search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா ஆசிரியர்"

    • தகவல் கிடைத்ததும் கொல்லம் போலீசார் விரைந்து வந்து, ஸ்வத்வாவின் உடலை கைப்பற்றினர்.
    • யோகா ஆசிரியர் கிருஷ்ணசந்திரன், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கிருஷ்ண சந்திரன், யோகா ஆசிரியர். இவரிடம் யோகா கற்பதற்காக, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்வத்வா (வயது 36) என்பவர் வந்திருந்தார்.

    இவர், கிருஷ்ண சந்திரனின் உறவினர் வீட்டில் தங்கி யோகா பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஸ்வத்வா, வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதே வீட்டில் யோகா ஆசிரியர் கிருஷ்ணசந்திரன், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கொல்லம் போலீசார் விரைந்து வந்து, ஸ்வத்வாவின் உடலை கைப்பற்றினர். கிருஷ்ண சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஸ்வத்வாவை கொலை செய்து விட்டு, கிருஷ்ணசந்திரன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    யோகா ஆசிரியரான கிருஷ்ணசந்திரன், உத்தரகாண்ட் மாநிலத்தில் பணியாற்றி வந்ததாகவும் அங்கிருந்து வரும்போதே, ஸ்வத்வாவை கேரளாவுக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    • அரசு பள்ளி, கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நிர்வாகி கூறி உள்ளார்.
    • மாநிலத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தமிழ்நாடு யோகா ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் காசிநாத துறை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகளில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டுத்துறையிலும் இந்தக் கல்வி ஆண்டிலேயே நியமிக்கப்பட வேண்டும்.

    இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் யோகா ஆசிரியர்களை நியமிக்க தீர்மானம் இயற்றி தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி, அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளிலும் யோகா ஆசிரியர் நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அனைத்து விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சியாளர்களை தற்காலிக பணியாளர்களாக நியமித்தார்.

    அவர்கள் தற்போது அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வெளியேறி விட்டனர். அவர்களை மீண்டும் விளையாட்டு துறைகளில் நியமிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டுத் துறையிலும் யோகா போட்டியை சேர்க்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் யோகா கல்விக்கு தனி கவனம் செலுத்தி யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் 13 ஆயிரம் யோகா பயிற்சி யாளர்கள் நியமிக்கப்படும் என்று அறிவித்தனர். அதை இந்த ஆட்சி நிறைவேற்ற வேண்டும்.

    எங்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் நிராகரிக்கும் பட்சத்தில் ஜூன் 20-ந் தேதி சென்னையில் பேரணி நடத்தி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×