search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது.
    • ஒப்போ ரெனோ 11 சீரிஸ் மாடல்களும் அறிமுகம்.

    ஒப்போ நிறுவனத்தின் புதிய பேட் ஏர் 2 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இந்த மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஒப்போ பேட் ஏர் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய டேப்லெட் வெளியீட்டை ஒட்டி, இதன் சிறப்பம்சங்கள் மற்றும் டிசைன் சார்ந்த விவரங்கள் டீசர்களாக வெளியாகி உள்ளன.

    டீசர்களின் படி இந்த டேப்லெட் தடிமனான டிஸ்ப்ளே, வளைந்த கார்னர்கள் மற்றும் இருவித நிறங்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் டிசைனை பார்க்க ஒப்போ பேட் ஏர் மற்றும் ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது. நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒப்போ பேட் ஏர் 2 மாடலுடன் ஒப்போ ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய ஒப்போ பேட் ஏர் 2 டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய ஒப்போ பேட் ஏர் 2 விலை CNY1000 இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 500 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் 11.35 இன்ச் 2.4K 1720x2408 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி, 8MP பிரைமரி கேமரா, EIS, 8MP செல்ஃபி கேமரா, 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    நுபியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ரெட் மேஜிக் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான அதிகாரப்பூர்வ ரெண்டர்களை நுபியா வெளியிட்டு உள்ளது.

    புதிய ரெட் மேஜிக் 9 சீரிஸ் மாடல்கள் நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. தற்போதைய ரெண்டர்களின் படி ரெட் மேஜிக் 9 ப்ரோ மாடல் டுயெடெரியம் டிரான்ஸ்பேரண்ட் சில்வர் விங்ஸ், டுயெடெரியம் டிரான்ஸ்பேரண்ட் டார்க் நைட் மற்றும் டார்க் நைட் வேரியண்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    பெயருக்கு ஏற்றார்போல் இந்த ஸ்மார்ட்போனின் டிரான்ஸ்பேரண்ட் நிற ஆப்ஷன்களில் போனின் பாகங்கள் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்களின் படி இதன் பின்புற பேக் பேனலில் கேமரா பம்ப் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் ஃபுல் ஸ்கிரீன் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த மாடலில் அன்டர் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ரெட் மேஜிக் 9 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது.

    • வழிமுறையை மாற்றுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • பன்ச் ஹோல் ரக டிசைனை ஆப்பிள் பரிசோதனை செய்து வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 15 சீரிஸ் வரை தனது டிஸ்ப்ளேக்களில் நாட்ச் ரக டிசைனை வழங்குவதில் மிகவும் கவனமாக இருந்துள்ளது. எனினும், ஏற்கனவே உள்ள டிசைனில் மென்பொருள் மாற்றங்களை செய்து 'டைனமிக் ஐலேண்ட்' எனும் அம்சத்தினை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் ஸ்கிரீனில் அதிக இடவசதியை வழங்கியதோடு, சிறப்பான அனுபவத்தை வழங்கியது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 16 ப்ரோ மாடலில் தற்போதைய வழிமுறையை மாற்றுவது குறித்து ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோ மாடலில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே வழங்க ஆப்பிள் திட்டமிடுவதாக தெரிகிறது.

    டிப்ஸ்டரான மஜின் பு வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 ப்ரோ மாடலின் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறார். பன்ச் ஹோல் ரக டிசைனை ஆப்பிள் பரிசோதனை செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    அந்த வகையில், இந்த டிசைன் கொண்ட மாடல் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் தற்போதைய ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் இருப்பதை விட அளவில் பெரிய டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இவற்றில் பெரும்பாலானவை உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. அடுத்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம்- ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்யலாம்.

    • இந்திய சந்தையில் இத்தகைய வசதி கொண்ட முதல் ஸ்மார்ட் ரிங் இது ஆகும்.
    • புதிய ஸ்மார்ட் ரிங் ப்ளூடூத் தொழில்நுட்பம் இன்றி செயல்படுகிறது.

    போட் மற்றும் நாய்ஸ் பிரான்டுகளை தொடர்ந்து செவன் எனும் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் ரிங் கான்டாக்ட்லெஸ் பேமன்ட் செய்யும் வசதியை வழங்குகிறது.

