என் மலர்tooltip icon

    பைக்

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 மாடலின் ரேஸ் XP மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் XP மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. புது 125சிசி மாடல் விலை ரூ. 83,275, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலில் ரேசிங் சார்ந்த, மூன்று நிறங்கள் அடங்கிய தீம் மற்றும் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் சிவப்பு நிறத்தால் ஆன ஸ்போர்ட் வீல்கள் உள்ளன.

     டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் XP

    டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் XP மாடலில் மேம்பட்ட Smartxonnect கனெக்டிவிட்டி மற்றும் இரண்டு ரைட் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இதில் உள்ள Smartxonnect வாய்ஸ் அசிஸ்ட் வசதியை வழங்குகிறது. இதுதவிர மோட்களை மாற்றுவது, கன்சோல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்வது, டு நாட் டிஸ்டர்ப் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    என்டார்க் 125 புது வேரியண்டிலும் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 10 பி.ஹெச்.பி. பவர், 10.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. ரேஸ் மோடில் இயக்கும் போது இந்த ஸ்கூட்டர் மணிக்கு 98 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் டாமினர் 250 மற்றும் 400 மாடல்கள் விலையை மாற்றி இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் மாற்றி உள்ளது. அதன்படி டாமினர் 250 மாடல் விலை ரூ. 16,800 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 1,54,176 என மாறி உள்ளது. முன்னதாக இதன் விலை ரூ. 1,70,976 என இருந்தது. 

     பஜாஜ் டாமினர் 250

    டாமினர் 400 மாடலின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் புதிய விலை ரூ. 2,11,572 ஆகும். முன்னதாக இதன் விலை ரூ. 2,03,017 இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி தற்போது டாமினர் 400 விலை ரூ. 8555 உயர்ந்து இருக்கிறது. விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

    இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 மாடல் சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா FZ-25 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டாமினர் 400 மாடல் ராயல் என்பீல்டு Meteor 350, ஹோண்டா CB350 RS மற்றும் பெனலி இம்பீரியல் 400 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 
    2021 ஜூன் மாதத்தில் ஹோண்டா இருசக்கர வாகனங்கள் விற்பனை உள்நாட்டில் மட்டும் 11 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை ஜூன் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021 ஜூன் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 2.34 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்நிறுவனம் 2.10 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

     ஹோண்டா மோட்டார்சைக்கிள்

    கடந்த மாதம் 2.12 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. ஏற்றுமதியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 168 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 21,583 யூனிட்களை ஹோண்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. 

    ஒட்டுமொத்த விற்பனையில் ஆக்டிவா 6ஜி மற்றும் ஷைன் மாடல்கள் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இவை தவிர ஹைனெஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 
    சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜிக்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.


    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஜிக்சர் சீரிஸ் 155சிசி மற்றும் 250சிசி மாடல்களின் விலை ரூ. 3500 வரை உயர்ந்துள்ளது.

    புதிய விலை விவரம்

    சுசுகி ஜிக்சர் SF: ரூ. 1,20,469
    சுசுகி ஜிக்சர் 250: ரூ. 1,30,971
    சுசுகி ஜிக்சர் 250: ரூ. 1,72,872
    சுசுகி ஜிக்சர் SF 250: ரூ. 1,83,571
    சுசுகி ஜிக்சர் SF 250 மோட்டோஜிபி: ரூ. 1,84,373

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     சுசுகி மோட்டார்சைக்கிள்


    இந்த ஆண்டு மட்டும் சுசுகி இருசக்கர வாகனங்கள் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் ஜிக்சர் மாடல்கள் விலை ரூ. 2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. 

    சில தினங்களுக்கு முன் சுசுகி நிறுவனம் தனது 2021 ஹயபுசா இரண்டாம் கட்ட யூனிட்களுக்கான முன்பதிவை துவங்கியது. ஹயபுசா 2021 மாடல்களின் முதல் விற்பனையில் 101 யூனிட்களும் விற்றுத்தீர்ந்தன. இவற்றின் வினியோகமும் துவங்கி நடைபெற்று வருகிறது.  
    சுசுகி நிறுவனம் தனது பிஎஸ்6 ஹயபுசா மாடலின் முன்பதிவை மீண்டும் துவங்கி இருக்கிறது.


