என் மலர்
கணினி
சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் பேண்ட் மாடலை உருவாக்கி இருக்கிறது. புதிய பிட்னஸ் பேண்ட் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.9
ரெட்மி நோட் 11T சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், மற்ற சாதனங்களிலும் சியோமி கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்திய அறிவிப்பின் படி சியோமி பேண்ட் 7 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்போவதாக சியோமி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர்களில், சியோமி பேண்ட் 7 மாடல் மே 24 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
டீசரின் படி புதிய அணியக்கூடிய சாதனம் அதன் முந்தைய மாடலை போன்றே காட்சி அளிக்கும் என தெரிகிறது. Mi பேண்ட் 7 மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை போன்றே ஸ்டாண்டர்டு மற்றும் NFC என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை சியோமி பேண்ட் 7 மாடலில் 1.62 இன்ச் AMOLED 192x490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இது முந்தைய சியோமி பேண்ட் 6 மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை விட 25 சதவீதம் பெரியது ஆகும்.
ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய இந்த பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்படலாம். இதில் SpO2, இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
அமேஸ்பிட் நிறுவனம் இந்தியாவில் தனது GTR 2 புது வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் அலாய் கேசிங் கொண்டிருக்கிறது.
அமேஸ்பிட் நிறுவனம் தனது GTR 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. 2020 டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட GTR 2 மாடலின் அம்சங்களே புது மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. புது ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் அலாய் கேசிங் மற்றும் லைட்னிங் கிரே, தண்டர் பிளாக் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

அமேஸ்பிட் GTR 2 அம்சங்கள்:
- 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED 326PPI ஸ்கிரீன்
- ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சப்போர்ட்
- 90+ அதிக ஸ்போர்ட் மோட்கள்
- ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்லீப் மற்றும் ஸ்டிரெஸ் லெவல் டிராக்கிங்
- பயோ டிராக்கர்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- ப்ளூடூத் 5.0 LE, வைபை (2.4GHz), GPS+GLONASS
- 3GB மெமரி
- மைக்ரோபோன், மூன்று மேக்னடிக் சூப்பர் லீனியர் ஸ்பீக்கப்கள்
- 471mAh பேட்டரி
- 14 நாட்கள் பேட்டரி பேக்கப்
அமேஸ்பிட் GTR 2 புது வெர்ஷனின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்வாட்ச் மே 23 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் அமேஸ்பிட் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ரூ. 10 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஹூவாய் நிறுவனத்தின் மேட் Xs 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். வழங்கப்படவில்லை. இதன் விலை 1999 யூரோக்கள் என துவங்குகிறது.
ஹூவாய் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மேட் Xs 2 ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதில் சக்திவாய்ந்த ஹார்டுவேர், தலைசிறந்த கேமரா செட்டப், பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் மேட் Xs 2 அம்சங்கள்:
புதிய ஹூவாய் மேட் Xs 2 மாடலின் மிகப் பெரிய அப்டேட் ஆக அதன் டிசைன் உள்ளது. சந்தையில் கிடைக்கும் மற்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விட புதிய மேட் Xs 2 மாடலில் வெளிப்புறமாக மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இதில் உள்ள ஸ்கிரீன் எந்தளவு உறுதியாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த மாடலில் 6.5 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட மெயின் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP டெலிபோட்டோ சென்சார், 13MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் 10.7MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4600mAh பேட்டரி, 66W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் ஹார்மனி ஓ.எஸ். 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.