    செவன் நிறுவனத்தின் புதிய 7 ரிங்-ஐ மெல்ல தட்டினாலே பேமண்ட் செய்ய முடியும். இந்த ஸ்மார்ட் ரிங் அதிநவீன என்.எஃப்.சி. (NFC) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் இதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில், இந்த ஸ்மார்ட் ரிங் ஏழுவித அளவுகளில் கிடைக்கிறது.

    ஸ்மார்ட் ரிங் சார்ந்த அம்சங்களை இயக்குவதற்காக பிரத்யேக செயலி (ஆப்) ஒன்றும் வழங்கப்படுகிறது. இது பரிமாற்றங்களை பாதுகாப்பாகவும், மிகவும் எளிமையாகவும் மாற்றுகிறது.

     

    பயன்படுத்துவது எப்படி?

    புதிய 7 ரிங் என்.எஃப்.சி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சர்வதேச பேமன்ட் வழிமுறைகளில் பணப்பரிமாற்றம் செய்கிறது. இதற்காக முதலில் ஸ்மார்ட் ரிங்-ஐ செட்டப் செய்ய வேண்டும். பிறகு அதை பயன்படுத்த, பயனரின் வங்கி கணக்கில் இருந்து கணிசமான தொகையை அதில் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரீபெயிட் வாலெட்டில் சேர்க்கப்பட்ட தொகையை, முதற்கட்ட வெரிஃபிகேஷன் நிறைவுற்ற பிறகு செலவு செய்ய முடியும். ஆனாலும், இதற்கான வரம்பு மாதத்திற்கு ரூ. 10 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வீடியோ கே.ஒய்.சி. (KYC) வழிமுறையை நிறைவு செய்த பிறகு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையிலான தொகையை ஸ்மார்ட் ரிங் வாலெட்டில் சேமித்துக் கொள்ளலாம். இத்துடன் வழங்கப்படும் செயலியை கொண்டு பரிமாற்றங்களை சரிபார்க்கவும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை கட்டுப்படுத்தவும், தொலைந்து போன ரிங்-ஐ பிளாக் செய்யவும் முடியும்.

     

    ஸ்மார்ட் ரிங் மூலம் பணம் செலுத்துவதற்கு பேமன்ட் இயந்திரத்தின் அருகில் ரிங் அணிந்திருக்கும் கையை கொண்டுவர வேண்டும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பிற்காக கைவிரல்களை மூடியிருக்க வேண்டும். கைவிரல் நீண்டிருந்தால், பணம் அனுப்ப முடியாது. பேமன்ட் இயந்திரம் ரிங்-க்கு சக்தியூட்டும். இதனால் அதனை சார்ஜ் செய்ய வேண்டாம். மேலும் இது ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை.

    இந்த ஸ்மார்ட் ரிங் கொண்டு இந்தியாவில் உள்ள யு.பி.ஐ. (UPI) மூலம் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். இது ஆன்லைன் பேமன்ட் மற்றும் இந்தியாவுக்கு வெளியில் பேமன்ட் சேவைகளை சப்போர்ட் செய்யாது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    செவன் நிறுவனம் தனது புதிய 7 ஸ்மார்ட் ரிங் விலையை ரூ. 7 ஆயிரம் என்று நிர்ணயம் செய்து இருக்கிறது. அறிமுக சலுகையாக பயனர்கள் இதனை ரூ. 4 ஆயிரத்து 777 விலையிலேயே வாங்கிட முடியும். 7 ரிங் வேலிடிட்டி 55 மாதங்கள் ஆகும். இதற்கான வாரண்டி ஒரு வருடம் ஆகும். ஏற்கனவே 7 ரிங் வைத்திருக்கும் பயனர்கள் வழங்கும் இன்வைட் மூலமாக இதனை வாங்கிட முடியும்.

    • புதுவித அகௌஸ்டிக் சென்சிங் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை வழங்குகிறது.
    • கூகுள் உருவாக்கும் புதிய ANC ரக இயர்பட்ஸ்-இல் மைக்ரோபோன் வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் ரிங் போன்ற சாதனங்களில் ஹார்ட் ரேட் சென்சார் வழங்குவது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது. பயனர்களுக்கு மிகமுக்கியமான அம்சமாக ஹார்ட் ரேட் டிராக்கிங் தற்போது பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவன சாதனங்களில் உள்ள ஹார்ட் ரேட் சென்சார் பலரின் உயரை எச்சரிக்கை கொடுத்து காப்பாற்றிய சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

    எனினும், இவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெரும்பான்மையாக மாறவில்லை. இதனை கருத்தில் கொண்டு உடல்நல அம்சங்களை அணியக்கூடிய சாதனங்களில் வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி இருக்கிறது. அந்த வரிசையில், கூகுள் நிறுவனம் தனது இயர்பட்களில் புதுவித அகௌஸ்டிக் சென்சிங் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை வழங்க இருக்கிறது.

    இது தொடர்பாக கூகுள் நிறுவனம் ஆடியோ-பிலடிஸ்மோ-கிராஃபி (ஏ.பி.ஜி.) துறையில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறது. இந்த வழிமுறையில் ஒலி அலைகளை கொண்டு இரத்த சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிட முடியும். கூகுள் உருவாக்கும் புதிய ANC ரக இயர்பட்ஸ்-இல் மைக்ரோபோன் வழங்கப்படுகிறது. இவை காற்றினுள் ஏற்படும் ஏராளமான பயோ-சிக்னல்களை பதிவு செய்யும்.

    இவ்வாறு பதிவு செய்யப்படும் சிக்னல்களை கொண்டு ஹார்ட் ரேட் ரீடிங் மற்றும் ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி என இருவித இதய செயல்பாட்டை டிராக் செய்ய முடியும். இந்த அம்சம் பயனர்கள் இயர்பட்ஸ்-இல் இசையை அனுபவிக்கும் போதும் சிறப்பாக இயங்கும். தற்போது இருக்கும் ஹார்ட் ரேட் சென்சார்களுடன் ஒப்பிடும் போது, இந்த தொழில்நுட்பத்தில் சரும டோன்களால் எவ்வித இடர்பாடும் ஏற்படாது.

    • இந்த மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஐகூ 12 ப்ரோ மாடல் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக இருக்கும்.

    ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி இந்திய சந்தையில் ஐகூ 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐகூ 12 பெறும் என்று கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியுடன் இந்த மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று ஐகூ வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ போஸ்டரில் தெரியவந்துள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்காக ஐகூ நிறுவனம் பி.எம்.டபிள்யூ. M மோட்டார்ஸ்போர்ட் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

     

    கூட்டணியின் அங்கமாக ஐகூ 12 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்கள் அடங்கிய ஸ்டிரைப் டிசைனில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் முன்பாக ஐகூ 12 மற்றும் ஐகூ 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஐகூ 12 ப்ரோ மாடல் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக இருக்கும் என்று தெரிகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ 12 மாடலில் 6.78 இன்ச் ஃபிளாட் OLED பேனல், 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 3000 நிட்ஸ் பிரைட்னஸ், ஆப்டிக்கல் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இதன் சீன வெர்ஷனில் ஒரிஜின் ஒ.எஸ். 4, இந்திய வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்படுகிறது.

    ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் ஐகூ 12 ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 16 ஜி.பி. வரையிலான ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 50MP சென்சார், 64MP லென்ஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் M3 சீரிஸ் பிராசஸர்கள் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
    • புதிய பிராசஸர்கள் முந்தைய வெர்ஷனை விட அதிவேகமானது.

    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களை முற்றிலும் புதிய M3, M3 ப்ரோ மற்றும் M3 மேக்ஸ் பிராசஸர்களை கொண்டு அப்டேட் செய்திருக்கிறது. இந்திய நேரப்படி இன்று (அக்டோபர் 31) அதிகாலை நடைபெற்ற ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது M3 சீரிஸ் சிப்செட்களை அறிமுகம் செய்தது.

