என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது.
    • இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

    உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது என்று கூறிவந்த நிலை வழக்கொழிந்து தற்போது உலகம் செயற்கைத் நுண்ணறிவான ஏ.ஐ மயமாக மாறி வருகிறது என்று கூறும் அளவுக்கு ஏ.ஐ மனிதர்களின் வாழ்க்கையோடு அதிகம் இணங்கத் தொடங்கியுள்ளது. இந்த இணக்கம் ஒரு படி மேலே சென்று மனிதர்களை ஆட்டிப்படைக்கும் சக்தியாக ஏ.ஐ மாறும் என்ற அச்சமும் பரவி வருகிறது.

    போலியான DEEP FAKE புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை உருவாக்குவது தொடங்கி மனிதர்களின் வேலையை பறிப்பது வரை இந்த 21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஏ.ஐ மாறத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஏ.ஐ மூலம் இயங்கும் சாட் பாட்கள் [CHAT BOT] மனிதர்களின் கட்டளை இன்றியே பொய் சொல்லத் தொடங்கியுள்ளது.

     

    வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது. அமரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று சேல்ஸ் பிரிவில் வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ரோபோ கால் சர்வீஸ் மூலம் பிளான்ட் என்று அதிநவீன ஏ.ஐ சாட் பாட்டை பணியமர்த்தியுள்ளனர்.

     

    இந்த சாட் பாட் வாடிக்கையாளர்களிடம் மனிதரைகளைப் போலவே பேசுமாம். இந்நிலையில் நிறுவனத்தின் முன்னாள் நின்றுகொண்டு விஷயம் தெரிந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யவே, போனை அட்டென்ட் செய்த சாட் பாட் பெண்ணைப் போலவே அவரிடம் பேசியுள்ளது.தான் ஒரு சாட் பாட் தான் என தனது குரலில் காட்டிக்கொள்ளவில்லை.

     

    தான் உயிருள்ள மனிதன் தான் என நம்பவைக்க நிறுவனத்துக்குள் வேலை நேர இரைச்சல் இருப்பது போன்ற சத்தங்களை உருவாக்கி அவ்வப்போது பேச்சை நிறுத்தி நிறுத்தி பேசியுள்ளது சாட் பாட். ஆனால் ஏ.ஐ சாட்பாட்டை உருவாக்கிய நிறுவனம் இது எதையும் புரோக்ராம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஏ.ஐ ஆகவே இவ்வாறு ஏமாற்ற கற்றுக்கொண்டுள்ளது.

     

    இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து, இதுபோன்ற பல்வேறு ஏ.ஐ சாட் பாட் களுடன் உரையாடி வல்லுநர்கள் நடத்திய செய்து ஏஐ தொழில்நுட்ப பாட்கள் மனிதர்களின் கட்டளை இல்லாமலேயே இந்த செயல்களை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மனித குலத்துக்கு வருங்காலங்களில் ஏஐ மூலம் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றுஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

     

    • வாட்ச் S சீரிசின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என தகவல்.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் 380 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கலாம்.

    ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் விரைவில் வெளியாகும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அந்நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட வாட்ச் S சீரிசின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

    அந்த வகையில் ரியல்மியின் புதிய ஸ்மார்வாட்ச் ரியல்மி வாட்ச் S2 என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் FCC வலைதளத்தில் லீக் ஆகி உள்ளது. அதில் புதிய ஸ்மார்ட்வாட்ச் RMW2401 என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதன் FCC ID - 2AUFRMW2401 ஆகும்.

    இந்த வலைதள விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்வாட்ச் 380 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் வழங்கப்படும் சார்ஜர் 5 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த சார்ஜர் A152A-090200U-CN1 எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.

    புதிய ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் வலது புறத்தில் வட்ட வடிவம் கொண்ட பட்டன் மற்றும் கிரவுன் கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் சென்சார்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் விவரங்கள் FCC தளத்தில் லீக் ஆகி இருக்கும் நிலையில், இந்த மாடல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    • பயனர்கள் இனி ஐ- போனில் உள்ள பேட்டரியை எளிதில கழற்றி மாட்டும் வசதியை ஏற்படுத்த ஐ- போன் திட்டமிட்டுள்ளது.
    • இந்த புதிய மாற்றம் வரும் செப்டம்பர் மாதம் புதிதாக வெளியாகவுள்ள ஐ - போன் 16 மாடலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

    மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை ஏற்படுத்தி வரும் ஆப்பிள் தற்போது புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    அதாவது, பயனர்கள் இனி ஐ-போனில் உள்ள பேட்டரியை எளிதில கழற்றி மாட்டும் வசதியை ஏற்படுத்த ஐ- போன் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே போன்களில் உள்ள கழற்றி மாட்டும் ஸ்டிரிப் மாடலை நீக்கிவிட்டு மின்சார அதிர்ச்சி மூலம் கழலும் ஸ்டிரிப்களை பொறுத்த உள்ளது ஆப்பிள்.