    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக ஹயபுசா மாடல்களுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. தற்போதைய முன்பதிவு ஹயபுசா பிஎஸ்6 இரண்டாம் கட்ட யூனிட்களுக்கானவை ஆகும். புது ஹயபுசா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். 

    2021 ஹயபுசா மாடல்களின் முதற்கட்ட யூனிட்கள் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. முதற்கட்டமாக 101 யூனிட்கள் விற்பனைக்கு வந்தது. 101 யூனிட்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பின்புற இருக்கைக்கான கவுல் இலவசமாக வழங்கப்பட்டது. பின்புற கவுல் கொண்டு மோட்டார்சைக்கிளை ஒற்றை இருக்கை கொண்ட மாடலாக மாற்ற முடியும்.  

     2021 சுசுகி ஹயபுசா

    இந்தியாவில் புதிய சுசுகி ஹயபுசா மாடல் துவக்க விலை ரூ. 16.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது முந்தைய மாடலை விட ரூ. 2.65 லட்சம் அதிகம் ஆகும். ஹயபுசா பிஎஸ்6 மாடலில் புல் எல்இடி லைட்டிங், எல்சிடி ஸ்கிரீன், முற்றிலும் புது வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    2021 சுசுகி ஹயபுசா மாடலில் 1340சிசி இன்-லைன் 4 மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. புது சுசுகி ஹயபுசா மாடல் கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மற்றொரு நகரத்துக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையை பூனேவில் துவங்கி உள்ளது. இதன் விலை ரூ. 1,10,898 ஆன்-ரோடு என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக டிவிஎஸ் ஐ கியூப் ஸ்கூட்டர் டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

     டிவிஎஸ் ஐ கியூப்

    தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை நாட்டின் 20 நகரங்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் கம்பெனி இந்த ஆண்டு மே மாதத்தில் அறிவித்தது. செயல்திறன் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் திறன் கொண்ட 125சிசி வாகனங்களுக்கு இணையாக உள்ளது. 

    டிவிஎஸ் ஐ கியூப் மாடலில் உள்ள 4.4kW எலெக்ட்ரிக் மோட்டார் 140 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 78 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இதில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.
    பெனலி நிறுவனத்தின் இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.

    பெனலி இந்தியா நிறுவனம் தனது இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் ரூ. 799 வரை உயர்த்தி இருக்கிறது.  விலை உயர்வின் படி பெனலி இம்பீரியல் 400 சில்வர் நிற மாடலின் விலை ரூ. 1,89,799 என்றும் ரெட் மற்றும் பிளாக் நிற மாடல்களின் விலை ரூ. 1,93,976 என்றும் மாறி இருக்கின்றன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

     பெனலி இம்பீரியல் 400

    பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் பெனலி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் கடந்த ஆண்டு ரூ. 1.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ. 1.89 லட்சம் எனும் புது விலையில் இந்த மாடல் மீண்டும் விற்பனைக்கு வந்தது.

    2021 பெனலி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளில் 374சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி பவர், 29 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவான புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை கிராவ்டான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்து இருக்கிறது.

    ஐதராபாத் நகரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான கிராவ்டான் மோட்டார்ஸ் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி இருக்கிறது. கிராவ்டான் நிறுவனத்தின் முதல் பேட்டரி மோட்டார்சைக்கிள் குவாண்டா என அழைக்கப்படுகிறது.

    புதிய குவாண்டா மாடல் அறிமுக விலை ரூ. 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வினியோகம் 2021 அக்டோபர் மாத வாக்கில் துவங்குகிறது. குவாண்டா மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளை கிராவ்டான் மோட்டார்ஸ் 2016 ஆம் ஆண்டு துவங்கியது.

     கிராவ்டான் குவாண்டா

    இந்த மோட்டார்சைக்கிளின் பிரேம், மோட்டார் கேசிங் மற்றும் பேட்டரி போன்றவை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. நகரம் மற்றும் கிராமம் என இருதரப்பு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டு இருப்பதாக கிராவ்டான் மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது.

    புதிய குவாண்டா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையில் விற்பனை செய்யப்படும் 100சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. கிராவ்டான் குவாண்டா மோட்டார்சைக்கிள் 3 kWH லித்தியம் அயன் பேட்டரி கொண்டுள்ளது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும். மோட்டார்சைக்கிளை Eco மோடில் இயக்கும் போது 320 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என கிராவ்டான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
    வைட் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்ஸ் நிறுவனம் சுசுகி ஹயபுசா மாடலை தழுவி புது எலெக்ட்ரிக் பைக் கான்செப்டை உருவாக்கி இருக்கிறது.

    பிரிட்டனை சேர்ந்த வைட் மோட்டார்சைக்கிள் கான்செப்ட்ஸ் நிறுவனம் WMC250EV பெயரில் புது எலெக்ட்ரிக் பைக் ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு சுமார் 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    வோக்சான் வாட்மேன் மாடலை கொண்டு கடந்த ஆண்டு மோட்டோ ஜிபி வீரர் மேக்ஸ் பியாகி மணிக்கு 367 கிலோமீட்டர் வேகத்தில் சென்றார். இவரது சாதனையை WMC250EV மாடல் முறியடிக்கும் என கூறப்படுகிறது.

     WMC250EV எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

    ப்ரோடோடைப் மாடல் பிரத்யேக ஏரோடைனமிக் டிசைன் கொண்டுள்ளது. இதன் உருவ அமைப்பு இரண்டாம் தலைமுறை சுசுகி ஹயபுசா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் நடுப்பகுதியில் வி-ஏர் என அழைக்கப்படும் டக்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க உதவும்.

    இந்த எலெக்ட்ரிக் பைக் பின்புறம் 30kW மோட்டார்களையும், முன்புறம் 20kW மோட்டார்களையும் கொண்டுள்ளது. இவை 134 பிஹெச்பி திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் திறனை அடுத்த ஆண்டு வாக்கில் அதிகரித்து பொலிவியா சால்ட் பிளாட்களில் உலக சாதனை படைக்கும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்கள் குறைந்த மாத தவணையில் விற்பனை செய்யப்படுகின்றன.
     

    டி.வி.எஸ். நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ரூ. 5 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இத்துடன் 100 சதவீத நிதி சலுகை, ரூ. 1555 மாத தவணை வசதி வழங்கப்படுகிறது.

     டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள்

    இந்த சலுகை டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ், ரேடியான் மற்றும் ஸ்போர்ட் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று மாடல்களிலும் 109.7சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வழங்குகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள்களில் 10 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. முன்னதாக டி.வி.எஸ். நிறுவனம் தனது வாகனங்களுக்கான இலவச சர்வீஸ் சேவையை ஜூன் 30 வரை நீட்டித்தது.
    பெனலி நிறுவனத்தின் லியோன்சினோ பிஎஸ்6 மாடல் இந்தியாவில் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    பெனலி இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக லியோன்சினோ 500 மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தி உள்ளது. விலை உயர்வின் படி பெனலி லியோன்சினோ 500 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 4,69,900 என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் விலை ரூ. 4,59,000 ஆக இருந்தது. 

    இந்திய சந்தையில் பெனலி லியோன்சினோ 500 மாடல் ஸ்டீல் கிரே மற்றும் லியோன்சினோ ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் புதிய விலை முறையே ரூ. 4,69,900 மற்றும் ரூ. 4,79,900 என மாறி இருக்கிறது. பிப்ரவரி மாத வாக்கில் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

     பெனலி லியோன்சினோ 500

    இதில் வட்ட வடிவ ஹெட்லைட், டூயல் டோன் முன்புற பென்டர், வட்ட வடிவ பியூவல் டேன்க், ஒற்றை இருக்கை அமைப்பு, எல்இடி லைட்டிங், ட்வின்-பாட் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் என்ற போதும் இதன் செயல்திறன் குறைக்கப்படவில்லை.

    பெனலி லியோன்சினோ 500 பிஎஸ்6 மாடலில் உள்ள 500சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் 46.8 பிஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜூலை 1 ஆம் தேதி முதல் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை மோட்டார்சைக்கிள்கள் விலை ரூ. 3 ஆயிரம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.

    விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். இருசக்கர வாகன உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதால் விலை உயர்த்தப்படுவதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து உள்ளது. 

     ஹீரோ மோட்டார்சைக்கிள்

    முன்னதாக மாருதி சுசுகி நிறுவனமும் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்தது. 2022 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தனது கார்கள் விலையை மாருதி சுசுகி உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் பயணிகள் வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்தன. வாகன உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தெரிவித்தன.
    ×