என் மலர்tooltip icon

    பைக்

    ஹீரோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்திய சந்தையில் வெளியாகும் என தெரிகிறது.


    எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. ஹீரோ நிறுவனம் தாய்வானை சேர்ந்த இ.வி. கியான், கோகோரோ போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைப்பதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

     ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    லீக் ஆன புகைப்படத்தில் இருப்பது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் உற்பத்திக்கு தயார் நிலையில் காட்சியளிக்கிறது. ஒட்டுமொத்த தோற்றம் சந்தையில் தற்போது கிடைக்கும் மாடல்களை விட பெரியதாக இருக்கிறது. மேலும் இதன் வடிவமைப்பு ஹீரோவின் பெட்ரோல் மாடல்களை விட வித்தியாசமாக இருக்கிறது.

    அந்த வகையில் புதிய எலெக்ட்ரிக் மாடல் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவைதவிர ஸ்கூட்டரின் இதர அம்சங்கள் மர்மமாகவே உள்ளது. புதிய ஸ்கூட்டரின் வெளியீடு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ நடைபெறும் என தெரிதிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது ஜிG310 சீரிஸ் மாடல்கள் விலையை இரண்டாவது முறையாக மாற்றியமைத்து இருக்கிறது.


    பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் இந்தியாவில் G310R மற்றும் G310GS  மாடல்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடல்களாக G310R மற்றும் G310GS இருக்கின்றன.

     பி.எம்.டபிள்யூ. G310R

    இரு மாடல்கள் விலை முன்னதாக ரூ. 2.50 லட்சம் மற்றும் ரூ. 2.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தன. தற்போது இவற்றின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இரு மாடல்கள் விலை முறையே ரூ. 2.60 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இந்திய விற்பனையில் இரு மாடல்களும் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகின்றன. இரு மாடல்களில் G310GS அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 டூயல் டோன் எடிஷன் மூன்று வித நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 டூயல் டோன் எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய டாமினர் 250 டூயல் டோன் எடிஷன் விலை ரூ. 1,54,176 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். புதிய டூயல் டோன் எடிஷன்- ரேசிங் ரெட் & மேட் சில்வர், சிட்ரஸ் ரஷ் & மேட் சில்வர் மற்றும் ஸ்பார்க்லிங் பிளாக் & மேட் சில்வர் என மூன்று நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது.

    டாமினர் 250 மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.6 பி.ஹெச்.பி. திறன், 23.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த மாடலில் நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    பஜாஜ் டாமினர் 250 டூயல் டோன் எடிஷன்

    பஜாஜ் டாமினர் 250 மாடல் கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள என்ஜின் கே.டி.எம். 250 டியூக் பிளாட்பார்மை சார்ந்து, சற்றே வித்தியாசமான டியூனிங்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஒட்டுமொத்த தோற்றம் டாமினர் 400 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டர் இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்குகிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியா முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் அதிக நகரங்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    "இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன புரட்சி துவங்கி விட்டது! ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களில் இருந்து முன்பதிவு செய்யப்படுகிறது. முதல் நாளில் இருந்தே நாடு முழுக்க வினியோகம், சர்வீஸ் உள்ளிட்டவை துவங்கும். விவரங்கள் ஆகஸ்ட் 15-இல். இந்த புரட்சியை நாம் ஒன்றிணைந்து நிகழ்த்துவோம்," என அவர் தெரிவித்தார்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகிறது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டரின் பெரும்பாலான விவரங்கள் அறிவிக்கப்பட்டு முன்பதிவும் நடைபெற்று வருகிறது. ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பத்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது அபாச்சி சீரிஸ் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.


    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் அபாச்சி RTR 160 4V மற்றும் அபாச்சி RTR 200 4V மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த ஆண்டு துவங்கியது முதல் இந்த மாடல்கள் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக ஜனவரி மற்றும் ஏப்ரல் மாத வாக்கில் இரு மாடல்கள் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அறிவிப்பின்படி அபாச்சி RTR 160 4V மாடலுக்கு ரூ. 3 ஆயிரமும், அபாச்சி RTR 200 4V மாடலுக்கு ரூ. 3,750 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V

    புதிய விலை விவரம்

    டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V 

    டிரம் பிரேக் ரூ. 1,11,565
    டிஸ்க் பிரேக் ரூ. 1,14,615

    டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4V

    சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 1,33,065
    டூயல் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 1,38,115

    முன்னதாக அபாச்சி RTR 200 4V மாடலுக்கு அப்டேட் வழங்கப்பட்டது. இந்த அப்டேட் மோட்டார்சைக்கிளில் மூன்று ரைடிங் மோட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷோவா முன்புற சஸ்பென்ஷன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் வழங்கப்பட்டன. 

    அபாச்சி RTR 160 4V மாடலில் உள்ள 160சிசி, 4 வால்வுகள் கொண்ட என்ஜின் 17.4 பி.ஹெச்.பி. பவர், 14.73 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. முன்னதாக இந்த என்ஜின் 15.6 பி.ஹெச்.பி. பவர், 14.12 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான சிம்பிள் எனர்ஜி தனது உற்பத்தி ஆலை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி சிம்பிள் எனர்ஜியின் ஆலை ஓசூரில் அமைகிறது. உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வினியோகம் செய்ய முடியும். இதற்காக சிம்பிள் எனர்ஜி சுமார் 2 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் ஆலையை கட்டமைக்கிறது. மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 1000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது.

     சிம்பிள் ஒன்

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 350 கோடியை முதலீடு செய்ய சிம்பிள் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் ஒன் எனும் பெயரில் அறிமுகமாகிறது. இதன் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    மேலும் இதில் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார், ஸ்கூட்டரை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் வழங்கும். இந்தியாவில் சிம்பிள் ஒன் விலை ரூ. 1.10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகிறது.

    கவாசகி நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கும் புதிய வவுச்சரை அறிமுகம் செய்து இருக்கிறது.


    கவாசகி இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல் விலையை இந்தியாவில் மாற்றியமைத்து இருக்கிறது. KLX சீரிஸ், நின்ஜா 300 மற்றும் Z H2 தவிர அனைத்து மாடல்கள் விலையையும் கவாசகி மாற்றிவிட்டது. விலை உயர்வை தொடர்ந்து கவாசகி நிறுவனம் குட் டைம்ஸ் வவுச்சரை அறிமுகம் செய்து இருக்கிறது. இது முன்பை விட அதிக சலுகைகளை வழங்குகிறது. 

    புதிய வவுச்சர் தற்போதுள்ள எட்டு மாடல்களுக்கு வழங்கப்படும் சன்ரைஸ் வவுச்சருக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய குட் டைம்ஸ் வவுச்சர் பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

     கவாசகி மோட்டார்சைக்கிள்

    கவாசகி நின்ஜா 650 ரூ. 15 ஆயிரம் 
    கவாசகி Z 650 ரூ. 15 ஆயிரம்
    கவாசகி வல்கன் எஸ் ரூ. 25 ஆயிரம்
    கவாசகி Z900 ரூ. 10 ஆயிரம்
    கவாசகி நின்ஜா 1000SX ரூ. 40 ஆயிரம்
    கவாசகி வெர்சிஸ் 1000 ரூ. 40 ஆயிரம்
    கவாசகி வெர்சிஸ் 650 ரூ. 35 ஆயிரம்
    கவாசகி W ரூ. 35 ஆயிரம் 

    கவாசகி புதிய வவுச்சரை வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து தள்ளுபடியாக பெற முடியும். 
    ஓலா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் விலை மற்றும் இதர விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கடந்த மாதமே துவங்கிவிட்டது. இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.



    புதிய ஸ்கூட்டர் வெளியீட்டு தேதியை பாவிஷ் அக்ரவால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பத்து நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை ஆன்லைனில் நடைபெறும் என்றும் ஸ்கூட்டர்கள் நேரடியாக வாடிக்கையாளர் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்திய சந்தையில் வெளியாக இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய ஸ்கூட்டர் அம்சங்களை ஓலா அறிவித்து வருகிறது.

    டெஸ்லா போன்றே ஓலா எலெக்ட்ரிக் தனது ஸ்கூட்டர் விற்பனையை நேரடியாக ஆன்லைனில் நடத்தலாம் என தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்பனையகம் செல்வீர்களா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    கோப்புப்படம்

    இதற்கு பதில் அளித்தவர்களில் பெரும்பாலானோர் ஆன்லைன் விற்பனையே சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்து இருக்கின்றனர். முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும்.

    முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
    பிகாஸ் நிறுவனம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    பிகாஸ் (BGauss) நிறுவனம் 2021 நான்காவது காலாண்டில் இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் டிசைன், வடிவமைப்பு, உற்பத்தி அனைத்துமே இந்தியாவில் உள்ள பிகாஸ் குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 

    புதிய வாகனங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிகாஸ் திட்டமிட்டுள்ளது. தனித்துவம் மிக்க புது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் சக்கனில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலையை பிகாஸ் மாற்றி அமைத்து இருக்கிறது. 

     பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    புதிய வாகனங்கள் நீண்ட தூரம் செல்லும் வகையிலும், அசத்தல் தோற்றம், சிறப்பான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் வழங்கும் வகையிலும் இருக்கும். இந்திய சந்தையின் முதல் மற்றும் இரண்டம் தர நகரங்களில் பிளாக்‌ஷிப் ஸ்டோர் மூலம் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிகாஸ் திட்டமிட்டு உள்ளது.

    தற்போது நாடு முழுக்க 13 விற்பனை மையங்களை பிகாஸ் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் இதனை 35 ஆகவும் 2022 மார்ச் மாதத்திற்குள் 100 விற்பனை மையங்களை திறக்கவும் பிகாஸ் திட்டமிட்டு இருக்கிறது. 

    பெனலி நிறுவனம் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையின் மிட்-சைஸ் குரூயிசர் பிரிவில் களமிறங்கி இருக்கிறது.


    பெனலி நிறுவனத்தின் 502C மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல் மூலம் பெனலி நிறுவனம் இந்தியாவின் மிட்-சைஸ் குரூயிசர் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. பெனலி 502C விலை ரூ. 4.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது கவாசகி நிறுவனத்தின் வல்கன் எஸ் மாடலை விட ரூ. 1 லட்சம் விலை குறைவு ஆகும்.

    புதிய பெனலி 502C மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் ஆகும். பெனலி 502C மாடல் மேட் பிளாக் மற்றும் காக்னக் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. பெனலி 502C வடிவமைப்பு டுகாட்டி டையவெல் 1260 மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. 

     பெனலி 502C

    இந்த மாடலில் ஹெட்லேம்ப் வழக்கத்தை விட கீழே பொருத்தப்பட்டு உள்ளது. இதன் பியூவல் டேன்க் டியர்-டிராப் வடிவம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள எக்சாஸ்ட் டூயல் ஷாட்கன் துப்பாக்கி போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் கன்சோல் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பெனலி 502C மாடலில் 500சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 46.8 பி.ஹெச்.பி. பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    யமஹா நிறுவனத்தின் R3 பி.எஸ்.6 மாடல் பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி வருகிறது.


    யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. யமஹாவின் பி.எஸ்.4 மாடல்களில் மிகவும் பிரபலமாக இருந்த YZF-R3 இதுவரை பி.எஸ்.6 அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. 

    முன்னதாக புதிய யமஹா மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த மாடல் RZF-R15 V4 என்றும் கூறப்பட்டது. பின், இந்த மாடலை உற்று நோக்கும் போது இது பெரிய மோட்டார்சைக்கிள் என்றும் இது R3 மாடலின் பி.எஸ்.6 வேரியண்டாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. 

    யமஹா R3

    ஸ்பை படங்களில் இந்த மோட்டார்சைக்கிளின் ஹெட்லேம்ப், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட YZF-R7 வேரியண்ட்டில் உள்ளதை போன்றே நடுவில் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிளின் பின்புறம் R3 பி.எஸ்.4 போன்றே காட்சியளிக்கிறது. 

    புதிய டிசைன் மட்டுமின்றி பி.எஸ்.6 R3 மாடல் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., 6-ஆக்சிஸ் IMU சென்சார் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. என்ஜினை பொருத்தவரை 2021 R3 மாடலில் 321சிசி, லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

    முந்தைய பி.எஸ்.4 என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டது. இந்த என்ஜின் 41 பி.ஹெச்.பி. பவர், 29 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பிரேக்கிங்கிற்கு R3 மாடலின் முன்புறம் 298 எம்.எம். டிஸ்க், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டது.

    ×