search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
    X

    மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

    காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

    • முதல்நாள் காலை காளியம்மனுக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து பால் குடம், காவடி எடுத்து மேள, தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.
    • 2-ம் நாள் காலை மாவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெற்றது.

    அம்மாபேட்டை:

    பாபநாசம் தாலுக்கா, காந்தாவனம் கிராமம் வீரமாகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் காலை காளியம்மனுக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து பால் குடம், காவடி எடுத்து மேள, தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.

    பின்னர் அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. 2-ம் நாள் காலை மாவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை காந்தாவனம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×