என் மலர்
தொழில்நுட்பம்
போட் நிறுவனம் இந்திய சந்தையில் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் மாடலை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.
ஸ்மார்ட்போன் அக்சஸரீ மற்றும் ஆடியோ சாதனங்களை விற்பனை செய்து பிரபலமான போட் நிறுவனம் இந்திய சந்தையில் பிளாஷ் எனும் பெயரில் புது ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் வாட்ச் வட்ட வடிவ எல்சிடி கலர் டிஸ்ப்ளே, மெல்லிய மெட்டாலிக் டிஸ்ப்ளே, டூயல் டோன் சிலிகான் ஸ்டிராப்களை கொண்டுள்ளது.

இதில் உள்ள சென்சார்கள் பிட்னஸ் டிராக்கிங் மற்றும் இதர பணிகளை மேற்கொள்கிறது. IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் பல்வேறு சென்சார்களை கொண்டிருக்கிறது. மேலும் இதில் 10 ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதி, நோட்டிபிகேஷன் மற்றும் 200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்களுக்கு தேவையான ஸ்டான்ட்பை வழங்குகிறது.
புதிய போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ மற்றும் விவிட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 ஆகும். விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அந்த தேதியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ இந்தியா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில், போக்கோவை போக்கோ மட்டும்தான் வெல்ல முடியும் எனும் தகவலை #PROformance எனும் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டு இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அந்த வகையில் புதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்ஸ் சீரிசுக்கு மாற்றாக இருக்கும் என போக்கோ தெரிவித்து உள்ளது. தற்போதைய தகவல்களின் படி போக்கோ எக்ஸ்3 ப்ரோ இந்திய சந்தையில் புது போக்கோ எப் சீரிஸ் மாடலாக அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக M2012K11AG எனும் மாடல் நம்பர் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியானது. அதில் புது ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் FHD+ 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 5200 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய சந்தையில் இந்த மாடல் விலை 250 யூரோக்கள் ஆகும். இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
டிசிஎல் நிறுவனம் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்ட புது டிவி சீரிஸ் மாடல்களை குறைந்த விலையில் வெளியிட்டு உள்ளது.
டிசிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் பி725 4கே ஹெச்டிஆர் டிவி சீரிசை அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் ஆண்ட்ராய்டு டிவி 11 கொண்ட முதல் டிவி சீரிஸ் ஆகும். 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என நான்கு வித அளவுகளில் இந்த சீரிஸ் கிடைக்கிறது.
புதிய டிசிஎல் பி725 சீரிஸ் மாடல் ஸ்டாக் ஆண்ட்ராய்டு டிவி இன்டர்பேஸ் மற்றும் டிசிஎல் நிறுவனத்தின் கஸ்டம் லான்ச்சர் என இரு மென்பொருள்களில் இயங்குகிறது. இந்த டிவி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிக கேம்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது.

மேலும் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஸ்டிரீமிங் சேவைகள், பில்ட்-இன் குரோம்காஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஹெச்டிஆர், டால்பி விஷன், டால்பி அட்மோஸ் ஆடியோ, MEMC தொழில்நுட்பம், வீடியோ கால் கேமரா, கூகுள் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. இத்துடன் பல்வேறு ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது.
டிசிஎல் பி725 சீரிஸ் 43 இன்ச் மாடல் விலை ரூ. 41,990, 50 இன்ச் மாடல் விலை ரூ. 56,990, 55 இன்ச் மாடல் விலை ரூ. 62,990 என்றும் 65 இன்ச் மாடல் விலை ரூ. 89,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனம் இரண்டு புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் மார்ச் 17 ஆம் தேதி கேலக்ஸி ஆசம் அன்பேக்டு 2021 நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த விழாவில் கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
இரு ஸ்மார்ட்போன்களும் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி ஏ72 மாடலில் 6.7 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 5ஜி வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கலாம்.
கேலக்ஸி ஏ52 மாடலில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 5ஜி வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை மெல்ல இந்தியாவுக்கு மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 உற்பத்தி இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன் 12 சீரிசில் - ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஐபோன் 12 உற்பத்தி தமிழ் நாட்டில் இயங்கி வரும் பாக்ஸ்கான் ஆலையில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு ஆலைகளில் இருந்து 10 சதவீத உற்பத்தியை இந்தியாவுக்கு கொண்டுவர ஆப்பிள் முடிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன் 12 உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என தெரிகிறது. தற்சமயம் இதே ஆலையில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 8 சீரிஸ் மாடல்கள் இந்த தேதியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மார்ச் 25 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ரியல்மி 8 சீரிசில் ரியல்மி 8 4ஜி, ரியல்மி 8 ப்ரோ 4ஜி மற்றும் ரியல்மி 8 ப்ரோ 5ஜி உள்ளிட்ட மாடல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி, 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மி 8 ப்ரோ 5ஜி மாடலில் சாம்சங் நிறுவனத்தின் 108 எம்பி HM221/1.52 பிரைமரி கேமரா கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிரைமரி கேமரா மட்டுமின்றி மூன்று இதர சென்சார்கள் வழங்கப்படுகிறது. ரியல்மி 8 ப்ரோ கேமரா, 3எக்ஸ் மோட் கொண்ட சூப்பர் ஜூம் வசதி கொண்டுள்ளது.