    இதில் M3, M3 ப்ரோ மற்றும் M3 மேக்ஸ் என மூன்று வகையான வேரியண்ட்கள் உள்ளன. புதிய M3 சீரிஸ் மாடல்கள் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. M3 சீரிஸ் பிராசஸர்கள் முந்தைய வெர்ஷனை விட அதிவேகமானது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய பிராசஸர்களை அறிவித்ததும், மேக்புக் ப்ரோ மற்றும் 24 இன்ச் ஐமேக் உள்ளிட்ட சாதனங்களை M3 சிப்செட்களுடன் ஆப்பிள் நிறுவனம் அறிவித்து விட்டது.

     

    அதன்படி புதிய M3 சிப்செட் கொண்ட 14 இன்ச் மேக்புக் ப்ரோ, M1 சிப்செட் கொண்ட 13-இன்ச் மேக்புக் மாடலை விட 60 சதவீதம் வேகமானது ஆகும். இதேபோன்று M3 ப்ரோ சிப்செட் கொண்ட 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள், M1 ப்ரோ சிப்செட் கொண்ட 16 இன்ச் மேக்புக் ப்ரோ-வை விட 40 சதவீதம் வேகமானது.

    புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் அனைத்திலும் லிக்விட் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 20 சதவீதம் அதிக பிரகாசமான SDR தரவுகளை, 600 நிட்ஸ், 1000 நிட்ஸ் பிரைட்னசில் காண்பிக்கிறது. இத்துடன் வைபை 6E, ப்ளூடூத் 5.3, அதிகபட்சம் 4 எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் M3 சீரிஸ் பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் M3 மேக்ஸ் பிராசஸர் கொண்ட 16 இன்ச் மேக்புக் ப்ரோ விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் அனைத்தும் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் புதிய ஸ்பேஸ் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கின்றன.

    • ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்கிறது.
    • குறைந்த விலை மேக்புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்களில் M2 சிப்செட் குறைபாடு காரணமாக இந்த ஆண்டு மேக்புக் மாடல்களின் வினியோகம் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்து M2 பிராசஸர் கொண்ட மேக்புக் மாடல்களையும் தொடர்ந்து விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

     

    இவ்வாறு செய்வதன் மூலம் மேக்புக் மாடல்கள் விற்பனை அதிகரிக்கலாம். ஒருவேளை இது பலனளிக்கவில்லை எனில், 2025 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ரிடிசைன் செய்யப்பட்ட மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இதற்காகவே ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    குறைந்தவிலை மேக்புக் மாடல்களை கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஆண்டிற்கு 8 முதல் 10 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கும் என்று தெரிகிறது. குறைந்த விலை மேக்புக் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஆடியோ தரத்தை மேம்படுத்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஏர்பாட்ஸ் மேக்ஸ் என்ற பெயரில் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் சீரிஸ் மாடல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஏர்பாட்ஸ் டிசைன், கேஸ் உள்ளிட்டவைகளை அப்டேட் செய்து ஆடியோ தரத்தை மேம்படுத்த திட்டமிடுவதாக ஆப்பிள் வல்லுனர் மார்க் குர்மேன் தெரிவித்துள்ளார்.

    இத்துடன் 2024 ஆண்டு ஏர்பாட்ஸ் மேக்ஸ் என்ற பெயரில் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படுவதாகவும், 2025 ஆண்டு ஏர்பாட்ஸ் ப்ரோ வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புதிய ஏர்பாட்ஸ் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல்கள் முற்றிலும் புதிய டிசைன் மற்றும் மேம்பட்ட ஆடியோ கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

     

    புதிய ஏர்பாட்ஸ் அறிமுகமாகும் போது, தற்போது விற்பனை செய்யப்படும் இரண்டு மற்றும் மூன்றாம் தலைமுறை மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டு விடும் என்று தெரிகிறது. இதற்கு மாற்றாக இரண்டு நான்காம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடல்கள் வெவ்வேறு விலை பிரிவுகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடலில் யு.எஸ்.பி. சி வகை சார்ஜிங் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. 2025 ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ரிடைசன் செய்யப்பட்டு அதிவேக சிப்செட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • லெனோவோ டெக் வொர்ல்டு 2023 நிகழ்வில் மோட்டோரோலா கான்செப்ட் போன் அறிமுகம்.
    • மணிக்கட்டில் வாட்ச் அல்லது ரிஸ்ட்பேண்ட் போன்று அணிந்து கொள்ளலாம்.

    மடிக்கக்கூடிய சாதனங்களின் விற்பனை மெல்ல வளர்ந்து வரும் நிலையில், மோட்டோரோலா இதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. மோட்டோரோலா அறிமுகம் செய்திருக்கும் புதிய கான்செப்ட் போன் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற லெனோவோ டெக் வொர்ல்டு 2023 நிகழ்வில் மோட்டோரோலாவின் ஃபிளெக்சிபில் pOLED டிஸ்ப்ளே கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த ஸ்மார்ட்போனில் FHD + pOLED ஸ்கிரீன் உள்ளது. இதனை பின்புறமாக மடித்து மணிக்கட்டில் வாட்ச் அல்லது ரிஸ்ட்பேண்ட் போன்று அணிந்து கொள்ளலாம். இந்த அதிநவீன அடாப்டிவ் டிஸ்ப்ளே கான்செப்ட் பல்வேறு நிலைகளில் வைத்துக் கொள்ளலாம். அடாப்டிவ் டிஸ்ப்ளேவினை வழக்கமான ஆண்ட்ராய்டு போன் போன்றும் பயன்படுத்தலாம், அல்லது மணிக்கட்டில் அணிந்த படியும் பயன்படுத்தலாம்.

     

    மடிக்கப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் அளவில் முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது. மடிக்கப்பட்ட நிலையில், இது 4.6 இன்ச் அளவில் மாறிவிடும். மடிக்கப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை மோட்டோரோலா ரேசர் பிளஸ் மாடலின் கவர் ஸ்கிரீன் போன்று பயன்படுத்தலாம்.

    மோட்டோரோலாவின் புதிய வகை கான்செப்ட் போன் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக இந்த கான்செப்ட் போனிற்கான முன்னோட்டம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.

    மோட்டோரோலா மட்டுமின்றி விவோ, டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் மற்றும் டி.சி.எல். போன்ற நிறுவனங்களும் புதிய வகை ரோலபில் டிஸ்ப்ளேவினை உருவாக்கி வருகின்றன. இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • 2021 ஆண்டு M1 சிப்செட் கொண்ட 24-இன்ச் ஐமேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய ஐமேக் மாடலில் அதிநவீன M2 சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஆப்பிள் நிறுவனம் "ஸ்கேரி ஃபாஸ்ட்" என்ற பெயரில் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வு இந்திய நேரப்படி அக்டோபர் 31-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. ஆப்பிள் ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக 24 இன்ச் அளவில் ஐமேக் மாடலையும், மேம்பட்ட மேக்புக் ப்ரோ சீரிஸ் மாடல்களையும் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டு M1 சிப்செட் கொண்ட 24-இன்ச் ஐமேக் மாடலை அறிமுகம் செய்தது. இந்த சிப்செட் தற்போது பழையதாகி விட்டதால், புதிய ஐமேக் மாடலில் அதிநவீன M2 சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவன வழக்கப்படி இந்த நிகழ்வும் ஆப்பிள் வலைதளம், ஆப்பிள் டிவி செயலி உள்ளிட்டவைகளில் நேரலை செய்யப்பட இருக்கிறது.

    • பிக்சல் பிராண்டிங்கில் முதல் ஸ்மார்ட்போன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
    • முதற்கட்டமாக பிக்சல் 8 மாடல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் பிக்சல் 8 யூனிட்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    இம்மாத துவக்கத்தில் கூகுள் நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் கூகுள் நிறுவனத்தின் டென்சார் G3 சிப் மற்றும் டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்படுகிறது. இத்துடன் இரட்டை பிரைமரி கேமரா சென்சார்கள் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் 72 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகின்றன.

    பிக்சல் பிராண்டிங்கில் முதல் ஸ்மார்ட்போன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்வில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக பிக்சல் 8 மாடல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    ஏற்கனவே சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் ஸ்மார்ட்போன் யூனிட்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் புதிய நிறுவனமாக இணைய இருக்கிறது.

    இந்திய உற்பத்தி காரணமாக பிக்சல் ஸ்மார்ட்போன் விலை இந்திய சந்தையில் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், இது பற்றி தற்போதைக்கு எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ×