search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்த நாள் விழா"

    • குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது
    • குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவருமான ஜெகநாதன் தலைமை தாங்கினார்.

    திருவட்டார் :

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் மாத்தார் புனித மரியன்னை முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பா ளரும், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவரு மான ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெபர்சன், ஷிஜு, லிஜீஷ் ஜீவன், ஜெயசந்திர பூபதி, ஆல்பின் பினோ மற்றும் மாவட்ட துணை செயலாளர் ராஜ், குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், ஆற்றூர் பேரூராட்சி துணை தலை வர் தங்கவேல், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் லெனின், நிர்வாகிகள் விஜயகுமார், ராஜகுமார், அப்ரின், லிபின் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் நகர காங்கிரஸ் சார்பில் ,மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் அக்ராவரம்.கே.பாஸ்கர் கலந்து கொண்டு இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் சங்கர்,வாலாஜா ஒன்றிய தலைவர் வி.சி. மோட்டூர். கணேசன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 106 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    திருவட்டார், நவ.20-

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் 106 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட கவுன்சிலர் செலின்மேரி, வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார், காட்டாத்துறை ஊராட்சி மன்றத்தலைவர் இசையாஸ், மாவட்ட நிர்வாகிகள் ஆற்றூர் குமார், ஜாண் இக்னேசியஸ், பென்னட், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஏசுராஜன், கண்ணனூர் ஜோண், ஆற்றூர் ஜாண் வெர்ஜின் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் வினஸ் எல்ஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவட்டார் :

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால்நேரு பிறந்த நாளை முன்னிட்டு திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ.சார்பாக ஆற்றூர் சந்திப்பில் அவரது உருவ படத்துக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, ஆற்றூர் நகர தலைவர் ஜான்வெர்ஜின், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங் குமார், மாவட்ட பொது செயலாளர்கள் ஜான் இக்னேசியஸ், ஆற்றூர் குமார், மாவட்ட செயலாளர் பெனட், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் வினஸ் எல்ஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
    • காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

    என்.ஜி.ஓ.காலனி :

    குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை தலைவர் சி.டி. ஆர். சுரேஷ் தலைமை தாங்கி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட விக்ரம் பிரபு நற்பணி மன்ற தலைவர் கருத்திருமன், குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளையின் செயலாளர் வீரசூரபெருமாள், சட்ட ஆலோசகர் வக்கீல் ரெங்கன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், தவசிலிங்கம், சத்தியன், சுகுமாரன், பனிஜெஸ்டஸ், நாகராஜபிரபு, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பல்வேறு கட்சியினரும் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 88-வது பிறந்தநாள் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாலதி சிவந்தி ஆதித்தன், அனிதா குமரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன், நடிகர் எஸ்.வி.சேகர், தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை குழு சிம்லா முத்துசோழன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல், மாநில வர்த்தகர் அணி தலைவர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நிர்வாகிகள் சீனிவாசன், மதியழகன், கனிமொழி, மீனா, கருணாநிதி, நந்தகுமார், சரவணன், பாஸ்கர், சக்திவேல், விஜி, ஆர்.எஸ்.மனோகரன், கோவிந்தன், விச்சு சிங், மதுரை, கணேஷ், குமார், ஜெகதீஷ், செந்தில், விஸ்வநாதன், கோபிநாத், தளபதி பேரவை தலைவர் அருள்காந்த், நிர்வாகிகள் தண்டபாணி, அறிவுமணி, தாமோதரன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் மற்றும் இ.சி.சேகர், 170-வது வார்டு நிர்வாகி கோட்டூர் கே.குரு. காங்கிரஸ் நிர்வாகி ஜெயம் கக்கன்.

    பாரதிய ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், மாநில சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் யமஹா கே.சுரேஷ், புயல் ராஜாமணி.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் சாரநாத், வேலுமணி, அப்புனு, சேத்துப்பட்டு இளங்கோ, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, வெங்கடேசன், பகலவன், பார்த்திபன்.

    தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி, பிரபாகரன், மாறன், கருப்பையா, பிரபு, எம்.ஆர்.வெங்கடேசன், குமாரி, மேரி.