     

    இந்த புதிய மாற்றம் வரும் செப்டம்பர் மாதம் புதிதாக வெளியாகவுள்ள ஐ-போன் 16 மாடலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். மேலும் இந்த புதிய ஐ-போனின் டிசைன், சிப்செட் என அனைத்தும் புதிய வடிவமைப்புடன் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

     

    • கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் கடந்தாண்டு 24 புதிய மொழிகள் சேர்க்கப்பட்டது.
    • தற்போது கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் மொத்தமாக 243 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யலாம்.

    2006 ஆம் ஆண்டு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தொடங்கப்பட்டது. உலகம் எங்கும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மொழிகளை படிப்பதற்கு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை உதவி செய்து வருகிறது.

    இந்நிலையில், கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையைக் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது.

    கடந்தாண்டு 24 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 110 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையில் 110 புதிய மொழிகளை இணைத்ததன் மூலம் மொத்தமாக 243 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிதாக சேர்க்கப்பட்ட 110 மொழிகளில் அவதி, போடோ, காசி, கோக்போரோக், மார்வாடி, சந்தாலி மற்றும் துலு போன்ற ஏழு இந்திய மொழிகளும் அடங்கும்.

    • ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது.
    • இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 299 -ல் இருந்து (தினம் 1.5 GB) ரூ. 349 -ஆக உயர்கிறது.

    365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

     

    • ரெனோ 12 மற்றும் ரெனோ 12 ஜி என்ற சீரிஸ் கொண்ட போன்களை வெளியிட இருக்கிறது.
    • ஏஐ பெஸ்ட் பேஸ், ஏஐ எரேசர் 2.0, ஏஸ் ஸ்டூடியோ, ஏஐ கிளியர் வாய்ஸ் (Clear Voice) போன்ற ஏஐ அடிப்படையிலான கேமரா செயல்பாடுகளை கொண்டுள்ளது.

    ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒப்போ ரெனோ 12 5ஜி செல்வோனை விரைவில் வெளியிட இருக்கிறது. இதற்காக இணையதள விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட், இதெற்கான ஒரு பகுதியை உருவாக்கி சீரிஸ்களை லிஸ்ட் செய்துள்ளது. இந்த சீரிஸ் வகை போன்கள் ஏய் பீச்சர்ஸ் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெனோ 12 மற்றும் ரெனோ 12 ஜி என்ற சீரிஸ் கொண்டதாக இருக்கும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏஐ பெஸ்ட் பேஸ், ஏஐ எரேசர் 2.0, ஏஸ் ஸ்டூடியோ, ஏஐ கிளியர் வாய்ஸ் (Clear Voice) போன்ற ஏஐ அடிப்படையிலான கேமரா செயல்பாடுகளை கொண்டுள்ளது.

    இந்த போன்கள் கூகிள் ஜெமினி அடிப்படையிலான ஏஐ சம்மரி, ஏஐ ரெகார்டு, ஏஐ கிளியர் வாய்ஸ், ஏஐ ரைட்டர், ஏஐ ஸ்பீக் பீச்சர்ஸ்களை கொண்டதாகவும் இருக்கும்.

    ரெனோ 12 மீடியாடெக் டைமென்சிட்டி 8250 ஸ்டார் ஸ்பீட் எடிசன் பிராசசரை கொண்டதாகவும், ரெனோ 12 ப்ரோ மீடியாடெக் டைமென்சிட்டி 9200+ ஸ்டார் ஸ்பீட் எடிசன் பிராசசரை கொண்டாகவும் இருக்கும்.

    இரண்டு சீரிஸ் போன்களும் 50எம்பி மற்றும் 8எம்பி டுயல் கேமரா செட்டப் கொண்டதாகவும் இருக்கும். 50எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளதாக இருக்கும்.

    5000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டதாகவும் இருக்கும். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையில் கலர்ஓஎஸ்-ல் செல்போன் இயங்கும்.

