search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன் டிரைவர்"

    • காளிமுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • காளிமுத்து சீலிங்பேனில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக் கொண்டார்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த பாலப்பம்பட்டி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்.இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் காளிமுத்து( வயது 32)தனியார் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

    இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. காளிமுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் காளிமுத்து சீலிங்பேனில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக் கொண்டார். சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காளிமுத்துவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து காளிமுத்து தந்தை சுப்பிரமணியம் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் காளிமுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • கைதான 5 பேரை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை
    • பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    நாகர்கோவில்:

    தென் தாமரைகுளம் அருகே தேங்காய் காரன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் என்ற சிட்டி (வயது 38 )வேன் டிரைவர். இவர் கோவையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஊருக்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் தேங்காய் காரன் குடியிருப்பு சானல் கரை பகுதியில் வைத்து பெலிக்சை அவரது நண்பர்கள் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து பெலிக்சின் தந்தை ரெஜி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சுபாஷ் ஜெகன் உள்பட கண்டால் தெரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் கொலை வழக்கு தொடர்பாக கண்ணன், சுபாஷ், ஜெகன், வினோத், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரண மாக கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீ சாரிடம் அவர்கள் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் பெலிக்சும் நண்பர்கள். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு கார் ஒன்று வாங்கியது தொடர்பாக ரூ.15000 பணம் கொடுக்க வேண்டும். அந்த பணத்தை பெலிக்ஸ் அடிக்கடி என்னிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் வீட்டில் இருந்தபோது பெலிக்சும் அவரது நண்பரும் எனது வீட்டிற்கு பணம் கேட்டு வந்தனர். அப்போது எனது செல்போனை பெலிக்ஸ் எடுத்துச் சென்றார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மீண்டும் இரவு பெலிக்ஸ் அவரது நண்பருடன் வந்து என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். நான் மறுநாள் மாலையில் பணம் தருவதாக கூறினேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக எனது நண்பரிடம் தெரிவித்தேன்.பின்னர் பெலிக்சை தீர்த்துக் கட்ட முடிவு செய்து அவரை போன் மூலமாக தொடர்பு கொண்டு வீட்டில் பணம் இருப்பதாக கூறி வரவழைத்தோம். அவர் அங்கு வந்தார் அப்போது அவரை வெட்டி கொலை செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த கொலை வழக்கில் மேலும் இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்ய டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .கொலை நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டி உள்ளார்.

    • ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருப்பூர் :

    திருப்பூர் பி.என் ரோடு சாந்தி தியேட்டர் அருகில் வேன் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு ஏராளமான வேனை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.இந்த நிலையில் வேனை நிறுத்துவதில் டிரைவர்கள் ராஜா மற்றும் வசீகரன் ஆகியோரு கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜாவின் நண்பர்கள் ஆனந்த் சிவகுமார் ஆகியோர் நேற்று இரவு வேன் ஸ்டாண்டிலிருந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் வசீகரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வந்துள்ளனர்.

    அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சமாதியாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வசீகரனின் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ஆனந்த் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக வேன் டிரைவர்கள் விக்னேஷ், காளிதாஸ் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×