என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. 

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9ஆர் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகிறது. ஒன்பிளஸ் 9ஆர்.டி. மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஒன்பிளஸ் 9ஆர்.டி.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 9ஆர்.டி. விலை ரூ. 40 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 44 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ரூ. 42,999 துவக்க விலையில் அறிமுகமானது. சீனாவில் ஒன்பிளஸ் 9ஆர்.டி. விலை இந்திய மதிப்பில் ரூ. 38,400 என துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல் இந்தியாவில் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் புதிய ஐபோன்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விற்பனை பின்னர் துவங்கும் என அறிவித்தது. அதன்படி நேற்று (அக்டோபர் 15) இதன் விற்பனை துவங்கியது.

    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 துவக்க விலை ரூ. 41,900 ஆகும். இந்த வாட்ச் ஐந்து விதமான அலுமினியம் கேஸ் பினிஷ் கொண்டிருக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல் மற்றும் ஸ்போர்ட் பேண்ட் கோல்டு, கிராபைட் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 69,900 ஆகும். 

     ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

    இதுதவிர ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல் மற்றும் மிலனிஸ் லூப் விலை ரூ. 73,900 என்றும் டைட்டானியம் கேஸ் மற்றும் லெதர் கேஸ் விலை ரூ. 83,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் இந்தியா ஸ்டோரில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஹெச்.டி.எப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதன்படி கேஷ்பேக் தொகையை கழித்தால், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ரூ. 38,900 விலையில் கிடைக்கும்.
    நத்திங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


    லண்டனை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமான இரண்டு மாதங்களில் இந்த இயர்பட்ஸ் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் எசென்ஷியல் நிறுவன காப்புரிமைகளை நத்திங் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 

     நத்திங் குவால்காம்

    அதன்படி எசென்ஷியல் காப்புரிமைகளை கொண்டு நத்திங் ஸ்மார்ட்போன் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிகிறது. சில தினங்களுக்கு முன் குவால்காம் நிறுவன சிப்செட்களை தனது புதிய சாதனங்களில் பயன்படுத்த இருப்பதாக நத்திங் அறிவித்தது.

    ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பவர் 1 பெயரில் பவர் பேங்க் ஒன்றை நத்திங் உருவாக்கி வருவதாகவும், வரும் வாரங்களில் இது அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஒப்போ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.


    ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 20 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்தது. முன்னாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளம் ஒன்றில் இடம்பெற்று இருந்தது.

    அதன்படி புதிய ஒப்போ கே9எஸ் மாடலில் 6.59 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஒப்போ கே9எஸ்

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் அல்லது மேக்ரோ லென்ஸ், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 30 வாட் வூக் 4.0 பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பர்பில், நியான் சில்வர் மற்றும் அப்சிடியன் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 
    ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. இந்த இயர்பட்சில் ஏ.என்.சி., 38 மணி நேர பேட்டரி பேக்கப், ப்ளூடூத் 5.2 மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த இயர்பட்சில் அழைப்புகளை மேற்கொள்வது, ஏ.என்.சி. எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்களை இயக்குவதற்கு மூன்று மைக்ரோபோன்கள் உள்ளது. ஏ.என்.சி. மட்டுமின்றி இந்த இயர்பட்ஸ் டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் 94 எம்.எஸ். லோ லேடென்சி மோட் கொண்டிருக்கிறது.

     ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2

    ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 மாடல் 40 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 7 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேஸ் 520 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இது 38 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். 

    சீன சந்தையில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 CNY499 (ரூ. 5840) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் டே வைட் மற்றும் நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இசட் போல்டு 3 மாடலுக்கு போட்டியாக உருவாக்கப்படுகிறது.


    ஒப்போ நிறுவனம் புதிதாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    புதிய ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.8 இன்ச் திரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     ஒப்போ ஸ்மார்ட்போன் கோப்புப்படம்

    இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கலர் ஓ.எஸ். 12 மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒப்போவின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம்.
    வாட்ஸ்அப் செயலியை இரவு நேரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    இந்தியா முழுக்க இரவு நேரம் வாட்ஸ்அப் செயலியை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி இரவு 11.30 மணி முதல் காலை 6.00 மணி வரை முடக்கப்படுவதாக வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த தகவலை மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்யவில்லை எனில், பயனர்களின் அக்கவுண்ட்கள் டி-ஆக்டிவேட் செய்யப்படும். டி-ஆக்டிவேட் ஆன வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ இயக்க மாதம் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தகவலை சரியாக மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்வோருக்கு புதிதாக பாதுகாப்பான அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    வைரல் தகவல் குறித்த இணைய தேடல்களில் மத்திய அரசு இதுபோன்று எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் சார்பிலும் இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் வைரல் தகவலில் உள்ளது போன்று வாட்ஸ்அப் இரவு நேரங்களில் முடக்கப்படாது என்பது உறுதியாகிவிட்டது.
    அசத்தல் அம்சங்கள் நிறைந்த நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ரக்கட் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ஹெச்.எம்.டி. குளபோல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு அக்டோபர் 20 ஆம் தேதி துவங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் கிரானைட் மற்றும் அல்ட்ரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை நோக்கியா எக்ஸ்.ஆர்.20 மாடலில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், அட்ரினோ 619 ஜி.பி.யு. வழங்கப்படுகிறது.

     நோக்கியா எக்ஸ்.ஆர்.20

    இத்துடன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11, 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், வாட்டர் ரெசிஸ்டண்ட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 4630 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் தனது சாதனங்களுக்கு சிறந்த முறையில் உதிரிபாகங்களை பெறுவதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும். எனினும், தற்போது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் குறைபாடு பிரச்சினையில் ஆப்பிள் நிறுவனமும் சிக்கியுள்ளது. சிப்செட் குறைபாடு காரணமாக ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிராட்காம் மற்றும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் போன்ற நிறுவனங்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெறுவதில் ஆப்பிள் நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் 13 சீரிசுக்கு கடும் வரவேற்பு கிடைப்பதை தொடர்ந்து இரு நிறுவனங்களால் ஆப்பிளுக்கு தேவையான உதிரிபாகங்களை வினியோகம் செய்ய முடியவில்லை என தெரிகிறது.

     ஐபோன் 13 ப்ரோ

    செப்டம்பரில் விற்பனைக்கு வந்த ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் தற்போதைய சூழலில், அக்டோபர் மாத இறுதியில் தான் வினியோகம் செய்யப்படும் என்ற நிலையில் உள்ளது. பெரும்பாலான ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் பட்டியலிடப்படவே இல்லை.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.62 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    ரியல்மி ஜிடி நியோ 2

    புதிய ரியல்மி ஜிடி நியோ 2 மாடல் நியோ கிரீன், நியோ புளூ மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 31,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனினும், பண்டிகை கால விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் முறையே ரூ. 24,999 மற்றும் ரூ. 28,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


    சியோமி நிறுவனம் புதிய சிவி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது சியோமியின் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது சியோமியின் எம்.ஐ. 12 சீரிஸ் மாடல்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    புதிய சியோமி எம்.ஐ. 12 மாடல் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட எடை குறைவாக இருக்கும் என்றும் இதன் அம்சங்கள் முன்பை விட மேம்பட்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் கொண்டிருக்கும். இந்த பிராசஸர் கொண்டு வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

     சியோமி ஸ்மார்ட்போன்

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, மிக மெல்லிய பாடி, வளைந்த டிஸ்ப்ளே, அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 50 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த மாதம் சோதனை செய்யப்பட்ட புதிய அம்சம் தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது.


    ட்விட்டரில் பாளோவர்களை பிளாக் செய்யாமல் அவர்களை நீக்கும் புதிய அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வசதி ட்விட்டர் வெப் வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த மாதம் இதே அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த அம்சம் வழங்கும் முன், பிளாக் செய்யப்பட்ட நபர் உங்களின் ப்ரோபைலை பார்க்க முற்பட்டால் நீங்கள் அவரை பிளாக் செய்துள்ளீர்கள் என ட்விட்டர் தெரிவிக்கும். ஆனால் புதிய அம்சம் கொண்டு பாளோவரை நீக்கினால், யார் உங்களின் ட்வீட்களை பார்க்கின்றனர் என்பதை நினைத்து பாதுகாப்பாக உணரலாம்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    புதிய அம்சத்தை ட்விட்டரில் குறிப்பிட்ட நபரின் ப்ரோபைலில் மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்து ரிமூவ் திஸ் பாளோவர் (remove this follower) எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். புதிய அம்சம் கொண்டு ஒருவரை பிளாக் செய்யாமல், அவரிடம் இருந்து ட்விட்டரில் விலகி இருக்க முடியும். 
    ×