என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
      • கடைகளில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

      செங்கோட்டை:

      செங்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி தலைமையில் சுகாதார மேற்பார் வையாளா்கள் மற்றும் நகராட்சி பணியாளா்கள் அடங்கிய குழுவினா் செங்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, பம்ப் ஹவுஸ் ரோடு, கேசி ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வணிக நிறுவனங்க ளிலும் சோதனை நடத்தினர்.

      அதன்படி தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்திய, வைத்திருந்த, விற்பனை செய்த கடைகள், உணவகங்கள் உள்பட பல இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, அந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர்.

      • பொது மக்களும், விவசாயிகளும் மணல் அள்ளும் டிராக் டர்களை சிறைபிடிக்கப் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
      • டிராக்டரை சோதனையிட்டபோது போலி பாஸ் வைத்து மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

      சிவகிரி:

      சிவகிரி கண்மாய் பகுதியில் போலியான பாஸ் வைத்து ஒவ்வொரு செங்கல் சூளைகளுக்கும் 100 டிராக்டர் மண் லோடு கொடுப்பதாகவும், அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவில் மண் அள்ளப்படுவதாகவும் தொடர்ந்து புகார் வந்தது. இதனை கண்டித்து பொது மக்களும், விவசாயிகளும் மணல் அள்ளும் டிராக் டர்களை சிறைபிடிக்கப் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

      அதன்பேரில் புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நவமணி தலைமையில் போலீசார் விஜயரங்கப்பேரி, சின்ன ஆவுடைப்பேரி, பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் பகுதியில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. மாலையாபுரம் பகுதியை சேர்ந்த முத்துகணேசன் சூர்யா (வயது25) என்பவர் மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்ட போது போலி பாஸ் வைத்து மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

      இதனைத் தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் நவமணி வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தார். இதுகுறித்து சப்- இன்ஸ் பெக்டர் ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.

      • பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீவநல்லூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
      • பெண் கல்வி, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் விளக்கி பேசினர்.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூரில் உள்ள எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சீவநல்லூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத் தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆலோசனையின்படி, எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியர் அரிபா தலைமை தாங்கினார்.

      இதில் 10 சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் விளக்கி பேசினர். இதற்கான ஏற்பாடுகளை சீவநல்லூர் ஊராட்சி தலைவர் முத்துமாரி செய்திருந்தார்.

      • ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது.
      • இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.

      நெல்லை:

      ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

      இந்தியா 3 முறை பட்டம்

      ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆக்கி போட்டியில் ஆசியாவில் இருந்து 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது. இந்த முறையும் வெற்றி பெறுவதற்கு வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

      இந்நிலையில் ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று வர வேண்டும் என்பதற்காக சமீபத்தில் சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

      நெல்லை வந்தது

      தொடர்ந்து நேற்று கன்னியாகுமரிக்கு வந்தடைந்த இந்த கோப்பை யானது இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. முன்னதாக, கன்னியா குமரியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த டிராபியை அர்ஜுனா விருது பெற்ற வீரர் மணத்தி கணேசன் பெற்றுக்கொண்டார்.

      பின்னர் மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்களிடம் அதனை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் சரவணன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      இதில் மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் கிருஷ்ண சக்கர வர்த்தி வரவேற்றார். ஆசிய ஆக்கி கோப்பை பற்றிய வரலாறை முன்னாள் விளையாட்டு அலுவலர் ஆக்கி யூனிட் ஆப் நெல்லை தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் எடுத்துரைத்தார்.

      அதனைத் தொடர்ந்து டிராபியை அம்பைக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.

      நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கும், வீரர்களுக்கும் கலெக்டர் கார்த்திகேயன் மரக்கன்று கள் வழங்கினார். மேலும் வீரர்களுக்கு ஆக்கி மட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆக்கி தொடர்பான காட்சி போட்டி நடைபெற்றது.

      • மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க பல்வேறு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
      • கடைகளில் பிளாஸ்டிக்பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

      நெல்லை:

      நெல்லை மாநகராட்சியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகள், தள்ளுவண்டி கடை களில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன் படுத்துவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

      மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நெகிழி இல்லா நெல்லை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க பல்வேறு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

      அதன் ஒரு பகுதியாக கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி மாநகரில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை, பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட 4 மண்டலங்க ளிலும் மாநகராட்சி சுகாதா ரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

      நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்த லின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி முதல் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப் பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

      இந்த மாதம் 18-ந்தேதி வரை சுமார் 3 மாத காலங்களில் இந்த மண்டலத்தில் மட்டும் கடைகளில் இருந்து சுமார் 2 டன் வரையிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அதன் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1 லட்சம் அபராத தொகை யாக வசூலிக்கப்பட்டு மாநகராட்சி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

      இதுபோல் மற்றும் 3 மண்டலங்களிலும் சேர்த்து சுமார் ரூ.1 லட்சம் வரை பிளாஸ்டிக் பைகளுக்கான அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

      • காற்றின் வேகத்தால் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
      • தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது.

      நெல்லை:

      நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சேகரிக்கப்படும் சுமார் 110 டன் குப்பைக் கழிவுகள் நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும்.

      தீ விபத்து

      அவ்வாறு கொண்டு செல்லப்படும் குப்பைகள் ஒரு சில நேரங்களில் தீப்பிடித்து எரிந்து விடும். இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது.

      காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

      5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டம்

      இதற்கிடையே இந்த பயங்கர தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டனர்.

      நேற்று 2-வது நாளாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

      சாலைமறியல்

      இந்நிலையில், தீயை உடனடியாக அணைக்க வலியுறுத்தி ராமை யன்பட்டி பஞ்சாயத்து தலைவர் டேவிட் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

      அப்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதாகவும், சிலர் வேண்டுமென்றே தீ வைப்பதாக வும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மறியலில் ஈடுபட்ட வர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

      அப்போது, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

      3-வது நாளாக தீ அணைக்கும் பணி

      இதற்கிடையே தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று இரவு பெரும்பாலான இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

      எனினும், ஒரு சில பகுதிகளில் எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் இன்று 3-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடு பட்டு வருகின்றனர்.

      சில இடங்களில் புகை மூட்டம் தொடர்ந்து காணப்படு வதால் பொதுமக்கள் அவதி யடைந்துள்ளனர். எனவே குப்பை கிடங்கில் தீயை முழுமையாக அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக புகை வரும் இடங்களில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக மண் அள்ளி வந்து கொட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.


       


      3-வது நாளாக தொடரும் புகைமூட்டம்.

      3-வது நாளாக தொடரும் புகைமூட்டம்.

      • வள்ளியூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்ட பேரணியானது நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது.
      • இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கான விதிமுறைகள் மாணவர்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.

      வள்ளியூர்:

      வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. டி.எஸ்.பி. யோகேஷ் குமார் மற்றும் ஆர்.டி.ஓ. பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். வள்ளியூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்ட பேரணியானது நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது. முன்னதாக சாலை பாதுகாப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாலையில் செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கான விதிமுறைகள் மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் பள்ளியின் தாளாளர் துரைச்சாமி, தலைமை ஆசிரியை அனு மற்றும் பள்ளி நிர்வாக அலுவலர் மகாராஜன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

      • பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார்.
      • அறைகளில் இருந்த பித்தளை, செம்பு பாத்திரங்களை மர்ம நபர் திருடிச்சென்றார்.

      நெல்லை:

      பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள மாறன்குளம் தெற்கு தெருவில் வசித்து வருபவர் செல்லப்பா. இவரது மகள் பாப்பா(வயது 36). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். பீரோவில் பணம் இருக்கிறதா என்று தேடி பார்த்துள்ளார். ஆனால் அதில் பணம் ஏதும் இல்லாததால் அங்குள்ள அறைகளில் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை, செம்பு பாத்திரங்களை திருடிச்சென்றார்.

      இதுகுறித்து பாப்பா பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

      • துரை மூலைக்கரைப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
      • லோடு ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் துரை படுகாயம் அடைந்தார்.

      களக்காடு:

      நாங்குநேரி அருகே உள்ள காரங்காடு, பிள்ளையார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் துரை (வயது 47). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10-ந் தேதி மூலைக்கரைப்பட்டிக்கு சென்று விட்டு, இரவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தென்னிமலை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக விறகு லோடு ஏற்றி சென்ற லோடு ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

      இதில் துரை படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் இறந்தார். இதுபற்றி அவரது மனைவி இசக்கிலதா (43) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் புதிய நிறுவனத்திடம் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
      • ஊதியம் வழங்க வலியுறுத்தி 2 நாட்களாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் நகராட்சி யில் கடந்த பல ஆண்டுகளாக தூய்மை பணிகளுக்காக தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

      கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் பழைய ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டு புதிய நிறுவனத்திடம் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

      இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் 30 வார்டுகளில் குப்பைகளை மட்டுமே அள்ளிவிட்டு வாறுகால் அள்ள நகராட்சி பணியாளர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

      புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் தூய்மை பணிகளுக்கு முறையாக பணியாளர்களை நியமிக்காமல் நகரில் பல பகுதிகளில் குப்பைகள் சேர்ந்து வந்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்தநிலையில் அந்த நிறுவனம் தூய்மை பணியாளர்களுக்கு ஜூன் மாதம் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

      இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் ஊதியம் வழங்க வலியுறுத்தி 2 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, தாசில்தார் பாபு ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடம் பேசி ஜூன் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

      அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். ராஜா எம்.எல்.ஏ. தலையிட்டு தூய்மை பணியாளர்கள் பிரச்சினையை முடித்ததால் இனி சங்கரன்கோவில் நகரில் தூய்மை பணிகள் தங்கு தடை இன்றி நடக்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

      • சித்தா டாக்டரான மணிவண்ணன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
      • கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் மதிப்பு சுமார் 17 லட்சம் என கூறப்படுகிறது.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூர் புது மந்தை விரிவாக்கம் 3- வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். சித்தா டாக்டரான இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

      102 பவுன் கொள்ளை

      இவர் தனது குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோவிற்கு அருகே வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 102 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்களை மர்மநபர்கள் கொள்ளை யடித்து சென்றது தெரியவந்தது.

      கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் மதிப்பு சுமார் 17 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவஇடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு, அவிவீனா மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

      3 தனிப்படைகள் அமைப்பு

      மேலும், கைரேகை நிபுணர்கள் மூலமாக கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அது வீட்டை சுற்றி வந்து வயல் காட்டில் நின்று விட்டது. சுற்றியுள்ள வீடுகளில் சி.சி.டி.வி. காமிரா உள்ளதா? சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் வந்தார்களா? என்பது குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

      கொள்ளை நடைபெற்ற பகுதியில் உள்ள வீடுகளில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படவில்லை. ஆகவே அப்பகுதியில் போலீசார் சி.சி.டி.வி. காமிரா பொருத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

      கொள்ளையர்கள் ஆள் இல்லாததை நோட்டம் விட்டு தெரிந்து கொண்டு காம்பவுண்ட் கீழ்புறம் வடக்கு முலையின் வழியாக காம்பவுண்ட் சுவற்றின் மீது ஏறி வீட்டின் உள்ளே குதித்து முன்புறம் உள்ள கதவை உடைத்து, வீட்டில் இருந்த சாவியின் மூலமாக பீரோவை திறந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் எடுத்து சென்றுள்ளனர்.

      இப்பொருட்கள் அதிகளவில் இருந்ததால் அருகே இருந்த பீரோவில் பணக்கட்டுகளை எடுத்துச் செல்லவில்லை. கொள்ளையர்கள் யார்? என தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • 10 கிலோமீட்டர் தூரம் கால்நடைகளை அழைத்து வந்து மருத்துவ வசதிகளை பெற வேண்டி உள்ளது.
      • காசிதர்மத்தில் அதிகமான ஆடு, மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

      தென்காசி:

      கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையிலான தி.மு.க.வினர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர் அதில் கூறியிருப்பதாவது:-

      செங்கோட்டை ஒன்றியம் புதூர் பேரூராட்சி, கடைய நல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். புதூர் பேரூராட்சி பகுதியில் உள்ளவர்கள் தங்கள் கால்நடைகளை செங்கோட்டைக்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கால்நடைகளை அழைத்து வந்து மருத்துவ வசதிகளை பெற வேண்டி உள்ளது. மேலும் கேசவபுரம் பகுதியில் அதிகமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே கேசவபுரத்தில் கால்நடை மருத்துவமனை அமைப்பது மிகவும் அவசியமாகிறது. அதேபோல காசிதர்மத்தில் அதிகமான ஆடு, மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

      இந்த பகுதியில் வளர்க்கப்படுகிற ஆடு, மாடுகளுக்கு நோய் வந்தால் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடையநல்லூருக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அல்லது அச்சம் புதூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

      எனவே புதூர் பேரூராட்சி கேசவபுரத்திலும், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மத்திலும், கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      மனுவினை பெற்றுக் கொண்ட கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

      நிகழ்ச்சியின் போது செங்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், (செ)புதூர் பேரூராட்சி தலைவருமான ரவிசங்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமி துரை, முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் காசி தர்மம்துரை, தொழிலதிபர் மாரித்துரை, ராமானுஜம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

      ×