என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவடைந்துள்ளது.

    இந்தியாவில், கடந்த 2019-ஆம் ஆண்டில், பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது. இது 20 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாகும்.

    கடந்த ஆண்டில் பல மாதங்களாகவே மோட்டார் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வந்தது. விற்பனை சரிவால் வாகனத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக உற்பத்தி குறைப்பில் ஈடுபட்டு வந்தன. எனினும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை உயர்ந்ததால் நவம்பர் மாதத்தில் வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது.

    இந்நிலையில், 2019 காலண்டர் ஆண்டில் கார்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் விற்பனை 13 சதவீதம் சரிவடைந்து 29.50 லட்சமாக குறைந்து இருக்கும் என வாகனத் துறையைச் சேர்ந்தவர்கள் முன்னறிவிப்பு செய்து இருந்தனர். அதனை உறுதி செய்யும் விதத்தில் விற்பனை 12.75 சதவீதம் சரிவடைந்து 29.62 லட்சம் வாகனங்களாக இருக்கிறது.

    போக்குவரத்து நெரிசல்


    20 ஆண்டுகளுக்குப் பின் இந்த அளவு சரிவு ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். 1998-ம் ஆண்டில் ஏற்பட்ட 8 சதவீத சரிவிற்குப் பின் இதுவே பெரிய வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டில் 33.90 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது ஏறக்குறைய 5 சதவீத வளர்ச்சியாக இருந்தது.

    சென்ற ஆண்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் குறைந்து 8,54,759-ஆக உள்ளது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை 14.19 சதவீதம் சரிவடைந்து 1.86 கோடியாக குறைந்துள்ளது. இதில் ஸ்கூட்டர் விற்பனை 16 சதவீதம் குறைந்து 58,41,259-ஆக சரிவடைந்து இருக்கிறது. மோட்டார்சைக்கிள் விற்பனை 13 சதவீதம் சரிந்து 1.20 கோடியாக குறைந்துள்ளது.

    2019-ஆம் ஆண்டில் அனைத்து வகை வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 14 சதவீதம் குறைந்து 2.31 கோடியாக இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. காரின் இந்திய வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய ஜி.எல்.இ. எஸ்.யு.வி. கார் இந்தியாவில் ஜனவரி 28-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. புதிய ஜி.எல்.இ. காரில் பல்வேறு அப்டேட் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. கார் அளவில் பெரியதாகவும், நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதனால் காரின் கேபின் அளவு அதிகமாகிறது. இத்துடன் கார் முழுக்க எல்.இ.டி. லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹெட்லேம்ப், டெயில் லைட், டி.ஆர்.எல். உள்ளிட்டவைகளில் எல்.இ.டி. பயன்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய ஜி.எல்.இ. காரில் இரண்டு 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸட்ரூமென்ட் கன்சோலாக இருக்கிறது. இத்துடன் நான்கு சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹேண்ட்ஸ்-ஃபிரீ பார்க்கிங், பவர்டு டெயில்கேட், 360 டிகிரி கேமரா, இருக்கைகளை மின்சக்தியால் இயக்கும் வசதி, அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    2020 மெர்சிடிஸ் ஜி.எல்.இ.

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. கார்: ஜி.எல்.இ. 300டி, ஜி.எல்.இ. 400டி மற்றும் ஜி.எல்.இ. 450 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் பென்ஸ் ஜி.எல்.இ. 300டி மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 256 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஜி.எல்.இ. 400டி மாடலில் பெரிய 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 330 பி.ஹெச்.பி. பவர், 700 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இதன் மூன்றாவது வேரியண்ட் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இது 367 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. பெட்ரோல் யூனிட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் என கூறப்படுகிறது.
    கார் தயாரிப்பில் பிரபல நிறுவனமாக அறியப்படும் கிரேட் வால் மோட்டார்ஸ் விரைவில் இந்திய சந்தையில் ஹாவல் பிராண்ட் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.



    கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவைச் சேர்ந்த கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாவல் பிராண்டு கார்கள் இந்தியாவில் அறிமுகமாகிறது.

    ஏற்கனவே சீனாவின் எம்.ஜி. மோட்டார்ஸ் பெருமளவு வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த சீன நிறுவனமும் இந்தியாவில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. எஸ்.யு.வி. மாடல் கார்கள் தயாரிப்பில் சீனாவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக கிரேட் வால் மோட்டார்ஸ் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிறுவனத்தின் பிரபல எஸ்.யு.வி. மாடலான ஹெச்4, ஹெச்6 மற்றும் ஹெச்9 மாடல் கார்கள் அனைத்தும் பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற உள்ளது. இது தவிர இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான வேய் மோட்டார்ஸ் உருவாக்கியுள்ள பேட்டரி கார்களும் கண்காட்சியில் இடம்பெறும்.

    ஹாவல் ஹெச்6

    இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஹாவல் ஹெச்4 மாடலானது மிகவும் கூர்மையான முன்பகுதியைக் கொண்டது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஹூண்டாய் கிரெடா மாடலைக் காட்டிலும் இது பெரியதாகும். 

    இதன் பக்கவாட்டு தோற்றம் பார்ப்பதற்கு ஜீப் கம்பாஸை போன்றிருக்கும். இது 4.4 மீட்டர் நீளம் உடையது. 2,660 மி.மீ. சக்கரங்களை உடையது. இது 170 ஹெச்.பி. திறன் மற்றும் 1.5 டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் டியூயல் கிளட்ச் மற்றும் ஏ.எம்.டி. வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹிமாலயன் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. டீசரில் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் பல்வேறு சாலைகளில் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

    2020 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய மாடலின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    ஹிமாலயன் பி.எஸ்.6 மாடலில் ஹசார்டு லைட் ஸ்விட்ச், புதிய வடிவமைப்பு கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய விண்ட்ஷீல்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஹிமாலயன் பி.எஸ்.6 மாடலில் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட ரிம்கள் வழங்கப்படுகிறது.

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பி.எஸ்.6  டீசர்

    மேலும் ஸ்ப்லிட் கிராடிள் ஃபிரேம், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பறம் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன்கள் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் வழங்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் முன்புறம் சற்றே சிறிய சக்கரம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    தற்சமயம் விற்பனை செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலில் பி.எஸ்.4 ரக 411சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24.5 பி.ஹெச்.பி. பவர், 32 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இதேபோன்று 2020 பி.எஸ்.6 மாடல்களில் 411சிசி என்ஜின் வழங்கப்படலாம். புதிய என்ஜின் செயல்திறன் குறைக்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் புதிய ஹிமாலயன் பி.எஸ்.6 மாடல்: ரெட், பிளாக் டூயல் டோன், கிரேவல் கிரே மற்றும் லேக் புளூ உள்ளிட்ட புதிய நிறங்கள் மற்றும் கிரானைட், ஸ்னோ மற்றும் ஸ்லீட் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு சரியான ஆவணங்கள் இல்லாததால் கார் உரிமையாளருக்கு ரூ.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ரஞ்ஜித் தேசாய் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிநாட்டில் இருந்து அதிநவீன சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார்.

    அந்த காரில் அவர் நவம்பர் 28-ந்தேதி ஆமதாபாத்தில் சென்று கொண்டிருந்தபோது வாகன சோதனை நடத்தி கொண்டிருந்த போக்குவரத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

    அந்த சொகுசு கார் நம்பர்-பிளேட் இல்லாமல் வந்ததால் போலீசார் ஆவணங்களைக் கேட்டனர். ஆனால் கார் டிரைவரால் ஆவணங்களை கொடுக்க இயலவில்லை. பதிவு எண் இல்லாத குற்றத்துக்காக ரூ. 9 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    அந்த அபராதத் தொகையை செலுத்துவதற்காக ஆமதாபாத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு ரஞ்ஜித்தேசாய் சென்றார். அப்போது காரின் ஆவணங்களை ஆர்.டி.ஓ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அபராத ரசீது

    காருக்கு வாழ்நாள் வரி செலுத்தப்படாமல் இருப்பது அப்போது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து வாழ்நாள் வரி கட்டாததற்காக ரூ. 16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்துக்கு வட்டியாக ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் விதிக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.27 லட்சத்து 68 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில் அதிபர் தேசாய் உடனடியாக அந்த அபராத தொகையை செலுத்தினார்.

    கடந்த செவ்வாய்க்கிழமை ரஞ்ஜித் தேசாய் தனது காரை மீட்டு திரும்ப எடுத்துச் சென்றார். அவர் செலுத்திய ரூ.28 லட்சம் அபராத தொகைதான் புதிய மோட்டார் வாகன சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அபராத தொகையாகும்.

    இந்தியாவில் ஒரு காருக்கு ரூ.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் அபராத தொகை ரசீதையும், கார் படத்தையும் போக்குவரத்து போலீசார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
    லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை எவோக் எஸ்.யு.வி. மாடல் காரை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



    லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை எவோக் எஸ்.யு.வி. காரை இந்திய சந்தையில் ஜனவரி 30-ம் தேதி முதல் விற்பனை செய்ய துவங்குகிறது.

    இந்திய சந்தையில் முதல் தலைமுறை எவோக் மாடல் கார் 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகமான இரண்டாம் தலைமுறை மாடல் தற்சமயம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது, புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முன்புறம் மற்றும் பின்புறங்களில் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டு, உள்புறங்களில் ஆடம்பரமான கேபின் வழங்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு அந்நிறுவனத்தின் வெலார் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    2020 ரேன்ஜ் ரோவர் எவோக்

    புதிய எவோக் மாடலின் ஸ்டீரிங் வீல் தொடுதிரை வசதி கொண்ட கண்ட்ரோல்களும், பிஸ்டல் க்ரிப் கியர் லீவர், முன்புற இருக்கைகளை மின்சாரத்தால் அட்ஜஸ்ட் செய்யும் வசதி, பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

    2020 ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலில் பி.எஸ்.6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜெனியம் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட் மற்றும் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இரு என்ஜின்களுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.
    இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ பி.எஸ்.6 கார் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் பி.எஸ்.6 சான்ட்ரோ கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் பி.எஸ்.6 சான்ட்ரோ காரின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.

    அதன்படி புதிய பி.எஸ்.6 சான்ட்ரோ கார் விலை ரூ. 4.57 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6.25 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது தற்சமயம் விற்பனையாகும் மாடல்களை விட ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப ரூ. 22,000 முதல் ரூ. 27,000 வரை அதிகமாகும்.

    ஹூண்டாய் சான்ட்ரோ

    மேலும் ஹூண்டாய் சான்ட்ரோ சி.என்.ஜி. வேரியண்ட் விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய சான்ட்ரோ காரின் வடிவமைப்பு டால்-பாய் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. முன்புறம் கேஸ்கேடிங் கிரில், குரோம் சரவுண்ட்கள், ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. முன்புற கிரில், ஃபாக் லேம்ப் மற்றும் புதிய பம்ப்பர் பகுதிகளை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்படுகிறது.

    இத்துடன் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, மிரர் லின்க், பின்புற ஏ.சி. வென்ட்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், யு.எஸ்.பி. போர்ட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் எம்.ஐ.டி., பின்புற இருக்கைகளை மடிக்கும் வசதி, பவர் விண்டோக்கள், பின்புறம் வைப்பர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் புதிய என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஜூன் மாத வாக்கில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

    புதிய என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளை உருவாக்க ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சீனாவை சேர்ந்த குயிஞ்சாஙஅ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்நிறுவனம் பென்லியின் தாய் நிறுவனமாகும். அந்த வகையில் புதிய ஹார்லி மோட்டார்சைக்கிளில் பென்லியின் பவர்டிரெயின் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய ஹார்லி டேவிட்சன் மாடலில் 338சிசி திறன் கொண்டிருக்கும். இந்த மாடல் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படலாம். இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது.

    ஹார்லி டேவிட்சன் என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள்

    ஹார்லியின் என்ட்ரி லெவல் மாடலில் பென்லியின் பவர்டிரெயின் வழங்கப்படும் என்பதால், இதில் பென்லி 302எஸ் மாடலில் உள்ள 300சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 37.5 பி.ஹெச்.பி. @11000 ஆர்.பி.எம். மற்றும் 25.6 என்.எம். டார்க் @9750 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

    இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஸ்டிரீட் 750 மோட்டார்சைக்கிளை என்ட்ரி லெவல் மாடலாக விற்பனை செய்து வருகிறது. இதன் துவக்க விலை ரூ. 5.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 749சிசி வி ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 57 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    புகைப்படம் நன்றி: Bennetts
    மஹிந்திரா நிறுவனத்தின் தார் பி.எஸ்.6 புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்ட தார் பி.எஸ்.6 காரின் வெளிப்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி புதிய தார் எஸ்.யு.வி. கார் தற்சமயம் விற்பனையில் உள்ள மாடல்களை விட அளவில் பெரியதாக இருக்கின்றன. மேலும் இதன் உள்புறத்தில் புதிய மிதக்கும் வகையிலான தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படலாம்.

    மஹிந்திரா தார் பி.எஸ்.6 புதிய ஸ்பை படம்

    மேலும் இந்த காரில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. இதில் இரண்டு அனலாக் டையல்கள், மத்தியில் MID, முழு ஆட்டோமேடிக் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் யூனிட், மடிக்கக்கூடிய கீ ஃபாப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மஹிந்திராவின் புத்தம் புதிய தார் எஸ்.யு.வி. மாடலில் புதிய 2.0 லிட்டர், பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்படலாம். இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜினின் செயல்திறன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

    புதிய காரின் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இரண்டு ஏர்பேக்குகளை ஸ்டான்டர்டு அம்சங்களாக கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: drivespark
    ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐ.என். கான்செப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது புதிய எஸ்.யு.வி. மாடலின் கான்செப்ட் வெர்ஷன் டீசரை வெளியிட்டுள்ளது. ஸ்கோடா விஷன் ஐ.என். என அழைக்கப்படும் புதிய கார் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    முதற்கட்ட டீசர்களில் புதிய காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அசத்தல் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் இந்த கார் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்தியாவில் இந்த கார் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய ஸ்கோடா காரின் வடிவமைப்பு அதிக ரக்கட் தோற்றத்தில், முன்புற கிரில் பெரிதாகவும், முன்புற பம்ப்பர் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. காரின் முன்புற கிரில் ஸ்கோடாவின் பாரம்பரிய வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதில் பெரிய ஏர் இன்டேக்குகள், ஸ்கஃப் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் டீசர்

    காரின் பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில்லைட்கள், ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. புதிய ஸ்கோடா கார் ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    எனினும் புதிய காரில் ஸ்கோடா கமிக் மாடலில் உள்ள அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். காரின் உள்புறத்தில் பெரிய மிதக்கும் வகையிலான தொடுதிரை டிஸ்ப்ளே, ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது. 

    ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் காரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

    ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு, உற்பத்தி பணிகள் பின்னர் துவங்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் இதன் விற்பனை 2021 ஆண்டில் துவங்கும் என கூறப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் இ.கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனத்தின் இ.கே.யு.வி.100 இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இ.கே.யு.வி.100 காட்சிக்கு வைக்கப்பட்டது. 

    மஹிந்திராவின் புதிய இ.கே.யு.வி.100 கார் இந்திய சந்தையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் கோயன்கா தெரிவித்திருக்கிறார். மேலும் இதன் விலை ரூ. 9 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    மஹிந்திரா இ.கே.யு.வி.100

    மஹிந்திரா இ.கே.யு.வி.100 மாடலின் தோற்றம் பார்க்க பெட்ரோல் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் மேம்பட்ட கிரில், ஹெட்வொர்க் மற்றும் டெயில்லைட்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. 

    மஹிந்திரா இ.கே.யு.வி.100 மாடலில் 40 kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம். இது 53 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 15.9 kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக மஹிந்திரா இ.கே.யு.வி.100 இருக்கும். இதன் விலை ஒவ்வொரு மாநிலத்தின் சலுகைகளுக்கு ஏற்ப மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

    இந்தியாவில் புதிய கிளாசிக் 350 பி.எஸ். 6 மாடலின் விலை ரூ. 1.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பி.எஸ். 6 விலை தற்சமயம் விற்பனை செய்யப்படும் பி.எஸ். 4 மாடலின் விலையை விட ரூ. 11,000 அதிகம் ஆகும்.

    புதிய கிளாசிக் 350 மாடலில் மேம்பட்ட 346சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் விவரங்களை ராயல் என்ஃபீல்டு இதுவரை அறிவிக்கவில்லை. தற்போதைய பி.எஸ். 4 என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. 

    கிளாசிக் 350

    கிளாசிக் 350 மாடலில் பி.எஸ். 6 என்ஜின் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தில் வருகிறது. தற்போதைய மாடல்களில் கார்புரேட்டர் ரக என்ஜின்களே பயன்படுத்தப்படுகின்றன. என்ஜின் தவிர ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பி.எஸ். 6 மாடலில் புதிய அலாய் வீல்கள், புதிய நிறத்தில் கிடைக்கின்றன.

    ஏற்கனவே கிடைக்கும் ஸ்டெல்த் பிளாக் மற்றும் குரோம் பிளாக் நிறங்களுடன் கிளாசிக் 350 பி.எஸ். 6 மாடல்: சிக்னல்ஸ் ஏர்போன் புளூ, சிக்னல்ஸ் ஸ்டாம்ரைடர் சேண்ட், கன்மெட்டல் கிரே மற்றும் கிளாசிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் கிளாசிக் 350 பி.எஸ். 6 மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கிவிட்டன. இந்தியா முழுக்க இயங்கி வரும் ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்களில் புதிய மோட்டார்சைக்கிளை ரூ. 10,000 கட்டணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    ×