search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் பெட்டி தீ விபத்து"

    • ரயில் பெட்டி தீ விபத்து சம்பவம் தொடர்பாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு.
    • விசாரணையை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேர் அதிரடி கைது.

    மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்திய பிரகாஷ், நரேந்திர கும்ஸ், கர்தீஸ் ஜஹானி, தீபக், சுபம், சுஷியப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 5 பேரும் லக்னோவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கைதானவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஐந்து பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதான ஐந்து பேரையும் செப்டம்பர் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மதுரை ரெயில் விபத்து தொடர்பாக தெற்கு சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தி வருகிறார்.
    • ரெயில் தீ விபத்து தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை ரெயில் விபத்து தொடர்பாக தெற்கு சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தி வருகிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

    ரெயில் தீ விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். வெடித்து சிதறிய சிலிண்டரை நாகர்கோவிலில் நிரப்பி உள்ளனர். எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது.

    வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் தீ விபத்து தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம். லக்னோவில் இருந்தும் சிலரை அழைத்து விசாரிக்க வேண்டி உள்ளது.

    விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில் பெட்டி தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கைதான 5 பேரும் லக்னோவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்திய பிரகாஷ், நரேந்திர கும்ஸ், கர்தீஸ் ஜஹானி, தீபக், சுபம், சுஷியப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைதான 5 பேரும் லக்னோவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கைதானவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து நேரடியாக பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.
    • விபத்து குறித்து விசாரணை நடத்த குறைந்த பட்சம் ஒரு மாதமாவது தேவைப்படும்.

    மதுரை:

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுற்றுலா வந்த ரெயில் பெட்டியில் விதிகளை மீறி பயன்படுத்தப்பட்ட கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆன்மீக பயணம் வந்த 9 பேர் பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு 2 விமானங்களில் சென்னையில் இருந்து லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காயம் அடைந்த அனைவரும் உரிய சிகிச்சைக்கு பிறகு நேற்று இரவு மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு சென்ற அவர்கள் தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்களான மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பரிதாபமாக உயிரை விட்டனர்.

    தீ விபத்து நடைபெற்ற ரெயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் இரு நாட்களாக சோதனை நடத்தி தீ விபத்துக்கு காரணமான பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றினர். நேற்று இரண்டாவது நாளாக விபத்து நடந்த ரெயில் பெட்டியை ஆய்வு நடத்தினர். அப்போது அதிலிருந்த ஒரு இரும்புப் பெட்டிக்குள் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக 500, 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதனையும், ரெயில் பெட்டிக்குள் இருந்த சிலிண்டர், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர்.

    இந்த நிலையில் தெற்கு சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணையை தொடங்கினார். நேற்று காலை ரெயில்வே கோட்ட அலுவலக கூட்டரங்களில் முதற்கட்டமாக ரெயில் தீ விபத்தில் காயமடைந்து மதுரை ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 7 பேரிடமும் விசாரணை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து ரெயில் விபத்தின்போது அதில் இருந்து குதித்து தப்பியோடிய 5 சுற்றுலா நிறுவன ஊழியர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதில் இரு சமையல் உதவியாளர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் நேரில் சென்று ரெயில் பெட்டியில் ஏறி ஆய்வு மேற்கொண்ட பின்னர் நேற்று மாலை மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ரெயில் விபத்து ஏற்பட்டவுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரிடமும் விசாரணை மேற்கொண்டார்.

    முதல் நாள் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பாதுகாப்பு ஆணையர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. முதலில் தீ விபத்தின் போது தப்பியோடிய சுற்றுலா நிறுவன சமையல் உதவியாளர்கள் இருவரிடம் மீண்டும் 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணையின் போது பொதுமக்கள் யாரேனும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களோ அல்லது வேறு ஏதேனும் ஆவணங்களோ இருந்தால் நேரடியாக தெரிவிக்கலாம் எனவும், மேலும் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் மூலமாகவும் அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் யாரும் சம்பவம் குறித்து தெரிவிக்க வருகை தரவில்லை.

    விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து நேரடியாக பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் சம்பவத்தின் போது ரெயில் பெட்டி எரியும் வீடியோ வெளியானது தொடர்பாகவும், தீ விபத்தின் போது அருகில் இருந்த ரெயில் பெட்டியை இயக்கியவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    விபத்தின் போது தீயணைப்பு பணிகளில் ஈடுபட்ட ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினரிடமும், ரெயில் பெட்டி புக் செய்யப்பட்டது தொடர்பாகவும், விபத்து ஏற்பட்ட பெட்டியில் பயணிப்பதற்கான முறையாக அனுமதிக்கப்பட்டதா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தவும் ஏ.எம்.சவுத்ரி திட்டமிட்டுள்ளார்.

    அதேபோல் கடைசியாக இந்த சுற்றுலா ரெயில் நாகர்கோவிலில் இருந்து மதுரை வந்தது. எனவே அங்கு ரெயில் பெட்டியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக விசாரணை நடத்தும் வகையில் நாகர்கோவிலில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், டெக்னீஷியன்கள், அதிகாரிகள் ஆகியோரை மதுரைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நேற்று விசாரணையை தொடங்கிய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி கூறுகையில், இந்த ரெயில் விபத்தில் சதிச்செயல்கள் எதுவும் அரங்கேறவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்த குறைந்த பட்சம் ஒரு மாதமாவது தேவைப்படும் என்றார்.

    • 63 பேர் பயணித்த அந்த ரெயில் பெட்டியில் சமையல் செய்தவற்காக 5 பேர் வந்துள்ளனர்.
    • ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் தீயில் கருகி பலியாகி உடல்களாக கொண்டு வரப்பட்டது

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று ராமேசுவரம் செல்வதற்காக 63 பயணிகள் ரெயிலில் வந்தனர். இந்த ரெயில் பெட்டியில் நேற்று அதிகாலை டீ தயாரிப்பதற்காக சிலிண்டரை பற்ற வைத்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் 9 பேர் உடல் கருகி பலியானார்கள். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் ஒருவரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு காணப்பட்டது. கடைசியில் அவர் பெண் என்பது உறுதியானது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிகள் இருந்தும் அதனை மீறி யாத்ரீகர்கள் கொண்டு வந்த சிலிண்டர் அவர்கள் உயிரை பறித்துள்ளது.

    63 பேர் பயணித்த அந்த ரெயில் பெட்டியில் சமையல் செய்தவற்காக 5 பேர் வந்துள்ளனர். அவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவுகளை தயாரித்து கொடுத்துள்ளனர். அதேபோல் கியாஸ் அடுப்பை பயன்படுத்தாமல், சிலிண்டரிலேயே வைத்து சமையல் செய்துள்ளனர். அப்போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது.

    தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்த பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, ஆங்காங்கே உடல்கள் கருகிய நிலையில் கிடந்தன. ஒரு சிலர் தாங்கள் படுத்திருந்த பெர்த் படுக்கையிலேயே பிணமாக கரிக்கட்டையாக கிடந்தனர்.

    அப்பர் பெர்த், லோயர் பெர்த்தில் படுத்திருந்தவர்களின் பெயர்களை வைத்தே அடையாளம் காணப்பட்டது. லேசான காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அவர்கள் மூலம் இறந்தவர்களை அடையாளம் கண்டனர்.

    அதன்படி பலியானவர்களின் விபரம் வருமாறு:-

    1.ஹரிஷ்குமார் யாசின் (வயது 62), பிரேம் நகர், சிட்டாப்பூர்.

    2.தீபக் கஸ்யாப் (21), நயபாஷி, கவுசல்யா பவன், சிட்டாப்பூர்.

    3.அன்குல் (36), சாய்பாபா ரோடு, சிட்டாப்பூர்.

    4.சத்ரு தமன் சிங் (65), மவுலா அதஸ் நகர், சிட்டாப்பூர்.

    5.பரமேஸ்வர் தயாள் சர்மா (57), மீடா டாக்கீஸ் கிராமம், ஹர்தோஸ் மாவட்டம்.

    6.மித்திலேஸ் (62), ஆதர்ஸ் நகர், செக்டார்-1, நைபாலபூர், லக்கிம்பூர் ரோடு, சிட்டாப்பூர்.

    7.சாந்திதேவி வர்மா (70), கோட்டியா, லக்கிம்பூர்.

    8.குமார் ஹிமானி பன்சால் (27), அக்ரசன் கண்டன் கல்லூரி அருகில், சவுக், லக்னோ.

    9.மனோரமா அகல்வால் (81), அக்ரசன் ஆண்டன் கல்லூரி அருகில், சவுக், லக்னோ.

    இவர்கள் 9 பேரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. பின்னர் அவர்களது உடல்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து 3 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் பலியானோரின் உடல்கள் சென்னை விமான நிலையம் கொண்டு செல்லட்டது. அங்கிருந்து 2 தனி விமானங்களில் உடல்கள் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ கொண்டு செல்லப்பட்டது.

    ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் தீயில் கருகி பலியாகி உடல்களாக கொண்டு வரப்பட்டது அவர்களின் உறவினர்களிடையேயும், அவர்கள் வசித்த பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பாதுகாப்பு கருதி இரும்பு பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
    • ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளின் வெப்பநிலை மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பாகவும் சோதனை செய்தனர்.

    மதுரை:

    மதுரை ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள். விதிமுறைகளை மீறி அந்த ரெயில் பெட்டியில் கொண்டு வரப்பட்ட கியாஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த கோர சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் தீயில் எரிந்து கிடந்த ரெயில் பெட்டிக்குள் கிடந்த பொருட்களை வெளியே கொண்டு வந்து போட்டனர்.

    அப்போது ஒரு இரும்பு பெட்டியை உடைத்து பார்த்தபோது, அதில் 500 ரூபாய் கட்டுகள் இரண்டும், 200 ரூபாய் கட்டுகள் ஏராளமாகவும் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    வழிச்செலவுக்காக யாத்ரீகர்கள் இந்த பணத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும், பாதுகாப்பு கருதி இரும்பு பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை பத்திரமாக கொண்டு சென்றனர். அதேபோல் ரெயில் பெட்டியின் மேலே ஏறி ஆய்வு நடத்தினர். அப்போது அந்த ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளின் வெப்பநிலை மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பாகவும் சோதனை செய்தனர்.

    • முன்னதாக இந்த சிறப்பு ரெயிலில் மொத்தம் 63 பேர் வந்ததாக பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது.
    • ஊர் திரும்புபவர்கள் ஆகியோரை கணக்கெடுத்தபோது 2 பேர் மாயமான தகவல் கிடைத்தது.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் வந்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் இறந்தனர். 25 பேர் லேசான மற்றும் பலத்த காயம் அடைந்து ரெயில்வே மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிகிச்சையில் சற்று உடல் நலம் தேறியவர்கள் 22 பேர் இன்று மதியம் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    முன்னதாக இந்த சிறப்பு ரெயிலில் மொத்தம் 63 பேர் வந்ததாக பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது பலியானவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், ஊர் திரும்புபவர்கள் ஆகியோரை கணக்கெடுத்தபோது 2 பேர் மாயமான தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ரெயில்வே போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் தீ விபத்து சம்பவத்தில் அவர்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    • லேசான காயமடைந்தவர்களை மீட்டு ரெயில்வே ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • அமைச்சர் மூர்த்தி அந்த சிறுவனுக்கு காலணி மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தார்.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில், உத்தரப்பிரதேசத்தில் ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் தங்கியிருந்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட பயங்க தீ விபத்தில் 9 பேர் பலியானார்கள். லேசான காயமடைந்தவர்களை மீட்டு மதுரை ரெயில்வே ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    அப்போது தனது தாத்தா, பாட்டியுடன் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக வந்த 4 வயது சிறுவன் ஸ்வேதாஸ் சுக்லா நடந்த நிகழ்வுகள் தெரியாமல் எப்போது ராமேசுவரம் செல்வோம்? என்னை ராமேசுவரம் அழைத்து செல்லுங்கள், நான் ராமேசுவரத்தை பார்க்க வேண்டும் என கூறியது அங்கிருந்தவர்களின் மனதை உருக்குவதாக அமைந்தது.

    மேலும் ரெயில் விபத்தில் சிறுவன் அணிந்திருந்த காலணி ரெயிலில் சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்த அமைச்சர் மூர்த்தி அந்த சிறுவனுக்கு காலணி மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தார். அமைச்சர் மூர்த்தியின் இச்செயல் அங்கிருந்தவர்களை நெகழ்ச்சி அடைய செய்தது.

    • பலரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி சட்டரீதியான விசாரணை நடத்த உள்ளார்.

    மதுரையில் நேற்று அதிகாலை சுற்றுலா ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தீ விபத்து குறித்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி சட்டரீதியான விசாரணை நடத்த உள்ளார். மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

    விபத்து குறித்து பொதுமக்களிடம் ஏதேனும் தகவல் அல்லது ஆதாரம் இருந்தால் அதை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கொடுக்கலாம். அல்லது ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர், தெற்கு வட்டம், 2-வது மாடி, சன்ராக்ஷா பவன், பெங்களூரு - 560 023 என்ற முகவரிக்கு கடிதம் வழியாகவும் தெரிவிக்கலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • மதுரை ரெயில் தீ விபத்தில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் உயிரிழப்பு.
    • தீ விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை ஆலோசனை செய்ய இருக்கிறார்.

    மதுரை ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா ரெயில் சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கு காரணமான சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், மதுரை ரெயில் தீ விபத்து குறித்து எம்.பி. சு வெங்கடேசன் கருத்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. சு வெங்கடேசன் கூறியதாவது..,

    "ரெயில் தீ விபத்துக்கு ஆர்.பி.எஃப். தோல்வியே காரணம் என்று ரெயில்வே ஆலோசனை உறுப்பினர் என்ற அடிப்படையில் கூறுகிறேன். ரெயில்களில் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல, அந்த வாகனத்தில் பெட்ரோல் இல்லை என்பதை முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பிறகு தான் வாகனம் ரெயிலில் அனுமதிக்கப்படுகிறது."

    "நாடு முழுக்க எந்த ரெயில் நிலையத்திலும் உள்ள கடைகளில் கியாஸ் அடுப்பு பயன்படுத்தக்கூடாது. மின்சார அடுப்பையே பயன்படுத்த வேண்டும். இத்தகைய கடுமையான விதிகள் அமலில் இருக்கும் போது, இந்த விபத்துக்கு சொல்லப்படும் காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனிநபர் கொண்டுவந்த ஒரு பொருளால் மட்டும் இந்த விபத்து ஏற்படவில்லை."

    "தீப்பற்றக்கூடிய பொருட்களை இரயிலில் எடுத்துச்செல்லக்கூடாது என்று விதி இருக்கும் போது பத்து நாட்களாக கியாஸ் சிலிண்டரோடு தென்னிந்தியா நெடுக ஒரு ரயில் பெட்டி பயணித்திருக்கிறது என்றால் ஆர்.பி.எஃப். சோதனைப்பணி என்பது முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்றே பொருள். இந்த விபத்து ரெயில் பயணத்தின் போது ஏற்பட்டு இருந்தால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரும் விபத்தாக மாறி இருக்கும். இந்த விபத்துக்கு முதல் காரணம் ரெயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வி தான் ஆகும்," என்று அவர் தெரிவித்தார்.

    • மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்துக்கு காரணமான சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு பதிவு.

    இந்திய ரெயில்வே மூலம் நாடு முழுவதிலும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி புண்ணிய தலமான ராமேசுவரத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா ரெயில்கள் இயக்கட்டு வருகின்றன.

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தமிழகத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கடந்த 17-ம் தேதி புறப்பட்ட சுற்றுலா ரெயில் இன்று காலை மதுரை வந்தது.

    மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கு காரணமான சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

     

    இந்த நிலையில், மதுரை ரயில் தீ விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற இருக்கிறது. நாளை காலை 9.30 மணிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் கலந்து கொள்வோர், தங்களிடம் ஆவணங்கள் அல்லது வீடியோ காட்சிகள் ஏதேனும் இருந்தால் நேரில் வந்து, அவற்றை சம்ர்பிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது. விபத்து தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விரும்பினால் நேரடியாக கூட்டத்தில் கலந்து கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மேலும் தெரிவித்தது. 

    • சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் மீது தென்னக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் மதுரை ரெயில் விபத்து குறித்து ரெயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா கூறியிருப்பதாவது:-

    ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைகளுக்கான சாத்தியம் ஏதும் இல்லை. ரெயில் பெட்டியில் சிலிண்டர் அடுப்பில் தேநீர் போட்டுக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. பிரேத பரிசோதனை முடிந்தவுடம் 7 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு, விமானம் மூலம் உத்தரபிரதேசம் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×