இதன் விசேஷ அம்சம் புகைப்படங்களை 12 எம்பி தரத்தில் மிக தெளிவாக கொடுக்கும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது. 12 எம்பி தரத்தில் எடுக்கப்படும் போது புகைப்படம் வழக்கத்தை விட அதிக சிறப்பானதாக இருக்கும் என்றும் ரியல்மி தெரிவித்து உள்ளது.
ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று தலைசிறந்த பில்ட்டர்கள், நியோன் போர்டிரெயிட், டைனமிக் பொக்கே போர்டிரெயிட் மற்றும் ஏஐ கலர் போர்டிரெயிட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மோட்டோ ஜி10 பவர் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4ஜிபி ரேம், 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அரோரா கிரே மற்றும் பிரீஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,999 ஆகும்.

மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி சென்சாருடன் குவாட் கேமரா, 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டார்க் பியல் மற்றும் பேஸ்டல் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஒப்போ எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
ஒப்போ நிறுவனம் எப்19 மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளன.
புதிய எப்19 ப்ரோ மாடலில் மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் கொண்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர்ஒஎஸ் 11.1 வழங்கப்பட்டு இருக்கின்றன.

இரு மாடல்களிலும் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் ப்ரோ பிளஸ் மாடலில் போர்டிரெயிட் வீடியோ மற்றும் அல்ட்ரா நைட் வீடியோ அல்காரிதம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 4310 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 50 வாட் பிளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலுடன் 65 வாட் சார்ஜரும், எப்19 ப்ரோ மாடலுடன் 30 வாட் வூக் பிளாஷ் சார்ஜரும் வழங்கப்படுகின்றன.
ஒப்போ எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்கள் புளூயிட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் சில்வர் நிறங்களில் கிடைக்கின்றன. ஒப்போ எப்19 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,490 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 23,490 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ் மாடலின் விலை ரூ. 25,990 ஆகும்.
ரியல்மி நிறுவனம் தனது நார்சோ ஸ்மார்ட்போனிற்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியிட துவங்கி இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 20 ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ரியல்மி யுஐ 2.0 ஓபன் பீட்டா அப்டேட் வெளியிட்டது. முன்னதாக ரியல்மி எக்ஸ்50 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி யுஐ 2.0 அப்டேட் வெளியிட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யுஐ 2.0 சிஸ்டம் குளோனர், குவிக் ரிட்டன் பபிள், மேம்பட்ட டார்க் மோட், புதிய ஆப் டிராயர், மூன்றாம் தரப்பு ஐகான் வசதி, புது வடிவமைப்பு கொண்ட நோட்டிபிகேஷன் பேனல், மேம்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, மேம்பட்ட கேம் ஸ்பேஸ் என பல்வேறு புது அம்சங்களை வழங்குகிறது.
புதிய அப்டேட் படிப்படியாக வழங்கப்படுகிறது. இதனால் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்க மேலும் சில நாட்கள் ஆகும். நார்சோ 20 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ரியல்மி 7 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவை சேர்ந்த ஆளுமை மிக்க பெண் தலைவர்களாக விளங்குவோர் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
உலகின் மற்ற நாடுகளை போன்றே இந்தியாவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஆண்களின் ஆதிக்கம் ஓங்கி ஒலிக்கிறது. கடந்த காலங்களில், பல்வேறு துறைகளில் பெண்கள் கால்பதிக்க துவங்கிவிட்டனர். சமீபத்தில் பலதுறைகளில் சாதனை புரிவதை பெண்கள் வாடிக்கையான நிகழ்வாக மாற்றி வருகின்றனர்.
இதுபோன்ற சூழலுக்கு பலர் வித்திட்டுள்ளனர். அவ்வாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய பெண்கள் ஆளுமைகளாக மாறி இஸ்ரோ மற்றும் இதர முன்னணி நிறுவனங்களில் பெரும் பதவிகளில் இருந்தபடி சத்தமின்றி பெரும் சாதனைகளை புரிந்து இருக்கின்றனர்.
டெஸ்ஸி தாமஸ்:
இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண் எனும் பெருமைக்குரியவர் டெஸ்ஸி தாமஸ். இவர் இந்தியாவில் ஏவுகணை திட்டம் ஒன்றின் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்மணி ஆவார். இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் அக்னி 4 ஏவுகணையின் திட்ட இயக்குனராக இருந்தார். இதுதவிர அக்னி ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பங்களை இவர் வடிவமைத்து இருக்கிறார்.

