என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    லம்போர்கினி நிறுவனம் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த சூப்பர்கார் மாடலை இந்தியா கொண்டுவருகிறது.

    லம்போர்கினி நிறுவனம் ஹரிகேன் இவோ ஸ்பைடர் மாடலை சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. புதிய ஹரிகேன் இவோ ஸ்பைடர் ஜூன் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த சூப்பர்கார் ஆர்டபிள்யூடி கூப் மாடலை போன்ற காஸ்மெடிக் அம்சங்கள் மற்றும் என்ஜின் கொண்டுள்ளது.

     லம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர்

    லம்போர்கினி ஹரிகேன் இவோ ரியர்-வீல் டிரைவ் ஸ்பைடர் மாடல் முன்புற ஸ்ப்லிட்டர், வெர்டிக்கல் பின்கள், பெரிய முன்புற ஏர் டேம்கள் உள்ளன. பின்புற பம்ப்பர் ஹை கிளாஸ் பிளாக் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்பைடர் மாடலில் உள்ள டாப் ரூப் 17 நொடிகளில் திறந்துவிடும். இதனை கார் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போதும் இயக்க முடியும்.  

    இந்த சூப்பர்கார் 5.2 லிட்டர் வி10 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 610 பிஹெச்பி பவர் கொண்டுள்ளது. இந்த மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு 324 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர எஸ்யுவி மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேபக் GLS600 ஆடம்பர எஸ்யுவி மாடலை இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது. GLS600 மெர்சிடிஸ் மேபக் சீரிசில் முதல் எஸ்யுவி மாடல் ஆகும். முன்னதாக 2019 வாக்கில் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகின் மற்ற சந்தைகளில் இது விற்பனை செய்யப்படுகிறது.

     மெர்சிடிஸ் மேபக் GLS600

    மேபக் ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது GLS600 மேபக் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. GLS600 மேபக் பிஸ்போக் அம்சங்கள், உள்புறம் ஆடம்பர அம்சங்கள் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. வெளிப்புறத்தில் உள்ள ட்ரிம் பீஸ்கள் குரோம் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

    மெர்சிடிஸ் மேபக் GLS600 மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 550 பிஹெச்பி பவர், 730 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் இகியூ பூஸ்ட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் கொண்டுள்ளது. இது 249 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.


    டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமும் செய்ய திட்டமிட்டு உள்ளது. புது மாடல்களில் மல்டிஸ்டிராடா வி4 மாடலும் ஒன்று. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மல்டிஸ்டிராடா வி4 ஜூன் மாத இறுதியில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    மல்டிஸ்டிராடா வி4 மட்டுமின்றி டுகாட்டி நிறுவனம் டையவெல் 1260 மற்றும் பேனிகேல் வி4 மாடல்களையும் இம்மாதமே அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மல்டிஸ்டிராடா வி4 மாடல் - ஸ்டான்டர்டு, வி4எஸ் மற்றும் வி4 எஸ் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4

    பேனிகேல் வி4 மாடலில் வழங்கப்பட்ட என்ஜின் புது மல்டிஸ்டிராடா வி4 மாடலிலும் வழங்கப்படுகிறது. எனினும், இந்த என்ஜின் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளுக்கு ஏற்ற டியூனிங் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. மல்டிஸ்டிராடா வி4 மாடலில் 1158சிசி வி4 கிரான்டூரிஸ்மோ என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 170 பிஹெச்பி பவர், 125 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், டுகாட்டி ஷிப்ட் பை-டைரெக்ஷன் குவிக் ஷிப்டர் வழங்கப்பட்டு உள்ளது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் என் லைன் பெர்பார்மன்ஸ் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த என் லைன் ரக மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. என் லைன் மாடல்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கார்களின் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும். 

    முன்னதாக பலமுறை என் லைன் மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படும் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடல் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இந்த கார் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்ததாக கூறப்படுகிறது.

     ஹூண்டாய் ஐ20 என் லைன்

    பெரிய அலாய் வீல்கள், பின்புறம் டூயல் எக்சாஸ்ட் டிப்கள், வடிவம் மற்றும் தோற்றத்தில் ஐ20 என் லைன் சற்றே வித்தியாசமாக இருக்கிறது. இதன் முன்புறம் பெரிய கிரில், ரிவைஸ்டு பம்ப்பர், பெரிய ஏர் இன்டேக், முன்புற கிரிலில் என் லைன் பேட்ஜிங் கொண்டிருக்கிறது.

    புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 120 பிஹெச்பி பவர், 172 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. என்ஜின் மற்றும் பவர்டிரெயின் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 
    ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் மாடல் குளோபல் கிராஷ் டெஸ்ட்டில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கிறது.


    இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டிரைபர் மாடல் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரெனால்ட் டிரைபர் கிராஷ் டெஸ்ட் புள்ளி விவரம்

    குளோபல் என்கேப் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின்படி ரெனால்ட் டிரைபர் கிராஷ் டெஸ்டில் பெரியவர்கள் அமர்ந்து இருக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 17-க்கு 11.62 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதற்கு நான்கு நட்சத்திர குறியீடுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.  

    சிறுவர்கள் அமர்ந்து இருக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 49-க்கு 27 புள்ளிகளை பெற்றது. இதற்கு மூன்று நட்சத்திர குறியீடுகள் வழங்கப்பட்டன. 7 பேர் பயணிக்கக்கூடிய டிரைபர் மாடலில் கூடுதல் பொருட்களை ஏற்றி சோதனை செய்யும் திறன் கொண்டிருக்கவில்லை. 
    டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் மாடல் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் மாடல்கள் உருவாக்கப்பட்ட ஐஎம்வி 2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.


    டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர டொயோட்டா ஹிலக்ஸ் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.

     டொயோட்டா ஹிலக்ஸ்

    5.3 மீட்டர்கள் நீளமாக இருக்கும் டொயோட்டா ஹிலக்ஸ் ஐஎம்வி-2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. டொயோட்டாவின் பார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா மாடல்களும் இதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டவை ஆகும். ஹிலக்ஸ் மாடலில் 2.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. 

    இது 150 பிஹெச்பி பவர் வழங்குகிறது. மேலும் இது ரியர்-வீல் டிரைவ் கொண்டிருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 2.8 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 208 பிஹெச்பி பவர், 4-வீல் டிரைவ் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் மே மாதத்தில் விற்பனை செய்த வாகன விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் மே மாதத்தில் மட்டும் 46,555 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் 33,771 யூனிட்கள் உள்நாட்டிலும், 11,262 யூனிட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது  இது 151 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

     மாருதி சுசுகி கார்

    எனினும், ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது மே மாத விற்பனை சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,59,691 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. பயணிகள் வாகனங்கள் பிரிவில் மாருதி சுசுகி மினி, காம்பேக்ட் மாடல்களில் ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் மாடல்களை விற்பனை செய்கிறது.

    இவை மட்டும் மே மாதத்தில் 25,103 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. யுடிலிட்டி வாகனங்கள் மற்றும் வேன்கள் பிரிவில் ஜிப்சி, எர்டிகா, எஸ் கிராஸ், எக்ஸ்எல்6, விட்டாரா பிரெஸ்ஸா, ஈகோ போன்ற மாடல்கள் 7451 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 
    யமஹா நிறுவனத்தின் இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.


    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது FZ25 மற்றும் FZS25 மோட்டார்சைக்கிள்கள் விலையை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. புது விலை குறைப்பை தொடர்ந்து இரு மாடல்கள் விலை முறையே ரூ. 1,34,800 மற்றும் ரூ. 1,53,600 என மாறி இருக்கிறது. இவை முந்தைய விலையை விட ரூ. 18,800 மற்றும் ரூ. 19,300 வரை குறைவு ஆகும். 

     யமஹா மோட்டார்சைக்கிள்

    FZ25 சீரிஸ் உற்பத்தி செலவீனங்களை ஓரளவு குறைத்து இருப்பதாக யமஹா வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. செலவீனங்கள் குறைக்கப்பட்டதால், விலை குறைப்பு அறிவிக்கப்படுவதாக யமஹா தெரிவித்துள்ளது. 

    யமஹா FZ25 சீரிஸ் மாடல்களில் 249சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 20.5 பிஹெச்பி  பவர், 20.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 
    உலகில் கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பெரும் பணக்காரர்கள் அதை வாங்க கோடிகளை கொட்டிக்கொடுக்கின்றனர்.

    கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகின் பல்வேறு நாடுகள் மீண்டு வரத்துவங்கி உள்ளன. இந்த நிலையில், ஆடம்பர வாகனங்கள் விற்பனை இதுவரை இல்லாத அளவு அதிகரித்து இருக்கிறது. லம்போர்கினி, பெராரி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் என முன்னணி நிறுவனங்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு வாகனங்கள் விற்பனை பெரும் சரிவை சந்தித்தது. உலகின் பெரும் பணக்காரர்களுக்கு இருந்த ஒரே கவலை, வெளியில் பழையபடி சுற்ற முடியாதது தான். இவர்கள் தங்களின் செலவீனங்களை ஒத்திவைத்தனர் என சந்தை ஆய்வு நிறுவனத்தின் பெலிப் முனோஸ் தெரிவித்தார். 

