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
இந்தியாவில் அதிக முன்பதிவுகளை பெற்று வரும் நிலையில், தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எம்ஜி ஹெக்டார் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. உற்பத்தி பாதிப்பு காரணமாக கார்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அறிமுகமானது முதல் ஹெக்டார் காரை வாங்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்து இருக்கிறது. இதில் 20 ஆயிரம் யூனிட்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் விநியோகம் செய்து இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் எஸ்யுவி மாடல் விலை ரூ. 12.74 லட்சத்தில் துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.44 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜூன் மாத வாகனங்கள் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் 51274 வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மாருதி சுசுகி 1,11,014 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் மாத விற்பனை 53.8 சதவீதம் சரிவு ஆகும்.
காம்பேக்ட் கார் பிரிவு வாகனங்களான வேகன்ஆர், ஸ்விஃப்ட், செலரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் போன்ற மாடல்கள் விற்பனைக்கு முக்கிய பங்கு வகித்து இருக்கின்றன. இந்த மாடல்கள் மட்டும் 26696 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மினி வாகனங்களான ஆல்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ உள்ளிட்டவை 10458 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

மாருதி சியாஸ் மாடல் 553 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. யுடிலிட்டி பிரிவு வாகனங்களான எஸ் கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகா போன்றவை 9764 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மாருதி ஈகோ வேன் மாடல் 3803 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 57428 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இதில் 4289 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 சிட்டி மாடல் கார் விற்பனையகம் வந்தடைந்து இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி மாடலின் விலை தவிர பெரும்பாலான விவரங்கள் வெளியாகிவிட்டன. இந்நிலையில், புதிய ஹோண்டா சிட்டி மாடல் விற்பனையகம் வந்தடைந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா சிட்டி பெட்ரோல் வேரியண்ட் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட வேரியண்ட் புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய டபிள்யூஆர்வி பிஎஸ்6 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2020 ஹோண்டா டபிள்யூஆர்வி இந்தியாவில் ஜூலை 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஹோண்டா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. புதிய ஹோண்டா காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய 2020 ஹோண்டா டபிள்யூஆர்வி மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். ஏற்கனவே இந்த கார் விற்பனையகங்களுக்கும் வந்தடைந்து விட்டது.

ஹோண்டா நிறுவனத்தின் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட எஸ்யுவி மாடல் முன்கூட்டியே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. இந்த கார் உற்பத்தி பணிகள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
2020 ஹோண்டா டபிள்யூஆர்வி மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் என இருவித என்ஜின்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இரு என்ஜின்களும் முறையே 88 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய கார் மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது மூன்றாவது எஸ்யுவி மாடலினை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எம்ஜி ஹெக்டார் பிளஸ் என அழைக்கப்படும் புதிய எஸ்யுவி அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
புதிய எஸ்யுவி மாடல் எம்ஜி ஹெக்டார் காரை விட அதிக அம்சங்கள் நிறைந்த எக்ஸ்டென்ட்டெட் வேரியண்ட் ஆகும். மேலும் இந்த கார் விற்பனையகங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. புதிய ஹெக்டார் பிளஸ் கார் பல்வேறு நிறங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

எனினும், அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உள்ள கார் ஸ்டேரி ஸ்கை புளூ மற்றும் பெய்க் போன்ற நிறங்களை கொண்டிருக்கிறது. பிரத்யேக நிறம் தவிர இந்த காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதில் முந்தைய ஹெக்டார் மாடலை விட ஒட்டுமொத்த நீளம் 40எம்எம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய ஹெக்டார் பிளஸ் காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.
ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா கார் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.
2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலை வாங்க 26 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.
நாடுதழுவிய ஊரடங்கு இன்னும் முழுமையாக திரும்பப் பெறப்படாத நிலையில், புதிய மாருதி கார் முன்பதிவில் இத்தனை மைல்கல் கடந்து இருக்கிறது. தற்போதைய முன்பதிவு எண்ணிக்கையை தொடர்ந்து புதிய மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என மாருதி சுசுகி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2020 விட்டாரா பிரெஸ்ஸா விலை இந்தியாவில் ரூ. 7.34 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் மற்றும் மாருதியின் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.






