search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caviar"

    • ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன.
    • அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது.

    ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன சாதனங்களை ஆடம்பரமாக கஸ்டமைசேஷன் செய்வதில் புகழ் பெற்ற நிறுவனம் கேவியர். காதலர் தினத்தை ஒட்டி கேவியர் நிறுவனம் ஐபோன் 15 வேலன்டைன்ஸ் டே எடிஷன் மற்றும் இதய வடிவம் கொண்ட ஏர்டேக் என விசேஷமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன்களை அந்நிறுவனம் "கார்டன் ஆஃப் ஈடன்" என அழைக்கிறது. இதில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. இதில் பேந்தர் கோல்டு 18K மாடலின் (ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்) விலை 60 ஆயிரத்து 350 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சத்து 11 ஆயிரத்து 273 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    அந்த வகையில், இது தற்போது கிடைப்பதிலேயே அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது. இந்த எடிஷனில் ஐபோன் முழுக்க 18K தங்கத்தால் ஆன பாடி மற்றும் 159 கருப்பு வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. புதிய கார்டன் ஆஃப் ஈடன் சீரிசில் மொத்தம் ஐந்து விதமான ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இவை ஒவ்வொன்றிலும் ஆடம்பர பொருட்களான வைரங்கள், ரத்தின கற்கள் மற்றும் படிகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பிளாக்ஷிப் பேந்தர் கோல்டு 18K மட்டுமின்றி வொன்டர்ஃபுல் ஆர்சிட் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை 9 ஆயிரத்து 630 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சத்து 99 ஆயிரத்து 577 என துவங்குகிறது.

    கார்டன் ஆஃப் ஈடன் கலெக்ஷன் வாங்கும் போது இதய வடிவம் கொண்ட ஏர்டேக் வழங்கப்படுகிறது. இதனை தனியாகவும் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடல்கள் அனைத்தும் லிமிடெட் எடிஷன் என்பதால் மொத்தத்தில் 14 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. மற்ற மாடல்கள் அனைத்தும் 99 யூனிட்கள் உள்ளன.

    • முதல்நாள் காலை காளியம்மனுக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து பால் குடம், காவடி எடுத்து மேள, தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.
    • 2-ம் நாள் காலை மாவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெற்றது.

    அம்மாபேட்டை:

    பாபநாசம் தாலுக்கா, காந்தாவனம் கிராமம் வீரமாகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் காலை காளியம்மனுக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து பால் குடம், காவடி எடுத்து மேள, தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.

    பின்னர் அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. 2-ம் நாள் காலை மாவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை காந்தாவனம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    ×