search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
    X

    குலசேகரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

    • குலசேகரம் அருகே விலவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர்
    • இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை

    நாகர்கோவில் : குலசேகரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவுநாகர்கோவில்: குலசேகரம் அருகே விலவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் குமார் (வயது 39), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    சம்பவத்தன்று வீட்டின் அருகில் தோட்டத்தில் உள்ள மரத்தில் பாக்கு பறிப்பதற்காக ஏறினார். அப்போது மரம் முறிந்து கீழே விழுந்தது. இதில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் குமார் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் அய்யப்பன் புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×