என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • போட்டியில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
      • போட்டியில் ஒட்டுமொத்த சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி தருணுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

      வள்ளியூர் :

      குழந்தைகள் மற்றும் மகளிருக்கான சிறப்பு கோடைக்கால இறகுப்பந்து போட்டி கடந்த 3 நாட்களாக வள்ளியூர் எஸ்.டி.என். பேட்மிட்டன் கிளப்பில் நடைபெற்றது. போட்டிகளில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில் கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

      பரிசளிப்பு விழாவில் எஸ்.டி.என். பயிற்சி அரங்க உரிமையாளர் எட்வின் பிரைட், நிஷா எட்வின் மற்றும் வள்ளியூர் வணிகர் நல சங்க தலைவரும், நிலா பேக்கரி உரிமையாளருமான தா.எட்வின் ஜோஸ், வணிகர் நல சங்க செயலாளர் முல்லை கவின் வேந்தன், மருத்துவர் சங்கர வெங்கடேசன், எஸ்.என். ஜுவல்லரி உரிமையாளர் மணிவண்ணன், டி.ஜே.ஆர். கட்டுமான நிறுவனத் தலைவர் தேவேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள் புஷ்பராஜ், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

      போட்டியில் ஒட்டுமொத்த சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி தருணுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் பிரியா கவின் வேந்தன் செய்திருந்தார்.

      • மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை சுற்றிலும் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன
      • ஊருக்குள் புகுந்துள்ள கரடி, அங்குள்ள பெரியகுளம் பகுதியில் தான் வலம் வருகிறது. அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதம் செய்கிறது

      நெல்லை:

      தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      ஊருக்குள் புகுந்த கரடி

      நாங்குநேரியில், மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை சுற்றிலும் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இவற்றில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருக்கிறார்கள்.

      இந்நிலையில் கடந்த நேற்று முன்தினம் இங்குள்ள விளை நிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த இந்த கரடி, திசை மாறியதால், ஊருக்குள் புகுந்துள்ளது தெரியவந்தது.

      ஊருக்குள் புகுந்த கரடி, விவசாயிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அச்சமடைந்த விவசாயிகள், தங்களது விளை நிலங்களை விட்டு உடனடியாக வெளியேறினார்கள். இதற்கிடையில் மறுகால்குறிச்சி சாலையில் அமைந்துள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்ய வந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், இந்த கரடியை நேரில் பார்த்தார்.

      எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

      இதற்கிடையே ஊருக்குள் புகுந்துள்ள கரடி, அங்குள்ள பெரியகுளம் பகுதியில் தான் வலம் வருகிறது. அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதம் செய்கிறது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர், ஊருக்குள் புகுந்த கரடியை உயிருடன் பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைத்துள்ளார்கள். கூண்டுக்குள், கரடிக்கு பிடித்த பழவகைகளை வைத்திருக்கிறார்கள்.

      நேற்று 2-வது நாளாகியும், அந்த கூண்டுக்குள் கரடி சிக்கவில்லை. ஊருக்குள் புகுந்துள்ள அந்த கரடியால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்துல் ஏற்பட்டு இருப்பதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்தக் கரடியை உயிருடன் பிடித்து, காட்டுக்குள் விட வேண்டும் என்று, தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

      மேலும் கரடி நடமாட்டம் உள்ள மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருப்பதால், மாணவிகளின் நலன்கருதி, கரடியை பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறை யினர் வேகப்படுத்த வேண்டும். எனவும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

      • பொதுமக்களுக்கு குப்பையை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
      • நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் முன்னிலையில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

      சங்கரன்கோவில்:

      முதல்-அமைச்சர் உத்தரவின் படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் முதல் ஓராண்டு காலமாக ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வாரங்களில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனம், வியாபாரிகள், சமுதாய அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள் போன்றவர்களை பெரும் அளவில் மக்கள் இயக்கமாக பங்கேற்க செய்து இதன் மூலம் நகரின் பொது இடங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

      தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி முன்னிலையில், தன்னார்வ லர்களுக்கு குப்பையை தரம் பிரித்தல் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் மூலம் நகரின் பெரும் பகுதிகளில் பொதுமக்களுக்கு குப்பையை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நகரின் பொது இடங்களில் பெருமளவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் அப்புறபடு த்தப்பட்டது. மகளிர்குழுக்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் முன்னிலையில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

      தொடர்ந்து மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை வீடு வீடாக அழைத்து சென்று பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வழங்குவது குறித்து ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சேர்மன் உமா மகேஸ்வரி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது. மேற்கண்ட பணிகளை நகராட்சி ஆணையர் சபா நாயகம் தலைமையில் சுகா தார அலுவலர் பாலச்சந்தர் மற்றும் சுகாதார ஆய்வா ளர்கள் மாரிசாமி, வெங்கட ராமன், மாரிமுத்து மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணி யாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

      • மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க சந்திப்பு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
      • விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியது விளையாட்டுத்தனமாக உள்ளது.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால மத்திய அரசின் சாதனை விளக்க சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

      பல்வேறு நலத்திட்டங்கள்

      தென்காசி மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலை வகித்தார். இதில் பாரதீய ஜனதா கட்சி மாநில மகளிரணி தலைவி உமாரதி கலந்து கொண்டு பேசியதாவது:-

      கடந்த 9 ஆண்டு காலமாக பாரதீய ஜனதா கட்சி அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துள்ளது. இருளில் இருந்த இந்தியாவை பிரதமர் மோடி மீட்டு ஒளி பெற செய்துள்ளார். அவர் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்து ள்ளார்.

      ரூ. 9.5 லட்சம் கோடி

      அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக மட்டுமே அவர் இந்த திட்டங்களை அளித்துள்ளார். தமிழகத்திற்கு ரூ. 9.5 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். தமிழகத்தில் இருந்து அகில இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு யாரும் அனுப்பப் படவில்லை என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேட்டபோது தகவல் பரிமாற்றம் சரியான அளவில் கிடைக்கவில்லை என்று கூறியது விளையாட்டுத்தனமாக உள்ளது.

      கர்நாடக தேர்தலில் அடுத்த முறை பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் ஒருமுறை அ.தி.மு.க. அடுத்த முறை தி.மு.க. என்பது போன்று கர்நாடகத்திலும் உள்ளது. வருகிற பாராளு மன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் ஆவார்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துலட்சுமி, முத்துக்குமார், மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி, விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டியன், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் குத்தாலிங்கம், சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ரங்கராஜ், ஊடகப்பிரிவு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் குமார், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர்கள் மாரிசாமி, ராமர், குரு கிருஷ்ணா உள்ளிட்ட நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

      • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
      • திறப்பு விழாவிற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

      கடையம்:

      தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கடையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, கடையம் தெற்கு ஒன்றியம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார்.

      விழாவிற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். விழாவில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், கடையம் ஒன்றிய நிர்வாகிகள் சசிகுமார், புகாரி மீரா சாகிப், வின்சென்ட் பால், முல்லையப்பன் சுரேஷ், கோபி, கமல், முருகன், தமிழரசி, ரம்யா, ஆவுடை கோமதி, பிரமு, பிரபா, அந்தோணிசாமி,சதாம் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • மங்கம்மாள்சாலையில் உள்ள உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளது.
      • கீழப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

      நெல்லை:

      தென்காசி மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

      தென்காசி மங்கம்மாள்சாலையில் உள்ள உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து மின் விநியோகம் பெறும் தென்காசி புதிய பேருந்துநிலையம், மங்கம்மாள் சாலை, சக்திநகர், காளிதாசன் நகர் மற்றும் ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

      மேலும் பராமரிப்பு பணியின் போது மின் விநியோகத்திற்கு இடையூராக மின் பாதையில் உள்ள மரங்கள் மற்றும் இதர தடைகளை அகற்றும் பணியில் ஈடுபடும் மின்வாரிய பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • குளத்தில் இருந்து செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
      • தப்பியோட முயன்ற 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

      நெல்லை:

      கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் உள்ள ஒரு குளத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு குளத்து மண் அள்ளப்படுவதாக கடையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

      இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக டிராக்டர் மற்றும் டிப்பர் லாரியில் குளத்து மண்ணை சிலர் அள்ளிக்கொண்டிருந்தனர்.

      போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில் அவர்களில் 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். ஒருவர் தப்பியோடிவிட்டார்.

      பிடிபட்ட 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், ஜே.சி.பி. உரிமையாளர் கீழமாதாபுரத்தை சேர்ந்த குருபிரசாத்(வயது 23), லாரி டிரைவர் சென்னல்தா புதுக்குளத்தை சேர்ந்த அய்யாத்துரை, டிராக்டர் டிரைவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கொல்லன் சர்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவர் களை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக லாரி மற்றும் டிராக்டர் உரிமை யாளரான கடையம் அருகே உள்ள செட்டியூரை சேர்ந்த பொன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர். மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., டிராக்டர், டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

      • அருவி கரை பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
      • குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்

      தென்காசி:

      தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். அப்போது அங்கு குளிப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள்.

      அமைச்சர் ஆய்வு

      இந்நிலையில் குற்றால பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவல ர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வுகள் மேற்கொண்டார்.

      அப்போது அவர் கூறியதாவது:-

      குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி மற்றும் சிற்றருவி ஆகிய அருவி கரை பகுதி களிலும் மேம்பாட்டு பணி களுக்காக ரூ. 11.34 கோடி தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே இந்த பணிகளை தொடங்க அனுமதி கொடுத்திருந்த போதிலும் இங்கு சில பகுதிகள் வனத் துறை மற்றும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

      இப்படி பல்வேறு துறை களிடமிருந்து தடையில்லா சான்று பெற்று தான் பணி களை மேற் கொள்ள வேண்டிய சூழல் உள்ளதால் அதற்கான ஒப்புதல் சான்றிதழ் கிடை த்ததும் பணிகள் அனைத்தும் மேற் கொள்ளப்படும். அதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

      அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிக்கப்படும். மேலும் குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கட்டணம் என்பது எத்தனை பேர் குற்றாலத்துக்கு வருகிறார்கள் என்பதை கணக்கில் எடுத்து கொள்வதற்காக தான். எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று கணக்கெடுத்தால் தான் அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்க முடியும்.

      சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் போது வியாபாரம் பெருகும். தங்கும் விடுதிகளுக்கும் வருமானம் கிடைக்கும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும் போது மாநிலமும் வளர்ச்சி யடையும். இருப்பினும் இருசக்கர வாகனத்திற்கு ரூ. 10 கட்டணம் என்பது வசூலிக்கப்பட மாட்டாது.

      சீரமைப்பு பணி

      குற்றாலத்தில் அரசு விடுதிகள் கட்டி முடிக்க ப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளதால் அதனை சீரமைக்க உள்ளோம். குற்றாலத்தில் தனியார் அருவிகள் செயல்பாடுகள் குறித்து தகவல் எதுவும் வர வில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். அதை மாவட்ட கலெக்டர் மேற்கொள்வார்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ஆய்வின் போது சுற்றுலா த்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலை குமார், பழனி நாடார் மற்றும் தனுஷ்குமார் எம்.பி., குற்றாலம் பேரூ ராட்சி செயல் அலுவலர் சுஷ்மா, சுகாதார அலுவலர் உட்பட பலர் உடன் இருந்த னர்.

      மேலும் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை பகுதியிலும் ரூ. 1.50 கோடியில் ஓட்டல், தங்கும் விடுதிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங் கப்பட உள்ளன. இந்த பணி களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் புதூர் பேரூராட்சி தலைவர் ரவிசங்கர், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரஹீம், தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • குருக்கள்பட்டியை சேர்ந்த அய்யாத்துரை மளிகை கடை நடத்தி வந்தார்.
      • அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர்.

      நெல்லை:

      சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 65). இவர் அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று மாலை அங்குள்ள மெயின் ரோட்டில் அய்யாத்துரை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

      அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அய்யாத்துரை தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். கார் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

      அதை ஓட்டி வந்த வேப்பங்குளத்தை சேர்ந்த அருணாசலம் மற்றும் அவருடன் வந்த 2 பேர் என 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

      இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

      அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அய்யாத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
      • பொதுமக்களுக்கு 500 தென்னங்கன்றுகளை வழங்கிய ராஜா எம்.எல்.ஏ. தென்னை மரத்தின் பயன்கள் குறித்து பேசினார்.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூர் அருகே தலைவன் கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணா நிதியின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

      500 தென்னங்கன்று

      நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூசைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      சிறப்பு விருந்தின ராக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 500 தென்னங்கன்று களை பொது மக்களுக்கு வழங்கி, தென்னை மரத்தின் பயன்கள் குறித்து பேசினார்.

      தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டி யனின் ஒன்றிய நிதியில் இருந்து ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே ரூ.20 லட்சம் மதிப் பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி களுக்கான பூமிபூஜை ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

      யூனியன் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் விஜய பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் செண்பகவிநாயகம், புளியங்குடி நகர தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான அந்தோணி சாமி, வடமலாபுரம் அன்பு செல்வம்,

      நகரம் முருகானந்தம், நவநீத கிருஷ்ணன், பச்சேரி சக்தி, ஊராட்சிமன்ற தலைவர் சர்மிளா, துணைத்தலைவர் குபேந்திரன், அனைத்து வார்டு உறுப்பினர்கள், அனைத்து சமுதாய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      • பாரதி நினைவு நகர் பகுதியில் அரசு அனுமதி பெறாமல் ‘அண்டர்கிரவுண்ட்’ கட்டிடம் கட்டப்பட்டதாக தெரிகிறது.
      • அண்டர்கிரவுண்ட் கட்டிடத்தால் அருகே உள்ள வீடுகள், மருத்துவமனைக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

      கடையம்:

      முதல் -அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடையம் பகுதி பொதுமக்கள் சார்பாக அனுப்பபட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

      கடையம்-தென்காசி சாலையில் மருத்துவமனை அருகே சேர்வைகாரன்பட்டி ஊராட்சி பாரதி நினைவு நகர் பகுதியில் அரசு அனுமதி பெறாமல் 'அண்டர்கிரவுண்ட்' கட்டிடம் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த கட்டிடத்தால், மழை பெய்யும் நாட்களில் அருகே உள்ள குளத்தில் மழைநீர் தேங்கும் போது கட்டிடத்தின் அண்டர் கிரவுண்ட் பகுதியில் நீர் கசிந்து மண்சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் அருகே உள்ள வீடுகள் மற்றும் மருத்துவமனை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

      • கோவிந்தபேரி நடுத்தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
      • புதிய சிமெண்ட் சாலையை ஊராட்சிமன்ற தலைவர் டி.கே. பாண்டியன் திறந்து வைத்தார்.

      கடையம்:

      கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில், நடுத்தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 17.48 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார்.

      விழாவில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர் இளவரசி பார்த்திப கண்ணன், பொன்னுத்தாய் முருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோக பாண்டியன் மாணிக்கம், மக்கள் நலப்பணியாளர் கிருஷ்ணன், மாரித்துரை, குமார், தங்கசாமி பாண்டியன், தங்க தேவர், வெள்ளத்துரை பாண்டியன், சுப்பையா பாண்டியன், என்.எஸ். மணியன், காளிமுத்து, முப்புடாதி கணேசன், சப்ரி, சாமுவேல், அந்தோணி, பிரியா, அன்னம்மான், தேன்மொழி, இசக்கியம்மாள், ராணி லெட்சுமி, சத்யா, ஊராட்சி செயலர் மூக்காண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      ×