என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • டெக்னோ ஸ்பார்க் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    டெக்னோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. டெக்னோ ஸ்பார்க் 20C என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டெக்னோ ஸ்பார்க் 20C மாடலில் 6.6 இன்ச் HD+ டாட்-இன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13 கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் டூயல் ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். ஆடியோ, மேஜிக் ஸ்கின் 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    டெக்னோ ஸ்பார்க் 20C அம்சங்கள்:

    6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ 90Hz டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர்

    IMG பவர் வி.ஆர். GE 8320 GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    ஏ.ஐ. கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

    3.5mm ஆடியோ ஜாக்

    எஃப்.எம். ரேடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய டெக்னோ ஸ்பார்க் 20C ஸ்மார்ட்போன் அல்பென்குளோ கோல்டு, மிஸ்டரி வைட், கிராவிட்டி பிளாக் மற்றும் மேஜிக் ஸ்கின் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மார்ச் 5-ம் தேதி அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது.

    • 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.
    • சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் பயனர்கள் தங்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில் உருவாக்கி இருக்கும் அதிநவீன தொழில்நுட்பம் பற்றிய விவரங்களை 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.

    அதன்படி தனது கேலக்ஸி ரிங் சாதனத்தை அறிமுகம் செய்து, பயனர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக சாம்சங் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அறிவித்தது. புதிய கேலக்ஸி ரிங் 24 மணி நேரம் ஒருவர் மிகவும் சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    கேலக்ஸி ரிங் சாதனத்தை கொண்டு பயனர்கள் தங்களது உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். உடல்நலம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது பல்வேறு சாதனங்களிலும் கேலக்ஸி ஏ.ஐ. அனுபவத்தை புகுத்த திட்டமிட்டு வருகிறது.

    இதன் அங்கமாகவே கேலக்ஸி ரிங் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வீட்டிற்குள் ஒருவருக்கு தனித்துவம் மிக்க மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய தீர்வுகளை வழங்கும் வகையில் கேலக்ஸி ரிங் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய சாதனம் அறிமுகம் செய்ததோடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான சேவைகளை சாம்சங் ஹெல்த்-இல் இணைக்க சாம்சங் திட்டமிட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கேலக்ஸி ரிங் சாதனம் அடுத்து நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டு, பிறகு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    முன்னதாக நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் சாதனத்தின் டீசரை வெளியிட்டு, விரைவில் இது பற்றிய விவரங்களை வழங்குவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


    • நுபியாவின் முதல் ஃப்ளிப் போன் 4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 33 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    நுபியா நிறுவனத்தின் முதல் ஃப்ளிப் போன் 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நுபியா ஃப்ளிப் 5ஜி மாடலில் 6.9 இன்ச் 120Hz OLED டிஸ்ப்ளே, வெளிப்புறம் 1.43 இன்ச் அளவில் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஃப்ளிப் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை 73 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

     


    நுபியா ஃப்ளிப் 5ஜி அம்சங்கள்:

    6.9 இன்ச் 2790x1188 பிக்சல் FHD+ 120Hz AMOLED மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே

    1.43 இன்ச் 466x466 பிக்சல் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ 644 GPU

    6 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    நுபியா ஃப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49 ஆயிரத்து 650 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் என நுபியா தெரிவித்துள்ளது.

    • வசதிகள் காரணமாக பென்டபில் எனும் புது வகையில் இணைந்துள்ளது.
    • இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக கஸ்டமைஸ் செய்ய முடியும்.

    2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் மோட்டோரோலா நிறுவனம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் புதிய வகை ஸ்மார்ட்போன் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் அதன் டிசைன் மற்றும் அது வழங்கும் வசதிகள் காரணமாக பென்டபில் எனும் புது வகையில் இணைந்துள்ளது.

    பென்டபில் போன் என்ற வகையில் இந்த ஸ்மார்ட்போன் கேட்பதற்கு கற்பனை போன்றிருக்கும் பல செயல்களில் அசாத்தியமாக செய்து நம்மை ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் இந்த கான்செப்ட் மாடல் பயனர்கள் தங்களின் போனினை இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது.

     


    இதனை வழக்கமான ஸ்மார்ட்போன் போன்றும் பயன்படுத்தலாம், அல்லது வேறு வடிவத்திற்கு மாற்றியும் பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிநவீன வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனை மணிக்கட்டில் பொருந்திக் கொள்ளும் வகையில் வளைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனில் இருந்து 6.9 இன்ச் அளவில் ஸ்மார்ட்வாட்ச் ஆக இந்த சாதனம் மாறிவிடும்.

