என் மலர்tooltip icon

    கார்

    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆடி இந்தியா நிறுவனம் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்போர்ட்பேக் மாடல் விலை ரூ. 1.94 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் விநியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது. 

    2020 ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மொத்தம் 13 நிறங்களில், ஐந்து மேட் ஃபினிஷ் பெயின்ட்டிங்கில் கிடைக்கிறது. புதிய 2020 ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 591 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

     ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக்

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் சிலிண்டர் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பமும் கொண்டிருக்கிறது. 

    புதிய ஆடிஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், மேம்பட்ட கம்பீர தோற்றம் கொண்ட முன்புற பம்ப்பர், 21 இன்ச் அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்கள், டிஃப்யூசர் மற்றும் இரண்டு எக்சாஸ்ட்டிப்கள் பொருத்தப்பட்ட பின்புற பம்ப்பர் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய இகோஸ்போர்ட் டைட்டானியம் ஆட்டோ வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் இகோஸ்ப்ரோட் டைட்டானியம் ஆட்டோ வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. புதிய கார் டாப் எண்ட் ஆட்டோமேடிக் வேரியண்ட்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10.67 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    இது டாப் எண்ட் மாடலின் விலையை விட ரூ. 90 ஆயிரம் விலை குறைவு ஆகும். விலை குறைவுக்கு ஏற்றார்போல் புதிய வேரியண்ட்டில் சன்ரூஃப்ட, முன்புறம் இரட்டை ஏர்பேக்குகள் வழங்கப்படவில்லை. இத்துடன் ஆட்டோ ஹெட்லைட், வைப்பர்கள், பின்புற இருக்கையில் ஆம்ரெஸ்ட் மற்றும் முன்புற மேப் லைட்கள் நீக்கப்பட்டு உள்ளது.
     
     ஃபோர்டு இகோஸ்போர்ட்

    புதிய இகோஸ்போர்ட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 123 ஹெச்பி மற்றும் 100 ஹெச்பி செயல்திறன் வழங்குகிறது. 

    இந்திய சந்தையில் புதிய இகோஸ்போர்ட் மாடல் டாடா நெக்சான் ஏஎம்டி, ஹூண்டாய் வென்யூ டிசிடி மற்றும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மைல்டு ஹைப்ரிட் ஏடி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஹோண்டா சிட்டி மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
     

    இந்திய சந்தையில் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய 2020 ஹோண்டா சிட்டி மாடல் விலை ரூ. 10.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா சிட்டி ஐந்து வித நிறங்களில், இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

    காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

     ஹோண்டா சிட்டி

    2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 119 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 98 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    புதிய 2020 ஹோண்டா சிட்டி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.64 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிட்டி கார் ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், டொயோட்டா யாரிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் விலை ரூ. 7.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட் கேன்டி வைட், கார்பன் ஸ்டீல், பிரிலியண்ட் சில்வர் மற்றும்  டாஃபி பிரவுன் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. ஸ்கோடா ரேபிட் பிளஸ் வேரியண்ட்டில் பிளாக்டு-அவுட் கிரில் மற்றும் பி-பில்லர்கள், லிப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ்

    இத்துடன் காரின் உள்புறம் 6.5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஸ்மார்ட்லின்க் கனெக்டிவிட்டி, டூயல் எபோனி-சேண்ட் இன்டீரியர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.

    புதிய ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட்டில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 18.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய சந்தைக்கான 2021 ரேன்ஜ் ரோவர் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    இந்திய சந்தைக்கான 2021 ரேன்ஜ் ரோவர் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2021 கார் முந்தைய மாடலை விட சில புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக மைல்டு ஹைப்ரிட் இன்லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் இருக்கிறது.

    2021 ரேன்ஜ் ரோவர்

    இது 3.0 லிட்டர் இன்லைன்-6 யூனிட் ஆகும். இந்த என்ஜின் 345 பிஹெச்பி பவர், 550 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெட்ரோல் பி400 இன்ஜெனியம் இன்லைன்-6 யூனிட் வழங்கப்படுகிறது. இது 395 பிஹெச்பி பவர், 550 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இரண்டு என்ஜின்களுடன் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் ரேன்ஜ் ரோவர் நிறுவனத்தின் புதிய 2 ஆஃப்-ரோடு ரெஸ்பான்ஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் பிஎஸ்6 மற்றும் யூரோ 6 விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    காரின் வெளிப்புற தோற்றம் தற்போதைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது. முன்புறம் பெரிய கிரில், ஃபுல் எல்இடி ஹெட்லைட்கள், டெயில் லேம்ப்கள், வழங்கப்படுகின்றன. இத்துடன் பவர் சீட், மல்டி-சோன் கிளைமேட் கண்ட்ரோல், டச் ப்ரோ டூயல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் ஆப்பிள் கார்பிளே / ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி மற்றும் காரினுள் வைபை வசதி மூலம் நான்கு சாதனங்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஹூண்டாய் நிறுவனம் இந்திாவில் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2020 ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் துவக்க விலை ரூ. 22.3 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் ஜிஎல் (ஒ), ஜிஎல்எஸ் மற்றும் ஜிஎல்எஸ் 4 டபிள்யூடி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் டாப் எண்ட் மாடலில் டீசல் யூனிட் மட்டும் வழங்கப்படுகிறது. மற்ற இரு வேரியண்ட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட்

    ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் முறையே 150 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 180 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹெக்டார் பிளஸ் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹெக்டார் பிளஸ் ரூ. 13.49 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இதன் டாப் எண்ட் ஹெக்டார் பிளஸ் ஷார்ப் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் ரூ. 18.54 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள விலை அறிமுக சலுகையின் பேரில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலை ஆகஸ்ட் 13 ஆம் தேதி அதிகரிக்கப்படுகிறது.

     எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    புதிய ஹெக்டார் பிளஸ் ஆறு பேர் பயணக்கக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது. விரைவில் இதே மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டேரி ஸ்கை புளூ, கேன்டி வைட், கிளேஸ் ரெட், ஸ்டேரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் அரோரா சில்வர் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஹைப்ரிட் மோட்டார் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் மஹிந்திரா எக்ஸ்யுவி500, டொயோட்டா இன்னோவா க்ரிஸா மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா கிராவிடாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
    டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியா வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    எலான் மஸ்க் டெஸ்லா மாடல் 3 காரினை மார்ச் 31, 2016 இல் அறிமுகம் செய்தார். ஜூலை 2017 வாக்கில் மாடல் 3 காரை வாங்க சுமார் ஐந்து லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் இதில் சுமார் 2.32 லட்சம் பேர் கார் அறிமுகமான முதல் இரண்டு நாட்களில் முன்பதிவு செய்தனர்.

    அன்று முதல் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 இந்திய வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதன் இந்திய வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி டெஸ்லா மாடல் 3 இந்திய வெளியீடு நடைபெறலாம் என்றவாக்கில் தகவல் வெளியாகி உள்ளது. 

    ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    ட்விட்டரில் டெஸ்லாவுக்கு ட்வீட் செய்து மாடல் 3 எப்போது இந்தியா வரும் என அரவிந்த் குப்தா கேள்வி எழுப்பினார். இவர் மாடல் 3 காரை நான்கு ஆண்டுகளுக்கு முன் முன்பதிவு செய்திருந்தார். இவரது கேள்விக்கு பதில் அளித்த டெஸ்லா தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், மன்னிக்கவும், அனேகமாக விரைவில் அது நடைபெறலாம் என தெரிவித்தார். 

    அந்த வகையில் டெஸ்லா மாடல் 3 இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். தற்சமயம் டெஸ்லா நிறுவனம் மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ், ரோட்ஸ்டர் மற்றும் மாடல் வை என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 
    ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் ரைடர் மாடல் அதிக வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி உள்ளது. இந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடல் விலை ரூ. 7.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்கோடா ரேபிட் ரைட் மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்து இருப்பதால் முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளதாக ஸ்கோடா நிறுவனம் அறிவித்து உள்ளது. புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    ஸ்கோடா ரேபிட் ரைடர்

    ஸ்கோடா ரேபிட் ரைடர் பிஎஸ்6 வெர்ஷன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர், டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடலில் 2 டின் மியூசிக் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, டெலிஸ்கோபிக் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ல்டீரிங், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குர்கா கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாம் தலைமுறை குர்கா எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்த புதிய குர்கா மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி உள்ளது.  தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் உற்பத்தி ஆலையில் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாகவும், புதிய மாடல் 2020 தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

    ஃபோர்ஸ் ஆஃப் ரோடு எஸ்.யு.வி. மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 2020 குர்கா மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், புதிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஃபோர்ஸ் குர்கா

    இதில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் குர்காவின் பாரம்பரிய ரக்கட் வடிவமைப்பை பரைசாற்றும் விதத்தில் அமைந்து இருக்கிறது. இத்துடன் இதில் புதிய 16 இன்ச் அலாய் வீல்கள் 245/70 டையர்கள் வழங்கப்படுகின்றன. இதன் வீல் ஆர்ச்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.

    காரின் உள்புறம் மேம்பட்ட அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், MID டிஸ்ப்ளே, இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே பொருத்தப்பட்டு, ஏ.சி. வென்ட்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கின்றன.
    ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் இந்தியாவில் ரூ. 20.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் என்ஜின் ஆப்ஷன் சிவிக் விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    ஹோண்டா சிவிக்

    புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் மாடலில் 1.6 லிட்டர் i-DTEC டீசல்  யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. தோற்றம் மற்றும் உள்புறத்தில் புதிய மாடலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 

    இந்திய சந்தையில் ஹோண்டா சிவிக் மாடல் ஹூண்டாய் எலான்ட்ரா, டாடா ஹேரியர், எம்ஜி ஹெக்டார், ஜீப் காம்பஸ் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கோ ஆக்டேவியா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    கியா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்கள் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்து உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான கியா மோட்டார்ஸ் யுவிஒ கனெக்ட்டெட் தொழில்நுட்பத்தை தனது செல்டோஸ் மற்றும் கார்னிவல் மாடல்களில் வழங்கி வருகிறது.

    யுவிஒ கனெக்ட்டெட் தொழில்நுட்பம் சந்தையில் பல்வேறு பிரிவுகளில் 50 முதல்முறை அம்சங்களை கொண்டுள்ளது. இதில் புது அம்சமாக யுவிஒ வாய்ஸ் அசிஸ்ட் வேக்-அப் கமாண்ட் அம்சம் இருக்கிறது. இதை செயல்படுத்த ஹெலோ கியா என கூறினால் போதும்.

     கியா கார்னிவல்

    முதல் இரண்டு மாடல்களான செல்டோஸ் மற்றும் கார்னிவல் மாடல்களை தொடர்ந்து கியா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கும் கியா சொனெட் மாடலிலும் யுவிஒ கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் புதிய சொனெட் மாடல் அறிமுகமாகும் போதே இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஐஎம்டி) என்பது பயனர் கியர்களை மாற்ற மேனுவல் கிளட்ச் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை போக்குகிறது. 

    புதுவித டிரான்ஸ்மிஷன் தவிர கியா சொனெட் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. 

    ×