search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுப்பதிவு"

    • பா.ஜனதாவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான் என்று பதிவிட்டிருந்தார்.
    • தேர்தல் ஆணையமே, இந்த வீடியோவை பார்த்தீர்களா? ஒரு நபர் 8 முறை ஓட்டுப்போடுகிறார். நீங்கள் விழித்திருக்க வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டிருந்தது.

    லக்னோ:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இதில் உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் கடந்த 13-ந் தேதி ஓட்டுப்பதிவு நடை பெற்றது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் முகேஷ்ராஜ்பூதி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் ஓட்டுப்பதிவின் போது, இந்த தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாலிபர் ஒருவர் பாரதிய ஜனதாவுக்கு 8 முறை வாக்களித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை அவரே எடுத்துள்ளார்.

    வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாக்காளர் ஓட்டுப்போடுவதை படம் பிடிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, இது தவறு என்று தேர்தல் ஆணையம் உணர்ந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்... பா.ஜனதாவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான் என்று பதிவிட்டிருந்தார்.

    இதேப்போல அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் அந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, தேர்தல் ஆணையமே, இந்த வீடியோவை பார்த்தீர்களா? ஒரு நபர் 8 முறை ஓட்டுப்போடுகிறார். நீங்கள் விழித்திருக்க வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டிருந்தது.

    வீடியோ வைரலானதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக உத்தரபிரதேச தேர்தல் ஆணையர் கூறுகையில், இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் அலுவலர் பிரதீத்திரிபாதி நயா காவ்ன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசார ணையில் சம்பந்தப்பட்ட வாலிபர் அதே பகுதியை சேர்ந்த ராஜல்சிங் என தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 171 (தேர்தல் தொடர்பான குற்றம்), 419 (நபர் மூலம் ஏமாற்றியதற்கான தண்டனை) மற்றும் 128, 132, 136 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றிய தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் அந்த வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    • 5-ம் கட்டத் தேர்தல் வருகிற திங்கட்கிழமை.
    • பாஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில் இதுவரை 4 கட்டத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.

    5-ம் கட்டத் தேர்தல் வருகிற திங்கட்கிழமை 49 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த 49 தொகுதிகளிலும் நாளை மாலை பிரசாரம் ஓய உள்ளது.

    இதையடுத்து, 6-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. 6-வது கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    6-வது கட்டத் தேர்தலில் 57 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடத்தப்பட உள்ளது. இந்த 57 தொகுதிகளில் பீகாரில் 8, அரியானாவில் 10, ஜார்க்கண்டில் 4, ஒடிசாவில்-6, உத்த ரபிரதேசத்தில்-14, மேற்கு வங்காளத்தில்-8, டெல்லியில்-7 என்ற வகையில் தொகுதிகள் அடங்கி உள்ளன.

    இதில் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    5-ம் கட்டத் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்று உள்ள நிலையில் 6-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை முதல் தீவிரமாக மாற இருக்கிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் 6-வது கட்டத் தேர்தல் நடக்கும் அரியானா, டெல்லி, பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் மாநிலங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த மாநிலங்களில் டெல்லி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாரதீய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவையும் 7 தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள பாஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    டெல்லியில் சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புதுடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என்று 7 தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை பாரதீய ஜனதா களம் இறக்கி உள்ளது.

    டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 3 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடு கின்றன.

    மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 தொகுதிகளி லும் போட்டியிடுகிறது என்றாலும் டெல்லியில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இருமுனை போட்டி நிலவுகிறது.

    டெல்லியில் பா.ஜ.க., இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் தவிர, 99 சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. 49 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். மொத்தத்தில் 162 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள்.

    அவர்கள் அனைவரும் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 6 நாட்களே அவகா சம் உள்ளது. இதனால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் உச்சக்கட்ட பிரசாரம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், டெல்லி யில் நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடியும், காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் ஒரே நாளில் தேர்தல் பிரசாரம் செய்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர். பிரதமர் மோடி நாளை வடகிழக்கு டெல்லி தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அந்த தொகுதியில் உள்ள கோண்டா என்ற இடத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனப் பேரணி நடத்திவிட்டு அந்த கூட்டத்தில் மோடி பேச உள்ளார்.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதால் நாளை டெல்லியில் மோடி பிரசா ரத்தில் பல்லாயிரக்கணக் கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை 2 தொகுதிகளில் ஆதரவு திரட்ட உள்ளார். சாந்தினி சவுக் மற்றும் வடமேற்கு டெல்லி தொகுதி களில் அவர் வாகனப் பேரணி நடத்துகிறார்.

    அதன் பிறகு அவர் சாந்தினி சவுக் தொகுதியில் அசோக் விகார் என்ற பகுதியில் ஜே.பி.அகர்வா லையும், வடமேற்கு டெல்லி தொகுதியில் உதித் ராஜையும் ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு பிறகும் 2 நாட்கள் டெல்லியில் பிரசாரம் செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி நாளை ஒரு கூட்டத்தில் பேசிய பிறகு மீண்டும் 22-ந் தேதி டெல்லியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அன்று வடமேற்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் வாகனப் பேரணி நடத்த உள்ளார். அந்த தொகுதியில் உள்ள துவாரகா என்ற இடத்திலும் பொதுக் கூட்டத்திலும் பேச இருக்கிறார்.

    இதற்கிடையே இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்காவும் டெல்லியில் 2 அல்லது 3 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இஸ்லா மியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு பிரியங்கா செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, சாந்தினி சவுக் தொகுதியில் உள்ள 3 இடங்களில் பிரியங்கா பொதுக் கூட்டத்தில் பேச இருக்கிறார்.

    ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்-மந்திரியு மான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் 6 நாட்களும் முற்றுகையிட்டு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் சேர்ந்து ஆதரவு திரட்ட உள்ளார். கெஜ்ரிவால் மாடல் டவுன், ஜகான்கீர் பூத் பகுதிகளில் வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார்.

    ஆம் ஆத்மி வேட்பா ளர்கள் போட்டியிடும் தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, புதுடெல்லி ஆகிய 4 தொகுதிகளிலும் முக்கிய வீதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டவும் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். அவர் தவிர ஆம் ஆத்மி மூத்த தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் சென்று பேச ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் 7 தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

    வருகிற 20-ந் தேதி புதுடெல்லி தொகுதியிலும், 21-ந் தேதி சாந்தினி சவுக் தொகுதியிலும் நட்டா வாகனப் பேரணி நடத்த உள்ளார். தலை வர்களின் முற்றுகையால் டெல்லியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

    • 4-வது கட்டத் தேர்தலுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் முதல் 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    இதனையடுத்து 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த 96 தொகுதிகள், ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மராட்டியம் (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8), காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் இடம்பெற்று உள்ளன.

    இதில் தெலுங்கானா, ஆந்திராவில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    4-வது கட்டத் தேர்தலுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் 96 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது.

    • அதிக இடங்களில் வெற்றி பெற பாஜ.க. இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • பா.ஜ.க. தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் முதல் 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    4-வது கட்டத் தேர்தல் நேற்று முன்தினம் 93 தொகுதிகளில் 3-வது கட்டத் தேர்தல் நடந்தது. இதில் 66 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் 4-வது கட்டத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த 96 தொகுதிகள், ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மராட்டியம் (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8), காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் இடம்பெற்று உள்ளன. இதில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

    4-வது கட்டத் தேர்த லுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 நாட்களாக பிரசாரம் தீவிரமானது.

    தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் 96 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய உள்ளது.

    பிரசாரத்துக்கு 2 நாட்களே அவகாசம் இருப்பதால் 96 தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தேர்தல் பிரசாரம் மிகமிக தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்றத்துக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருப்பதால் அங்கு, தேர்தல் பிரசாரம் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஒடிசாவிலும் சட்டசபைத் தேர்தலுடன் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அங்கு அசைக்க முடியாத செல்வாக்குடன் இருக்கும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியமைக்கும் வகையில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.

    ஆனால் நவீன் பட்நாயக்கிடம் இருந்து கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    மராட்டியம், உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த மாநி லங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் போட்டி போட்டு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

    பாராளுமன்றத்தில் ஆட்சியை கைப்பற்ற அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜ.க. இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதற்கு 4-வது கட்டத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த 96 தொகுதிகளிலும் அதிக இடங்களை பாஜ.க. கைப்பற்றி இருந்தது. இந்த தடவை காங்கிரஸ் கூட்டணி கடுமையான சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 4-வது கட்டத் தேர்தலை பா.ஜ.க. தலைவர்கள் முக்கியமாக கருதி, பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    • முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.
    • பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.

    மத்திய மந்திரி அமித்ஷா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    3 கட்டத் தேர்தல் முடிந்து உள்ளது. 3 கட்டங்களிலும் 283 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவுப் பெற்றுள்ளது. இதில் யார் யாருக்கு? எவ்வளவு வெற்றி கிடைக்கும்? என்பதை உறுதியாக கணிக்க இயலாது.

    இப்போது நான் அடுத்த கட்டத் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக இருக்கிறேன் என்றாலும், முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.

    283 தொகுதிகளில் நடந்து முடிந்த தேர்தலில் குறைந்தபட்சம் 175 முதல் 200 இடங்கள் வரை பா.ஜ.க கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.

    பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் நிச்சயம் பா.ஜ.க.வுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். உத்தரபிரதே சத்தில் முழுமையான வெற்றி கிடைக்கும்.

    தமிழ்நாடு, கேரளாவில் எங்களது வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் நாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்.

    மீண்டும் ஆட்சியமைத்த தும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு பா.ஜ.க. அரசு ரூ.10 லட்சம் கோடி செலவு செய்துள்ளது.

    ஜி.எஸ்.டி. வருவாய் 2 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு மூலம் நேரடி வரி விதிப்பில் நியாயமான முறை அமலுக்கு வந்து உள்ளது. இதை ராகுல், எதிர்ப்பது ஏன்? என்று தெரியவில்லை. அவருக்கு யார் யோசனை சொல்கிறார்கள்? என்பதும் தெரியவில்லை.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

    • வடசென்னையில் 35 பேர் போட்டியில் உள்ளதால் 3 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.
    • நோட்டாவுடன் சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 10 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வேட்பாளர் பெயர்கள் மற்றும் ஒரு நோட்டா (யாருக்கும் ஓட்டு இல்லை) பட்டன் இடம் பெறுகிறது. 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் சூழ்நிலையில் அதற்கேற்ப கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் இணைக்கப்படும்.

    அந்த வகையில் தென் சென்னை தொகுதியில் 41 பேர் போட்டியிடுவதால் 3 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதே போல் வடசென்னையில் 35 பேர் போட்டியில் உள்ளதால் 3 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.

    மத்திய சென்னையில் 31 பேர் போட்டியிடுவதால் இங்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடும் கரூரில் 4 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    குறைந்த வேட்பாளர்களை கொண்ட நாகையில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும். நோட்டாவுடன் சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 10 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும். மீதமுள்ள பட்டன்கள் செயல்படாமல் முடக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கூடுதல் மின்னணு எந்திரங்கள் வைக்கப்படும் போது கடைசி பட்டனாக நோட்டா இருக்கும்.

    வாக்குப்பதிவு எந்திரத் தில் ஒட்டப்பட உள்ள வேட்பாளர்கள் பட்டியல், தபால் ஓட்டுகள் ஆகியவற்றை அச்சிடும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    120 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 58 பேர் உள்ளதால் அவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகள் பெறுவதற்கான முயற்சியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • நகர்புறங்களில் 21ஆயிரத்து 595 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 37ஆயிரத்து 239 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
    • வேட்புமனு தாக்கல் மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெங்களூரு வடக்கு தொகுதியில் அதிகபட்சமாக 31 லட்சத்து 74ஆயிரத்து 98 வாக்காளர்களும், உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 15லட்சத்து 72ஆயிரத்து 958 வாக்காளர்களும் உள்ளனர்.