    த.மா.கா. செயற்குழு உறுப்பினர் டி.சிவபால்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், உயர்மட்டக்குழு உறுப்பினர் டி.உதயகுமார், மாநில மகளிர் அணித் தலைவி நளினி மகேந்திரன், செயலா ளர் ஆரோக்கிய ராணி, சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.வைகுண்ட ராஜா, பொருளாளர் விருகை கே.மணிராஜ், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.சுப்பிரமணியன், பொருளாளர் டி.ராஜ் நாடார், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார்.

    தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அன்பு, காந்திமதி, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி. ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் புரசை சி.நாகராஜ், செயலாளர் எல்.சுந்தரலிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், மகளிர் அணி தலைவி சுமதி, வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் என்.வேலப்பன், செயலாளர் நீலகண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் ஏ.முருகேச பாண்டி, தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ. பாலமுருகன், குன்றத்தூர் ஒன்றியத் தலைவர் ஏ.சி.தர்மராஜ், அயனாவரம் வினோத் குமார், அய்யாவைகுண்டர்

    மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் நாடார், பொதுச் செயலாளர் சுரேஷ் மாறன், பொருளாளர் சிவா, கொள்கை பரப்பு செய லாளர் பேச்சிராஜன், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக பொதுச்செயலாளர் முத்து ராமன், சிங்கப்பெருமாள், பொருளாளர் அருண் குமார், மாநில செயலாளர் தேவேந்திரன், துணைத் தலைவர் விஜயகுமார், துணைச் செயலாளர் சுரேஷ், இளைஞர் அணி செயலாளர் பலவேசம், சாந்தி முத்துராமன், விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மாவட்ட தலைவர்கள் அப்புனு, பாலமுருகன், நிர்வாகிகள் பூக்கடை குமார், இ.சி.ஆர்.சரவணன், ஆர்.கே.நகர் மணி, நவீன், ஓ.எம்.ஆர்.லோகு, சந்திரகுமார், குரு, ஸ்டீபன், தினேஷ், வனிதா, முத்துலட்சுமி, மாலதி, கஜலட்சுமி, விக்கி, ஓ.எம்.ஆர்.ரவி, சகாயமேரி, ஜெய், சரத், எழில், கவியரசன், நரேஷ்குமார், முத்து, ஆனந்த், ராஜேஷ், தரணி, கருணாகரன், கதிர், பிரபா, பிரசாந்த், விஜி, அமர்நாத், கார்த்திக், பிரவீன், அப்பு, மணிபாரதி.

    • மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • இனிப்புகள் வழங்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நெமிலி பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு தலைவருமான வடிவேலு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பவானி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி, நிர்வாகிகள் புருஷோத்தமன் ஹரிகிருஷ்ணன் சங்கர், முகமது அப்துல் ரகுமான், வக்கீல் கார்த்திகேயன், வடகண்டிகை பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கத்தின் செயலாளர் கருப்பையா பிள்ளை நன்றி கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி வட்டார வெள்ளாளர் வ.உ.சி அறக் கட்டளை மற்றும் காரைக் குடி வட்டார வெள்ளாளர் சங்கம் இணைந்து நடத்தும் 37-ஆம் ஆண்டு விழா மற்றும் தியாகச்செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்தநாள் விழா காரைக்குடியில் நடைபெற்றது. வ.உ.சி அறக்கட்டளை பொருளாளர் ராஜமாணிக்கம்பிள்ளை வரவேற்றார். காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங் கத்தின் தலைவர் சேவுகன் பிள்ளை தலைமை வகித்தார்.

    மதுரை மாருதி குரூப்ஸ் நிறுவனர் மாருதி பாலகிருஷ்ணன் பிள்ளை வ.உ. சிதம்பரனார் படத்தை திறந்து வைத்து பேசினார். திருச்சி இந்தியன் வங்கியின் மேனாள் மண்டல மேலாளர் சோமையா பாரதி பிள்ளை பரிசுகளை வழங்கினார். வ.உ.சி அறக்கட்டளையின் தலைவர் சபாபதி பிள்ளை, செயலாளர் முத்து ராமலிங்கம் பிள்ளை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மணிசங்கர் பிள்ளை, முல்லை கொடி உள்ளிட்டோர் பலர் பேசினர். காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கத்தின் செயலாளர் கருப்பையா பிள்ளை நன்றி கூறினார்.

    • ராஜபாளையத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
    • எஸ்.சி துறை தலைவர் கோவிந்தன், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் அய்யனார் தலைமையில் பொதுசெயலாளர் செல்வராஜ், ராஜபாளையம் நகர் காங்கிரஸ் துணைதலைவர் தனசேகரன் முன்னிலையில் ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பொதுகுழு உறுப்பினர் குமாரசாமிராஜா, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், அண்ணாதுரை, ஜ.என்.டி.யு.சி தலைவர் தங்கவேல், விவசாய பிரிவு மாநிலசெயலாளர் மணிகண்டன், செட்டியார் பட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராமர், நாக செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் கோவிந்தன், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்சியினர் தலைப்பாகை மற்றும் மாலை, சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    • முரளிதரன் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

    இதையொட்டி ஓசூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன் தலைமையில் கட்சியினர் மைசூர் தலைப்பாகை மற்றும் மாலை, சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து, முரளிதரன் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் பிரவீன், இர்ஷாத், சுரேஷ், மற்றும் மாவட்ட துணைத்தலைவர் அர்ஷாத், கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • பா.ம.க. சார்பில் மரக்கன்று நடப்பட்டது
    • கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி குளத்துமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் 85-வது பிறந்த நாளையொட்டி நகர பா.ம.க. சார்பில் ஆரணி சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    நகர செயலாளர் பேட்டரி வரதன் தலைமை தாங்கினார்.

    வன்னியர் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ப.மச்சேந்திரன், வந்தவாசி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாபுவிஜயன், ஒன்றிய செயலாளர் மும்முனி வேலு, முன்னாள் மாவட்ட செயலாளர் மன்னப்பன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர் ராமஜெயம் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரமேஷ்,அத்திப்பாக்கம் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன், செம்பூர் என் எஸ் மணி மருதாடு பாபு, ரங்கராஜ், தேவா, விக்கி,செல்வராஜ், சந்தோஷ்,பரத் உள்ளிட்ட பாமக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பழைய பஸ் நிலையம் கோட்டை மூலை பள்ளி தெரு ஆகிய பகுதிகளில் பாமக கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • விருதுநகரில் நாளை காமராஜர் 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடு–களை நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    விருதுநகர்

    நாடார் மகாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வித்தி–ருவிழாவாக விருதுநகரில் நாளை (15-ந்தேதி, சனிக் கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    அதன்படி காலை 8.30 மணிக்கு காமராஜர் இல்லத் தில் நோட்டு, புத்தகங்களை காணிக்கையாக வைத்து அஞ்சலி செலுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் காளீஸ்வரி குழுமம் ஏ.பி.செல்வராஜன் பங்கேற்கி–றார். தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணி வரை காமாட்சி என்ற காமராஜர் விளக்கிற்கு நாடார் மகளிர் மன்றத்தினர் மலர் அர்ச் சனை செய்கிறார்கள்.

    இதையடுத்து நாடார் மகளிர் மன்றத்தினர் திரு–விளக்கு ஏற்றுகிறார்கள். விழாவில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் வரவேற் புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு மெர்க்கண்டைல் இயக்கு–னர்கள் பி.விஜய–துரை, கே.நாகராஜன், பி.சி.ஜி.அசோக்குமார், முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்தி–ரன், குளோபல் பாலிபேக் அதிபர் முரளிதரன் ஆகி–யோர் கல்வித்தாய், கல்வித் தந்தை விருதுகளை வழங்கு–கிறார்கள்.

    இதையடுத்து மாநில அளவில் பேச்சுப்போட்டி–யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெறு–கிறது. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ஆர்.ராதாகிருஷ் ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் தங்கப்பாண்டியன், ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ஏ.ஆர்.ஆர்.ரகுமான், பழனி நாடார் ஆகியோர் கலந்துகொள்கி–றார்கள்.

    மேலும் விழாவில் முன் னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச் சர் மாபா க.பாண்டியராஜன், மான்ராஜ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரெங்கன், எஸ்.எஸ்.கதிரவன், கே.சுரேஷ்குமார், பார்த்திபன், பா.ஜ.க. மாநில துணைத்த–லைவர் கரு.நாகராஜன், ஆறுமுக நயினார், அவனிமா–டசாமி, மாரிக்கண்ணு, வேலுச்சாமி, வி.எஸ்.கந்த–சாமி மற்றும் நிர்வாகி–கள் கலந்துகொள்கி–றார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடு–களை நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    ×