search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை நிறுத்த போராட்டம்"

    • வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
    • போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    தருமபுரி:

    மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம் உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, காலாண்டு வரி உயர்வு, ஆன்லைன் அபராதம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளதால் இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 3,500 லாரிகள் பங்கேற்கிறது. எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக லாரிகளை நிறுத்தி கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில துணைத் தலைவருமான நாட் டான் மாது தெரிவித்தார்.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிட்ட லாரிகளை தவிர மற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
    • பழைய ஓய்வு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்்

    போளூர்:

    தமிழக ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நேரத்தில் நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன் தொடர்ச்சியாக போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் பேராட்டத்தில் சார்பில் ஈடுபட்டனர்.

    பழைய ஓய்வு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப கொரோனா காலத்தில் இருந்து சரண்டர் விடுப்பை நிறுத்தி வைத்துள்ளனர். அதனை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கம்ப்யூட்டர் ஆபரேட்டர்க ளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • தனியார் மீன்பிடி உரிமம் முடிந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது.
    • பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறு த்தி கடந்த 15-ந் தேதி முதல் பவானிசாகர் அணைப்பகுதி யில் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.

    சத்தியமங்கலம்

    ஈரோடு மாவட்டம் பவா னிசாகர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன் பிடிக்கும் உரிமம் தனியா–ருக்கு தரப்பட்டிருந்தது.

    இங்கு சுசில் குட்டை, அண்ணா நகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பரிசல் மூலம் மீன்களைப் பிடித்து வருகி ன்றனர்.

    நாள் ஒன்றுக்கு 2000 கிலோ மீன்கள் பிடித்து வந்தனர். இந்த மீன்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளு க்கு அனுப்பப்பட்டு வந்தது.

    தனியார் மீன்பிடி உரிமம் முடிந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்களை கொள்முதல் செய்தது.

    தனியார் குத்தகைதாரர் ஒரு கிலோ மீனுக்கு 55 ரூபாய் கூலியாக மீனவர்களுக்கு தந்த நிலையில் மீன் வளர்ச்சி கழகம் ஒரு கிலோ 35 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பழையபடி தங்களுக்கு 55 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறு த்தி கடந்த 15-ந் தேதி முதல் பவானிசாகர் அணைப்பகுதி யில் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது.

    • ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களை தனியார் நிறுவனம் ஒன்று தினக்கூலி அடிப்படையில் இவர்களை பணியில் அமர்த்தி உள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக இவர்களுக்கு சராசரி தினக்கூலியாக ரூ.490 என்ற அடிப்படையில் கூலிக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால் தற்போது வரை ரூ.360 மட்டுமே வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் இவர்களுக்கு வருடம் ஒருமுறை வழங்கக்கூடிய ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் தூய்மை பணியாளர் னளுக்கான உபகரணங்கள் எதுவும் வழங்கப்பட வில்லை.

    இதனை கண்டித்து நேற்று மாலை முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • இங்கு குப்பையை கொட்ட கூடாது என்று கூறி குப்பையை கொண்டு சென்ற பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும் இதுகுறித்து மல்லூர் போலீஸ் நிலையத்தி லும் புகார் கொடுத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரமனூர் பகுதியில் நவீன மின்மயானம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அங்கு கொட்ட பட்டு வந்த குப்பைகள் அருகில் உள்ள பனங்காடு பெரியேரி பகுதியில் கொட்டப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அந்த பகுதி விவசாயிகள் இங்கு குப்பையை கொட்ட கூடாது என்று கூறி குப்பையை கொண்டு சென்ற பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டரை சிறை பிடித்து

    போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து மல்லூர் போலீஸ் நிலையத்தி லும் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ்

    நிலையத்திற்கு கொண்டு சென்றார்.இதனால் மல்லூர் பேரூ ராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை களை கொட்டு வதற்கு இட மில்லாததால் பேரூராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். 4-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு தலைப்பட்சமாக முடி

    வெடுத்து அந்த டிராக்டரை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே

    உடனடியாக டிராக்டரை விடுவிப்பது டன், தாசில்தார்

    மல்லூர் பேரூராட்சி குப்பை களை கொட்ட தனியாக இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் பேரூராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • மின் தடையை சரி செய்யாததால் அவதி
    • அதிகாரிகள் தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தல்

    போளூர்:

    போளூர் மின்சார வாரியத்தில் மின்வாரிய ஊர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் போளூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1½ நேரமாக மின்சாரம் தடைப்பட்டு சரி செய்வதற்கு யாரும் ஆட்கள் இல்லை.

    தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய ஊழியர்கள் பஞ்சப்ப படி உயர்வினை உடனடியாக வழங்க கோரி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போளூர் மின்சார வாரியத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் இன்று வேலை நேரத்தில் சுமார் 80 சதவீதம் பேர் ஈடுபட்டுள்ளதால் போளூர் முழுவதும் தடைபட்டுள்ள மின்சாரத்தை சரி செய்வதற்கு ஆட்கள் இல்லை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தபால்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்:

    நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், அஞ்சலக துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரியும், ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் துணை அஞ்சலக ஊழியர்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் தபால் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்."

    ×