search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

    • விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம், செயல்பாடுகள் குறித்த தொழில்நுட்ப பயிற்சி.
    • சிறுதானியங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்ட உயிர் உரங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கோடங்குடி ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செயல்பாடுகள் பற்றிய தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமை தாங்கினார்.

    வேளாண்மை துணை அலுவலர் பிரபாகரன், வேளாண்மை உதவி அலுவலர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் வரவேற்றார். சிறுதானியங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்டம் உயிர் உரங்கள் பயன்பாடுகள் குறித்த கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதனை விவசாயிகள் கண்டு களித்தனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் மதுமனா செய்திருந்தார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.

    Next Story
    ×