search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரத்தில்"

    • குலசேகரம் அருகே விலவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர்
    • இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை

    நாகர்கோவில் : குலசேகரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவுநாகர்கோவில்: குலசேகரம் அருகே விலவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் குமார் (வயது 39), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    சம்பவத்தன்று வீட்டின் அருகில் தோட்டத்தில் உள்ள மரத்தில் பாக்கு பறிப்பதற்காக ஏறினார். அப்போது மரம் முறிந்து கீழே விழுந்தது. இதில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் குமார் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் அய்யப்பன் புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
    • கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது.

    கொல்லிமலை:

    ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

    கொண்டை ஊசி வளைவு

    சுமார் 9 மணியளவில் அரியூர்நாடு பஞ்சாயத்து கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.

    சிகிச்சை

    விரைந்து வந்த வாழவந்தி நாடு போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செம்மேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வாழவந்திநாடு போலீ

    சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.   

    • மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கு இருந்த மரத்தில் மோதியது
    • விபத்தில் மனைவி நிர்மலா கண் எதிரே கணவர் கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முதலியார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (50) விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி நிர்மலா, இவர்களுக்கு சிவ நந்தினி (17), என்ற மகளும், அனிருத் (15) என்ற மகனும் உள்ளனர். சிவ நந்தினி குமாரபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.

    இந்த நிலையில் சிவ நந்தினிக்கு சத்திய மங்கல த்தில் உள்ள ஒரு கல்லூரியில் சீட் வாங்குவதற்காக கந்தசாமி, அவரது மனைவி நிர்மலா, மகள் சிவநந்தினி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அங்கிருந்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அவர்கள் குமாரபாளை யத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    மோட்டார் சைக்கிள் பவானி அந்தியூர் மெயின் ரோடு காடையா ம்பட்டி ஏரி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி அங்கு இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மனைவி நிர்மலா கண் எதிரே கணவர் கந்தசாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் சிவநந்தினி மற்றும் நிர்மலா ஆகியோர் படு காயம் அடைந்தனர்.

    அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தி னர் மீட்டு ஆம்புலன்சு மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவானி அரசு மருத்துவ மனை யில் முதல் சிகிச்சை மேற்கொண்ட பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு செல்லும் வழியில் மகள் சிவ நந்தினி இறந்தார்.

    நிர்மலா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த கந்தசாமி மற்றும் அவரது மகள் சிவ நந்தினி ஆகியோரின் உடல் பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இது குறித்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ளது மலைக் கணுவாய்.
    • இங்குள்ள மரம் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்குபோட்ட நிலையில் தொங்கியதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ளது மலைக் கணுவாய். இதை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது‌. இங்குள்ள மரம் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்குபோட்ட நிலையில் தொங்கியதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து சென்னிமலை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து எந்த விபரமும் உடனடியாக தெரியவில்லை .

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்‌. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து அங்கு மரத்தில் தொங்க விட்டுள்ளனரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

    சென்னிமலை டவுன் அருகே உள்ள வனப்ப குதியில் மலைக்கணுவாய் அருகில் உள்ள மரத்தில் முதியவரின் உடல் தொங்கியது சுற்று வட்டா ரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×