     லம்போர்கினி கார்

    2020 இறுதி காலாண்டில் ஆடம்பர கார்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியது. வோக்ஸ்வேகன் குழுமத்தின் லம்போர்கினி நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறையாக 2019 ஆண்டில் 7430 வாகனங்களை விற்பனை செய்தது. இத்தாலி நாட்டை சேர்ந்த லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் எஸ்யுவி மாடல் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

    இதே போன்று மற்ற முன்னணி நிறுவன மாடல்களும் இதுவரை இல்லாத அளவு முன்பதிவு செய்யப்படுகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் ஆடம்பர வாகனங்கள் விற்பனை வெகுவாக அதிகரிக்க துவங்கி உள்ளது.
    ரெனால்ட் நிசான் சென்னை உற்பத்தி ஆலையில் மீண்டும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.


    ரெனால்ட் மற்றும் நிசான் உற்பத்தி ஆலை பணிகள் விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இம்முறை பணிகள் சுழற்சி அடிப்படையில் பணிகள் நடைபெற இருக்கிறது. சில தினங்களாக ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா அச்சம் காரணமாக பணிக்கு திரும்ப மாட்டோம் என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுதவிர கொரோனா கட்டுப்பாட்டு விதிகளான சமூக இடைவெளி ஆலையில் பின்பற்ற இயலாது என ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆலையை சோதனை செய்ய உத்தரவிட்டு இருக்கிறது.   

     நிசான் கார்

    ரெனால்ட் நிசான் ஆட்டோமோடிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலையில் சோதனை நடத்த மூத்த அதிகாரிகளை அங்கு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ரெனால்ட் நிசான் தெரிவித்துள்ளது.

    மேலும் ஆலையில் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரெனால்ட் நிசான் தெரிவித்துள்ளது. இம்முறை பணிகள் படிப்படியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊழியர்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதாக அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய X7 டார்க் ஷேடோ எடிஷன் மாடல் இந்திய விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் X7 டார்க் ஷேடோ லிமிடெட் எடிஷன் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய டார்க் ஷேடோ லிமிடெட் எடிஷன் விலை ரூ. 2.02 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் சர்வதேச சந்தையிலேயே மொத்தம் 500 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

    லிமிடெட் எடிஷன் பிரீமியம் எஸ்யுவி மாடலை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்யலாம். புதிய X7 டார்க் ஷேடோ எடிஷன் விலை X7 ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 90 லட்சம் அதிகம் ஆகும். இந்த மாடல் அமெரிக்காவில் உள்ள ஸ்பார்டன்பர்க் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் இந்த மாடல் CBU முறையில் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

     பிஎம்டபிள்யூ X7 டார்க் ஷேடோ எடிஷன்

    பிஎம்டபிள்யூ X7 டார்க் ஷேடோ M50d வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், லிமிடெட் எடிஷன் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் அப்கிரேடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

    பிஎம்டபிள்யூ எக்ஸ்7 டார்க் ஷேடோ எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது. இது 261 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன்  பெட்ரோல் என்ஜின் 335 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், பேடில் ஷிப்டர்கள் உள்ளன.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.4 நொடிகளில் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் அடாப்டிவ் 2 ஆக்சைல் ஏர் சஸ்பென்ஷன் உள்ளது. 
    மஹிந்திரா நிறுவன கார் மாடல்களில் இந்த வேரியண்ட்களை தான் அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.


    இந்தியாவில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பயன்பாட்டு வாகனங்களில் டீசல் என்ஜின் மாடல்களே அதிக பிரபலமாக இருந்து வந்தன. ஆனால் இந்த மோகம் சமீப காலங்களில் குறைய துவங்கி இருக்கிறது. பிஎஸ் 6 புகை விதிகள் அமலாகி இருப்பதை தொடர்ந்து பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் கொண்ட மாடல்களை பலர் வாங்க துவங்கியுள்ளனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இந்த மாற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகின்றன. 2020-21 நிதியாண்டில் மஹிந்திரா நிறுவனம் 1,55,540 யூனிட்களை விற்பனை செய்தது. மொத்த விற்பனையில் 19,061 யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும். மீதமுள்ள 1,36,469 யூனிட்கள் டீசல் மாடல்கள் ஆகும். 

     மஹிந்திரா கார்

    அதாவது மஹிந்திரா நிறுவன வாகனங்கள் விற்பனையில் 12 சதவீதம் பெட்ரோல் மாடல்களாகவும், 88 சதவீதம் டீசல் மாடல்களாகவும் இருந்தது. 2021 நிதியாண்டில் முதல் முறையாக மஹிந்திராவின் பெட்ரோல் வாகனங்கள் விற்பனை 10 சதவீதத்தை கடந்துள்ளது. 

    கடந்த நிதியாண்டில் KUV100NXT பெட்ரோல் வேரியண்ட் விற்பனை குறைந்தது. ஆனாலும், 2021 நிதியாண்டில் XUV300 பெட்ரோல் வேரியண்ட் விற்பனை அதிகரித்து இருக்கிறது. சமீபத்தில் மஹிந்திரா அறிமுகம் செய்த தார் மாடலும் பெட்ரோல் வேரியண்ட் அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.
    ×