என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.
    • வீடு, அலுவலகம் என எலான் மஸ்க்-க்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    உலகளவில் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருக்கிறார். இவரது பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் மெய்க்காப்பாளர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய எஸ்கார்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவரின் பாதுகாவலர் எலான் மஸ்க் எங்கு சென்றாலும், அவருடன் செல்கின்றனர். "எங்கு சென்றாலும்" என்பதில் கழிவறையும் அடங்கும்.

    இதுகுறித்து டுவிட்டரில் பணியாற்றி வரும் பொறியாளர் ஒருவர் கூறும் போது, எலான் மஸ்க்-ஐ சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் உள்ளனர். டுவிட்டர் அலுவலகத்தில் அவரை சுற்றி எப்போதும் குறைந்தபட்சம் இரண்டு காவலர்கள் உள்ளனர். "அலுவலகத்தில் அவர் எங்கு சென்றாலும், அவருடன் இரண்டு பாதுகாவலர்கள் உடன் செல்கின்றனர்.

     

    பாதுகாவலர்கள் பிரமாண்டமாகவும், ஹாலிவுட் படங்களில் வருவதை போன்று காட்சியளிக்கின்றனர். அவர் கழிவறைக்கு சென்றாலும் இவர்கள் பின்தொடர்கின்றனர்" என தெரிவித்துள்ளார். சான் பிரான்டிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமையகத்தில் மஸ்க்-ஐ சுற்றி பாதுகாவலர்கள் இருப்பதை பார்க்கும் போது, அவருக்கு நிறுவன ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றே தெரிகிறது.

    டுவிட்டர் அலுவலகத்தை சுற்றிலும் ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து உயிரை பணயம் வைக்க எலான் மஸ்க் விரும்பவில்லை என்பதை அவரின் செயல்பாடுகள் காட்டுகின்றன. பெரும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது புதிதான காரியம் இல்லை,மேலும் அவர்கள் எப்போதும் அவர்களுடனேயே செல்வர். ஆனால், எலான் மஸ்க்-க்கு பாதுகாப்பு ஒருமடங்கு அதிகமாகவே வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    • சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
    • புதிய சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சியோமி 13 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 13 ப்ரோ Early Access விற்பனை இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இந்த ஸ்மர்ட்போன் Mi வலைத்தளம், Mi ஹோம் மற்றும் Mi ஸ்டூடியோக்களில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விற்பனை துவங்கிய நிலையில், புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க பலர் ஆர்வம் செலுத்தியதை அடுத்து நல்ல வரவேற்பு கிடைத்ததாக சியோமி தெரிவித்து இருக்கிறது.

    மேலும் தற்போது சியோமி 13 ப்ரோ ஸ்டாக்குகள் அனைத்து விற்றுத் தீர்ந்து விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், நேற்றைய விற்பனையில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற விவரங்களை சியோமி இதுவரை அறிவிக்கவில்லை. சியோமி 13 ப்ரோ மாடலுக்கான அடுத்த விற்பனை மார்ச் 10 ஆம் தேதி துவங்குகிறது.

     

    அடுத்த விற்பனை சியோமி வலைத்தளங்கள் மற்றும் ஸ்டோர்களில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுமா அல்லது மூன்றாம் தரப்பு ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்குமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சியோமி 13 ப்ரோ மாடலுக்கான அடுத்த விற்பனை நடைபெறுகிறது.

    சியோமி 13 ப்ரோ அம்சங்கள்:

    6.73 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ E6 AMOLED, 120Hz டிஸ்ப்ளே டால்பி விஷன்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் அட்ரினோ 740 GPU

    12 ஜிபி ரேம் 256 ஜிபி, 512 ஜிபி

    மெமரி டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

    50MP பிரைமரி கேமரா

    50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்

    50MP டெலிபோட்டோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    4820 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

    விலை விவரங்கள்:

    சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் மாத தவணை பரிவர்த்தனைகளுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு வைத்திருப்போர் ரூ. 8 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். சியோமி 13 ப்ரோ மாடலுக்கு எக்சேன்ஜ் சலுகை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    • வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் புதிய அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் வாடிக்கையாக கொண்டுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தொந்தரவாக இருக்கின்றதா? விரைவில், வாட்ஸ்அப் இந்த தொந்தரவை சரிசெய்யும் வசதியை வழங்க இருக்கிறது. உங்களது வாட்ஸ்அப் காண்டாக்ட்-இல் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் "Silence Unknown Callers" எனும் பெயரில் புதிய அம்சத்தை வழங்க இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தெரியாத அல்லது மொபைலில் சேமிக்காத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யலாம். இதுகுறித்து wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    விரைவில், இது டெஸ்டிங்-கிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த அம்சம் வெளியாகும் பட்சத்தில், பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்து அவற்றை தவிர்க்க முடியும். எனினும், மியூட் செய்த பின்பும் அழைப்பு வந்ததை தெரிவிக்கும் நோட்டிபிகேஷன் இடம்பெற்று இருக்கும். புதிய அம்சம் மூலம் பயனர்கள் Spam அழைப்புகளை தவிர்க்க வாட்ஸ்அப் கால் நோட்டிபிகேஷன் அனைத்தையும் மியூட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

    இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கிரீனை இரண்டாக பிரித்து, ஒன்றில் சாட் விண்டோ மற்றொன்றில் ஸ்டேட்ஸ் பார், கால்ஸ் என இதர வாட்ஸ்அப் அம்சங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம். இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் டேப்லெட் வெர்ஷனில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Photo Courtesy: wabetainfo

    • மோட்டோரோலா நிறுவனம் 2023 ரேசர் ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • புதிய மோட்டோ ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் அதன் முந்தைய மாடலை விட சிறப்பானதாக இருக்கும்.

    2023 மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுவதை லெனோனோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களுடன், சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கும். மோட்டோரோலா இதுபோன்ற மாடலை உருவாக்கி வருவதாக ஏற்கனவே பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

    அந்த வரிசையில் தற்போது இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி இருக்கிறது. இதுதுவிர புதிய மாடல் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற விவரங்களும் வெளியாகி உள்ளது. 2023 மோட்டோரோலா ரேசர் அம்சங்கள், டிசைன், வெளியீட்டு விவரம் பற்றி லெனோவோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை விட சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

     

    மற்ற சிறப்பம்சங்களை விட புதிய மாடலின் ஹின்ஜ் மற்றும் மடிக்கக்கூடிய டிசைனில் அதிகளவு மேம்படுத்தல்கள் இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால், 2022 மோட்டோரோலா ரேசர் மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம் தான் எனலாம். மேலும் 2023 ரேசர் மாடல் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலை விட சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய மாடலில் மற்றொரு முக்கிய அப்கிரேடு அதன் கவர் ஸ்கிரீன். 2023 ரேசர் மாடலில் 2.7 இன்ச் AMOLED பேனல் கொண்ட கவர் ஸ்கிரீன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. ரேசர் மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையிலும், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் முன்னணியில் உள்ளது.

    • ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளின் எல்டிஇ வேகம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
    • மீடியா டவுன்லோட் வேகம் 13.87Mbps-இல் இருந்து 29.85Mbps ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் மீடியன் மொபைல் டவுன்லோட் வேகம் 115 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவைகள் வெளியீட்டை தொடர்ந்து மொபைல் டவுன்லோட் வேகம் திடீரென அதிகரிக்க துவங்கி இருக்கிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13.87Mbps ஆக இருந்த மொபைல் டவுன்லோட் வேகம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29.85Mbps ஆக அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் பற்றிய தகவல்களை ஊக்லா ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் நெட்வொர்க் இண்டெலிஜன்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி பற்றி அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

    இதன் காரணமாக சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியா 49 இடங்கள் முன்னேறி தற்போது 69 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 118 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 69 ஆவது இடத்திற்கு முன்னேரி இருக்கிறது. சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியாவின் வளர்ச்சி சில ஜி20 நாடுகளான மெக்சிகோ, ரஷ்யா மற்றும் அர்ஜெண்டினாவை விட அதிகரித்து இருக்கிறது.

     

    ஆய்வு அறிக்கையின் படி 5ஜி சேவை வெளியீட்டை தொடர்ந்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் எல்டிஇ வேகம் வளர்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இரு நிறுவனங்கள் புதிய நெட்வொர்க் கட்டமைப்புக்கு மேற்கொண்டு இருக்கும் முதலீடுகள் தற்போது பலன் அளிக்க துவங்கி இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி முதன் முதலில் வெளியிடப்படும் போது, 5ஜி நெட்வொர்க் திறன் பற்றி பயனர்களுக்கு முரணான கருத்துக்கள் இருந்து வந்தது. மீடியன் 5ஜி டவுன்லோடே வேகங்கள் குஜராத்தில் 512.57Mbps ஆகவும், மேற்கு உத்திரபிரேதச மாநிலத்தில் 19.23Mbps ஆக இருந்தது. தற்போது. ஒன்பது டெலிகாம் வட்டாரங்கள்: ஆந்திர பிரதேசம், கொல்கத்தா, வடகிழக்கு, ஹரியானா, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், கேரளா மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு பகுதிகளில் டெஸ்டிங் காரணமாக மீடியன் 5ஜி டவுன்லோட் வேகம் 100Mbps-க்கும் குறைவாகவே இருந்து வந்தது.

    நான்கு மாதங்களுக்கு பின், 5ஜி மீடியன் டவுன்லோட் வேகம் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அதிகரித்து இருக்கிறது. தற்போது ஜம்மு காஷ்மீர் தவிர இதர பகுதிகலில் 200Mbps வேகம் சீராக கிடைக்கிறது. கொல்கத்தாவில் 500Mbps வரையிலான டேட்டா வேகம் கிடைக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்களில் ஐஒஎஸ் 16-ஐ வெளியிட்டு வருகிறது.
    • ஐபோன் பயனர்கள் மத்தியில் Live Wallpaper அம்சம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

    ஐஒஎஸ் 16 லாக் ஸ்கிரீனில் அனிமேட் செய்யப்பட்ட லைவ் வால்பேப்பர்களை (Live Wallpaper) வைத்துக் கொள்ளும் வசதி நீக்கப்பட்டு விட்டது அனைவரும் அறிந்ததே. ஐபோன் பயனர்கள் மத்தியில் லைவ் வால்பேப்பர் அம்சம் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. எனினும், ஐஒஎஸ் 16-இல் இது நீக்கப்பட்டு விட்டது. திடீரென எதற்காக லைவ் வால்பேப்பர் அம்சம் நீக்கப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த கேள்விக்கு யூடியூபர் கிரெக் யாட் பதில் அளித்து இருக்கிறார். அதில் லாக் ஸ்கிரீனில் வால்பேப்பரை கொண்டு செல்வதற்கான ஜெஸ்ட்யூர் சார்ந்தது என அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதுபற்றி தகவல்களை அவர் வழங்கி இருக்கிறார்.

     

    ஆப்பிள் நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐஒஎஸ் 11-இல் முதல் முறையாக லைவ் வால்பேப்பர் அம்சத்தை கொண்டு வந்தது. தற்போது ஐஒஎஸ் 16-இல் அதனை நீக்கி இருக்கிறது. இதில் லைவ் வால்பேப்பர் உடன் டைனமிக் வால்பேப்பர்களும் இடம்பெற்று இருந்தது.

    பயனர்கள் டிஸ்ப்ளேவை அழுத்திப் பிடித்து லைவ் வால்பேப்பரை பார்க்க வேண்டிய நிலை இருந்து வந்தது. எனினும், ஆப்பிள் கஸ்டமைஸ் செய்யக்கூடிய லாக் ஸ்கிரீனை வழங்க முடிவு செய்த போது இது பிரச்சினையாக உருவானது. ஏற்கனவே இதே போன்ற அம்சம் ஆப்பிள் வாட்ச்-இல் வழங்கப்பட்டு இருந்தது. இதிலும் அழுத்திப் பிடித்தால் தான் லைவ் வால்பேப்பர் ஆக்டிவேட் ஆகும்.

    ஐபோனில் கஸ்டம் லாக் ஸ்கிரீனை ஆக்டிவேட் செய்யவோ அல்லது முழுமையாக நீக்கவோ ஆப்பிள் புதிய ஜெஸ்ட்யூர் ஒன்றை சேர்க்க வேண்டும். இதன் மூலம் அழுத்தி பிடிக்கும் போது லாக் ஸ்கிரீன் இண்டர்ஃபேஸ் செயல்படுத்தப்படும். பல்வேறு அம்சங்களிடையே ஆப்பிள் நிறுவனம் சீராக இயங்குவதற்கு மதிப்பு கொடுக்கும். அந்த வகையில், லைவ் வால்பேப்பர் அம்சத்தை அழிக்கும் முன் இந்த அனுபவத்தை ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வழங்கியது.

    ஆப்பிள் மேற்கொண்ட ஆய்வில், பலர் லைவ் அல்லது டைனமிக் வால்பேப்பர் அம்சங்களை கடந்த சில ஆண்டுகளாகவே பயனர்கள் பயன்படுத்தவில்லை என யூடியூபர் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக இந்த அம்சம் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. 

    • நத்திங் நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • இந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது.

    நத்திங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நத்திங் போன் (1) மாடலை விட பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும் என அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் நத்திங் போன் (2) மாடல் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. நத்திங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நத்திங் போன் (1) மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வழங்கப்பட்டது.

