search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மேம்பாலம்"

    • ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.
    • தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியீடு.

    சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், புதிய மேம்பாலத்திற்கான கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைத்தார்.

    அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 900 மீ நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    • பாம்குரோவ் ஓட்டலில் தொடங்கும் மேம்பாலம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடியும் வகையில் அமைய உள்ளது.

    சென்னை:

    சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் ஒன்று வள்ளுவர் கோட்டம் சந்திப்பு. ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சந்திப்பை தினமும் கடந்து செல்கின்றது.

    இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 900 மீ நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    பாம்குரோவ் ஓட்டலில் தொடங்கும் மேம்பாலம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடியும் வகையில் அமைய உள்ளது. வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நான்கு வழி சாலையில் பாவூர் சத்திரத்தில் மட்டுமே ஒரு ரெயில்வே கேட் அமைந்து உள்ளது.
    • பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ.40 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி சாலையினை தற்பொழுது நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் ஒரு பகுதியில் உள்ள கடைகள் முதற்கட்டமாக அகற்றப்பட்டன. பின்னர் வட பகுதியிலும் கடைகள் அகற்றப்பட்டன. அந்த பகுதிகளில் வாறுகால் கட்டும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

    இந்த நான்கு வழி சாலையில் பாவூர் சத்திரத்தில் மட்டுமே ஒரு ரெயில்வே கேட் அமைந்து உள்ளது. இதனால் அந்த இடத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

    புதிதாக அமைக்கப்பட இருக்கும் பாலத்தின் மொத்த நீளம் 900 மீட்டர் ஆகும். ரெயில்வே கேட்டில் கிழக்குப் பகுதியில் 450 மீட்டரும் மேற்குப்பகுதியில் 450 மீட்டர் அளவு கொண்டதாக அமைய உள்ளது.

    இந்த பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ.40 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று தமிழ்நாடு சாலை விரிவாக்க பணி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதன்பின்பு ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் புதிய பால பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

    ×