என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரை இந்த மாதம் வெளியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்கூட்டர் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

    தற்போதைய தகவல்களின் படி எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் இந்தியாவில் டிசம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இம்மாத இறுதியில் விற்பனையகம் வந்து, ஜனவரி மாத துவக்கத்தில் இதன் விநியோகம் துவங்கலாம் என கூறப்படுகிறது. 

     அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160

    புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய சந்தைக்கென உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆர்எஸ்660 மாடலில் உள்ளது போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.

    பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் சவுகரியமான இருக்கை, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 160சிசி பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. 
    ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய ஏத்தர் 450எக்ஸ் சீரிஸ் 1 மாடலின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது சீரிஸ் 1 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் விநியோகம் புதிய நகரங்களில் துவங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. அதன்படி பூனே, ஐதராபாத் மற்றும் ஆமதாபாத் நகரங்களில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இரக்கிறது.

    இந்த ஸ்கூட்டரை வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு மீதி தொகையை செலுத்தி, அடுத்தக்கட்ட வழிமுறைகளை நிறைவு செய்தபின் ஸ்கூட்டரை டெலவரி எடுத்துக் கொள்ளலாம். இது ஸ்டான்டர்டு மாடலின் ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட் ஆகும்.

     ஏத்தர் 450 எக்ஸ் சீரிஸ் 1

    ஏத்தர் 450 எக்ஸ் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 1.59 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிஷன் ஸ்டான்டர்டு மாடலை விட அதிக மாற்றங்களை கொண்டிருக்கிறது. 

    ஏத்தர் எனர்ஜி வாகனங்கள் உற்பத்தி பணிகள் விரைவில் ஓசூரில் உள்ள ஆலையில் துவங்க இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லடசம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
    சுசுகி நிறுவன ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

    பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலில் எக்சாஸ்ட் காணப்படாததே, இவை எலெக்ட்ரிக் வெர்ஷன் தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன. ஸ்பை படங்களில் உள்ள ஸ்கூட்டர் புதிய நிறம் கொண்டிருக்கிறது. இவைதவிர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் தற்சமயம் விற்பனையாகும் மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

    இதனால் பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடலில் 12-10 இன்ச் வீல்கள் மற்றும் முன்புற டிஸ்க் உள்ளிட்டவை முந்தைய மாடலில் இருந்தபடி வழங்கப்படுகின்றன. இதன் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
    ஆடி நிறுவனத்தின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆடி நிறுவனம் 2021 ஆர்8 பேந்தர் எடிஷன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2021 ஆடி ஆர்8 பேந்தர் எடிஷன் மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய நிறத்தில் கிடைக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் ஆடி ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார் மொத்தம் 30 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

    புதிய ஆடி ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் பிரத்யேகமாக கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்த நிறம் பேந்தர் பிளாக் க்ரிஸ்டல் எபெக்ட் பெயிண்ட் என அழைக்கப்படுகிறது. புதிய நிறம் தவிர பிளாக்டு அவுட் 20 இன்ச் வீல்கள், சிவப்பு நிற அக்சென்ட்களுடன் கிடைக்கிறது.

    2021 ஆடி ஆர்8 ஸ்பெஷல் எடிஷன்

    காரின் உள்புறம் க்ரிம்சன் ரெட் மற்றும் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், ஸ்டீரிங் வீல் மற்றும் பக்கவாட்டில் டோர் பேனல்கள் பிளாக் மற்றும் ரெட் நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு இருக்கிறது. இருக்கைகளும் க்ரிம்சன் ரெட் நப்பா லெதர் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.

    2021 ஆடி ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 525 பிஹெச்பி பவர், 540 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி கிளாஸ் மாடல் புதிய மைல்கல் எட்டி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஜி கிளாஸ் மாடல் உற்பத்தியில் 4 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 1979 ஆண்டுகளில் முதலில் அறிமுகமான மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் தற்சமயம் ஆஸ்த்ரியாவில் உள்ள கிராஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    2017 ஆம் ஆண்டில் ஜி கிளாஸ் 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தியை கடந்தது. இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் மாடல் ஜி63 ஏஎம்தி மற்றும் ஜி 350டி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது.

     மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ்

    இதுதவிர ஜி கிளாஸ் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் மெர்சிடிஸ் பென்ஸ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடல் இகியூ சப் பிராண்டின் அங்கமாக இருக்கும் என தெரிகிறது.
    கவாசகி நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி நிறுவன விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை சலுகை வழங்கி வருகின்றனர். இந்த சலுகை டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஸ்டாக் இருப்பிற்கு ஏற்ப அமலில் இருக்கும் என கூறப்படுகிறது. 

     கவாசகி மோட்டார்சைக்கிள்

    இந்த சலுகை வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றை ரொக்க வடிவில் தள்ளுபடியாக பெறலாம். அதன்படி கவாசகி டபிள்யூ800 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோன்று வல்கன் எஸ் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம், இசட்650 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    கவாசகி வெர்சிஸ் 650 மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், கேஎல்எக்ஸ் 110 மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், கேஎல்எக்ஸ் 140 மாடலுக்கு ரூ. 40 ஆயிரம், கேஎக்ஸ் 100 மாடல் ரூ. 50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆண்டு இறுதியை முன்னிட்டு இந்த சலுகைகள் கவாசகி ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடு காம்படீஷன் மாடல்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய பேபியா மாடல் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனத்தின் பேபியா மாடல் ஐரோப்பிய சந்தையில் மிகவும் பிரபல மாடலாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் 2008 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் ஸ்கோடா பேபியா மாடல் பிரபலமாக இருந்தது. தற்சமயம் ஸ்கோடா நிறுவனம் நான்காவது தலைமுறை பேபியா மாடலை உருவாக்கி வருகிறது. 

    புதிய ஸ்கோடா பேபியா மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்பை படங்கள் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டவை ஆகும். புதிய பேபியா மாடல் ஸ்கோடா ஸ்கேலா மற்றும் புதிய ஆக்டேவியா மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.

    ஸ்கோடா மாடலில் எல்இடி யூனிட் கொண்ட மெல்லிய ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஸ்கோடா கார் MQB A0 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த பிளாட்பார்ம் அதிக இடவசதி, சவுகரியம் மற்றும் வசதியை வழங்குகிறது.

    புதிய பேபியா மாடலில் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பல்வேறு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என தெரிகிறது. எனினும், புதிய காரில் டீசல் என்ஜின் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
    கார் ஓட்டுவோர் கியர் மாற்றும் போது எதை செய்ய வேண்டாம் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    கார் ஓட்டும் பெரும்பாலானவர்கள் கியர் மாற்றும்போது கிளட்ச் பெடலை அழுத்தி கியர் மாற்றுவார்கள். அவ்விதம் கியர் மாற்றிய பிறகு கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுக்காமல் கிளட்ச் பெடலை காலை ஓய்வாக வைக்க உபயோகிக்கும் ஒரு இடம் போல அதன் மீது காலை வைத்தபடியே காரை ஓட்டுவார்கள்.

    கிளட்ச் பெடலின் மீது காலை வைத்தபடியே ஓட்டுவதால், கிளட்ச் பெடல் எப்போதும் அழுந்திய நிலையிலேயே இருக்கும். இதனால் பிளை வீலுக்கும் பிரஷர் பிளேட்டிற்கும் இடையே உள்ள கிளட்ச் பிளேட் எப்போதுமே பிளை வீலில் இருந்து சற்று விலகியே சுற்றிக் கொண்டிருக்கும். இவ்விதம் கிளட்ச் பிளேட் விலகியே சுற்றுவதால் என்ஜினில் உருவாகும் சக்தியானது சரியாக கியர் பாக்சுக்கு கடத்தப்படுவது இல்லை.

    என்ஜினின் முழு சக்தியும் சரியாக கடத்தப்படாததால் வாகனத்தின் வேகம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் பெட்ரோல், டீசல் வீணாகும். அத்துடன் கிளட்ச் பிளேட்டின் ஆயுள்காலம் குறையும். இதனால் குறைந்த கிலோ மீட்டர் ஓடிய நிலையில் கிளட்ச் பிளேட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். 

    கியர் மாற்றும்போது கிளட்சை பயன்படுத்திவிட்டு பிறகு கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுத்து விட வேண்டும். தேவையான போது மட்டுமே கிளட்ச் பெடலை அழுத்த வேண்டும்.