பிடிரான் நிறுவனத்தின் புதிய டன்ஜெண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் ஆப்ட்சென்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த இயர்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளரான பிடிரான், இந்தியாவில் புதிய வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. பிடிரான் டன்ஜெண்ட் அர்பன் என அழைக்கப்படும் புது நெக்பேண்ட் இயர்போன் கேமிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய பிடிரான் டன்ஜெண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் மாடலை முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்கும். தலைசிறந்த ஹார்டுவேர் மட்டுமின்றி அசத்தலான தோற்றம் கொண்டிருக்கும் பிடிரான் டன்ஜெண்ட் அர்பன் நெக்பேண்ட் ஆப்ட்சென்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. பிடிரான் நிறுவனத்தின் ஆப்ட்சென்ஸ் தொழில்நுட்பம் மேம்பட்ட சவுண்ட் மற்றும் கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த நெக்பேண்ட் இயர்போன் மாடலில் 10mm டிரைவர்கள் உள்ளன. இத்துடன் ட்ரூ சோனிக் பேஸ் பூஸ்ட் தொழில்நுட்பம் உள்ளது. இத்துடன் அதிவேக கனெக்டிவிட்டிக்காக ப்ளூடூத் 5.3 ஆப்ஷன் உள்ளது. புதிய டன்ஜெண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் 400mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 மணி நேரத்திற்கான பேக்கப் கிடைக்கும். இந்த இயர்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரத்திற்கான பேக்கப் கிடைக்கிறது. மேலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
பிடிரான் டன்ஜெண்ட் அர்பன் வயர்லெஸ் நெக்பேண்ட் மாடல்- பேவ் பிளாக், ஓசன் கிரீன் மற்றும் மேஜிக் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய பிடிரான் நெக்பேண்ட் இயர்பட்ஸ் விலை ரூ. 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர் மட்டும் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது இதன் விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடலில் 1.69 இன்ச் 240x280 பிக்சல் கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டச் ஸ்கிரீன் உள்ளது.
110-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கொண்டிருக்கும் ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடலில் 24 ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், நோட்டிபிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், வானிலை விவரங்கள், அலாரம், ஸ்டாப்வாட்ச், டைமர், பிளாஷ்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஹார்ட் ரேட் சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மாணிட்டர், ப்ளூடூத் 5.1, ஆட்டோமேடெட் ஹார்ட் ரேட் மெஷர்மெண்ட், SpO2 மாணிட்டர், டெம்பரேச்சர் மாணிட்டரிங், கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரிமைண்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடல் 260mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 12 நாட்களுக்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.
புதிய ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடல் லேக் புளூ மற்றும் மேஜிக் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 22 ஆம் தேதி ரியல்மி வலைதளம், அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் துவங்க இருக்கிறது.
மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது நாட்டின் முதல் தனித்துவம் மிக்க 5ஜி ஆய்வுக் களம் துவங்கப்பட்டது.
மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 75-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கொண்டாட்டத்தின் அங்கமாக நேற்று இந்தியாவின் முதல் தனித்துவம் மிக்க 5ஜி சோதனை களத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.டெலிகாம் துறையின் மிக முக்கிய மற்றும் அதிநவீன தொழில்நுட்ப பிரிவில் தற்தார்பு கொள்கையை அடைவதில் இது மிக முக்கிய பங்கு என அவர் தெரிவித்தார்.
நாட்டின் தனித்துவம் மிக்க 5ஜி சோதனை களம் ஐஐடி மெட்ராஸ் தலைமையில், ஐஐடி டெல்லி, ஐஐடி ஐதராபாக், ஐஐடி பாம்பே, ஐஐடி கான்பூர், ஐஐஎஸ்சி பெங்களூரு, அப்லைடு மைக்ரோவேவ் எலெக்டிரானிக்ஸ் என்ஜினியரிங் மற்றும் ஆய்வு கூட்டமைப்பு (SAMEER) மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கான திறனாய்வு மையம் (CEWiT) என எட்டு நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

