search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police"

    • கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் கிராமத்தில் மர அறுவைத் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் சிவராம்.
    • சிவராம் - பபுஷ்பா தம்பதி இடயில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    கர்நாடகாவில் மனைவியுடன் வாக்குவாதம் முற்றி அவரது தலையை கணவன் துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் கிராமத்தில் மர அறுவைத் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் சிவராம்

    இவர் சிவமோகா மாவட்டத்தின் சாகரா நகரத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயது குழந்தை உள்ளது. சிவராம் - பபுஷ்பா தம்பதி இடயில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று (மே 28) இரவு வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியின் தலையை துண்டாங்க வெட்டிக் கொலை செய்துள்ளார் சிவராமன். மேலும் வீட்டின் சமயலறையில் வைத்து புஷ்பாவின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சிவராமனை கைது செய்துள்ளனர். தந்தையின் இந்த வெறிச்செயலால் அவரது 8 வயது மகள் நிர்கதியில் விடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

     

    • பணத் தகராறு காரணமாக ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • மதேகஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த வீடுகளில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து வைரலாகத் தொடங்கியது.

    லக்னோவில் பணத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஐந்து பேர் சேர்ந்து ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மதேகஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த வீடுகளில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து வைரலாகத் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பூட்டும் அந்த வீடியோவில், ஒருவரை கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து வந்து அவரை உதைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் துண்டுக்கட்டாக தூங்கி கீழே வீசியது பதிவாகியுள்ளது. அதிஷ்டவசமாக அந்த நபர் சிறிய காயங்களுடன் உயிர்பிழைத்தார்.

     

    இருப்பினும் அதற்குப் பிறகும் கீழே இறங்கி வந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தடுக்க முயன்றும் அவர்கள் தங்கள் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
    • சம்பந்தப்பட்ட காவலரும் பேருந்து நடத்துனரும் சமாதானமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.

    அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் நிகழும் சூழல் ஏற்பட்டது.

    இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி இடையே தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவலரும் பேருந்து நடத்துனரும் சமாதானமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோவில், "நான் என்னோட கருத்தை சொன்னேன். நீங்கள் உங்களுடைய கருத்தை சொன்னீர்கள். பிறகு டிக்கெட் எடுத்து நீங்கள் பயணம் செய்தீர்கள். ஆனால் அது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பிரச்சினையானது. இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று பேருந்து நடத்துநர் சொல்கிறார். அதற்கு நானும் வருத்தம் தெரிவிக்கிறேன். இனிமேல் போக்குவரத்து துறையும் காவல்துறையும் நண்பர்களாக செயல்படுவோம் என காவலர் பேசுகிறார். பிறகு இருவரும் கைகுலுக்கி , கட்டிப்பிடித்து சமாதானம் செய்து கொண்டு தேநீர் குடிக்கின்றனர்.

    இதனையடுத்து, அரசு பேருந்துகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.



    • காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
    • போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படும்பட்சத்தில் அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவல்துறை, போக்குவரத்து துறை இடையே நடைபெற்று வரும் பனிப்போரை தடுக்க தவிறய தமிழக அரசை கண்டிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காவல்துறை, போக்குவரத்து துறை இடையே நடைபெற்று வரும் பனிப்போரை தடுக்க தவிறய தமிழக அரசை கண்டிக்கிறேன்.

    சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவித்தபடி காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    இதனால் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படும்பட்சத்தில் அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திரைப்பட காமெடியில் வருவதை போல இரண்டு துறையில் எது பெரியது என அடித்து காட்டுங்கள் என்ற மனநிலையில் இரு துறைகளும் செயல்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கர்நாடக மாநிலம் உடுப்பியில் இரு குழுக்களிடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • வீடியோவைப் பார்த்த நெட்டிஸங்கள் சினிமாவை விஞ்சும் வகையில் இந்த மோதல் உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் இரு குழுக்களிடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணத் தகராறு காரணமாக உடுப்பி-மணிப்பால் நெடுஞ்சாலையில் 2 குழுக்களைச் சேர்ந்த 6 பேர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கியும், குழுக்கள் ஆளுக்கொரு மாருதி ஸ்விஃப்ட் கார்களைக் கொண்டு ஒன்றை ஒன்று மோதியும் சண்டையிட்டுக் கொண்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    கடந்த மே 18 ஆம் தேதி நடந்த இந்த மோதலை சாலையின் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் வசிப்பவர் மாடியில் இருந்து எடுத்த மொபைல் இந்த வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

     

    இந்நிலையில் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரக்ளின் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிஸங்கள் சினிமாவை விஞ்சும் வகையில் இந்த மோதல் உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

     

    • சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
    • போக்குவரத்து தொழிலாளர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

    நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.

    அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் நிகழும் சூழல் ஏற்பட்டது.

    இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி இடையே தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருதரப்பினருக்கம் இடையே நிகழும் மோதல் போக்கை சுமூகமாக முடித்துக்கொள்வது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அரசு பேருந்தில் போலீசார் டிக்கெட் எடுக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதால் 3 நாட்களாக நீடித்து வந்த மோதல் போக்கை கைவிட இருதரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.

    • பேருந்தில் ஏறிய காவலர் டிக்கெட் எடுக்கமுடியாது என ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலானது.
    • நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. அதில், அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள்தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக விளக்கமளித்த போக்குவரத்துத்துறை, போலீசார் பேருந்தில் பயணிக்கையில் கட்டாயம் டிக்கெட் எடுக்கவேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத்துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது என தெரிவித்தது.

    இதற்கிடையே, சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

    இந்த நடவடிக்கையால் போலீசாருக்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று காலை செங்கல்பட்டு அருகே வாரண்ட் வைத்திருந்த போலீஸ்காரரிடம் டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

    இதேபோல், திருநெல்வேலியில் உள்ள வள்ளியூரில் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற 3 டிரைவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார். சீட் பெல்ட் அணியாதது, யூனிபார்ம் சரியாக அணியாதது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சாட்டுவதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். காவல்துறைக்கும், போக்குவரத்துத்துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடருமா என்பது அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து தெரிய வரும்.

    • பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
    • சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.

    அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.

    ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் அளித்துள்ளது. அதில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

    அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் அரசு போக்குவரத்து நடத்துநருடன் வாக்குவாதம் செய்த, காவலர் ஆறுமுகபாண்டி மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்த நிலையில், தற்போது 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நடவடிக்கைகளால் காவல்துறைக்கும் போக்குவரத்துத்துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

    • பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
    • போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.

    நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.

    அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.

    ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்தது.

    இவர் ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின்போது மயங்கி விழுந்த காவலர் ஆறுமுகப்பாண்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். 

    • காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?
    • முதலமைச்சரின் மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் நடத்துனரும், போலீஸ்காரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இதையடுத்து போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில்,

    கடந்த 2021-2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

    முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


    • ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கரொளலி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த வாரம் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, உள்ளே இருந்த தாய்க்கு அலறல் சத்தம் கேட்டது.

    வெளியே ஓடிவந்து பார்த்த போது , வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பண்ணையில் மகள் உடலில் தீக்காயங்களுடன் வலியால் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். அப்போது அந்த சிறுமி தாயிடம். சைகைகளில், இரண்டு பேர் தனக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறினாள்.

    இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி தீவைக்கப்ட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள்ளது.

     

     

    முன்னதாக கடந்த மே 14 ஆம் தேதி மருத்துவமனையில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வந்த காவல்துறையினர் காட்டிய புகைப்படங்களில் இருந்த ஒருவனை சிறுமி அடையாளம் காட்டியது குறிப்பிடத்தக்கது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தடயங்களை அளிக்க தீவைத்து எரிக்கப்பயிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே உடல் முழுதும் தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் காட்சிகள் வெளியாகி காண்போரின் மனதை பதைபதைக்க வைக்கின்றன.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.
    • ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று அந்த பஸ் நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் நின்றபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் அந்த பஸ்சில் ஏறி உள்ளார். இதனை அடுத்து பஸ் கண்டக்டர் அந்த போலீஸ்காரரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.

    அப்போது அந்த போலீஸ்காரர் அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.

    ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்தது.

    இவர் ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×