    ரெனோ 12 கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் கொண்ட 12 6.7 இன்ச் டிஸ்பிளே வசதி கொண்டது. 12GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எபோனி பிளாக், மில்லேனியம் சில்வர், சாஃப்ட் கலர்களில் கிடைக்கும்.

    • உலகம் முழுவதும் சுமார் 2.4 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • வாய்ஸ் கால், வீடியோ கால் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களை இணைக்கிறது.

    மக்களை இணைக்கும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் திகழ்கிறது. வாய்ஸ் கால், வீடியோ கால் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களை இணைக்கிறது. படங்கள், பைல்களை அனுப்புவதற்கு பயன்படுகிறது.

    மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 2.4 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் எளிமைக்காக அடிக்கடி அப்டேட் செய்து வருகிறது.

    இந்த நிலையில் அடுத்த அப்டேட்டின்போது சுமார் 35 ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலி சப்போர்ட் ஆகாது எனத் தெரிவித்துள்ளது. பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உள்ளிட்டவைகளுக்காக இதுபோன்ற அப்டேட்களை செய்து வருகிறது.

    சாம்சங்

    சாம்சங் கேலக்சி ஏஸ் பிளஸ், எக்ஸ்பிரஸ் 2, நோட் 3, கோர், எஸ்4 ஜூம், கிராண்ட், எஸ்4 மினி, எஸ்3 மினி, எஸ்4 ஆக்டிவ்.

    மோட்டோ

    மோட்டோ ஜி, மோட்டோ எக்ஸ்

    ஐபோன்

    ஐபோன் எஸ்சி, 5, 6, 6எஸ், 6எஸ் பிளஸ்

    ஹூவெய்

    ஹூவெய் அஸ்சென்ட் ஜி525, அஸ்சென்ட் பி6 எஸ், ஜிஎக்ஸ்1எஸ், சி199, ஒய்625

    லொனோவோ

    லொனோவே ஏ858டி, 46600, எஸ்890, பி70

    சோனி

    சோனி எக்ஸ்பெரியா இ3, என்ஸ்பெரியா இசட்1

    எல்ஜி

    எல்ஜி ஆப்டிமஸ் ஜி, 4எக்ஸ் ஹெச்டி, எல்7

    இந்த மாடல் ஸ்பார்ட்போன்களை வைத்திருப்பவர்கள் வாட்ஸ்அப் டேட்டாக்களை பேக்அப் எடுததுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
    • அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.

    இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. இதனை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

    ஏர்டெல் பிரீபெயிட் மாதாந்திர சலுகை, இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் மற்றும் ஓராண்டு வேலிடிட்டி வழஹ்கும் பிரீபெயிட் சலுகைகளின் கட்டணங்களை ஏர்டெல் உயர்த்துகிறது. அடுத்த வாரம் புதிய விலை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கான புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது. அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.

    இதேபோல், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களின்படி மாதாந்திர கட்டணம் அதிகரிப்பதைக் காண முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 179-ல் இருந்து ரூ. 199-ஆக உயர்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 455-ல் இருந்து ரூ. 509 ஆக உயர்கிறது. அதிகபட்சமாக ஒரு வருட வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 2999-ல் இருந்து ரூ. 3599-ஆக உயர்ந்துள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-


    பழைய விலை

    புதிய விலை

    டேட்டா

    செல்லுபடியாகும் காலம் (நாட்கள்)

    179

    199

    2ஜிபி

    28

    455

    509

    6ஜிபி

    84

    1799

    1999

    24 ஜிபி

    365

    265

    299

    ஒரு நாளைக்கு 1ஜிபி

    28

    299

    349

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    28

    359

    409

    ஒரு நாளைக்கு 2.5 ஜிபி

    28

    399

    449

    ஒரு நாளைக்கு 3 ஜிபி

    28

    479

    579

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    56

    549

    649

    ஒரு நாளைக்கு 2 ஜிபி

    56

    719

    859

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    84

    839

    979

    ஒரு நாளைக்கு 2 ஜிபி

    84

    2999

    3599

    ஒரு நாளைக்கு 2ஜிபி

    365


    • செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

    நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.

    மாதாந்திர ப்ளான், இரு மாதம், மும்மாதம் மற்றும் ஓராண்டு ப்ளான்களின் கட்டணங்களை உயர்த்தி ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

    ஜியோ நிறுவனம் 19 பிளான்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அவற்றில் 17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.

    அதன்படி, செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189ஆகவும், 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349ஆகவும், ரூ.399 என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.449ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஜியோவின் வரம்பற்ற 5ஜி திட்டம், வரும் ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன எனவும் ஜியோ அறிவித்துள்ளது.

    • விவோ T3 லைட் 5ஜி மாடல் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. விவோ T3 லைட் 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் கொண்டுள்ள விவோ T3 லைட் 5ஜி மாடலில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 8MP செல்பி கேமரா உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14 கொண்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், IP64 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4 மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் விவோ T3 லைட் 5ஜி மாடல் வைப்ரண்ட் கிரீன் மற்றும் மஜெஸ்டிக் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
    • கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி இந்த ஆண்டின் இரண்டாவது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது.

    வழக்கம்போல இந்த நிகழ்வும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளம், யூடியூப் சேல் உள்ளிட்டவைகளில் ஸ்டிரீம் செய்யப்படும். இந்திய நேரப்படி கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

     


    இந்த நிகழ்ச்சியில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 6, கேலக்ஸி Z ப்ளிப் 6, கேலக்ஸி வாட்ச் 7, கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா, கேலக்ஸி பட்ஸ் 3, கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.

    கேலக்ஸி ரிங் மாடல் இந்திய சந்தையில் ரூ. 35 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் ப்ளூடூத் 5.4 மற்றும் ஒன்பது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • கேம் அல்லது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்றவைகளால் செல்போன் அதிக வெப்பமடையும்.
    • நேரடி சூரிய ஒளியில் இருந்து செல்போனை தவிர்க்கலாம்.

    இந்தியாவில் கோடையில் வெப்ப அலை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது போல் நம்முடைய ஸ்மார்ட் போன்களுக்கும் சில கவனிப்பு தேவை.

    உங்கள் ஸ்மார்ட்போனை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், அதிக வெப்பமடைவதை தடுக்கவும் 5 எளிமையான வழிகள்:

    1. நேரடி சூரிய ஒளியை தவிர்க்க வேண்டும்

    செல்போன்கள் செயல்படுவதன் மூலம் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும். நேரடி சூரிய ஒளியில் செல்போன்களை பயன்படுத்தினால், அதன் ஸ்கிரீன் வெளிச்சத்தை அதிகரிக்கலாம். னை நிழலில் பயன்படுத்த வேண்டும். இது ஸ்கிரீன் வெளிச்சத்தை குறைவாக வைத்திருக்க உதவும்.

    2. போனுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்

    கேம் அல்லது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்றவைகளால் செல்போன் அதிக வெப்பமடையும். பயனாளர்கள் செல்போனுக்கு ஓய்வு கொடுத்தால் செல்போன் குளிர்ந்து அதிக வெப்பமடைவதை தடுக்கும் வாய்ப்பு உள்ளது.

    3. background apps நிர்வகித்தல்

    background apps-ஆல் செல்போன் அதிக வெப்பமடையும், பேட்டரி பவர் குறையும். போனில் செயலியை பயன்படுத்தவில்லை என்றால், பயனர் ஆப்களை off செய்துவிட வேண்டும். உங்கள் மொபைலை குளிர்ச்சியாக வைத்திருக்க, டேட்டா அல்லது அழைப்புகள் தேவையில்லாதபோது பயனர், பின்புல செயல்முறைகளைக் குறைக்க Airplane mode-க்கு மாறலாம்.

    4. செல்போன் கவரை நீக்க வேண்டும்

    ஸ்மார்ட்போன் கவர்கள் போனை பாதுகாக்கும் அதே வேளையில் அவை வெப்பத்தையும் ஏற்படுத்தும். செல்போன்கள் கூடுதல் வெப்பத்தை உருவாக்குவதால், அது சார்ஜிங்-ல் இருக்கும்போது போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மலிவான அல்லது சேதமடைந்த சார்ஜர்கள் அதிக வெப்பத்திற்கு பங்களிக்கும்.

    5. நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும்

    நேரடி சூரிய ஒளியில் இருந்து செல்போனை தவிர்க்கலாம். வீட்டிற்குள் வேலை செய்கிறீர்கள் என்றால், சூரிய ஒளி நேரடியாக விழும் ஜன்னல்களிலிருந்து போனை ஒதுக்கி வைக்க வேண்டும். அதேபோல, வாகனம் ஓட்டும்போது காரின் டேஷ்போர்டில் செல்போனை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    இந்த எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் கடுமையான வெப்பத்தின்போது செல்போனை குளிர்ச்சியாகவும் பயனுடையதாகவும் வைத்திருக்கலாம்.

    ×