search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யமுனை நதி"

    • யமுனை நதியில் அரிதாக டால்பின் மீன் வலையில் பிடிப்பட்டது
    • வனவிலங்கு அதிகாரிகள் வீடியோவை பார்த்து கைது நடவடிக்கை

    தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் குறிப்பாக உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதற்கிடையே நான்கு மீனவர்கள் வலைவீசி யமுனையில் மீன்பிடித்துள்ளனர். கடந்த 22-ந்தேதி அவர்கள் வீசிய வலையில் தற்செயலாக டால்பின் மீன் சிக்கியுள்ளது. பொதுவாக யமுனை நதியில் டால்பின் மீன்கள் இருப்பதில்லை. அரிதாக இவர்கள் வலையில் சிக்கியுள்ளது.

    டால்பின் மீனை கெத்தாக தனது தோளில் சுமந்து சென்றுள்ளார் அதில் ஒரு மீனவர். அதோடு வீட்டிற்கு கொண்டு சென்று டால்பின் மீனை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

    இதை சாலையில் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் வனத்துறையினருக்கு புகார் வர, வீடியோவை ஆதாரமாக கொண்டு டால்பின் மீனை பிடித்த மீனவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

    வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    • டெல்லி நகருக்கு ஒரு நாளைக்கு 125 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது.
    • மழை குறைந்ததால் யமுனையில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி நகரின் தண்ணீர் தேவையை யமுனை நதி 40 சதவீதம் தீர்த்து வைக்கிறது. டெல்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில் இருந்து யமுனை நதி தண்ணீரை சுத்திகரித்து டெல்லிக்கு கொண்டு வருகிறார்கள். மீதமுள்ள தண்ணீரை கங்கையில் இருந்து எடுக்கிறார்கள்.

    டெல்லி நகருக்கு ஒரு நாளைக்கு 125 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 95 கோடி கேலன் தண்ணீரை டெல்லி குடிநீர்வாரியம் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. வழக்கமாக கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் அது அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மழை குறைந்ததால் யமுனையில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    அதே நேரத்தில் அரியானா மாநிலத்தில் யமுனையில் அதிகப்படியான மணலை அள்ளியதால்தான் தண்ணீர் வற்றிப்போனதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இருக்கிற தண்ணீரும் ரசாயனம் கலந்திருப்பதால் அதை சுத்திகரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது கடினமான காரியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×