    இதுதவிர இதில் உள்ள "டென்ட் மோட்" மூலம் கேமிங் செய்வது, ஸ்மார்ட்போனின் மேல்புறத்தை சற்றே வளைத்து ஸ்டாண்ட் மோடில் வைப்பது என பலவித பயன்பாடுகளை புதிய மோட்டோ பென்டபில் கான்செப்ட் அசாத்தியமாக கையாள்கிறது. ஸ்மார்ட்போன் பல வடிவங்களில் வளைக்க முடியும் என்பதால், எந்த வடிவத்தில் இருக்கும் போதும் செயலிகள் சீராக இயங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இதனை மோட்டோரோலா வடிவமைத்துள்ளது.

     


    புதிய கான்செப்ட் மாடலின் பின்புறம் ஆரஞ்சு நிறத்தில் ஃபேப்ரிக் போன்ற பேனல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சக்திவாய்ந்த காந்தம் அடங்கிய மெக்கானிசம், ஸ்மார்ட்போன் கையில் வாட்ச் போன்று அணிந்திருக்கும் போது, கையில் இருந்து நழுவாமல் பார்த்துக் கொள்கிறது. ரிஸ்ட் மோடில் இந்த சாதனம் எதிர்காலத்தில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும்.

    இத்தனை வசதிகள் மற்றும் பல்வேறு வடிவங்களில் வளைக்கும் திறன் கொண்ட கான்செப்ட் மாடல் எவ்வளவு காலம் உழைக்கும், தொடர்ச்சியான பயன்பாடுகளை இந்த சாதனம் எந்தளவுக்கு எதிர்கொள்ளும், இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை எப்படி சரி செய்வது என்ற விஷயங்களுக்கு தற்போதைக்கு பதில் இல்லை. மேலும், இத்தகைய சாதனத்திற்கு அதிகளவு பேட்டரி தேவைப்படும், பேட்டரி அடிக்கடி தீர்ந்து போகும் வாய்ப்பும் அதிகம் தான்.

     


    நல்லபடியாக இது கான்செப்ட் வடிவில் இருப்பதால், மோட்டோரோலா இந்த சாதனம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், இதனை தொடர்ச்சியாக மேம்படுத்தும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த நிறுவனங்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அந்த வகையில், இந்த சாதனத்தை பொது வெளியில் அனைவருக்கும் ஏற்ற வகையில் அறிமுகப்படுத்த மோட்டோரோலா மேலும் சில காலம் எடுத்துக் கொள்ளும் என்றே தெரிகிறது.

    • இத்தகைய வசதி கொண்ட முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்றது.
    • டிரான்ஸ்பேரன்ட் கீபோர்டு பகுதி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

    லெனோவோ நிறுவனம் தனது புதிய தின்க்பேட் லேப்டாப் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய கான்செப்ட் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சம் அதில் உள்ள டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே (Transparent Display) ஆகும். இத்தகைய வசதியுடன் அறிமுகமாகி இருக்கும் முதல் லேப்டாப் இது என்ற பெருமையை புதிய லெனோவோ தின்க்பேட் பெற்று இருக்கிறது.

    புதிய தின்க்பேட் கான்செப்ட்-இல் 17.3 இன்ச் அளவில் மைக்ரோ எல்.இ.டி. டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே பார்டர்லெஸ் டிசைன் மற்றும் கண்ணாடி போன்று அதன் பின்புறம் இருப்பவற்றை பார்க்க செய்கிறது. இத்துடன் டிரான்ஸ்பேரன்ட் கீபோர்டு பகுதி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

     


    இதில் மைக்ரோ எல்.இ.டி. தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. இதனால் நிறங்கள் உண்மைக்கு நிகராகவும், அதிகளவு அடர்த்தியாகவும் பிரதிபலிக்கிறது. இந்த டிஸ்ப்ளே 1000 நிட் பிரைட்னஸ் கொண்டிருப்பதால், நேரடி சூரிய வெளிச்சத்திலும் காட்சிகளை சீராக பார்க்க செய்கிறது.

     


    டெக் வொர்ல்டு 2023 நிகழ்வை ஒட்டி, லெனோவோ மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் அடாப்டிவ் டிஸ்ப்ளே கான்செப்ட்-ஐ காட்சிப்படுத்தின. இந்த கான்செப்ட்-ஐ பயனர் தேவைகளுக்கு ஏற்ப பல வடிவங்களில் மடித்துக் கொள்ளலாம். புதிய தின்க்புக் டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே லேப்டாப் கான்செப்ட் எப்போது உற்பத்தி நிலையை அடையும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • இதன் அறிமுக தேதி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • பென்ச்மார்க் பரிசோதனைகளில் 734000 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

    ஐகூ நிறுவனம் தனது புதிய Z சீரிஸ் ஸ்மார்ட்போன் மார்ச் 12-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதன் அறிமுக தேதி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐகூ Z9 ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஐகூ Z7 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதுவரை வெளியிடப்பட்ட டீசர்களில் இந்த ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா சென்சார்கள், ஸ்மார்ட்போனின் பின்புறம் பேட்டன் மற்றும் பச்சை நிறம் கொண்டிருப்பது உறுதியானது.

