என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாரணை கைதி"

    • தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.
    • மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் கைதான கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரின் மகன் ஆகாஷ் டெலிசன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக அவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலத்தில் இருந்து விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி திடீரென ஆகாஷ் டெலிசன் இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகாஷ் டெலிசன் சாவில் போலீசார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையில் ஆகாஷ் டெலிசன் சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    3-வது நாளான இன்று காலையும் சாலைமறியல் தொடர்ந்தது. தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மதுரை, ராமேசுவரத்தில் இருந்து வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் அரசு, தனியார் மதுபான கடைகள், பார்களை 3 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆகாஷ் டெலிசன் உயிரிழந்ததை தொடர்ந்து 3-வது நாளாக சாலைமறியல் போராட்டம் நடைபெறுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி மதுபான கடைகள், பார்கள் 3 நாட்களுக்கு மூடுமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
    • தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் கைதான கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரின் மகன் ஆகாஷ் டெலிசன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக அவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலத்தில் இருந்து விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி திடீ ரென ஆகாஷ் டெலிசன் இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகாஷ் டெலிசன் சாவில் போலீசார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையில் ஆகாஷ் டெலிசன் சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அமைச்சர் பெரியகருப்பன், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் கைவிடப்படவில்லை. 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் நேற்று விசாரணை கைதி ஆகாஷ் டெலிசன் இறப்பு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. வெங்கட் ராமன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைதி சாவு குறித்து வழக்குப்பதிவு செய்திருந்த மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் இருந்து வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கினர்.

    மேலும் ஐகோர்ட்டில் விசாரணை கைதி இறப்பு குறித்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு, அரசு ஆஸ்பத்திரி டீன் ஆகியோர் முன்னிலையில் ஆகாஷ் டெலிசன் உடலை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தடுக்க மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு மனுதாரர் அறிவுறுத்துமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.

    இருப்பினும் மானா மதுரையில் 2-வது நாளான நேற்றும் சாலையில் பந்தல் அமைத்து போராட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். 3-வது நாளான இன்று காலையும் சாலைமறியல் தொடருகிறது. அவர்களிடம் போலீசார் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மதுரை, ராமேசுவரத்தில் இருந்து வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    • நெல்லை காவல்துறை ஆணையர் நடத்திய விசாரணையில் போலீசார் மீது எந்த தவறும் இல்லை என அறிக்கை.
    • உதவி ஆய்வாளர் விமலன், காவலர் மகாராஜனிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவு.

    நெல்லையைச் சேர்ந்த பேச்சிவேல் என்பவரை 2 நாட்கள் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியதாக அவரது தாயார் சந்திரா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.

    அதன்படி, 2019ம் ஆண்டில் நெல்லை டவுன் காவல் நிலைய காவலர் மகாராஜன், உதவி ஆய்வாளர் விமலன் மீது அவர் புகார் அளித்தார்.

    மேலும், அப்போது போலீசார் தனது மகனைத் தேடி வந்து மளிகை கடையில் நுழைந்து ஆத்திரத்தில் பொருட்களை உடைத்து ரூ. 10 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் தெரிவித்தார்.

    இந்து புகார் மனு மீதான விசாரணையின்போது, நெல்லை காவல்துறை ஆணையர் நடத்திய விசாரணையில் போலீசார் மீது எந்த தவறும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    மேலும், 20 வழக்குகள் நிலுவையில் உள்ள பேச்சிவேலை பிடிக்க முயன்றபோது விழுந்ததில் காயம் என கூறி புகாரை தள்ளுபடி செய்ய போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த புகார் மீதான இன்றைய விசாரணையில்," பேச்சிவேலுவின் காலில் சிலிண்டரை தொங்கவிட்டு கொடுமைப்படுத்தியதை போலீசார் மறைத்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பேச்சிவேல் எப்போது கைது செய்யப்பட்டார்? முதலுதவி அளிக்கப்பட்ட விவரங்களையும் காவல்துறை மறைத்துள்ளதாக" மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் காயமடைந்து பேச்சிவேல் சிகிச்சை பெற்ற தகவலை மறைத்ததாகக் கூறி போலீசாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தாக்கியதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும், உதவி ஆய்வாளர் விமலன், காவலர் மகாராஜனிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழப்பு.
    • விசாரணையின்போது, கைதி சாந்தகுமார் உயிரிழக்கவில்லை என போலீசார் அறிவிப்பு.

    திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், விசாரணை கைதி மரணம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    அதன்படி, செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணையின்போது, கைதி சாந்தகுமார் உயிரிழக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நெஞ்சுவலி என்று கூறிய சாந்தகுமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது:-

    பிபிஜி சங்கர் கொலையில் முக்கிய குற்றவாளியான சாந்தகுமார், கடந்த 13ம் தேதி புட்லூர் பகுதியில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு குற்றச்செயல் புரிய அவர்கள் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    சாந்தகுமாரின் இறப்பின் மீது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

    சாந்தகுமாரின் மரணம் குறித்த விசாரணை நியாயமாக நடைபெற வேண்டி சாந்தகுமாரை விசாரித்த காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சாந்தகுமாருக்கு இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கைதி சாந்தகுமாரின் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும்.

    சாந்தகுமாரின் இறுதிச்சடங்குக்காக அவரது மனைவி மற்றும் உறவினர்கள், சாந்தகுமார் உடலை ஸ்ரீபெரும்புதூர் கொண்டு சென்றனர்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ×