search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரெனால்ட் கார்
    X
    ரெனால்ட் கார்

    சலசலப்புக்கு பின் செயல்பட துவங்கும் ரெனால்ட் நிசான் ஆலை

    ரெனால்ட் நிசான் சென்னை உற்பத்தி ஆலையில் மீண்டும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.


    ரெனால்ட் மற்றும் நிசான் உற்பத்தி ஆலை பணிகள் விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இம்முறை பணிகள் சுழற்சி அடிப்படையில் பணிகள் நடைபெற இருக்கிறது. சில தினங்களாக ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா அச்சம் காரணமாக பணிக்கு திரும்ப மாட்டோம் என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுதவிர கொரோனா கட்டுப்பாட்டு விதிகளான சமூக இடைவெளி ஆலையில் பின்பற்ற இயலாது என ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆலையை சோதனை செய்ய உத்தரவிட்டு இருக்கிறது.   

     நிசான் கார்

    ரெனால்ட் நிசான் ஆட்டோமோடிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலையில் சோதனை நடத்த மூத்த அதிகாரிகளை அங்கு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ரெனால்ட் நிசான் தெரிவித்துள்ளது.

    மேலும் ஆலையில் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரெனால்ட் நிசான் தெரிவித்துள்ளது. இம்முறை பணிகள் படிப்படியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊழியர்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதாக அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
    Next Story
    ×