என் மலர்tooltip icon

    கார்

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 சிட்டி மாடல் கார் விற்பனையகம் வந்தடைந்து இருக்கிறது.


    ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி மாடலின் விலை தவிர பெரும்பாலான விவரங்கள் வெளியாகிவிட்டன.  இந்நிலையில், புதிய ஹோண்டா சிட்டி மாடல் விற்பனையகம் வந்தடைந்துள்ளது. 

    இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா சிட்டி பெட்ரோல் வேரியண்ட் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட வேரியண்ட் புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. 
     ஹோண்டா சிட்டி ஸ்பை படம்
    புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

    காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய டபிள்யூஆர்வி பிஎஸ்6 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    2020 ஹோண்டா டபிள்யூஆர்வி இந்தியாவில் ஜூலை 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஹோண்டா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. புதிய ஹோண்டா காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    புதிய 2020 ஹோண்டா டபிள்யூஆர்வி மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். ஏற்கனவே இந்த கார் விற்பனையகங்களுக்கும் வந்தடைந்து விட்டது.
     ஹோண்டா டபிள்யூஆர்வி
    ஹோண்டா நிறுவனத்தின் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட எஸ்யுவி மாடல் முன்கூட்டியே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. இந்த கார் உற்பத்தி பணிகள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    2020 ஹோண்டா டபிள்யூஆர்வி மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் என இருவித என்ஜின்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இரு என்ஜின்களும் முறையே 88 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய கார் மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
     

    எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது மூன்றாவது எஸ்யுவி மாடலினை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எம்ஜி ஹெக்டார் பிளஸ் என அழைக்கப்படும் புதிய எஸ்யுவி அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

    புதிய எஸ்யுவி மாடல் எம்ஜி ஹெக்டார் காரை விட அதிக அம்சங்கள் நிறைந்த எக்ஸ்டென்ட்டெட் வேரியண்ட் ஆகும். மேலும் இந்த கார் விற்பனையகங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. புதிய ஹெக்டார் பிளஸ் கார் பல்வேறு நிறங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
     எம்ஜி ஹெக்டார் பிளஸ்
    எனினும், அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உள்ள கார் ஸ்டேரி ஸ்கை புளூ மற்றும் பெய்க் போன்ற நிறங்களை கொண்டிருக்கிறது. பிரத்யேக நிறம் தவிர இந்த காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதில் முந்தைய ஹெக்டார் மாடலை விட ஒட்டுமொத்த நீளம் 40எம்எம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதிய ஹெக்டார் பிளஸ் காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா கார் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.
     

    2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலை வாங்க 26 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. 

    நாடுதழுவிய ஊரடங்கு இன்னும் முழுமையாக திரும்பப் பெறப்படாத நிலையில், புதிய மாருதி கார் முன்பதிவில் இத்தனை மைல்கல் கடந்து இருக்கிறது. தற்போதைய முன்பதிவு எண்ணிக்கையை தொடர்ந்து புதிய மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என மாருதி சுசுகி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா
    2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2020 விட்டாரா பிரெஸ்ஸா விலை இந்தியாவில் ரூ. 7.34 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் மற்றும் மாருதியின் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காருக்கான முன்பதிவுகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரமும், விற்பனையகம் செல்வோர் ரூ. 21 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும்.

    ஜூன் 23 ஆம் தேதி முதல் ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா சிட்டி கார்களை விற்பனையகங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை துவங்கியது. இந்தியாவில் தற்தமயம் சுமார் 300 ஹோண்டா விற்பனை மையங்கள் செயல்பாட்டில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 
    ஹோண்டா சிட்டி
    புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

    காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி மாடலான வென்யூ இந்திய சந்தையில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது. இதில் 97400 யூனிட்கள் இந்தியாவிலும், 7400 யூனிட்கள் சர்வதேச சந்தையில் விற்பனையாகி இருக்கிறது. 

    புதிய வென்யூ மாடல் இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் எஸ்யுவி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஹூண்டாய் வென்யூ மாடல் ஹூண்டாயின் பாரம்பரிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்புறம் டார்க் க்ரோம் முன்புற கிரில், பக்கவாட்டில் சாலிட் மற்றும் ஃபுல் வால்யூம் வீல் ஆர்ச் மற்றும் உறுதியான கேரக்டர் லைன் கொண்டிருக்கிறது.
    ஹூண்டாய் வென்யூ
    ஹூண்டாய் வென்யூ பின்புறம் பம்பர், ரிவர்ஸ் விளக்கு, பாக் விளக்கு ஆகியன வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது. இதன் உள்பகுதியில் 8 அங்குல தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இயங்குதளங்களில் செயல்படக் கூடியது.

    பாதுகாப்பு அம்சத்துக்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன. ரிவர்ஸ் கேமரா, மல்டி ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், காற்றோட்டமான இருக்கைகள், டயர் பிரஷர் மானிட்டர் ஆகியன இதில் முக்கியமான மாற்றங்களாகும். ஏபிஎஸ், இபிடி உள்ளிட்டவையும் உள்ளன. 

    இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ விலை ரூ.13.82 லட்சம் முதல் ரூ.18.92 லட்சம் வரை இருக்கும். இதில் டீசல் மாடல் விலை ரூ.15.13 லட்சத்தில் தொடங்கி ரூ.20.05 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் கார் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஹெக்டார் பிளஸ் ஆறு பேர் பயணிக்கக்கூடிய மாடல் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதிய ஹெக்டார் சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என மூன்று வேரியண்ட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஹெக்டார் பிளஸ் ஸ்டைல் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.
    எம்ஜி ஹெக்டார் பிளஸ்
    புதிய ஹெக்டார் பிளஸ் மாடல்களின் உற்பத்தி பணிகள் குஜராத் மாநிலத்தின் ஹலோல் பகுதியில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

    புதிய ஹெக்டார் பிளஸ் காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் பிஎஸ்6 எலான்ட்ரா கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 எலான்ட்ரா செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎஸ்6 எலான்ட்ரா மாடல் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்ஒ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    இதன் துவக்க விலை ரூ. 18.7 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    ஹூண்டாய் எலான்ட்ரா
    புதிய எலான்ட்ரா பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட 1.5 லிட்டர் CRDi என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 114 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பேஸ் மாடலான எஸ்எக்ஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன், எஸ்எக்ஸ்ஒ மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எலான்ட்ரா பிஎஸ்6 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், அழகிய டூயல் டோன் அலாய் வீல்கள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஹூண்டாயின் அதிநவீன புளூ லின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கார் துவக்க விலை ரூ. 5.13 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் மிக குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அறிமுகம் செய்யும் மாருதி சுசுகி திட்டத்தின் கீழ் புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய காரில் மாருதி நிறுவனம் பொருத்திய எஸ் சிஎன்ஜி வேரியண்ட் அதிக பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது.
    எஸ் பிரெஸ்ஸோ
    மாருதியின் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 31.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த காரின் டேன்க் கொள்ளளவு 55 லிட்டர்கள் ஆகும்.

    எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 காரை அறிமுகம் செய்வதன் மூலம் நாட்டில் பசுமை வாகனங்களை ஊக்குவகிக்கும் முயற்சிக்கு கை கொடுக்கிறோம். புதிய எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி மாடல் அதிக செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வழங்குகிறது என மாருதி சுசுகி நிறுவனத்தின் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
    ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காரின் உற்பத்தி துவங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா கார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் தனது 5 ஆம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் காரின் உற்பத்தியை துவங்கி இருக்கிறது. புதிய கார் உத்திர பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் உருவாக்கப்படுகிறது. 

    அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி புதிய கார் உற்பத்தி பணிகளை ஹோண்டா துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. புத்தம் புதிய ஹோண்டா சிட்டி மாடல் ஜூலை மாத வாக்கில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது.
    ஹோண்டா சிட்டி
    புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

    காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா கார்னிவல் கார் டெலிவரி செய்யப்படும் போது ஏற்பட்ட பரிதாப நிலை பற்றிய விவரங்களை பார்ப்போம்.


    புத்தம் புதிய கியா கார்னிவல் கார் சுவரில் மோதும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வாடிக்கையாளர் ஒருவர் தனது புதிய கார்னிவல் காரை விற்பனை மையத்தில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் போது எடுக்கப்பட்டதாகும்.

    கார் சுவரில் மோதும் முன், விற்பனை மைய ஊழியர் புதிய கார் விவரங்களை வாடிக்கையாளருக்கு விவரிக்கிறார். பின் வாடிக்கையாளர் கார் அக்சிலரேட்டரை அழுத்தியதும் அது சுவரில் மோதியது. கார் சுவரை நோக்கி நகரும் போது வாடிக்கையாளர் காரின் வேகத்தை அதிகரித்து இருக்கலாம் என தெரிகிறது.
    கியா கார்னிவல்
    புத்தம் புதிய கார் சுவரில் மோதிய போதும், அது காரில் உள்ள ஏர்பேக்குகள் செயல்படும் அளவு தீவிரமான பாதிப்பு ஏற்படவில்லை என்றே தெரிகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் அருகில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

    மோதலில் காரின் முன்புற பொனெட், பம்ப்பர் மற்றும் பக்கவாட்டுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் காரில் உள்ள கூலண்ட் அல்லது தண்ணீர் கசிந்திருக்கிறது. சேதமடைந்த காரின் உள்புற பாகங்களும் மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்தியாவில் புதிய என்ஜின் ஆப்ஷனை பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    மஹிந்திரா மராசோ மாடலில் விரைவில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிஎஸ்6 என்ஜின் சங்யோங் கொராண்டோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா மராசோ

    புதிய பிஎஸ்6 பவர்டிரெயினை மஹிந்திரா நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. புதிய 1.5 லிட்டர் ஜி5 டர்போ பெட்ரோல் என்ஜின் இந்தியாவில் மராசோ மாடலில் தான் முதலில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 162 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும் எதிர்காலத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.
    ×