search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளைநிலம்"

    • விவசாயிகள், தங்களது விளை நிலங்களில் பன்றிகள் அதிக அளவு புகுந்து விளை நிலங்களை பாழ்படுத்தி வருவதால், அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
    • மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த மாதம் வேளாண்குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பேசிய பல்வேறு  என கூறினர்.அதன்பேரில், காரைக் கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், காரைக் கால் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தர விட்டார். அதன் பேரில், காரைக்கால் நகராட்சி சார்பில், பன்றி பிடிப்ப வர்கள் வரவழைக்கப்பட்டு, காரைக்கால் கீழகாசாகுடி, தலத்தெரு, அம்மன் கோ வில்பத்து, கருளாச்சேரி, அக்கரை வட்டம், ஓடுதுறை, நேருநகர், தருமபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடந்த 2 நாட்களாக 130 பன்றிகள் பிடிகப்பட்டு அப்புறப்ப டுத்தப்பட்டது. இது குறித்து, கலெக்டர் குலோத்துங்கன் கூறுகை யில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள பன்றிகள் தற்போது நகராட்சி சார்பில் கபிடிக்கபட்டு வருகிறது. இப்பணி இனி ஒவ்வொரு மாதமும் இருமுறை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 141 கிராமங்களில் ரூ.7.09 கோடியில் தரிசு நிலத்தொகுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி, வேளாண் இணையதளங்கள் மற்றும் வேளாண்மை அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட் டத்தில் கிராம அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் வகையில் தரிசு நிலங்களை கணக்கெடுத்து அதனை விளைநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலங்களில் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் தரக்கூடிய வகையில், குறைந்த நீரில் அதிக வருமானம் தரக்கூடிய தோட்டக்கலை பழ மரப் பயிர்களும், ஊடுபயிராக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணை வித்து பயிர்களையும் சாகுபடி செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 141 கிராங்களில் 173.6 ஏக்கர் தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரூ.7.09 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    கிராமங்களில் உள்ள ஏரி, குளம், வரத்து கால் வாய்களை தூர்வாருதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் மின் இணைப்புடன் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் போன்ற பணிகள் 100 சதவீத மானியத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

    கடம்பத்துார் ஒன்றியத்தில் திருமேணிக்குப்பம் ஊராட்சியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 11.72 ஏக்கர் தரிசு நிலம் கணக்கெடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்த பணிகளை தமிழக அரசின் திட்ட கண்காணிப்பு அலுவலரும், நுகர்பொருள் வாணிபக்கழக ஆணையருமான வி.ராஜாராம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

    இதைத்தொடர்ந்து தரிசு நிலத்தொகுப்பு பகுதியில் வேளாண்மை பொறியியல் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையை பார்வையிட்டார்.

    இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் கூறியதாவது:-

    இந்த திட்டத்தில் கடந்த 2022-23ம் ஆண்டு முதல் கட்டமாக தேர்வாகி உள்ள, 1,997 கிராமப் பஞ்சாயத்துகளிலும் இப்பணிகளை மேற்கொள்ள மாநில நிதியில் இருந்து ரூ.227.06 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது.

    2023-24-ம் நிதியாண்டில், 3,204 கிராம பஞ்சாயத்துகளில் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலத் தொகுப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 141 கிராமங்களில் ரூ.7.09 கோடியில் தரிசு நிலத்தொகுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி, வேளாண் இணையதளங்கள் மற்றும் வேளாண்மை அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் ரிஷப் பண்ட், வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ், வேளாண்மை நேர்முக உதவியாளர் வி.எபினேசர், தோட்டக் கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரிஅனி, வேளாண்மை வணிக துணை இயக்குனர் ராஜேஸ் வரி, கடம்பத்துார் வேளாண்மை அலுவலர் எஸ். தீபிகா, கடம்பத்துார் தோட்டக்கலை உதவி இயக்குனர் கே.பூர்ணிமா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நெல் பயிரிடப்பட்ட நிலங்களில் மழைநீர் புகுந்தது.
    • நீர் புகுந்ததால் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியது.

    கடலூர்:

    வடலூர் அருகே உள்ள மருவாய், வாலாஜ ஏரியும் அதன் உள்பகுதியில் உள்ள நைனார்குப்பம், மேலக் கொளக்குடி, கருங்குழி உள்ளிட்ட பகுதி யில் உள்ள நெல் பயிரிட ப்பட்ட நிலங்களில் மழைநீர்பு குந்தது. இதனால் நெற்பயி ரிகள் அழுகும்நிலையில் உள்ளது.

    மேலும் பரவனாற்று ங்கரை ஓரம் உள்ள ஓணான்குப்பம், அந்தாரசி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழை நீரும் மழைநீருடன் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் இருந்து வெளிேயற்றப்படும் நீரால் பரவனாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளின் நெல் பயிரி டப்பட்ட விளைநில கங்க ளில் நீர் புகுந்ததால் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால் நெல் பயிர்கள் அழகும் நிலையில் உள்ளன.

    • தோண்டப்பட்ட பள்ளத்தை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது.
    • சவுடு மண்குவாரிக்கு விளைநிலத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூர் ஊராட்சி பொன்வாச நல்லூர் இச்சலடி கிராமத்தில் சவூடுமண் குவாரியை தடுத்து நிறுத்த கோரியும், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடக்கோரியும், விளைநிலங்களை பாதுகாத்திட கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    விசிக மயிலாடுதுறை ஒன்றிய பொறுப்பாளர் சாமி சீசர் தலைமையில் நடைபெற்றது.

    கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்மோகன், பாரதிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் பாதுகா க்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு சட்டவிரோதமாக சவூடு மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், சவுடு மண்குவாரிக்கு விளைநிலத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியவர்கள் மீது விசாரணை நடத்தி முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முன்கூட்டியே இதுபோன்ற முறைகேடுகள் தெரிந்துயிருந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது விசாரணை செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்துவந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி குவாரியை மூடுவதாக உறுதி அளித்தார்.

    இருப்பினும் குவாரி மூடப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து போராட்டக்காரர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

    பின்னர் தோண்டிய பள்ளத்தை மூடிய பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வினோத், தாமோதரன், அறிவு, மற்றும் கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், என ஏராளமானவர்கள் கலந்துக்கொன்டனர்.

    • 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
    • கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2022-23 ஆம் நிதியாண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகரம், திருப்புகலூர், ஆதலையூர், பண்டார–வாடை, காரையூர், நெய்க்குப்பை, கோபுராஜ–புரம், ஆலத்தூர், திருச்–செங்காட்டங்குடி, கீழத்தஞ்சாவூர், மருங்கூர் உள்ளிட்ட 11 கிராமங்கள் இத்திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் வாயிலாக கிராமங்களில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்காக 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.விருப்பமுள்ள விவசாயிகள் மேற்குறிப்பி டப்பட்டுள்ள கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் தெப்பக்குளம், விளைநிலம் அளவீடு செய்துள்ளனர். அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த பேளூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தெப்பகுளம் மற்றும் குறிச்சி கிராமத்திலுள்ள இக்கோவிலுக்குச் சொந்தமான விளைநிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்தது.

    இதனையடுத்து, கோயில் தெப்பக்குளம் மற்றும் விளைநிலத்தை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து நில அளவீடு செய்தனர். தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு இருப்பது தெரியவந்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளனர்.

    வருவாய்த்துறை அதிகாரிகளுடன், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை தனி வட்டாட்சியர் தமிழ் முல்லை, பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் கஸ்தூரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×