search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "download"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது.
    • தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

    சென்னை:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இத்தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான தேர்வுக் கூட நுழைவு சீட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 20-ந்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று 'ஆன்லைன்-போர்டல்" என்ற வாசகத்தினை கிளிக் செய்து user ஐ.டி. பாஸ்வேர்டை கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இதே போல பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டினை 19-ந்தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மட்டும் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

    • தவிர அந்தந்த பள்ளிக்கென வழங்கியுள்ள எமிஸ் கணக்கில் மட்டும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
    • தேர்வு நடத்துவதில் சிக்கல் இருந்தால் முன்கூட்டியே முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும்

    உடுமலை

    நடப்பு கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மாதம்தோறும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது காலாண்டுத்தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்க ப்பட்டுள்ளன.

    அதன்படி நடுநிலை மற்றும் உயர்கல்விக்கு வருகிற , 19-ந்தேதி முதல் 27ந் தேதி, 6,7 மற்றும் 8ம் வகுப்புக்கு காலையிலும், 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வு நடக்கவுள்ளது.மேல்நிலைக்கல்வியை பொறுத்தவரை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை 15-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. அவ்வகையில் பிளஸ் 1 வகுப்புக்கு காலையிலும், பிளஸ் 2 வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு மாணவர்களுக்கு பள்ளிகளில் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களும் ஆர்வத்துடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தேர்வுக்கு உரிய ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

    இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தேர்வுக்கு முந்தைய நாள் அந்தந்த தேர்வுக்கான வினாத்தாளை பள்ளி தலைமையாசிரியர்கள் எமிஸ் கணக்கு எண் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வினாத்தாள் மாணவர்களுக்கு தேர்வு நாளில் வழங்கப்படும். தவிர அந்தந்த பள்ளிக்கென வழங்கியுள்ள எமிஸ் கணக்கில் மட்டும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் வேறொரு பள்ளியின் எமிஸ் கணக்கை பயன்படுத்தி வினாத்தாளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. தேர்வு நடத்துவதில் சிக்கல் இருந்தால் முன்கூட்டியே முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம், செயல்பாடுகள் குறித்த தொழில்நுட்ப பயிற்சி.
    • சிறுதானியங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்ட உயிர் உரங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கோடங்குடி ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செயல்பாடுகள் பற்றிய தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமை தாங்கினார்.

    வேளாண்மை துணை அலுவலர் பிரபாகரன், வேளாண்மை உதவி அலுவலர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் வரவேற்றார். சிறுதானியங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்டம் உயிர் உரங்கள் பயன்பாடுகள் குறித்த கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதனை விவசாயிகள் கண்டு களித்தனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் மதுமனா செய்திருந்தார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.

    பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த(ஜூன்) மாதம் 2-ந் தேதி அன்று பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×