5ஜி சோதனை களமானது நாட்டின் ஐந்து வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கிறது. இது ரூ. 220 கோடி மதிப்பீட்டில் செய்ல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் இந்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பத்தில் முதல் அழைப்பு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்து இருக்கும் நெட்வொர்க் உபகரணங்களை மத்திய தொலைத் தொடர்பு துறை ஜூலை மாத வாக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆய்வு செய்ய இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவை வெளியீட்டில் மேலும் தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் பிக் டி.வி. டேஸ் பெயரில் நடத்தும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங் இந்தியா நிறுவனம் “சாம்சங் பிக் டி.வி. டேஸ்” பெயரில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. இந்த விற்பனையில் பிரீமியம், பெரிய ஸ்கிரீன் நியோ QLED 8K, நியோ QLED, QLED, தி ஃபிரேம் மற்றும் க்ரிஸ்டல் 4K UHD டி.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் ஹை-எண்ட் டி.வி. மாடல்களை வாங்கும் போது சிறந்த டீல்கள் மற்றும் நிச்சய பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

சாம்சங் பிக் டி.வி. டேஸ் 2022 சலுகை விவரங்கள்:
- 75 இன்ச் அல்லது அதிக இன்ச் கொண்ட சாம்சங் நியோ QLED 8K டி.வி. வாங்குவோருக்கு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்து 999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி S22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்
- சாம்சங் நியோ QLED, QLED டி.வி.க்கள், 75 இன்ச் ஃபிரேம் டி.வி.க்கள், க்ரிஸ்டல் 4K UHD டி.வி. 75 இன்ச் மற்றும் அதிக இன்ச் மாடல்களை வாங்குவோருக்கு சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன்
- சாம்சங் 50 இன்ச் நியோ QLED டி.வி., 50 இன்ச் அல்லது 55 இன்ச் QLED டி.வி. வாங்கும் போது ரூ. 8 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஸ்லிம்ஃபிட் கேமரா பரிசு
- சாம்சங் 50 இன்ச் மற்றும் அதிக இன்ச் மாடல்களை வாங்கும் போது 20 சதவீதம் கேஷ்பேக், மிக எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது
- சாம்சங் QLED டி.வி. மாடல்களுக்கு 10 ஆண்டுகள் நோ ஸ்கிரீன் பர்ன் இன் வாரண்டி, தேர்வு செய்யப்பட்ட சாம்சங் டி.வி. மாடல்களுக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.
சாம்சங் அறிவித்து இருக்கும் பிக் டி.வி. டேஸ் சிறப்பு விற்பனை மே 14 ஆம் தேதி துவங்கி ஜூன் 30, 2022 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இவை நாடு முழுக்க முன்னணி விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் விரைவில் தனது சாதனத்தின் குறைந்த விலை வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் டி.வி. சாதனத்தின் குறைந்த விலை வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நிறுவன மாடல்களை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் டி.வி. மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி ஆப்பிள் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
ஹார்டுவேர், தரவுகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் திட்டம் காரணமாக போட்டியாளர்களை எதிர்கொள்ள நிலவும் இடைவெளியை போக்க வழி செய்யும் என ஆப்பிள் வல்லுனராக அறியப்படும் மிங் சி கியோ தெரிவித்து இருக்கிறார். தற்போது ஆப்பிள் நிறுவனம் மூன்று ஆப்பிள் டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

ஆப்பிள் டி.வி. 4K மாடல் 32GB மற்றும் 64GB வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை 179 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரத்து 870 மற்றும் 199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்து 419 விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஹோம் தியேட்டர் இன்ஸ்டால் செய்வோர் மத்தியில் தலைசிறந்த மாடலாக விளங்குகிறது. மேலும் இதில் உள்ள எகெஸ்டண்டட் டிஸ்ப்ளே ஐடெடிபிகேஷன் டேட்டா (EDID) போன்ற அம்சம் மிகவும் பிரபலமான ஒன்று ஆகும்.
EDID அம்சம் செட்-டாப் பாக்ஸ் அல்லது புளூ-ரே பிளேயர் மற்றும் இதர சாதனங்களை எதுபோன்ற டிஸ்ப்ளே பிளக்-இன் செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்டறியும். ஆப்பிள் டி.வி. HD மாடலிலும் EDID அம்சம் வழங்கப்பட்டு இருந்தாலும், இது 4K மாடலில் உள்ள சில அம்சங்களை செயல்படுத்த திணறும்.
எலான் மஸ்க்-இன் ஸ்டார்லின்க் நிறுவனம் உலகம் முழுக்க 32 நாடுகளில் இணைய சேவை வழங்க தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது செயற்கைக்கோள் இணைய சேவையான, ஸ்டார்லின்க் தற்போது 32-க்கும் அதிக நாடுகளில் கிடைப்பதாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய தகவல் ஸ்டார்லின்க் வலைதளத்தில் எந்தெந்த நாடுகளில் இணைய சேவை தற்போது கிடைக்கிறது (Available) என்றும், எங்கு இந்த இணைய சேவையை பெற காத்திருக்க வேண்டும் (Waitlist) என்றும் எங்கு விரைவில் (Coming Soon) வழங்கப்பட இருக்கின்றன என்ற விவரங்களை வெளியிட்டு உள்ளது.

அதன்படி முதற்கட்டமாக ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்படும் நாடுகள் பட்டியலில், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகள் Availabale பிரிவில் இடம்பெற்று உள்ளன. இங்கு ஸ்டார்லின்க் சேவையை உடனடியாக பயன்படுத்த முடியும் என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ஆப்ரிக்கா, தென்மேற்கு அமெரிக்க நாடுகளில் விரைவில் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்பட இருக்கிறது.
இதை அடுத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஸ்டார்லின்க் இணைய சேவை Coming Soon பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல் ஸ்பேஸ்எக்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக உலகம் முழுக்க 32 நாடுகளில் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்பட இருக்கிறது. இதை அடுத்து இந்தியா போன்ற நாடுகளிலும் ஸ்டார்லின்க் இணைய சேவை வழங்கப்படலாம்.
வி நிறுவனம் மேற்கொண்ட 5ஜி சோதனையில் 5.92 Gbps டவுன்லோட் வேகம் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மேற்கொண்ட 5ஜி சோதனையில் 5.92 Gbps டவுன்லோட் வேகம் கிடைத்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இத்தகைய வேகம் வி நிறுவனம் நடத்திய சிங்கில் டெஸ்ட் டிவைஸ்-இல் கிடைத்து உள்ளது. வி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் சொந்தமாக 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது.
எரிக்சன் மேசிவ் MIMO ரேடியோ, எரிக்சன் கிளவுட் நேட்டிவ் டூயல் மோட் 5ஜி கோர், மற்றும் NR-DC மென்பொருளில் மிட்-பேண்ட் மற்றும் ஹை-பேண்ட் 5ஜி டிரையல் ஸ்பெக்ட்ரத்தில் சோதனை நடத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன் வி நிறுவனம் 5ஜி சோதனையை குஜராத் பகுதியில் மேற்கொண்டது. இதற்காக வி நிறுவனம் நோக்கியாவுடன் இணைந்து இருந்தது.

வணிக நெட்வொர்க்கில் 5ஜி சேவையை வெளியிடும் போது, வி நிறுவனம் லேடன்சி-சென்சிடிவ் மற்றும் வழக்கத்தை விட பெருமளவு இணைய சேவையை கோரும் தரவுகளான ஏ.ஆர்./வி.ஆர். மற்றும் 8K வீடியோ ஸ்டிரீமிங் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இது 5ஜி ஸ்டாண்ட்அலோன் NR-DC மென்பொருள் இருப்பதால் சாத்தியமாகும்.
இத்துடன் பயனர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு தலைசிறந்த பயன்பாடுகளை வழங்கும். முன்னதாக பூனேவில் வி தனது 5ஜி சோதனையை நடத்தி இருந்தது. அப்போது 4Gbps டவுன்லோட் வேகம் கிடைத்ததாக வி அறிவித்து இருந்தது. இந்த சோதனையின் போது அரசு அளித்து இருந்த ஸ்பெக்டரத்தையே வி பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலான பிக்சல் பட்ஸ் ப்ரோ சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கூகுள் நிறுவனம் ஒருவழியாக புது பிக்சல் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதன் விலை 199 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது. விற்பனை ஜூலை மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ கூகுள் நிறுவனத்தின் புதிய ஆடியோ சாதனம் ஆகும். இதில் 11mm ஸ்பீக்கர் டிரைவர், ANC வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 6-கோர் ஆடியோ சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கூகுள் உருவாக்கிய அல்காரிதம்களுக்கு ஏற்ப செயல்படுகின்றன. மேலும் இதன் ஆடியோ அனுபவத்தை கூகுள் நிறுவனத்தின் பிரத்யேக ஆடியோ குழு உருவாக்கி இருக்கிறது.
