search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவீந்திர நாத்குமார்"

    பிரதமர் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்பாமல் மகன் ரவீந்திரநாத் குமாருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து 38 இடங்களில் போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. சார்பில் தேனியில் போட்டியிட்ட ரவீந்திரநாத்குமார் மட்டுமே வெற்றி பெற்றார்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான இவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.

    இதற்காக ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவையும் ஏற்கனவே சந்தித்து பேசி இருந்தார். பா.ஜனதா மேலிடமும் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு மந்திரி சபையில் ஒரு இடம் கொடுக்க முன் வந்தது

    ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேல்சபை எம்.பி.யான வைத்திலிங்கத்துக்கு மத்திய மந்திரி பதவி வழங்கும்படி சிபாரிசு செய்திருந்தார். இதனால் யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பதில் முடிவெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    2 பேருக்கு மத்திய மந்திரி பதவி வழங்க முடியாது. கூட்டணி கட்சிகளுக்கு 1 இடம்தான் உண்டு என்று பிரதமர் மோடி முடிவு எடுத்திருந்ததால் அதி.மு.க. எம்.பி.க்களில் யாருக்கும் மந்திரி பதவி கிடைக்கவில்லை.

    இதனால் டெல்லியில் முகாமிட்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுக்கும், வைத்திலிங்கத்துக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.



    பிரதமர் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருடன் வைத்திலிங்கம் எம்.பி.யும் உடன் வந்தார்.

    ஆனால் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்பாமல் மகன் ரவீந்திரநாத் குமாருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை மீண்டும் பார்த்து பேசிவிட்டு சென்னை திரும்புவார் என தெரிகிறது.
    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாகவே கடந்த 16-ந்தேதி சின்னமனூர் அருகே குச்சனூரில் வைக்கப்பட்ட கோவில் கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் எம்.பி என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

    இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே எப்படி பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போடலாம் என எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பிறகு அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது. அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது தேனி நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என பெயர் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தேனி நகரில் பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ரவீந்திரநாத்குமார் பெயரோடு மத்தியஅமைச்சர் என சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகும் சர்ச்சைக்குரிய அழைப்பிதழ்.

    இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழில் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு அருகில் மத்திய அமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிராம மக்கள் சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பாராளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சிலர் மாற்றி மத்திய அமைச்சர் என சேர்த்து போலியாக சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளனர்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதவி வருவதற்கு முன்பாகவே மத்திய அமைச்சர் என பெயரிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் மீண்டும் சர்ச்சையில் ரவீந்திரநாத்குமார் சிக்கியுள்ளார்.
    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
    சென்னை:

    மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பதவி ஏற்க உள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல வெளிநாட்டுத் தலைவர்கள் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வர இருப்பதால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே புதிய அமைச்சரவையில் யார்- யாரை மத்திய மந்திரிகளாக சேர்த்துக் கொள்ளலாம் என்று மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்ட முறையில் 303 இடங்களைக் கைப்பற்றி இருப்பதால் மத்திய மந்திரி சபையில் முக்கியமான, பெரும்பாலான மந்திரிகள் பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

    என்றாலும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியினரையும் மத்திய மந்திரி சபையில் இடம்பெற செய்ய மோடி முடிவு செய்துள்ளார். எனவே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., அகாலி தளம், லோக் ஜனசக்தி, அப்னா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

    பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா 18 எம்.பி.க்களை வைத்துள்ளது. கடந்த தடவை 3 மந்திரி பதவி பெற்ற சிவசேனா இந்த தடவை 4 மந்திரி பதவிகளை கேட்கிறது. 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 மந்திரி பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்களும், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், அப்னா தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆல் ஜார்க்கண்ட் ஸ்டூடன்ட்ஸ் யூனியன், ராஜஸ்தானில் லோக் தந்திரிக் கட்சி, நாகலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி, மிசோரமில் மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் வென்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் 38 இடங்களில் அ.தி.மு.க. மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அ.தி.மு.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முடிவு செய்துள்ளார். அந்த ஒருவர் யார் என்பதை தெரிவிக்கும்படி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.


    இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் 2 மத்திய மந்திரி பதவிகளை தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இரு மந்திரி பதவிகளில் ஒரு பதவி, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலாகாவை பெற காய்களை நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வைத்திலிங்கம் மத்திய மந்திரி பதவி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மேல்- சபையில் எம்.பி. ஆக இருக்கும் வைத்திலிங்கத்தை மத்திய மந்திரியாக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் மேல்-சபையான மாநிலங்கள் அவையில் தற்போது அ.தி.மு.க.வுக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற ஜூலை மாதம் மேல்-சபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும்.

    டெல்லி மேல்-சபையில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் இல்லை. எனவே மேல்-சபையில் அ.தி.மு.க.வின் தயவு பாரதிய ஜனதாவுக்கு தேவை என்ற நிலை உள்ளது. மேல்- சபையில் 12 எம்.பி.க்களை வைத்திருப்பதால் அ.தி.மு.க.வுக்கு இரண்டு மத்திய மந்திரிகள் தருவதுதான் நியாயமானதாக இருக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த வாதத்தை பாரதிய ஜனதா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அ.தி.மு.க.வுக்கு இரு மந்திரி பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில் வைத்திலிங்கம், ரவீந்திரநாத்குமார் இருவரும் மந்திரி ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் ராஜாங்க இலாகா கொடுக்கப்படலாம்.