     


    இத்துடன் இந்த பிரிவில் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐகூ Z9 பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பென்ச்மார்க் பரிசோதனைகளில் 734000 புள்ளிகளை பெற்றிருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.

    கீக்பென்ச் விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் I2302 என்ற மாடல் நம்பர் கொண்டிருப்பதும், இதில் 7200 பிராசஸர், ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ்., 8 ஜி.பி. ரேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதவிர புதிய ஐகூ Z9 ஸ்மார்ட்போன் 1.5K OLED டிஸ்ப்ளே மற்றும் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

     


    இந்திய சந்தையில் புதிய ஐகூ Z9 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றி இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவு.
    • பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் யு.பி.ஐ. தளத்தில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக செயல்பட விடுத்துள்ள கோரிக்கையை ஆய்வு செய்ய தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    மார்ச் 15, 2024-க்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி தனது அக்கவுண்ட்கள் மற்றும் வாலெட்களில் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த ஜனவரி 31-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

    பண பரிமாற்றங்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் பேடிஎம் வாடிக்கையாளர்களின் பணத்தை தற்காலிகமாக வைத்துக் கொள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கை துவங்கியுள்ளது. இதன் மூலம் மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு பயனர்கள் கியூ.ஆர். கோடுகள், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு மெஷின்களில் பரிமாற்றம் செய்யலாம்.

    தற்போது ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டால், பேடிஎம்-இன் ஹேன்டில்கள் அனைத்தும் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்கில் இருந்து புதிய வங்கிகளுக்கு மாறிவிடும். எனினும், இது தொடர்பான உத்தரவுகள் வெளியாகும் வரை புதிய பயனர்கள் இந்த சேவையில் இணைக்கப்பட மாட்டார்கள்.

    • புதிய அமேஸ்பிட் மாடலில் 1.32 இன்ச் TFT LCD ஸ்கிரீன் உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது.

    அமேஸ்பிட் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் - ஆக்டிவ் எட்ஜ் பெயரில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரக்கட் ஸ்போர்ட் மற்றும் ஃபிட்னஸ் டிசைன், செயற்கைக்கோள் சார்ந்த ஜி.பி.எஸ். டிராக்கிங் அம்சம், ஏ.ஐ. வசதிகள், 16 நாட்கள் நீடிக்கும் பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 1.32 இன்ச் TFT LCD ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. எனினும், இந்த மாடலில் ப்ளூடூத் காலிங் மேற்கொள்வதற்காக மைக் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்படவில்லை.

     


    அமேஸ்பிட் ஆக்டிவ் எட்ஜ் அம்சங்கள்:

    1.32 இன்ச் 360x360 பிக்சல் TFT LCD ஸ்கிரீன்

    ப்ளூடூத் 5.0

    செப் ஒ.எஸ். 2.0

    பயோ டிராக்கர் 3

    செப் கோச்

    செப் கோச் மற்றும் டிராக் ரன் மோட்

    ஸ்மார்ட் டிராஜெக்டரி கரெக்ஷன்

    24 மணி நேர இதய துடிப்பு சென்சார்

    ஸ்டிரெஸ் மானிட்டரிங்

    ரிமைன்டர், கால் நோட்டிஃபிகேஷன்

    ஸ்மார்ட்போன் ஆப் நோட்டிபிகேஷன்

    மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல்

    370 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    16 நாட்களுக்கான பேட்டரி பேக்கப்

    புதிய அமேஸ்பிட் ஆக்டிவ் எட்ஜ் மாடல் லாவா பிளாக், மிட்நைட் பல்ஸ் மற்றும் மின்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான், அமேஸ்பிட் வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் பிப்ரவரி 27-ம் தேதி துவங்குகிறது.

    • புதிய ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கும்.
    • பின்புற கேமராவை சுற்றி க்ளிம்ப் லைட்கள் உள்ளன.

    நத்திங் நிறுவனம் விரைவில் தனது புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், புதிய நத்திங் ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

    அந்த வகையில், நத்திங் போன் 2a மாடலின் ரெண்டர்கள் நத்திங் கம்யூனிட்டி வலைதளத்தில் வெளியானது. அதன்படி புதிய நத்திங் போன் 2a மாடல் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. முன்னதாக அந்நிறுவனம் வெளியிட்ட டீசர்களில் புதிய ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

     


    தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமராவை சுற்றி க்ளிம்ப் லைட்கள், ஸ்கிரீனை சுற்றி மெல்லிய பெசல்கள் உள்ளன. இதன் பின்புறம் சார்ஜிங் காயில் இடம்பெறவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் வழங்கப்பட்டுள்ள போதிலும், பிளாஸ்டிக் பேக் பேனல் வழங்கப்படும் என தெரிகிறது.

