என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
சலசலப்புக்கு பின் செயல்பட துவங்கும் ரெனால்ட் நிசான் ஆலை
Byமாலை மலர்1 Jun 2021 8:42 AM GMT (Updated: 1 Jun 2021 8:42 AM GMT)
ரெனால்ட் நிசான் சென்னை உற்பத்தி ஆலையில் மீண்டும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.
ரெனால்ட் மற்றும் நிசான் உற்பத்தி ஆலை பணிகள் விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இம்முறை பணிகள் சுழற்சி அடிப்படையில் பணிகள் நடைபெற இருக்கிறது. சில தினங்களாக ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா அச்சம் காரணமாக பணிக்கு திரும்ப மாட்டோம் என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதவிர கொரோனா கட்டுப்பாட்டு விதிகளான சமூக இடைவெளி ஆலையில் பின்பற்ற இயலாது என ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆலையை சோதனை செய்ய உத்தரவிட்டு இருக்கிறது.
ரெனால்ட் நிசான் ஆட்டோமோடிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலையில் சோதனை நடத்த மூத்த அதிகாரிகளை அங்கு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ரெனால்ட் நிசான் தெரிவித்துள்ளது.
மேலும் ஆலையில் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரெனால்ட் நிசான் தெரிவித்துள்ளது. இம்முறை பணிகள் படிப்படியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊழியர்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதாக அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X