    இதற்கிடையே டாக்டர் அன்புமணியையும் மேல்- சபை எம்.பி. என்ற அந்தஸ்துடன் மத்திய மந்திரியாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மீண்டும் அவருக்கு சுகாதாரத் துறையை பெற காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால் பா.ம.க.வின் விருப்பத்தை பாரதிய ஜனதா நிறைவேற்றுமா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
    பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள மோடி வருகிற 30-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்கான பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது.

    இதில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.


    அவர்களுடன் தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும் சென்றார்.

    முன்னதாக ரவீந்திரநாத் குமார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றி பெறவில்லை, மக்களின் நலன்தான் முக்கியம் என்று ரவீந்திரநாத்குமார் கூறினார்.
    மதுரை:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்னை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


    நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றிபெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது. மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்.

    தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்துள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே கோவில் கல்வெட்டில் எம்.பி என ரவீந்திர நாத்குமார் பெயர் வைத்தது தொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
    தேனி:

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலய கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வெட்டில் ரவீந்திர நாத்குமார் பெயர் மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது.

    ரவீந்திர நாத்குமார் பெயர் இடம் பெற்ற கல்வெட்டை வைத்தது அப்பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் வேல்முருகன் என்பது தெரியவந்தது.

     தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்க வந்த அ.தி.மு.க வக்கீல் அணியினர்.

    இதனிடையே ரவீந்திர நாத்குமார் சார்பாக அ.தி.மு.க வக்கீல் அணியினர் இன்று மதியம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். இது தொடர்பாக ரவீந்திர நாத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் முடிவு வெளிவராத நிலையில் எம்.பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தவறானது. கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் பெயரை எம்.பி என பொறித்தது தொடர்பாக சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ்காரர் வேல்முருகன் மீது தேர்தல் விதிமீறல், நம்பிக்கை மோசடி, போலிஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு கைது செய்துள்ளனர்.
    வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே கல்வெட்டில் எம்.பி என பெயர் வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஓ.பி.எஸ் மகன் புகார் அளித்துள்ளார்.
    தேனி:

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலய கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

    இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வெட்டில் ரவீந்திர நாத்குமார் பெயர் மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது.

    ரவீந்திர நாத்குமார் பெயர் இடம்பெற்ற கல்வெட்டை வைத்தது அப்பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதுபற்றி வேல்முருகன் கூறும்போது, எங்களை பொறுத்தவரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு எப்போதும் முதல்வர்.

    தற்போது துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்பதால் அவரின் பெயரை குறிப்பிட்டு இருந்தேன். தேனி பாராளுமன்ற வேட்பாளர் என பொறிக்க சொன்ன இடத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என தவறுதலாக இடம்பெற்றுவிட்டது என்றார்.

    போலீஸ்காரர் வேல்முருகன் ஏற்கனவே ஜெயலலிதா மறைந்த போது சீருடையுடன் மொட்டையடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். மேலும் காவிரி நீர் விவகாரத்தில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். கடைசியாக அவர் தேனி மாவட்ட ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது காவல்துறை கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.

    இதனிடையே ரவீந்திர நாத்குமார் சார்பாக அ.தி.மு.க வக்கீல் அணியினர் இன்று மதியம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

    இது தொடர்பாக ரவீந்திர நாத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் முடிவு வெளிவராத நிலையில் எம்.பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தவறானது. கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்கள் கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
    தேனி:

    ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்கள் கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே பாராளுமன்ற உறுப்பினர் என்று பெயர் போட்டுக் கொள்ளும் அளவுக்கு தைரியத்தை ஓ.பன்னீர்செல்வம்தான் கொடுத்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்வெட்டு.

    தேர்தல் ஆணையத்தில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல்குறித்து எந்த புகார் அளித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது நடந்துள்ள விதி மீறல் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது இதன் பிறகாவது அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கிறார்கள்? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் மறு வாக்குப்பதிவு நியாயமாக நடக்கும் என்று நம்புகிறோம். அதே போல் அன்றைய தினம் நடைபெறும் 4 சட்டமன்ற தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடக்க தேர்தல் ஆணையம் உறுதியளிக்க வேண்டும்.

    23-ந்தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்குமார் என கல்வெட்டு வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதி செல்கிறது. இந்த நதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலயம் கட்டப்பட்டு வந்தது. ஆலயம் கட்டி முடித்து கும்பாபிஷேக பணிகள் நடந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

    இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்டுள்ளதற்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


    தேனியில் பாராளுமன்ற வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அறிவிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகள் வெடித்த வண்ணம் இருந்தது. வாக்குக்கு பணம் அளிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த போதும் மீண்டும் 2 மையங்களில் மறு வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டது. 2 மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவுக்காக கோவை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 70 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையாக கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ×