search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையத்தில் தி.மு.க. அலுவலகம் திறப்பு
    X

    கடையத்தில் தி.மு.க. அலுவலகம் திறப்பு

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
    • திறப்பு விழாவிற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கடையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, கடையம் தெற்கு ஒன்றியம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    விழாவிற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். விழாவில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், கடையம் ஒன்றிய நிர்வாகிகள் சசிகுமார், புகாரி மீரா சாகிப், வின்சென்ட் பால், முல்லையப்பன் சுரேஷ், கோபி, கமல், முருகன், தமிழரசி, ரம்யா, ஆவுடை கோமதி, பிரமு, பிரபா, அந்தோணிசாமி,சதாம் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×