    தேர்தலுக்காக 58ஆயிரத்து 834 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நகர்புறங்களில் 21ஆயிரத்து 595 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 37ஆயிரத்து 239 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் 3.51லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

    கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக உடுப்பி-சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடம், சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர், பெங்களூரு கிராமப்புறம், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மையம், சிக்கபல்லாபூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை ஏப்ரல் 5-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 8-ந் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் சிக்கோடி, பெல்காம், பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூர், பிதார், கொப்பளா, பெல்லாரி, பாருங்கள், தார்வாட், உத்தரகன்னடம், தாவனகரே, சிமோகா ஆகிய தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக மே 7-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 20-ந் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப்பெற ஏப்ரல் 22-ந் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • இன்று காலை 7 மணிக்கு 7 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.
    • வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் கோசி, ஜார்க்கண்ட் மாநிலம் டும்ரி, மேற்கு வங்காளத்தில் தூப்குரி, கேரளாவில் புதுப்பள்ளி, உத்தரகாண்டில் பாகேஸ்வரர்,மற்றும் திரிபுராவில் தன்கர், போக்சநகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. கோசி மற்றும் தன்கர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததாலும் மற்ற 5 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்ததாலும் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு 7 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். பல வாக்குசாவடிகளில் ஓட்டுப்போடுவதற்காக காலை முதலே வாக்காளர்கள் காத்திருந்தனர். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    உத்தரபிரதேசம் கோசி தொகுதியில் ஆளும் பாரதியஜனதாவுக்கும், எதிர்கட்சிகள் புதிதாக உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வாக இருந்த தாராசிங் சவுதான் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி போட்டியிடுகிறது. இவருக்கு காங்கிரஸ்,கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி போட்டியிடவில்லை. இதே போல டும்ரி தொகுதியில் பாரதியஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் நேரடியாக மோதுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ஏ.ஐ.எம். ஐ.எம். கட்சியும் நேரடியாக களத்தை சந்தித்துள்ளது.

    திரிபுரா போக்சநகர் தொகுதியில் பாரதிய ஜனதாவுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மேற்குவங்காளம் தூப்குரி தொகுதியில் பா.ஜ.க. திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்டு கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணி உருவான பிறகு நடைபெறும் 6 மாநிலங்களில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால் தேர்தல் முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2003ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • 6 நீர் மேலாண்மை திட்டங்கள் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    மக்களின் சமூக மேம்பாட்டுக்கு பயன்தரும் வகையில், நாடு முழுக்க செயல்பட்டு வரும் தனி நபர்கள், பொது மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் அவரவர் துறை சார்ந்து சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஸ்கோச் என்ற அமைப்பு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

    கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. பல துறைகளை சேர்ந்த வல்லுனர்களை தேர்வாளர்களாக கொண்டுள்ள இந்த விருதுக்குழு தற்போது சிறந்த நீர் மேலாண்மை திட்டத்தை தேர்வு செய்து வருகிறது. இதற்கான போட்டி கடந்த 12ந் தேதி துவங்கியது. தமிழக அளவில் 6 நீர் மேலாண்மை திட்டங்கள் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டுள்ளது.இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 1,752 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டமும் இடம் பிடித்துள்ளது.

    மேலும் தாமிரபரணி- நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு திட்டம், மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம்,திருச்சி முக்கொம்பு கதவணை திட்டம், நாகபட்டினம், ஆதனூர் -குமாரமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் திட்டம், கரூர் அருகே காவிரியாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களும் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளன.முதற்கட்டமாக இத்திட்டங்கள் சார்ந்த விரிவான அறிக்கையை நீர்வளத்துறை அதிகாரிகள், விருது கமிட்டியிடம் சமர்பித்துள்ளனர். இரண்டாம் கட்டமாக இத்திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவை அறிந்துகொள்ளும் வகையில் இணைய வழி ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது.இன்று வரை ஓட்டளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×