    இப்போது வரும் கார்களில் கிளட்ச் பெடலுக்கு அருகிலேயே காலை வைத்துக்கொள்ள இட வசதி அளித்துள்ளனர். அதன் மீது காலை வைத்துக்கொண்டால் கிளட்ச் பகுதி நீண்ட காலம் உழைக்கும். என்ஜினின் முழு சக்தியும் காருக்குக் கிடைக்கும். எரிபொருளும் சிக்கனமாகும் என்று ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
    கேடிஎம் நிறுவனத்தின் 2021 டியூக் 125 மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    கேடிஎம் நிறுவனம் என்ட்ரி லெவல் டியூக் 125 மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கேடிஎம் டியூக் 125 மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் புதிய 2021 கேடிஎம் டியூக் 125 மாடலின் முன்பதிவுகளை ஏற்கனவே துவங்கி விட்டது. புதிய என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் தோற்றம் டியூக் 200 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் எல்சிடி ஸ்கிரீன், ஹெட்லைட், பியூவல் டேன்க், டேன்க் எக்ஸ்டென்ஷன் மற்றும் டெயின் பேனல்கள் வழங்கப்படுகிறது.

     கேடிஎம் டியூக் 125

    டியூக் 125 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் அதிக இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்து விற்பனையை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 டியூக் 125 மாடலில் டியூக் 200 மாடலில் இருந்த டிரெலிஸ் பிரேம், சஸ்பென்ஷன் செட்டப், பிரேக்கிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    2021 கேடிஎம் டியூக் 125 மாடலில் பிஎஸ்6 ரக 124சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த என்ஜின் 14.5 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதாக அறிவித்து இருக்கிறது. டாடா நெக்சான் இவி அந்நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும். 

    இந்திய சந்தையில் பத்து மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் இவி மாடல் விற்பனையில் 2 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் மொத்தமாக 2200 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

     நெக்சான் எலெக்ட்ரிக்

    முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது. அடுத்த மூன்று மாதங்களில் மற்றொரு ஆயிரம் யூனிட்கள் விற்பனைாகி இருக்கின்றன. இந்த வளர்ச்சி கொண்டு நெக்சான் எலெக்ட்ரிக் மாடலுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை அறிந்து கொள்ளலாம். 

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரிவில் நெக்சான் இவி மாடல் 74 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. நெக்சான் இவி மாடலில் 95kW எலெக்ட்ரிக் மோட்டார், 30.20kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பவர்டிரெயின் 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டுகாட்டி நிறுவனம் 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    டுகாட்டி நிறுவனம் 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2021 டுகாட்டி மான்ஸ்டர் மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு, புது அம்சங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதுவரை வெளியான மான்ஸ்டர் மாடல்களிலேயே மிகவும் எடை குறைந்த ஒன்றாக 2021 மான்ஸ்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் கூர்மை, ஸ்போர்ட் மற்றும் மஸ்குலர் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் புதிய எல்இடி ஹெட்லேம்ப், வட்ட வடிவ எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     2021 டுகாட்டி மான்ஸ்டர்

    2021 டுகாட்டி மான்ஸ்டர் மோட்டார்சைக்கிளில் 937 சிசி எல்-ட்வின் டெஸ்டாஸ்டிரெட்டா என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 111 பிஹெச்பி பவர், 93 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் டு-வே குவிக்ஷிப்டர் வழங்கப்பட்டு உள்ளது.

    இவற்றுடன் 4.3 இன்ச் புல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மூன்றுவித ரைடிங் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் மற்றும் லான்ச் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஹோண்டா நிறுவன வாகனங்களுக்கு இந்தியாவில் ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு வருடாந்திர சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹோண்டா நிறுவனத்தின் பல்வேறு வாகனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    அதன்படி ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ. 10 ஆயிரம் வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது. 

     ஹோண்டா கார்

    கடந்த மாதம் ஹோண்டா அமேஸ் சிறப்பு மற்றும் பிரத்யேக எடிஷனை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் ரூ. 12 ஆயிரம் கேஷ் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரை கேஷ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய ஹோண்டா சிட்டி மாடல் ரூ. 30 ஆயிரம் வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும், ஹோண்டா சிவிக் பெட்ரோல் மாடல் ரூ. 1 லட்சமும், டீசல் மாடல் ரூ. 2.50 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ×