என் மலர்tooltip icon

    செய்திகள்

    • நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.
    • லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார். கடந்த 2005 இல் 20 வருடங்களாக அவர் அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

    இந்நிலையில் லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.

    சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ் குமார பெயர் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் என ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

    நிதிஷ் குமார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாக அல்லாமல் எம்எல்சியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.
    • தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

    பக்தர்கள் வருகையை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள மரங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு அவ்வாறு அலங்காரம் செய்யப்பட்ட ஆலமரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து சிதறி ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.

    தகவலறிந்து  தீயணைப்பு வீரர்கள் மற்றும் சன்னிதான தீயணைப்பு படை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை பரவ விடாமல் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இந்த சம்பவத்தால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • நியூயார்க்கின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர்.
    • மக்களை எளிதில் அணுகக்கூடிய உத்திகளை கையாண்டவர்.

    "இந்தப் பக்கம் பாத்தா சோனு மழ... இந்தப் பக்கம் பாத்தா சோனு மழ... சரி பின்னாடி திரும்பி பாப்போமேனு பாத்தா அந்த பக்கமு மழ" என்பது வடிவேலு காமெடி. அந்த மழைபோல 2025ல் எல்லா பக்கமும் பேசப்பட்டவர்தான் நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி. "மழ பெஞ்சா சுத்தியுதாண்டா பெய்யும்" என்ற பிரபுவின் பதில்போல, ஒரு நாட்டில் நடக்கும் முக்கிய செய்தி உலக நாடுகளுக்கு பரவும் அல்லவா. அப்படி பரவினார் மம்தானி.

    நியூயார்க்கின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர். ஆளும்கட்சியை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் உறுப்பினரான இவர் நியூயார்க் மேயர் ஆகிறார். உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் மேயர் தேர்தல் நடக்கும். எந்தக் கட்சியின் உறுப்பினராவது வெற்றிப் பெற்றுதான் ஆகவேண்டும். அவர்கள் பதவி ஏற்பார்கள். ஆனால் மம்தானிக்கு மட்டும் எப்படி இவ்வளவு பிரபலம் கிடைத்தது? நம்பர் 1 டிரெண்டிங் ஆனது எப்படி? 




    "பில்டப் பண்ட்ரனோ, பீலா விட்ரனோ அது முக்கியமில்ல. நம்ம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மல உடனே திரும்பி பாக்கணு" எனும் வடிவேலு வசனத்திற்கு ஏற்ப தனது நடவடிக்கைகள் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர் மம்தானி. குஜராத் கலவர வழக்கில் மோடியை பகிரங்கமாக விமர்சித்தவர். இஸ்ரேல் - காசாப் போரில் காசாவுக்கு ஆதரவாக பேசினார். மற்றொரு முக்கிய விஷயம் மக்களை எளிதில் அணுகக்கூடிய உத்திகளை கையாண்டவர். அதாவது உடை, உணவு, இருப்பிடம், இலவசப் பேருந்து சேவை என மக்களின் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

    இந்தியாவில் மும்மொழிக் கொள்கையால், பல்வேறு பிரச்சனைகள் எழுத்தொடங்கின. தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கலில் ரூபாய் குறியீடு எல்லாம் மாற்றப்பட்டு ரூ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் பெரும் பூகம்பம் வெடித்தது. இதற்கு காரணம் ஹிந்தி திணிப்பு எனவும் வாதங்கள் வைக்கப்பட்டன.

    இந்த புயல் ஓயத்தொடங்கிய சில மாதங்களில் அமெரிக்காவில் ஹிந்தியில் ஓட்டு கேட்டவர் மம்தானி. இவற்றையெல்லாம் தாண்டி மிக முக்கியமாக தமிழ்நாட்டு அரசியலை, இந்திய அரசியலை கையிலெடுத்தார். அதாவது புதிதாக வரும் கட்சிகள், எப்படி ஆளும் கட்சியை விமர்சித்து கவனம் பெறுகிறதோ, அதுபோல அமெரிக்காவின் முக்கிய தலை, அதாவது அதிபர் டிரம்புக்கும் நேரடி தாக்குதான்.



    இன்னும் சொல்ல வேண்டுமானால் தனது பதவி ஏற்பு விழாவில் நேருவின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். இது இன்னும் கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்தது. இதுபோன்ற செயல்களால் இளம் வயதினர் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்தார். சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் மம்தானி தனது பெயரை உச்சரித்த விதம் "The Name Is M-A-M-D-A-N-I" என்ற சொற்கள் பாடலாகவே வைரலானது. தற்போதுவரை வைரலாகிக்கொண்டுதான் இருக்கிறது. 

    இப்படி, யாரு சாமி நீ? என அனைவரும் ஆச்சயர்ப்பட்டு கூகுளில் தேட, 2025-ல் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் நியூயார்க் மேயர் மம்தானி.

    படத்தின் பின்னணி இசை பாராட்டக்கூடியது.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிறார் கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன். ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்குகிறார். இதனால், எதிர்பாராத விபரீதத்தை சந்திக்கிறார்.

    இந்த கடனில் சூழல் என்ன ?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன், உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். அளவாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநய், நாயகனுக்கு இணையாக கவனம் ஈர்க்கிறார்.

    ஆத்விக், எஸ்தர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

    இயக்கம்

    ஒரு சம்பவத்தின் மூலம் பல உண்மைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி. உண்மை சம்பவத்தின் பின்னணியில், அதிர்ச்சிகரமான கற்பனை மூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆங்காங்கே படத்தின் ஓட்டத்தில் வரும் தொய்வு படத்திற்கு பலவீனம். கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    இசை

    படத்தின் பின்னணி இசை பாராட்டக்கூடியது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் சபரி நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

    ரேட்டிங்- 1.5/5

    • மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.
    • நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    நிர்பயா சம்பவத்தை எப்படி யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதோ.. அதேபோல், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் யாராலும் மறக்க முடியாது...!

    கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ம் தேதி அன்று மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவராக பயின்று வந்த 31 வயதான பெண் மருத்துவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி இரவு பணியில் முடித்துவிட்டு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூட்டத்தில் அதிகாலை 3 மணியளவில் உறங்கச் சென்றார்.

    மறுநாள் காலையில், அவர் தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கொல்கத்தாவில் போராட்டங்கள் வெடித்தன. மாநிலத்தை தாண்டி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல்.. மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். 

    மருத்துவர்களுக்கும், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லை என அரசாங்கத்தை கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர். இதனால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் அடுத்த கட்டத்தை எட்டியது. காவல்துறையினர் விசாரணைக் குழுவை அமைத்தனர். தீவிர விசாரணை மற்றும் சிசிடிவி ஆய்வை தொடர்ந்து, அதே மருத்துவமனையில் தன்னவார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்ற நபரை அதிரடியாக கைது செய்தனர்.இதைதொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார்.

    உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து கொல்கத்தா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கை விசாரித்தது. நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. அதோடு, ஒரு தேசிய விசாரணைக் குழுவை அமைத்தது. 

    போராட்டங்களின் எதிரொலியாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையைத் தொடர்ந்தும், கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) மாற்றப்பட்டது.

    சிபிஐ தனது விசாரணையில், சஞ்சய் ராயை மட்டுமே பிரதான குற்றவாளியாக உறுதி செய்தது. இதற்கிடையே, சிபிஐ வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை கைது செய்தது. முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் மீது சிபிஐ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

    இந்த வழக்கின் மீதான விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி அன்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளதி என சியால்டா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் ஜனவரி 20ம் தேதி அன்று குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பளித்தார். ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு மேற்கு வங்க அரசு ₹17 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் இந்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்துவிட்டனர்.

    இருப்பினும், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சிபிஐ தரப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பமும், சிபிஐயும் அவருக்கு மரண தண்டனை கோரி வருகின்றனர்.

    மேற்கு வங்க அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இதே கோரிக்கையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது, ஆனால் சிபிஐயின் மனுவை ஏற்று விசாரணைக்கு எடுத்துள்ளது. அதன் மீதான பிரதான விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.

    கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை உறுதி செய்யலாமா அல்லது சிபிஐ கோரியபடி மரண தண்டனையாக மாற்றலாமா என்று முடிவு செய்யும்.

    • மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது.
    • 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.

    இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு 465 பேர் பலியாகி உள்ளனர். 366 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.

    வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது. மேலும், மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது. அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சுகாதார உதவிகளை வழங்குவதற்காக இந்தியா ஒரு நடமாடும் மருத்துவமனையையும், 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.

    இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆக்ராவிலிருந்து 73 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் புறப்பட்டு கொழும்பில் தரை இறங்கியது.

    இந்நிலையில், இலங்கை பேரிடர்- கண்டியில் இந்தியா அமைத்த தற்காலிக மருத்துவமனையில் இலங்கை மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரை 2,200க்கும் மேற்பட்டோருக்கு இந்திய மருத்துவ குழு சிகிச்சை அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்த அனுமதி
    • தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை

    புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை மறுநாள் (டிச.9)  தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். முதலில் புதுச்சேரியில் தவெக ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், புதுச்சேரி அரசு அதற்கு அனுமதி மறுத்தது. ரோடு ஷோக்கு பதில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியது. இதனையடுத்து பொதுக்கூட்டம் நடத்த தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டநிலையில், பொதுக்கூட்ட பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர் தவெகவினர். 

    இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது புதுச்சேரி அரசு. அதில் முக்கியமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளளது. 

    முக்கியக் கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

    • புதுச்சேரியை சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி 
    • அனுமதி பெறுபவர்களுக்கு 'கியூ-ஆர்' கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட வேண்டும்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பாஸ் வழங்கக் கூடாது.
    • முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குப் பாஸ் வழங்கக் கூடாது.
    • பொதுமக்களுக்குக் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.
    • பாதுகாப்புக்காக மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
    • தொண்டர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரிந்து நிற்கத் தனித்தனித் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
    • நாற்காலிகள் போட அனுமதி இல்லை. மேடையும் அமைக்கக் கூடாது.

    என பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தவெகவினர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

    • வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்
    • விரைவில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகும்

    வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்தான் நடிகர் ரஜினி. ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்தாண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி, அவரது 'படையப்பா'  படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.

    இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 


    • கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்கு.
    • சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதானசவுதா முன்பு பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது.

    இதில், கலந்துகொள்ள ஆர்.சி.பி. ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்திற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவாகின.

    இந்த விவகாரத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். ஆனால் அரசின் அலட்சியமே 11 பேர் சாவுக்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்," ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம். சின்னசாமி மைதானத்தின் பெயரைப் பாதுகாப்போம், மாற்றாக ஒரு புதிய கிரிக்கெட் மைதானத்தையும் கட்டுவோம்" என்றார்.

    • அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார்
    • நாடக வடிவில் நகர்கிறது படம்.

    கட்டுமான நிறுவனம் ஒன்றில் முதன்மை பொறியாளராக பணியாற்றுகிறார் படத்தின் நாயகி சாக்ஷி அகர்வால் (சாரா). சாராவுக்கும், அங்கு பணியாற்றும் மற்றொரு பொறியாளர் விஜய் விஷ்வாவுக்கும் காதல் மலர்கிறது. காதலுக்கு சாராவின் பெற்றோரும் ஒப்புதல் அளித்தனர். இச்சூழலில் கட்டிடங்களுக்கு கலப்பட மணல் அனுப்பி ஏமாற்றும் வெட்டுக்கிளிக்கும் (மிரட்டல் செல்வா) சாராவுக்கும் பகை ஏற்படுகிறது.

    இவர்களுக்கு மத்தியில் கட்டுமான நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருப்பவர் ரோபோ சங்கர். காசுக்காக எதையும் செய்பவர். அவருடைய நண்பன் யோகிபாபு. இவர்களின் அனைவரின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி, மதிக்கப்படாமல் அந்த இடத்தை சுற்றி கொண்டிருக்கும் ஒரு நபர் செல்லக்குட்டி.  இவர்கள் அனைவரும் வெட்டுக்கிளிக்கு உதவியாக சாரவைக் கடத்த முயல்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னால் செல்லக்குட்டி சாராவையும், அவளது காதலரையும் கடத்துகிறார். செல்லக்குட்டி ஏன் சாராவை கடத்தவேண்டும்? கல்யாணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை. 

    நடிப்பு

    தனக்கான ரோலில் கட்சிதமாக நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால். விஜய் விஷ்வா, சில காட்சிகளோடு காணாமல் போகிறார். படத்தின் இயக்குநர் செல்லக்குட்டி, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரையே மிஞ்சுகிறார் என பார்வையாளர்கள் விமர்சனம் செய்வதற்கு ஏற்றார்போல ஓவர்டோஸ் நடிப்பு. அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். யோகி பாபு, ரோபோ சங்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோரின் காமெடி பரவாயில்லை. ஆனால் ஆபாச வசனங்களை தவிர்த்திருக்கலாம். இறுதியாக நாடக வடிவில் நகர்கிறது படம். 

    இயக்கம்

    இயக்குநர் செல்லகுட்டி, தான் சொல்ல நினைத்த கதையில் எப்படியோ பாதியை சொல்லிவிட்டார். பவர் ஸ்டார், நடிப்பு அரக்கன் என அனைத்து கோமாளிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் செல்லகுட்டி, இயக்குநராக வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரு நடிகராக நிச்சயம் டிரெண்டாக வாய்ப்புள்ளது. 

    இசை

    இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை. 

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மன் குமார் கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியுள்ளார். படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் இயக்குநரின் கதையை சிதைக்காத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

    ஹாப்பி ராஜ் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று மாலை 'ஹாப்பி ராஜ்' படத்தின் First Look போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் ஹாப்பி ராஜ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    • அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய 'மனமகிழ் மன்றம்'
    • தவெக தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுயஒழுக்கம் என்பது மிக அவசியம்

    தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, தவெக தொண்டர் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய 'மனமகிழ் மன்றம்'  அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் உள்ள தவெகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனையும் மீறி தவெகவினர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட முயன்றுள்ளனர். 

    அப்போது பலரும் கேட் ஏறிகுதித்து மனமகிழ் மன்றம் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு தவெகவினரை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த காவலர் ஒருவரின் கையை தவெக தொண்டர் ஒருவர் கடித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

    ஏற்கனவே தவெக தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுயஒழுக்கம் என்பது மிக அவசியம் என பல அரசியல் கட்சி தலைவர்களும் கூறிவரும் நிலையில், இச்சம்பவம் மீண்டும் அவர்களின் ஒழுக்க கட்டுப்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. 

    ×