search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருந்துறை விபத்து"

    பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தி வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சுள்ளிப்பாளையம், வெற்றி நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(63). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு கேஸ் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாபுரத்தில் இருந்து சுள்ளிப்பாளையம் நோக்கி தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு எதிரே வந்த பைக் ஒன்று எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை எஸ்ஐ ராம்பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    பெருந்துறை அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியதில் வேலூரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். #Accident
    சென்னிமலை:

    வேலூர் காட்பாடி பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கோதண்டம் (வயது 60) என்ற குருசாமி தலைமை யில் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வேனில் புறப்பட்ட னர்.

    வேனில் செந்தில்குமார் (40), பழனி (40), நாகராஜ் (45), நாராயணசாமி (29), விமல் (27), சசி (28), ஜோதி (32), ஸ்ரீமதி (3), அருண் (5), ரோஹித் (7), மோனிஷா (8) உள்பட 13 பேர் இருந்தனர்.

    வேனை வேலூரை சேர்ந்த ராஜ்கபூர் (29) என்பவர் ஓட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த வேன் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    ஓலப்பாளையம் பிரிவு வந்தபோது ஆந்திர மாநிலத்திலிருந்து சிலிக்கான் லோடு ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை வேலூரை சேர்ந்த பலராமன் (53) ஓட்டிச் சென்றார்.

    அந்த லாரியை ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் டிரைவர் முந்த முயன்றார். அப்போது லாரியின் பின்புறத்தில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பழனி, நாகராஜ் ஆகிய 2 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள். குருசாமி கோதண்டத்தின் 2 கால்களும் முறிந்தன.

    வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக இன்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #Accident


    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் அந்தியூர் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாமணி இவரது மகன் வினோத் குமார்(வயது 28).

    கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வினோத்குமார் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு வினோத் குமார் தனது மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து அந்தியூருக்கு புறப்பட்டார்.

    விஜயமங்கலத்தில் இருந்து திங்களூர் செல்லும் வழியில் புதூர்மேட்டு என்ற இடத்தில் வந்த போது, ரோட்டோரம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலை மற்றும் உடம்பில் பலத்த அடிபட்டு மயங்கி உயிருக்கு போராடினார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரள அரசு ஊழியரின் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40), இவர் கேரள மாநில அரசு ஊழியராக உள்ளார்.

    இவர் தனது தந்தை தாமோதரன் (75), தாய் ராதா (60), மனைவி தீபா (36) ஆகியோருடன் சென்னையில் இருந்து கேரளா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

    காரை தேவராஜ் ஓட்டினார். முன் சீட்டில் தாமோதரனும், பின் சீட்டில் ராதா, தீபா ஆகியோரும் இருந்தனர்.

    இன்று அதிகாலை அவர்கள் வந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் பைபாஸ் அருகே வந்து கொண்டிருந்தது.

    திடீரென கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் முன் சீட்டில் இருந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காரில் தாமோதரன் பக்கத்தில் பொருத்தப்பட்ட பலூன் வேலை செய்யாததால் அவர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் தேவராஜ் லேசான காயத்துடன் தப்பினார்.

    பின் சீட்டில் அமர்ந்திருந்த தீபாவும், ராதாவும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காயம் அடைந்த தீபாவையும், ராதாவையும் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகன மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மேக்கூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 75). விவசாயி.

    இவர் இன்று தனது மொபட்டுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார். விஜயமங்கலத்தில் உள்ள பெட்ரோல் பங்குக்கு செல்ல அவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பழனிச்சாமி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பழனிசாமி பரிதாமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான பழனிசாமிக்கு 3 மகள்கள் உள்ளனர்.
    பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மகனுடன் சென்ற தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள பவானி ரோடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த சின்னச்சாமி (வயது 50). விவசாயியான இவருக்கு திருமணமாகி, சித்ரா என்ற மனைவியும், சிவப்பிரகாஷ்(23)என்ற மகன் மற்றும் தர்ஷினி(21) என்ற மகள் ஆகியோர் உள்ளனர்.

    சின்னச்சாமி பெருந்துறைக்கு பைக்கில் வந்துள்ளார். பின்னர் தனது மகன் சிவப்பிரகாஷை பெருந்துறையில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்கள்.

    இவர்கள் பெருந்துறை, அண்ணாசிலை பகுதியில் வந்த போது, இவர்களுக்கு பின்னால் வந்த வேன் ஒன்று பைக்கின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னச்சாமி தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னச்சாமி மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். சிவப்பிரகாஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×