search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல்
    X

    ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் பூமி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    வாசுதேவநல்லூர் அருகே ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல்

    • கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு 500 தென்னங்கன்றுகளை வழங்கிய ராஜா எம்.எல்.ஏ. தென்னை மரத்தின் பயன்கள் குறித்து பேசினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே தலைவன் கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணா நிதியின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    500 தென்னங்கன்று

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூசைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தின ராக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 500 தென்னங்கன்று களை பொது மக்களுக்கு வழங்கி, தென்னை மரத்தின் பயன்கள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டி யனின் ஒன்றிய நிதியில் இருந்து ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே ரூ.20 லட்சம் மதிப் பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி களுக்கான பூமிபூஜை ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    யூனியன் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் விஜய பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் செண்பகவிநாயகம், புளியங்குடி நகர தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான அந்தோணி சாமி, வடமலாபுரம் அன்பு செல்வம்,

    நகரம் முருகானந்தம், நவநீத கிருஷ்ணன், பச்சேரி சக்தி, ஊராட்சிமன்ற தலைவர் சர்மிளா, துணைத்தலைவர் குபேந்திரன், அனைத்து வார்டு உறுப்பினர்கள், அனைத்து சமுதாய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×