என் மலர்
பைக்
- பெனலி பைக் மாடல்களின் இந்திய விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
- பைக் மாடல்களின் விலை தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பெனலி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வில் மிடில்வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள்களான TRK 502 மற்றும் TRK 502X பாதிக்கப்பட்டு உள்ளன.
விலை உயர்வு காரணமாக பெனலி TRK 502 சீரிஸ் விலை தற்போது ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் முந்தைய விலை ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். அதன்படி இந்த மாடலின் விலை ரூ. 25 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

புதிய விலை விவரங்கள்:
பெனலி TRK 502 டார்க் கிரே ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502 வைட் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502 பிளாக் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502 கிரீன் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502X டார்க் கிரே ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
பெனலி TRK 502X வைட் ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
பெனலி TRK 502X எல்லோ ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
பெனலி TRK 502X கிரீன் ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
புதிய பெனலி TRK 502 சீரிசின் அனைத்து மாடல்கள் விலையும் ஒரே மாதிரியே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெனலி TRK 502X சீரிசில் எல்லோ நிறம் தவிர மற்ற மாடல்கள் விலை ஒரே மாதிரியே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விலை தவிர பெனலி TRK 502 சீரிஸ் மாடல்களில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடல்களில் 500சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 46.8 ஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
- ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மாடல் ஜெ சீரிஸ் என்ஜினுடன் அறிமுகமாகிறது.
- புதிய புல்லட் 350 மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய புல்லட் 350 மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய புல்லட் 350 மாடல் ஆகஸ்ட் 30-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய புல்லட் 350 மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அதன்படி புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடலில் ஜெ சீரிஸ் 349சிசி, சிங்கில் சிலின்டர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதே என்ஜின் தற்போதைய கிளாசிக் 350, மீடியோர் 350 மற்றும் ஹன்டர் 350 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய புல்லட் 350 மாடலின் ஒட்டுமொத்த தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இன்றி, சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

புதிய மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டியர்-டிராப் வடிவம் கொண்ட பியூவல் டேன்க் மற்றும் 2-பீஸ் சீட் உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. ஹார்டுவேரிலும் மாற்றங்கள் இன்றி டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஷாக்குகள் வழங்கப்படுகின்றன.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் மற்றும் ஆப்ஷனல் டிஸ்க் பிரேக் யூனிட் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய புல்லட் 350 மாடலில் ஸ்போக் வீல்கள், ரோட்-பயஸ்டு டயர்கள், ஸ்பீடுமீட்டர், ஒடோமீட்டர், சிறிய டிஜிட்டல் இன்செட் கொண்ட எளிமையான இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் வழங்கப்படுகிறது.
- டிவிஎஸ் ஐகியூப் மாடலில் 3.04 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
- டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறிய பேட்டரி மற்றும் குறைந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம்.
இந்திய எலெக்ட்ரிக் வாகன பிரிவில், அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் டிவிஎஸ் ஐகியூப் மாடல் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஒலா S1 சீரிஸ் முதலிடத்தில் இருக்கிறது. ஐகியூப் மாடலின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புது திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிவிஎஸ் நிறுவனம் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த ஃபேம் 2 திட்ட மானியம் குறைக்கப்பட்டு விட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரினை சற்றே சிறிய பேட்டரி மற்றும் குறைந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. தற்போதைய ஐகியூப் மாடலில் 3.04 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்தனை அம்சங்கள் மற்றும் விலை காரணமாகவும், ஐகியூப் மாடல் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது.
அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை தற்போதைய வேரியன்டை விட ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 15 ஆயிரம் வரை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.
- 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.
- 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் 199.6சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஆயில் கூல்டு என்ஜின் உள்ளது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2023 எக்ஸ்டிரீம் 200S 4V மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் மேம்பட்ட என்ஜின் மற்றும் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டரன்-பை-டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கால் மற்றும் எஸ்.எம்.எஸ். அலெர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டில்பார் ஒட்டுமொத்தமாக ஸ்போர்ட் ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது.

புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடல் மூன் எல்லோ, பேந்தர் பிளாக் மெட்டாலிக் மற்றும் ஸ்டெல்த் எடிஷன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் 199.6சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஆயில் கூல்டு என்ஜின் மற்றும் ஹீரோ எக்ஸ்-சென்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள என்ஜின் OBD2 மற்றும் E20 ரக எரிபொருளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.9 ஹெச்பி பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய எக்ஸ்டிரீம் 200S 4V மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் 7-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.
- பிஎம்டபிள்யூ G 310 சீரிசில் G 310 R, G 310 RR மற்றும் G 310 GS போன்ற மாடல்கள் அடங்கும்.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது G 310 சீரிஸ் மாடல்களை புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியா சிறப்பான அரையாண்டு, காலாண்டு மற்றும் ஜூன் மாத விற்பனையை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. பிஎம்டபிள்யூ, மினி மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டராட் என மூன்று பிரான்டுகளும் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் 4 ஆயிரத்து 667 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகம் ஆகும். பிஎம்டபிள்யூ இருசக்கர வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்தியதில், புதிய என்ட்ரி லெவல் G 310 சீரிஸ் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதில், G 310 R, G 310 RR மற்றும் G 310 GS போன்ற மாடல்கள் அடங்கும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட G 310 சீரிஸ், ஒட்டுமொத்த விற்பனையில் 90 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இவைதவிர பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் S 1000 RR, R 1250 GS/ GSA மற்றும் C400 GT போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
புதிய என்ட்ரி லெவல் மாடல்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் சிறப்பான நிதி சலுகைகளும் விற்பனை அதிகரிக்க காரணம் என்று பிஎம்டபிள்யூ மோட்டராட் தெரிவித்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது G 310 சீரிஸ் மாடல்களை புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், எப்போது வெளியாகும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- புதிய கேடிஎம் 390 டியூக் மாடலில் முற்றிலும் புதிய லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.
- புதிய மாடலில் IMU சார்ந்த லீன்-சென்சிடிவ் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படலாம்.
2024 கேடிஎம் 390 டியூக் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டை ஒட்டி, தொடர் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் அடுத்த தலைமுறை ஹஸ்க்வர்னா ஸ்வாட்பைலென் 401 மாடலுடன் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கேடிஎம் 390 டியூக் மாடல் அதன் இறுதிக்கட்ட டெஸ்டிங்கில் இருப்பதாக தெரிகிறது.
புதிய கேடிஎம் 390 டியூக் மாடலின் சர்வதேச வெளியீடு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA மிலன் மோட்டார் விழாவில் நடைபெற இருக்கிறது. புதிய கேடிஎம் 390 டியூக் மாடலில் முற்றிலும் புதிய லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 399சிசி யூனிட் ஆக இருக்கும் என்று தெரிகிறது. இதன் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Photo Courtesy: Shifting-Gears
இந்த என்ஜின் அதிக பவர் மற்றும் லோ-என்ட் டார்க் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதுதவிர, இந்த பிரிவில் பல்வேறு அம்சங்களை புதிய கேடிஎம் 390 டியூக் மாடல் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் எலெக்டிரானிக் ஏய்டுகளும் வழங்கப்படுகிறது.
அதன்படி புதிய மாடலில் IMU சார்ந்த லீன்-சென்சிடிவ் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ரைடிங் மோட்கள், இருபுறமும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் வழங்கப்படும் என்று தெரிகிறது.
- நிதி சார்ந்த சலுகைகளை அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய விருப்பம் தெரிவிக்கின்றனர்.
- ஏத்தர் நிறுவனம் 60 மாதங்களுக்கு மாத தவணை முறை வசதியை வழங்கி இருக்கிறது.
பெங்களூருவை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர், ஏத்தர் எனர்ஜி 100 சதவீதம் நிதி சலுகை வழங்கும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஏத்தர் நிறுவனத்தின் வாகன விற்பனை அதிகரிக்கும் என்று ஏத்தர் எனர்ஜி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
100 சதவீதம் ஆன்-ரோடு நிதி சலுகையை வழங்குவதற்காக, ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், ஆக்சிஸ் வங்கி, ஹீரோ ஃபின்கார்ப் மற்றும் சோலமண்டலம் ஃபைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

நிதி சார்ந்த சலுகைகளை அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்து வருவதை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உணர்ந்து கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் ஏத்தர் நிறுவனம் 60 மாதங்களுக்கு மாத தவணை முறை வசதியை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் ஏத்தர் ஸ்கூட்டருக்கான மாத தவணை மாதத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 999 என்று குறைந்துள்ளது.
"100 சதவீதம் ஆன்-ரோடு நிதி சலுகை, நீண்ட கால தவணை முறை போன்ற திட்டங்களுடன், ஏத்தர் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையை மேலும் குறைக்கும் நடவடிக்கையில் முன்னணியில் உள்ளது. இதன் மூலம் நாட்டில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை மேலும் அதிகப்படுத்த முடியும்," என்று ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் மூத்த அலுவலர் ரவ்னீத் பொகெலா தெரிவித்தார்.
- புதிய ஹோன்டா டியோ 125 மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் உள்ளது.
- ஹோன்டா டியோ 125 மாடல் ஒட்டுமொத்தமாக ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது.
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியோ 125 சிசி ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டியோ 125சிசி மாடல் ஸ்டான்டர்டு மற்றும் ஸ்மார்ட் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் விலை ரூ. 83 ஆயிரத்து 400 முதல் துவங்குகிறது.
புதிய ஹோன்டா டியோ 125 மாடலில் OBD2 விதிகளுக்கு பொருந்தும் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் eSP வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதே என்ஜின் ஹோன்டா கிரேசியா 125 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாடலில் இந்த யூனிட் 8.14 ஹெச்பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இந்த மாடல் தோற்றத்தில் 110சிசி ஹோன்டா டியோ போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலின் அப்ரனில் ஹெட்லைட், முன்புற இன்டிகேட்டர்கள், கூர்மையான டிசைன், ஸ்ப்லிட் ஸ்டைல் கிராப்ரெயில், டூயல் அவுட்லெட் எக்சாஸ்ட் உள்ளது.
இத்துடன் புதிய கிராஃபிக்ஸ், பிரம்மான்ட லோகோ வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஹோன்டா டியோ 125சிசி ஸ்கூட்டர்- பியல் சைரன் புளூ, பியல் டீப் கிரவுன்ட் கிரே, பியல் நைட் ஸ்டார் பிளாக், மேட் மார்வல் புளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் சங்கரியா ரெட் மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய ஹோன்டா டியோ 125சிசி மாடலில் எல்இடி ஹெட்லைட், ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர் மற்றும் என்ஜின் இன்ஹிபிட்டர், இன்டகிரேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் பீம், பாசிங் ஸ்விட்ச், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் ஸ்மார்ட் கீ வேரியண்டில் H ஸ்மார்ட் தொழில்நுட்பம், ஸ்மார்ட் ஃபைன்ட், கீலெஸ் ஸ்டார்ட் மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. சஸ்பென்ஷனுக்கு- முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சிங்கில் ரியர் ஸ்ப்ரிங் உள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் டிரம் பிரேக்குகள், ஸ்மார்ட் வேரியண்டில் பெட்டல் ரக முன்புற டிஸ்க் பிரேக் உள்ளது.
- சுசுகி அக்சஸ் 125 மாடல் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.
- சுசுகி அக்சஸ் 125 மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் உள்ளது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 125சிசி ஸ்கூட்டர், அக்சஸ் 125 உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. ஜப்பானை சேர்ந்த சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் 50 லட்சமாவது அக்சஸ் 125 ஸ்கூட்டரை வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள கெர்கி டௌலா ஆலையில் இருந்து வெளியானது.
இருசக்கர வாகன சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும், சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் அக்சஸ் 125 இருக்கிறது. இந்திய சந்தையில் சுசுகி அக்சஸ் 125 மாடல்- ஸ்டான்டர்டு, ஸ்பெஷல் எடிஷன் மற்றும் ரைடு கனெக்ட் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இதன் டாப் என்ட் வேரியன்ட் பெயருக்கு ஏற்றார்போல் ப்ளூடூத் மாட்யுல் மூலம் மிஸ்டு கால் அலெர்ட்கள், போன் பேட்டரி லெவல் இன்டிகேட்டர், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற அம்சங்களை வழங்குகிறது.
சுசுகி அக்சஸ் 125 மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.58 ஹெச்பி பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த மாடலில் ஸ்டீல் வீல்கள், டிரம் பிரேக்குகள் உள்ளன.
இதன் டாப் என்ட் வேரியன்ட்களில் அலாய் வீல்கள், முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய இருசக்கர வாகன சந்தையின் 125சிசி ஸ்கூட்டர்கள் பிரிவில் அக்சஸ் 125 மட்டுமின்றி பர்க்மேன் ஸ்டிரீட், பர்க்மேன் ஸ்டிரீட் EX மற்றும் அவெனிஸ் உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
- புதிய ஏத்தர் 450S மாடலில் எல்சிடி டேஷ் போர்டு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
- ஏத்தர் நிறுவனம் சற்றே குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய முடிவு.
ஏத்தர் 450S மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 3-ம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஏத்தர் 450S மாடலின் விலை ரூ. 1.3 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சற்றே சிறிய பேட்டரி பேக் உடன் வழங்கப்படுகிறது.
முந்தைய ஏத்தர் 450X மாடலில் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. புதிய ஏத்தர் 450S மாடலில் எல்சிடி டேஷ் வழங்கப்படுகிறது. இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு, ஒன் டச் வசதி வழங்கப்படவில்லை.

சமீபத்தில் ஃபேம் 2 திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திடீர் மாற்றம் காரணமாக ஏத்தர் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை அதிகரித்தது. இதன் காரணமாக ஏத்தர் நிறுவனம் சற்றே குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய ஏத்தர் முடிவு செய்துள்ளது.
ஏத்தர் 450S மாடலும் 450X போன்றே மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 115 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. எனினும், இந்த மாடலில் 6.2 கிலோவாட் திறன் கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
- இந்த ஸ்கூட்டர் நார்மல் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த ஸ்கூட்டர் உற்பத்தியாளர் பியாஜியோ-வின் வெஸ்பா ஸ்கூட்டர் அதிக பிரபலமான மாடல் ஆகும். பியாஜியோ நிறுவனத்தின் பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனர்கள் அன்றாட பயன்பாடுக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆப்ஷனாக அமைகிறது.
பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியின் மிலனில் நடைபெற்ற 2022 EICMA நிகழ்வில் பியாஜியோ 1 மாடலுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது. பியாஜியோ 1 பிளஸ் மாடலில் கழற்றக்கூடிய 2.3 கிலோவாட்ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் உள்ளது. இது நீண்ட கால பயன்பாட்டிற்கு ஏற்றதாகும்.

பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 1700 வாட் பி.எல்.டி.சி. எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்கூட்டர் நார்மல் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ரிமோட் அக்சஸ், எல்இடி லைட்கள், ஸ்டார்ட் பட்டன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் ஒடோமீட்டர், யுஎஸ்பி போர்ட் பல்வேறு ரைடிங் மோட்கள் உள்ளன.
இந்திய சந்தையில் புதிய பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.5 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு எளிய மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
- டிரையம்ப் ஸ்கிராம்ப்லர் 400 X மாடலின் வெளியீடு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.
- இரு மாடல்களிலும் 398.15சிசி, லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400 X மாடல்களுக்கான முன்பதிவை இந்திய சந்தையில் துவங்கி விட்டது. லண்டனில் நடைபெற்ற சர்வதேச வெளியீட்டை ஒட்டி, இந்திய முன்பதிவை ஏற்கனவே துவங்கி இருந்தது. இந்த நிலையில், புதிய மாடல்களின் முன்பதிவு துவங்கிய பத்து நாட்களில் இந்த மாடல்களை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் தான் டிரையம்ப் ஸ்பீடு 400 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில், இதன் விலை ரூ. 2 லட்சத்து 33 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரம் தான் என்று அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

கடுமையான போட்டியை ஏற்படுத்தும் விலை காரணமாக, இந்த மாடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தற்போதைக்கு டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 மாடலை மட்டுமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. டிரையம்ப் ஸ்கிராம்ப்லர் 400 X மாடலின் வெளியீடு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் ஸ்கிராம்ப்லர் 400 X மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இரு மாடல்களிலும் 398.15சிசி, லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.5 ஹெச்பி பவர், 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.