முத்தையா வனிதா:
இஸ்ரோவில் விண் கோள்களுக்கிடையிலான திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்ற முதல் பெண் முத்தையா வனிதா. சென்னையை சேர்ந்த இவர் சந்திராயன் 2 திட்டத்தின் இயக்குனர் ஆவார். மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இவர் இஸ்ரோவில் பணியாற்றி இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு இவர் சிறந்த பெண் ஆராய்ச்சியாளர் விருதை வென்றார்.
ரித்து கரிதால்:
சந்திராயன் 2 திட்டத்தில் பணியாற்றிய ரித்து கரிதால் விண்வெளியில் செயற்கைக்கோள் சீராக இயங்க செய்யம் பணிகளில் ஈடுபட்டார். 2007 ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த ரித்து கரிதால் இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார். இதுமட்டுமின்றி இஸ்ரோவின் மங்கல்யான் திட்டத்திலும் பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டு இஸ்ரோவின் இளம் ஆராய்ச்சியாளர் விருதை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

ககன்தீப் காங்:
இந்திய தொற்றுநோய் மருத்துவத்துறையின் மூத்த விஞ்ஞானியாக விளங்கியவர் தான் ககன்தீப் காங். பெலோ ஆப் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய பெண்மணி ககன்தீப் காங். இந்திய மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளில் இவர் ஒருவர் ஆவார். இவர் மத்திய அறிவில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரிதொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் Translational Health Sciences and Technology Institute (THSTI) அமைப்பின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
மங்களா மணி:
அண்டார்ட்டிக்காவில் 403 நாட்கள் செலவழித்த முதல் இந்திய பெண் ஆராய்ச்சியாளர் மங்களா மணி. இந்த பணிக்கு தேர்வாகும் முன் இதுபோன்ற பனிச்சூழலுக்கு இவர் பரிச்சயமற்றவர் ஆவார். அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி மையத்திற்கு பயணம் மேற்கொள்ள 2016-ம் ஆண்டு தேர்வான 23 பேர் அடங்கிய குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியா உள்பட பல்வேறு இதர நாடுகளில் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஒன்பிளஸ் 9 சீரிஸ் வெளியீடு மட்டுமின்றி, முன்னணி கேமரா உற்பத்தியாளரான ஹேசில்பிளாடு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
அதன்படி ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் ஹேசில்பிளாடு கேமராக்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் வடிவமைப்பு முந்தைய ரென்டர்களில் வெளியான தகவல்களில் இருந்ததை போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் சில்வர் நிற பேக் பேனலில் செவ்வக கேமரா மாட்யூல் மற்றும் ஹேசில்பிளாடு பிராண்டிங் கொண்டிருக்கலாம்.

`தலைசிறந்த ஹார்டுவேர், சிறப்பான கேமரா மற்றும் புகைப்பட துறையில் ஹேசில்பிளாடு பிராண்டின் நிபுணத்துவம் கொண்டு ஒன்பிளஸ் 9 சீரிஸ் இதுவரை வெளியானதில் பிரீமியம், பிளாக்ஷிப் கேமரா கொண்டிருக்கும்' என ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்து இருக்கிறார்.
பெண்களுக்கு பாதுகாப்பான, மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் புதிய சமூக வலைதளம் பிரத்யேகமாக துவங்கப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் பவுன்டேஷன் தலைவர் நீட்டா முகேஷ் அம்பானி பெண்களுக்கென பிரத்யேகமாக Her Circle எனும் சமூக வலைதளத்தை வெளியிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய வலைதளம் துவங்கப்பட்டு இருக்கிறது. இது பெண்களுக்கு அதிகாரம், மகிழ்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கில் துவங்கப்பட்டு இருக்கிறது.
முதற்கட்டமாக இந்த தளம் இந்திய பயனர்களை குறிவைத்து துவங்கப்பட்டு உள்ளது. எனினும், இதனை பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தலாம் என ரிலையன்ஸ் பவுன்டேஷன் தெரிவித்து உள்ளது. புதிய Her Circle வலைதளம் அனைத்து வகையான பின்னணியில் இருந்துவரும் பெண்களுக்கு அவர்களின் கனவு, லட்சியம் மற்றும் சிக்கல் நிறைந்த சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

இது வலைதளம், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஜியோ ஆப் ஸ்டோர்களில் செயலி வடிவிலும் கிடைக்கிறது. தற்போது இந்த சேவை ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கவில்லை. இந்த தளம் மூலம் உருவாக்கப்படும் தரவுகள் அனைத்தையும் அனைவரும் பார்க்க முடியும். எனினும், இந்த தளத்தின் சமூக வலைதள பிரிவு பெண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
புதிய Her Circle தளத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு இதர தரவுகள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஆரோக்கியம், வர்த்தகம், பணி, சமூக சேவை, அழகு, பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு பிரிவுகளில் கிடைக்கின்றன. இதில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களும் பங்கேற்க முடியும்.