தலைசிறந்த ANC அனுபவத்தை வழங்கும் நோக்கில் நியூரல் பிராசஸிங் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை வெளிப்புற சத்தத்தை மிக குறைந்த லேடன்சியிலும் கண்டறியும். பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடலில் டிரான்ஸ்பேரன்சி மோட் வழங்கப்பட்டு உள்ளது. இது வெளிப்புற சத்தத்தை பயனர் விருப்பப்படி கேட்க வழி செய்யும்.
அமெரிக்காவில் புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடலுக்கான முன்பதிவு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜூலை 21 ஆம் தேதி துவங்குகிறது. கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல்: கோரல், ஃபாக், சார்கோல் மற்றும் லெமன்கிராஸ் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய புரோஜெக்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டு ஜெப்ரானிக்ஸ், ZEB-PixaPlay 11 எனும் பெயரில் புதிய புரொஜெக்டர்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இது பயனருக்கு திரையரங்கு போன்ற பெரிய திரை அனுபவத்தை வீட்டிலேயே வழங்குகிறது.
நீண்ட பணிநாட்கள், மனஅழுத்தம் மிகுந்த மீட்டிங் மற்றும் தினசரி வேலைகள் முடிந்தவுடன், விருப்பப்படி உங்களுக்கு பிடித்த திரைப்படத்தைப் பார்த்து, ஓய்வெடுக்கலாம், அடுத்த ஒரு வார பணிகளுக்கு உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள இது உதவும்.
புதிய புரொஜெக்டர் கொண்டு 381cms அளவுள்ள பெரிய திரையில் நீங்கள் பார்க்கும் அனுபவத்தை உயர்த்தும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் மகத்தான அனுபவத்தைப் பெற முடியும். தெளிவான காட்சிகள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள், தொடர்கள், ஆன்லைன் கற்றல் வகுப்புகள், கேம்கள் மற்றும் பலவற்றை பார்க்கலாம்.
அதன் கையடக்கமான மற்றும் இலகுரக வடிவமைப்பு அதை எடுத்துச் செல்லவும் சவுகரியமான சாதனமாக மாற்றுகிறது. அத்துடன் இதற்கு ரிமோட் கண்ட்ரோலும் உள்ளது. புரொஜெக்டரில் 720p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 1080p FHD ஆதரவும் உள்ளது. எனவே நீங்கள் அசத்தலான காட்சிகள், கூரான, மிகத் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து உங்கள் பொழுதுபோக்கு அனுபவத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்லலாம்.

நீங்கள் பார்க்கும் காட்சிகளில் சிறந்த ஒலியை வழங்கும் வகையில் புரொஜெக்டரில் இன்பில்ட் ஸ்பீக்கர் இருப்பதால், காட்சிகளுடன் ஆடியோ அனுபவத்தையும் பெற்று மகிழலாம். முழுமையான ஹோம் தியேட்டர் அனுபவத்திற்கு, Zebronics-ன் பரந்த அளவிலான இணக்கமான மாடல்களில் இருந்து ஸ்பீக்கரை கூடுதலாக வாங்கிக் கொள்ளலாம்
LED ப்ரொஜெக்டரில் MicroSD, AV-இன்/AUX அவுட், USB, HDMI போன்ற பல கனெக்டிவிட்டிக்கள் உள்ளன. மீடியா பிளேபேக்கில் USB பென் டிரைவ் மற்றும் மைக்ரோ SD கார்டு வசதி உள்ளது. வீடியோ உள்ளீடு HDMI மூலம் கொடுக்கப்பட முடியும்.
பவர் பேங்க்குடன் இணக்கமாக இருப்பதால் விற்பனைக்கு கிடைக்கும் மற்ற புரொஜெக்டர்களில் இருந்து இது தனித்து நிற்கிறது. உங்கள் பொழுதுபோக்கை நீங்கள் எங்கும் எடுத்துச் சென்று பவர் பேங்க் மூலம் இயக்கலாம், இருப்பினும் இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மற்றும் எல்லா வகையிலும் மக்களுக்கு பிரீமியம் அனுபவத்தை அளிக்கும்.
இந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ZEB-PixaPlay 11 புரொஜெக்டர் அமேசான் வலைதளத்தில் ரூ. 6 ஆயிரத்து 299 விலையில் கிடைக்கிறது.






