search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக தென்காசி புதிய பஸ் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை
    X

    மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக தென்காசி புதிய பஸ் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை

    • மங்கம்மாள்சாலையில் உள்ள உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளது.
    • கீழப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    நெல்லை:

    தென்காசி மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மங்கம்மாள்சாலையில் உள்ள உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து மின் விநியோகம் பெறும் தென்காசி புதிய பேருந்துநிலையம், மங்கம்மாள் சாலை, சக்திநகர், காளிதாசன் நகர் மற்றும் ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    மேலும் பராமரிப்பு பணியின் போது மின் விநியோகத்திற்கு இடையூராக மின் பாதையில் உள்ள மரங்கள் மற்றும் இதர தடைகளை அகற்றும் பணியில் ஈடுபடும் மின்வாரிய பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×