    முன்னதாக நத்திங் அறிமுகம் செய்த நத்திங் போன் 1 மற்றும் போன் 2 மாடல்களில் கிளாஸ் பேக் வழங்கப்பட்டு இருந்தது. புதிய மாடலில் பிளாஸ்டிக் பேக் பேனல் வழங்குவதன் மூலம் அதன் உற்பத்தி செலவீனங்களை பெருமளவு குறைக்க முடியும். இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலையும் குறைவாக நிர்ணயம் செய்ய முடியும்.

     


    புதிய நத்திங் போன் 2 மாடலில் டிமென்சிட்டி 7200 ப்ரோ பிராசஸர் வழங்கப்படும் என அந்நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டது. இத்துடன் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், ரேம் பூஸ்ட் அம்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் நத்திங் நிறுவனத்தின் விளம்பர தூதராக பாலிவுட் பிரபலம் ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டு இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், நத்திங் நிறுவன விளம்பரங்களில் இனி ரன்வீர் சிங் தோன்றுவார்.

    • பிக்சல் மாடல்களின் உற்பத்தியை துவங்க கூகுள் நிறுவனம் திட்டம்.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்து இருந்தது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம், பிக்சல் மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்க வலியுறுத்தி இருக்கிறது. முடிந்தவரையில், அடுத்த காலாண்டிற்குள் பிக்சல் மாடல்களின் உற்பத்தியை துவங்க கூகுள் நிறுவனம் உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் 10 மில்லியன் பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிக்சல் 8 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் உற்பத்தி இந்தியாவில் துவங்கும் என்றும் இவை 2023 முதல் கிடைக்கும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்து இருந்தது.

     


    இவ்வாறு செய்வதன் மூலம் கூகுள் நிறுவனம் தனது சாதனங்கள் உற்பத்தியை சீனா மட்டுமின்றி இதர சந்தைகளிலும் விரிவுப்படுத்த முடியும். வரும் வாரங்களில் டாப் என்ட் பிக்சல் 8 ப்ரோ மாடலை உற்பத்தி செய்வதற்கான ப்ரோடக்ஷன் லைனை உருவாக்கவும், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் உற்பத்தி பணிகளை துவக்கவும் கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    • புதிய விவோ ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமானது. விவோ Y200e என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ E4 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா. ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை எக்ஸ்டென்டட் ரேம், 50MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இகோ-ஃபைபர் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள விவோ Y200e ஸ்மார்ட்போன் எம்போஸ்டு லைன் டெக்ஸ்ச்சர் மற்றும் அழகிய கேமரா ரிங் கொண்டிருக்கிறது.

     


    விவோ Y200e அம்சங்கள்:

    6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ E4 AMOLED ஸ்கிரீன்

    ஆக்டா கோர் ஸ்னப்டிராகன் 4 ஜென் 4 பிராசஸர்

    அட்ரினோ 613 GPU

    6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

    50MP பிரைமரி கேமரா

    2MP போர்டிரெயிட் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, பைவை, ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    புதிய விவோ Y200e மாடலின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விவோ, ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    • செயல்திறன் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது.
    • பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களிலேயே ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் பேட்டரி ஆயுள் அதிகளவில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ஐபோன் 15 சீரிசில் உள்ள பேட்டரி திறன் அதன் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டுள்ளதை விட இருமடங்கு அதிகமுறை சார்ஜ் செய்யும் போதும் ஆயுளை தக்கவைத்துக் கொள்ளும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    புதிய ஐ.ஒ.எஸ். 17.4 அப்டேட் மூலம் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அதன் செட்டிங்ஸ்-இல் போன் பேட்டரி ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை டிஸ்ப்ளே செய்கிறது. பேட்டரி மற்றும் செயல்திறன் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது. இதில் ஐபோன் 15 சீரிஸ் பேட்டரி ஆயுள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

     


    "ஐபோன் 15 மாடல்களின் பேட்டரிகள் ஆயிரம் முறை சார்ஜ் செய்த பிறகும் 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது," என பேட்டரி குறித்த தரவுகளில் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல்களின் பேட்டரிகள் 500 முறை சார்ஜ் செய்த பிறகு 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டன.

    குறிப்பிட்ட நிலைகளில் ஐபோன் 15 சீரிசை சார்ஜிங் மற்றும் பயன்பாடுகளின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும் ஐபோனின் பேட்டரி பாகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு சிஸ்டத்தை தொடர்ந்து மேம்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ×