என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இந்திய சந்தையில் ஃபோர்டு இகோஸ்போர்ட் புது வேரியண்ட் அறிமுகம்
Byமாலை மலர்16 July 2020 11:02 AM GMT (Updated: 16 July 2020 11:02 AM GMT)
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய இகோஸ்போர்ட் டைட்டானியம் ஆட்டோ வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் இகோஸ்ப்ரோட் டைட்டானியம் ஆட்டோ வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. புதிய கார் டாப் எண்ட் ஆட்டோமேடிக் வேரியண்ட்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10.67 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது டாப் எண்ட் மாடலின் விலையை விட ரூ. 90 ஆயிரம் விலை குறைவு ஆகும். விலை குறைவுக்கு ஏற்றார்போல் புதிய வேரியண்ட்டில் சன்ரூஃப்ட, முன்புறம் இரட்டை ஏர்பேக்குகள் வழங்கப்படவில்லை. இத்துடன் ஆட்டோ ஹெட்லைட், வைப்பர்கள், பின்புற இருக்கையில் ஆம்ரெஸ்ட் மற்றும் முன்புற மேப் லைட்கள் நீக்கப்பட்டு உள்ளது.
புதிய இகோஸ்போர்ட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 123 ஹெச்பி மற்றும் 100 ஹெச்பி செயல்திறன் வழங்குகிறது.
இந்திய சந்தையில் புதிய இகோஸ்போர்ட் மாடல் டாடா நெக்சான் ஏஎம்டி, ஹூண்டாய் வென்யூ டிசிடி மற்றும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மைல்டு ஹைப்ரிட் ஏடி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X