     

    நத்திங் போன் (2) மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1, ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 பிராசஸர் அல்லது முற்றிலும் புதிய 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், 8 சீரிஸ் பிராசஸர் என்பதால் நத்திங் போன் (2) மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    நத்திங் போன் (2) எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    நத்திங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், சமீபத்தில் இணையத்தில் லீக் ஆன தகவல்களில் நத்திங் போன் A065 மாடல் நம்பர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120Hz AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    புதிய நத்திங் போன் (2) மாடல் இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து இந்த ஆண்டில் இருந்து அமெரிக்க சந்தையில் கவனம் செலுத்த நத்திங் திட்டமிட்டுள்ளதாக கார்ல் பெய் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக மாற்றியமைத்து இருக்கிறது.
    • இந்திய சந்தையில் 4ஜி சேவையை வெளியிடும் பணிகளில் பிஎஸ்என்எல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் பிஎஸ்என்எல் தனது சலுகை பலன்களை மாற்றியமைத்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 71, ரூ. 104, ரூ. 135 மற்றும் ரூ. 395 விலை சலுகைகளை நீக்கி இருக்கிறது. அதிக பிரபலமாக இல்லாதது மற்றும் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தால் நான்கு சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன.

    நீக்கப்பட்ட சலுகைகளுக்கு மாற்றாக புதிய திட்டங்களை விரைவில் பிஎஸ்என்எல் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி சேவையை இந்த ஆண்டும், 5ஜி சேவையை அடுத்த ஆண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. புதிய நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படும் போது இவ்வாறு செய்வது சிறப்பானதாக இருக்கும்.

     

    பிஎஸ்என்எல் ரூ. 269 மற்றும் ரூ. 768 சலுகை விவரங்கள்:

    பிஎஸ்என்எல் புதிய ரூ. 269 மற்றும் ரூ. 769 சலுகைகள் ஃபெஸ்டிவல் தமாகா ஆஃபரின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பிஎஸ்என்எல் ரூ. 269 சலுகையில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் டியூன்ஸ், சிங் ஆப் சந்தா, இரோஸ் நௌ சந்தா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.

    பிஎஸ்என்எல் ரூ. 769 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, பிஎஸ்என்எல் டியூன்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ், லாக்துன் செயலிக்கான சந்தா, சிங் ஆப் சந்தா, இரோஸ் நௌ சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த சலகையின் வேலிடிட்டு 90 நாட்கள் ஆகும்.

    • டுவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எலான் மஸ்க் மேற்கொண்டுள்ளார்.
    • இந்த முறை டுவிட்டர் ஊழியர்களில் பத்து சதவீதம் பேர் வேலையை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டுவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியதில் இருந்து எலான் மஸ்க் நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் பலமுறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எலான் மஸ்க் தலைமை பொறுப்பை ஏற்கும் முன் டுவிட்டர் நிறுவனத்தில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வந்தனர்.

    எனினும், எலான் மஸ்க் பதவியேற்றதும், ஊழியர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை எலான் மஸ்க் பத்து சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறார். இந்த நடவடிக்கையில் சுமார் 200 பேர் பணியை இழந்துள்ளனர்.

     

    இது குறித்து நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், டுவிட்டர் நிறுவனம் பிராடக்ட் மேலாளர்கள், டேட்டா ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கை வார இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைனில் டுவிட்டரின் பல்வேறு அம்சங்களை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மானிடைசேஷன் உள்கட்டமைப்பு குழுவில் பணியாற்றி வந்து 30 ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது 8 ஆக குறைந்துள்ளது. எலான் மஸ்க்-இன் டுவிட்டர் 2.0 திட்டத்தில் பணியாற்றி வந்தவர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஆன்லைன் வலைத்தளங்களில் பிக்சல் 7 ப்ரோ வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த கேமரா மற்றும் டாப் எண்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களின் விலை பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

    தற்போது பிக்சல் 7 ப்ரோ மாடலுக்கு ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும்.

    ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 7 ப்ரோ 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி, எக்சேன்ஜ் மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ. 84 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படும் பிக்சல் 7 ப்ரோ மாடலுக்கு 4 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடியை தொடர்ந்து பிக்சல் 7 ப்ரோ விலை ரூ. 81 ஆயிரத்து 199 என மாறி இருக்கிறது.

     

    தள்ளுபடி மட்டுமின்றி பிக்சல் 7 ப்ரோ வாங்குவோருக்கு எக்சேன்ஜ் சலுகை மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போனினை எக்சேன்ஜ் செய்ய வேண்டும்.

    பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். அதன்படி பிக்சல் 7 ப்ரோ விலை ரூ. 59 ஆயிரத்து 199 என மாறி விடும். இத்துடன் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    அமேசான் தளத்தில் பிக்சல் 7 ப்ரோ 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 420 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான் தளத்தில் பிக்சல் 7 ப்ரோ வாங்குவோருக்கு எக்சேன்ஜ் சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக வங்கி சலுகை மட்டும் வழங்கப்படுகிறது.

    பிக்சல் 7 ப்ரோ அப்சிடியன் நிற வேரியண்ட் விலை ரூ. 71 ஆயிரத்து 420 என்றும் ஹசெல் நிற வேரியண்ட் ரூ. 73 ஆயிரத்து 080 என்றும் ஸ்னோ நிற வேரியண்ட் விலை ரூ. 73 ஆயிரத்து 250 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • நெட்ஃப்ளிக்ஸ் ஸ்டிரீமிங் தளத்தின் சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • விலை மாற்றம் மட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் புதிய சந்தா தொகுப்புகளை அறிவித்து இருக்கிறது.

    உலகளவில் முன்னணி ஒடிடி தளமாக இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தனது விலையை 50 சதவீதம் வரை குறைத்து விட்டது. உலகின் சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு வட அமெரிக்காவில் சந்தா விலையை உயர்த்திய நிலையில், தற்போது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கிற்கு பிந்தைய மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்கும் விதம் மாறி இருக்கிறது. இதற்கு ஏற்ப வருவாய் மற்றும் சந்தாதாரர் வளர்ச்சியை நெட்ஃப்ளிக்ஸ் அதிகப்படுத்த பல்வேறு வழிகளை பரிசோதனை செய்து வருகிறது.

    தற்போதைய விலை குறைப்பு மத்திய கிழக்கு, துணை சகாரா ஆப்ரிக்க பகுதிகள், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் அமலுக்கு வந்துள்ளது. விலை குறைப்பு மட்டுமின்றி 12 நாடுகளில் குறைந்த விலை சந்தா திட்டங்களை நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் டிஸ்னி பிளஸ், ஹூலூ மற்றும் ஸ்லிங் டிவி உள்ளிட்டவை தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்திய நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தற்போது விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களின் லாக்-இன் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோருக்கு புதிய மாதாந்திர கட்டணத்தை அறிவித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் IP முகவரிகள், டிவைஸ் ஐடி மற்றும் அக்கவுண்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்டவைகளை டிராக் செய்து கடவுச்சொல் பகிரப்படுவதை தடுக்க முயற்சித்து வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் விதிகளின் படி ஒரே கடவுச்சொல்லை பலர் பயன்படுத்தும் வசதியை அந்நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்தது.

    புதிய கட்டண முறை லத்தீன் அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வந்ததை அடுத்து கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. புதிய கட்டணம் கனடா மற்றும் நியூசிலாந்தில் 8 டாலர்கள், போர்ச்சுகலில் 4 டாலர்கள், ஸ்பெயினில் 6 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கட்டணங்கள் அமெரிக்காவில் இந்த ஆண்டே அமலுக்கு வர இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
    • ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு தற்போது அதிரடி சலுகை மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஜியோமார்ட் வலைத்தளத்தில் மொபைல்ஸ் அண்ட் எலெக்டிரானிக்ஸ் ஃபெஸ்ட் சேல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று துவங்கிய இந்த சிறப்பு விற்பனை பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விற்பனை திருவிழாவில் முன்னணி சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இவைதவிர வங்கிகளுடன் கூட்டணி அமைத்து அதிபட்சம் பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் பேங்க் ஆஃப் பரோடா, ஃபெடரல் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் பயன்பெற முடியும். இந்த விற்பனையில் குறிப்பிடத்தக்க சலுகை ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த விற்பனையில் ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஜியோமார்ட் வலைத்தளத்தில் ஐபோன் 14 பிளஸ் ரூ. 78 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது.

    ஐபோன் 14 பிளஸ் 256 ஜிபி விலை ரூ. 88 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 99 ஆயிரத்து 990 ஆகும். ஐபோன் 13 (128 ஜிபி) மாடலுக்கு 12 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தற்போது ரூ. 61 ஆயிரத்து 490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போன்று ஐமேக்புக் ஏர் M1 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 99 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 81 ஆயிரத்து 490 என மாறி இருக்கிறது. புதிய மேக்புக் ஏர் M2 சிப்செட் கொண்ட வேரியண்ட் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.

    ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ முதல் தலைமுறை மாடலுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இதன் விலை தற்போது ரூ. 19 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது.

    ×