search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி கூட்டம்"

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    புதிய வடிகால்கள்

    தூத்துக்குடி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கிரேட் காட்டன் சாலை பார்டர் பஜாரில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு குத்தகை உரிமத்திற்கு பொது ஏலம் ஒப்பந்தம் கோரியவர்களுக்கு அனுமதி வழங்குதல், ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளி கோராத கடைகளுக்கு மறு ஏலம் விடப்படுகிறது,

    மாநகராட்சி முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், ரஹ்மத் நகர், அய்யாசாமி காலனி,பொன் சுப்பையா நகர், லூர்தம்மாள் புரம் மற்றும் செயின்ட் மேரிஸ் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் பெய்த பருவ மலையின் காரணமாக அதிக அளவு வெள்ள நீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

    எனவே அந்தப் பகுதியில் மழை நீர் தேங்காமல் தடுக்கும் வகையில் ஆசிய மேம்பாட்டு வங்கி கடன் மானியம் மற்றும் உள்ளாட்சி பங்கு தொகையுடன் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 4 சிப்பங்களாக ரூ.87.01 கோடி மதிப்பீட்டில் 36.36 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வடிகால் திட்ட பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டுராஜா, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ்,சேகர், ராமச்சந்திரன், ஹரிகணேஷ்,ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாமன்ற உறுப்பினர் நிதியை உயர்த்தக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள், மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பான விவாதம் நடந்தது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் துணைமேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. மாமன்ற குழு தலைவர் ஜெயராமன் பேசும்போது, எங்களுக்கு உரிய இருக்கை வசதி செய்துதர வேண்டும் என்றார்.

    அவரை தொடர்ந்து மாமன்ற குழு துணைத் தலைவர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் இருக்கை கேட்டு பிரச்சினை செய்தனர். 92-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கருப்புசாமி பேசும்போது, இது உள்கட்சி பிரச்சினை. இங்கு மக்கள் பிரச்சினையை மட்டும் தான் பேச வேண்டும் என்றார். இதனால் தி.மு.க. மாவட்ட உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் விவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

    காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, மக்கள் பிரச்சினையை மாமன்ற கூட்டத்தில் பேசுங்கள். வேறு பிரச்சி னையை தனியாக மேயரிடம் சென்று கூறுங்கள் என தெரிவித்தார். உடனே அவரை எதிர்த்து ஒரு தி.மு.க. கவுன்சிலர், "நீங்கள் மட்டும் மாமன்ற கூட்டத்திற்குள் ராகுல்காந்தி படத்தை கொண்டு வந்து பேசியது எந்த வகையில் நியாயம்? என ஒருமையில் பேசியதால் சலசலப்பு அதிகமானது.

    இரு தரப்பையும் சமாதானம் செய்ய மேயர் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. சுமார் 1 மணி நேரம் மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் அருகில் வந்து வாக்குவாதம் செய்தனர்.

    முடிவில் மேயர் பேசும்போது, உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் காவலர்களை வைத்து வெளியேற்ற செய்ய வேண்டியது இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் அனைவரும் அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர்.

    பின்னர் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடந்தது.

    67-வது வார்டு உறுப்பினர் நாகநாதன் பேசும்போது, விராட்டிபத்து பகுதியில் சாலை வசதி சரியில்லை. அந்த பகுதியில் பாலம் கட்டும் பணியை செய்த தனியார் நிறுவனம் சாலைகளை சேதப்படுத்தி விட்டது. மேலும் எச்.எம்.எஸ்.காலனி பகுதியில் பாதாள சக்கரை வசதி போன்றவை செய்து தர வேண்டும்.

    அவரை தொடர்ந்து பேசிய 64-வது வார்டு உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சோலை ராஜா பேசும்போது, மதுைரயைவிட குறைந்த வருவாய் ஈட்டக்கூடிய கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு மேம்பாட்டு நிதியாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை குறைவாக உள்ளதால் அதனை தலா ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார். 

    • மாமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு வரும் அமர்வுக்கான அகவிலைப்படி ரூ.800-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக மாற்றப்படுகிறது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    திருக்குறளை வாசித்து மேயர் சரவணன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு கவுன்சிலர்கள் தங்களது வார்டு சம்பந்தமான குறை களை தெரிவித்து பேசினர்.

    கலைஞர் நினைவாக

    பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு வரும் அமர்வுக்கான அகவிலைப்படி ரூ.800-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக மாற்றப்படுகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்பது, மாநகராட்சி அலுவலகம் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்திற்கு டாக்டர் கலைஞர் வணிக வளாகம் என பெயர் சூட்டுவது.

    ஓய்வெடுக்கும் அறை

    புதிய பஸ் நிலையத்தில் முதல் தளத்தில் ஏலம் போகாத 60 கடைகளை பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகளாக மாற்ற செலவினம், ரூ.447.75 கோடி மதிப்பிட்டில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் நடக்கும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை உள்ளிட்டவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், கருப்பசாமி கோட்டை யப்பன், சுதா மூர்த்தி, அனுராதா சங்கரப்பாண்டி யன், கிட்டு என்ற ராம கிருஷ்ணன், சந்திரசேகர், ரவீந்தர், முத்துலட்சுமி சண்முகையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
    • 12 தீர்மானங்கள் மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொட ங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் ஸ்மார்ட்சிட்டி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகளை அளவிடு செய்யவும், செலவின பட்டியல் தயார் செய்யவும், பார்வையிடவும் போதிய பணியாளர்கள் இல்லாததால் இளநிலை பொறியாளர்களுக்கு உதவிட ஒவ்வொரு நிலையிலும் என 11 தொழில் நுட்ப உதவியாளர்கள் நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம் நியமனம் செய்தல்.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டுரங்கன் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட போதிய இடம் இல்லாததால் சத்திரம் தெரு அம்மா உணவகம் பின்புறம் உள்ள மாநகராட்சி இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 8 ஆரம்ப சுகாதார மையங்களில் நகர்புற வாழ்வாதார மையம் மூலம் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஊதியம் வழங்குதல், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி, குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு செய்தல் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் 12 சிப்பங்களாக பிரித்து ரூ.20 கோடியே 35 லட்சத்தில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டம் 2022-2023-ன் கீழ் மேற்கொள்ளுதல்.

    மாநகராட்சி துணை மேயருக்கு அலுவலக பயன்பாட்டிற்கு ஒதுக்கப்ப ட்டுள்ள வாகனத்தை ஓட்டுவதற்கு தற்காலிக அடிப்படையில் ஓட்டுனர் நியமனம் செய்தல், இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி 2017 -ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களால் திட்ட நிதி மற்றும் பொது நிதியின் கீழ்மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை கட்டணம் 12 சதவீதம் வழங்க தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மத்திய அரசு கடந்த ஜூலை 13-ந்தேதி அறிவிப்பின்படி சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் 47-வது கூட்டத்தில் ஒப்பந்ததாரர்களின் 12 சதவீதத்திலிருந்து வரி 18 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 18-ந்தேதி . முதல் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக பணியின் தொகைக்கு ஏற்ப உயர்த்தி வழங்குதல் உட்பட 12 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ்,ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ்,சேகர், ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜெயலலிதா படம் வைக்க அ.தி.மு.க. கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மாநகராட்சி கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் புகைபடங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி

    சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. இதில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவுன்சிலர்கள் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும், தினசரி பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கே வந்து வாறுகால் இல்லாமல் உள்ளது. தண்ணீர் வர வில்லை, சாலை வசதி இல்லை என்ற அடிப்படை வசதிகள் குறித்து எங்களிடம் முறையிட்டு வருகின்றனர் என்றனர்.

    மேலும் இதை மாமன்ற கூட்டத்தில் பலமுறை அறிவித்தும் அதிகாரிகள் தொடர்ந்து அந்த பணிகளை செய்வதில் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டினர். இது குறித்து அனைவரின் குறைகளும் நிவர்த்தி செய்து அடிப்படை வசதிகள் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.

    மாநகராட்சி கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் புகைபடங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் கரைமுருகன், தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் முன்னாள் முதல்வர்கள் வரிசையில் ஜெயலலிதாவின் புகைப்ப டம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    • திண்டுக்கல் மாநகராட்சி இயல்பு கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் இயல்பு கூட்டம் பொருள் 65, அவசர கூட்ட பொருள் 13 என மொத்தம் 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி இயல்பு கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணைமேயர் ராஜப்பா, ஆணையாளர் சிவசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அதனைதொடர்ந்து உறுப்பினர்கள் பல்வேறு குறைகள் தொடர்பான புகார்களை அடுக்கடுக்காக தெரிவித்தனர். அதன் விபரம் வருமாறு,

    மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப துப்புரவு தொழிலாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். பழனி ேராட்டில் அதிகளவு மருத்துவமனைகள் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் மருத்துவகழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. பஸ் நிலையத்தை சுற்றி அதிகாலையில் ஆம்னி பஸ்கள் ஆக்கிரமிப்பு செய்து விடுவதால் அந்த சாலையை கடக்க முடியாத நிலை உள்ளது.

    ரெங்கநாயகி நகரில் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவுகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பணிக்காக பல மாதங்களாக பணிகள் தொடங்கி இன்னும் நிறைவுபெறாமல் உள்ளது. அதனால் அந்த சாலையை கடக்க முடியாமல் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை விரைந்து முடிக்க வேண்டும்.

    நகரில்செயல்படும் பல்வேறு டூவீலர் ஸ்டாண்டுகளை வரன்முறைப்படுத்த வேண்டும். காந்தி மார்க்கெட்டில் இருந்து தினசரி வெளியேறும் கழிவுகள் சாலையோரமே கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மாநகராட்சி காண்டிராக்ட் பணிகள் மேற்கொண்ட பலருக்கு பணம் கொடுக்காமல் உள்ளது. அவர்கள் கடன்வாங்கி பணிகளை செய்தும் பணம் கிடைக்காததால் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு விரைந்து பணம் வழங்கவேண்டும்.

    கடந்த அ.தி.மு.க மாநகராட்சி கூட்டம் நடந்தபோது 48 மைக்குகள் இருந்தது. தற்போது புதிதாக தி.மு.க தலைமையிலான மாநகர கூட்டம் தொடங்கியது முதல் 48 மைக்குகளை காணவில்லை. அவை எங்கு போனது என தெரியவில்லை. நகர்பகுதியில் சாலை அமைக்கும்போது அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்காமல் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகின்றனர். எனவே ஒவ்வொரு பகுதியிலும் சாலைப்பணி அமைக்கும்போது அப்பகுதி மக்களின் கருத்துகளையும் கேட்கவேண்டும் என உறுப்பினர்கள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளிவீசினர்.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆணையர் பதில் அளிக்கையில், துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறோம். எரியாத தெருவிளக்குகள் எங்கு உள்ளது என்பதை கண்டறிந்து அதனை உடனுக்குடன் சரிசெய்து தருகிறோம். இதேபோல் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் நிறைவேற்றித்தரப்படும் என்றார்.

    கூட்டத்தில் இயல்பு கூட்டம் பொருள் 65, அவசர கூட்ட பொருள் 13 என மொத்தம் 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கூட்டத்தில் திருக்குறள் வாசித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • 55-வது வார்டில் அவிநாசி சாலை செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது.

    கோவை

    கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. துனை மேயர் வெற்றிசெல்வன், கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருக்குறள் வாசித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல் முறையாக மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கமிஷனர் பிரதாப்புக்கு மேயர் கல்பனா மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் 44-வது ஒலிம்பியாட் போட்டியை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். 18 மாதங்கள் நடக்க வேண்டிய பணிகளை 4 மாதங்களில் முடித்து காட்டியுள்ளார். இது இந்தியாவிற்கு பெருமை ஏற்படுத்தி உள்ளது.

    அனைத்து மண்டலங்களிலும் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார பணியாளர்களை புதிதாக நியமனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கிழக்கு மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக் பேசுகையில், விமான நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கழிவுநீர் புகுந்து தேங்கி நிற்கிறது இது மழைக்காலங்களில் ஊருக்குள் போகும் வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 55-வது வார்டில் அவிநாசி சாலை செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.

    வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பேசும் போது, வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கப்படும் போது அந்த பகுதியில் உள்ள மற்ற குழாய்கள் உடைந்து சேதமடைகிறது இதனால் அடிக்கடி நீர் வெளியேறுகிறது.

    எனவே அதனை சரி செய்ய வேண்டும்.மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மேயர் வீட்டுக்கு ஒரு கோடி செலவு செய்யப்பட்டு பணம் வீணாக்கப்படுகிறது என அ.தி.மு.க கவுன்சிலர் தெரிவித்துள்ளார் அதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கல்வி குழு தலைவர் மாலதி பேசும்போது பூங்காக்கள் கல்வி விளையாட்டு மைதானம் எங்களது குழுவில் உள்ளது. ஆனால் தற்போது மாமன்ற செயலாளர் கல்வி மட்டும் தான் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் எங்களுக்கு வராது என கூறுகிறார். இது எங்களது உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே இதற்கு உடனடி தீர்வு வேண்டும் என்றார் இதனால் மாவட்ட கூட்டத்தில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது இது எடுத்து மேயர் 4 நாட்களில் இதற்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

    இதேபோல் கோவை மாநகரில் கடந்த 3 மாத காலத்தில் மட்டும் ரூபாய் 161 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையாளர்.பிரதாப் தெரிவித்தார்.

    • திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்
    • தற்போது அந்த தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற காரணத்தினால் மலைக்கோட்டை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது

    திருச்சி

    திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது. துணை மேயர் திவ்யா, மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுரேஷ் பேசும்போது, மாவடி குளத்தை உடனடியாக தூர்வார வேண்டும். சாலைகளில் ஆங்காங்கே கேபிள் ஒயர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

    இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே உடனே இதை சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை முற்றிலுமாக முடித்து விட்டு சாலைகளை போட வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் பன்னீர்செல்வம் பேசும்போது, சத்திரம் பகுதியில் பழைய கரூர் ரோட்டில் அடிக்கடி பாதாள சாக்கடை பழைய குழாய்கள் வெடித்து விடுகின்றன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

    தி.மு.க. கவுன்சிலர் ராமதாஸ் பேசும்போது, கருமண்டபம் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 4, 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். லாரி தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்படவில்லை என செல்கிறார்கள் என்றார்.

    19-வது வார்டு திமுக கவுன்சிலர் சாதிக் பாட்ஷா பேசும் போது, எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு மரக்கடை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    தற்போது அந்த தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற காரணத்தினால் மலைக்கோட்டை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதனால் தேவையான தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள் எனவே தண்ணீர் திறப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றார். இவ்வாறு பல்வேறு கவுன்சிலர்களும் தங்கள் வார்டுக்கு உட்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி பேசினர்.

    பின்னர் மேயர் அன்பழகன் பேசும்போது, பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து சாலைகளும் போடப்படும்.

    கருமண்டபம் பகுதியில் சில வார்டுகளை சேர்த்து தண்ணீர் சப்ளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

    ×