என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடல் வைபை மற்றும் எல்டிஇ ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது பட்ஜெட் பிரிவில் க்ரோம் ஒஎஸ் கொண்ட லேப்டாப் ஆகும். இது வைபை மற்றும் எல்டிஇ ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலில் 14 இன்ச் TFT LCD ஸ்கிரீன், இன்டெல் செலரான் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 42.3Wh பேட்டரி மற்றும் 45W யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ

    சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ அம்சங்கள்

    - 14 இன்ச் 1366x768 பிக்சல் HD TFT (16:9) டிஸ்ப்ளே
    - இன்டெல் செலரான் N4500 பிராசஸர்
    - இன்டெல் UHD கிராபிக்ஸ்
    - 4 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி /128 ஜிபி eMMC மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - க்ரோம் ஒஎஸ்
    - 720 பிக்சல் HD கேமரா
    - ஸ்டீரியோ ஸ்பீக்கர்ககள், 3.5mm ஹெட்போன் ஜாக்
    - 4ஜி LTE, வைபை , 2×2 MIMO, ப்ளூடூத் v5.1
    - 2 x யுஎஸ்பி டைப் சி, 1 x யுஎஸ்பி 3.2, நானோ செக்யூரிட்டி ஸ்லாட்
    - 42.3Wh பேட்டரி
    - 45W யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் 

    சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
    போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ப்ரோபேஸ் எஸ்கேப் இயர்போன் டூயல்டோன் நிறங்கள், மிக குறைந்த எடை கொண்டுள்ளது.

    போல்ட் ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் ப்ரோபேஸ் எஸ்கேப் ப்ளூடூத் நெக்பேன்ட் இயர்போனை அறிமுகம் செய்தது. புதிய ப்ரோபேஸ் எஸ்கேப் மாடல் மிக குறைந்த எடை, டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.0, ஆன்-டிவைஸ் கண்ட்ரோல் என பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

     போல்ட் ஆடியோ ப்ரோபேஸ் எஸ்கேப் இயர்போன்

    இத்துடன் IPX5 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, இயர்பட்கள் ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொள்ளாமல் இருக்க காந்த சக்தி, காதுகளில் சவுகரியமாக பொருந்திக் கொள்ளும் வகையிலான டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. மைக்ரோ யுஎஸ்பி மூலம் சார்ஜ் ஆகும் புதிய ப்ரோபேஸ் எஸ்கேப் ஒருமுறை சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

    இந்த நெக்பேண்ட் இயர்போன் முழுமையாக சார்ஜ் ஆக 1.2 மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறது. போல்ட் ஆடியோ ப்ரேபேஸ் எஸ்கேப் வயர்லெஸ் நெக்பேன்ட் இயர்போன் ரெட், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 999 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், லிக்விட் கூலிங் வசதி கொண்டுள்ளது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.55 இன்ச் AMOLED டாட் டிஸ்ப்ளே, HDR10, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய எம்ஐ 11 லைட் மாடல் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் வசதி கொண்டிருக்கிறது.

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சியோமி எம்ஐ 11 லைட்

    சியோமி எம்ஐ 11 லைட் அம்சங்கள்

    - 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
    - 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 4250 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    சியோமி எம்ஐ 11 லைட் மாடல் டஸ்கேனி கோரல், ஜாஸ் புளூ மற்றும் வினைல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடலின் விலையை குறைத்து இருக்கிறது. இந்தியாவில் ரூ. 9,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த எம்ஐ வாட்ச் ரிவால்வ் பின் ரூ. 10,999 விலையில் விற்கப்பட்டது. பின் சலுகை விற்பனையில் ரூ. 8,999 விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.

     சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ்

    தற்போது முதல் முறையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. திடீர் விலை குறைப்பு காரணமாக எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் மாடலும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடலில் மேம்பட்ட GPS, அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், SpO2 மாணிட்டரிங், அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம், FISRTBEAT ஸ்போர்ட் அனாலடிக்ஸ் வசதி, GPS, 5 ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80, 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி எம்32 மாடலில் 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1, நாக்ஸ் செக்யூரிட்டி, சாம்சங் பே மினி, செக்யூர் போல்டர், ஆல்ட் இசட் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     சாம்சங் கேலக்ஸி எம்32

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்ற அம்சங்கள் உள்ளன.

    சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல் பிளாக் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம், சில்லறை விற்பனை மையங்களில் ஜூன் 28 ஆம் தேதி துவங்குகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் செய்தி பிரிவு உருவாக்கிய அறிக்கை புகைப்படங்களாக இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போவுடன் இணைக்கப்பட இருப்பதாக இம்மாத துவக்கத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், இரு நிறுவனங்கள் இணைப்பு எப்படி இருக்கும் என அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டாக ஒன்பிளஸ் மாறும் என கூறப்படுகிறது.



    இதுபற்றிய விவரங்களை ஸ்மார்ட்போன் சந்தை வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். ட்விட்டர் பதிவில் ஒன்பிளஸ் செய்தி பிரிவு அறிக்கையின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி இரு நிறுவனங்கள் இணைப்புக்கு பின் ஒப்போ நிறுவனத்தின் அங்கமாக ஒன்பிளஸ் மாறும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இரு நிறுவனங்கள் இணைந்த பின், அதிக ஊழியர்கள் எண்ணிக்கையுடன் மேலும் சிறப்பான பொருட்களை உருவாக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் தளத்தில் ஏற்பட்டு இருக்கும் புதிய பிழை வைபை பயன்பாட்டில் இடையூறு ஏற்படுத்துகிறது.

    ஐஒஎஸ் தளத்தில் புது பிழை கண்டறியப்பட்டு இருக்கிறது. இது ஐபோன்களின் வைபை வசதியை செயலிழக்க செய்கிறது. இந்த பிழையை ரிவர்ஸ் என்ஜினியர் கால் ஷௌ கண்டறிந்து தெரிவித்தார். 

    புதிய பிழை  SSID %p%s%s%s%s%n எனும் பெயர் கொண்ட வைபையுடன் இணைய முயற்சிக்கும் போது ஏற்படுகிறது. இது உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் லட்சக்கணக்கான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்த வழி வகுக்கிறது. இந்த பிழை தூண்டப்படும் போது ஐபோன் பயனர்களால் வைபை வசதியை ஆன் செய்ய முடியாது. ஐபோனினை ரீ-ஸ்டார்ட் செய்தாலும் இந்த பிழை சரியாகாது.

     ஐஒஎஸ் 14.1

    இந்த பிழை குறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதனை சரி செய்ய ஐபோனின் நெட்வொர்க் செட்டிங்கை ரீசெட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஐபோனில் சேமிக்கப்பட்டு இருந்த வைபை பாஸ்வேர்டுகள் அழிக்கப்பட்டு விடும்.

    ஐபோனில் வைபை நெட்வொர்க் செட்டிங்களை ரீசெட் செய்ய  Settings > General > Reset > Reset Network Settings போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இது குறுகியகால தீர்வு ஆகும். இவ்வாறு செய்யும் போது ஐபோன் பலமுறை பாதிக்கப்படும்.
    சியோமி நிறுவனத்தின் புது எம்ஐ மிக்ஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான எம்ஐ மிக்ஸ் போல்டு கொண்டு தனது எம்ஐ மிக்ஸ் சீரிசை அப்டேட் செய்தது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி எம்ஐ மிக்ஸ் 4 மூலம் இந்த சீரிசை மீண்டும் மேம்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதிய எம்ஐ மிக்ஸ் 4 விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் பிரிவில் அறிமுகமாகிறது. இது சியோமி நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். முந்தைய எம்ஐ மிக்ஸ் மாடல்களை போன்றே இந்த ஸ்மார்ட்போனும் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

     சியோமி எம்ஐ மிக்ஸ் 3

    இத்துடன் இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது இன் டிஸ்ப்ளே கேமராவுடன் வெளியாகும் சியோமியின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த மாடலில் குவாட் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீனுக்கு மாற்றாக புல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்படும்.

    எம்ஐ மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங், 108 எம்பி பிரைமரி கேமரா, எம்ஐ12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 
    கிராப்டான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேம் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் புது மைல்கல் எட்டியது.

    கூகுள் பிளே ஸ்டோர் Early Access கட்டத்திலேயே பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா சுமார் 50 லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை கடந்துள்ளது. இந்திய பயனர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நோட்டிபிகேஷன் வாயிலாக ரிவார்ட் வழங்கி மைல்கல் விவரத்தை கிராப்டான் கொண்டாடியது. 

     பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல்

    ஜூன் 17 ஆம் தேதி சிலருக்கு ஓபன் பீட்டா முறையில் இந்த கேம் வழங்கப்பட்டது. பின் ஜூன் 18 அன்று அனைவரும் டவுன்லோட் செய்ய அனுமதிக்கப்பட்டது. அந்த வகையில் வெளியான சில நாட்களிலேயே இந்த கேம் சுமார் 50 லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை கடந்துள்ளது.

    பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமின் இந்திய வேரியண்ட் ஆகும். டவுன்லோட்களில் புது மைல்கல் எட்டியதை தொடர்ந்து கிராப்டான் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா பிளேயர் ஒவ்வொருத்தருக்கும் கிளாசிக் கிரேட் கூப்பன் வழங்கி இருக்கிறது. புது கேமின் Early Access டவுன்லோட் செய்தவர்களுக்கு கிரேட் கூப்பன், இரண்டு EXP கார்டுகள், 2x BP கார்டு வழங்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ 30 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை குறித்த புது அப்டேட் வெளியாகி உள்ளது.

    ரியல்மி நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் மைக்ரோசைட் ஒன்று ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

     ரியல்மி நார்சோ 30 5ஜி

    முன்னதாக ரியல்மி நார்சோ 30 மாடல் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் 5ஜி வேரியண்ட் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமானது. அந்த வரிசையில் இரு மாடல்களும் தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    ரியல்மி நார்சோ 30 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி  700 5ஜி பிராசஸர், புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 2 எம்பி டெரிடரி சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 
    ஆன்லைனில் நடைபெற்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையின் போது ஐபோன்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
    ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனத்தின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஐபோன்கள் விற்பனை சீனாவில் அதிகரித்து வருகிறது. சீனாவில் நடைபெற்ற 618 விற்பனையின் இறுதி நாள் விற்பனை இதனை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து jd.com வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ரூ. 114 கோடி மதிப்பிலான ஐபோன்கள் அந்நிறுவன வலைதளத்தில் ஒரே நொடியில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நிறுவன மாடல்களும் அதிகளவு விற்பனையானது. எனினும், ஆப்பிள் நிறுவனம் ஒட்டுமொத்த விற்பனையில் முதலிடம் பிடித்து உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம்

    ஹயர், மிடி மற்றும் கிரீ போன்ற நிறுவனங்களும் ரூ. 114 கோடி மதிப்பிலான விற்பனையை பெற்று இருக்கிறது. சீமென்ஸ் மற்றும் சியோமி நிறுவனங்கள் இதே அளவு விற்பனையை மூன்று நிமிடங்களில் பெற்று இருக்கின்றன. வருடாந்திர அடிப்படையில் சாம்சங் நிறுவன விற்பனை 200 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 

    முதல் 15 நிமிடங்கள் விற்பனையில் ரியல்மி மற்றும் ஐகூ வருவாய் வருடாந்திர அடிப்படையில் ஆறு மடங்கு அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் இயர்போன்களின் விற்பனை முதல் பத்தே நிமிடங்களில் 260 சதவீதம் அதிகரித்துள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களை எல்ஜி ஸ்டோர் மூலம் விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து எல்ஜி நிறுவனம் விலகிவிட்டது. தென் கொரியாவில் எல்ஜி நிறுவனம் சுமார் 400-க்கும் அதிக எல்ஜி பெஸ்ட் ஷாப் விற்பனை மையங்களை கொண்டுள்ளது. இங்கு எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகியதால் இந்த விற்பனை மையங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன.

    இந்த நிலையில், விற்பனை மையங்களை பயன்படுத்த எல்ஜி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதன்படி எல்ஜி ஸ்டோர்களில் ஐபோன்கள் விற்பனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் தென் கொரியாவில் மட்டுமே செயல்படுத்தப்பட இருக்கிறது.

     எல்ஜி

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் எள்ஜி பெஸ்ட் ஷாப்கள் இருப்பதால், ஆப்பிள் தனது சில்லறை விற்பனையை இவற்றை கொண்டு அதிகபடுத்த முடியும். ஜூலை மாத இறுதி வரை தென் கொரியாவில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    எல்ஜி ஸ்டோர்களில் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச், ஐபேட் மற்றும் இதர அக்சஸரீக்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    ×