என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாலைவனம்"
- செப்டெம்பர் மாதத்தில் ஷார்ஜாவின் அல் தாகித் பாலைவனத்தில் அசீமி அரிசி நாற்றுகள் நடப்பட்டன.
- அறிவியலால் அதையும் மாற்ற முடியும் என்பதும் நிருபணம் ஆகியுள்ளது.
அரிசி, கோதுமை எல்லாம் எங்கே விளையும்?
தஞ்சாவூர் மாதிரி நஞ்சை நிலத்தில் நு சொல்ல வேண்டாம்.. ஏன் என்றால் பாலைவனத்திலேயே அரிசி விளைகிறது
எந்த பாலைவனத்தில்?
ஷார்ஜா பாலைவனத்தில் தான்..
ஷார்ஜாவிலா? அரிசியான்னு அதிர்ச்சி அடையவேண்டாம்.
தென்கொரியா நாட்டுடன் இணைந்து பாலைவனத்தில் அரிசி விளைவிக்க முடியுமா என ஆராய்ச்சி செய்தார்கள்.
அசீமி எனும் வகை அரிசி தான் இருப்பதிலேயே வெயிலை தாங்கும் தன்மை கொண்டதாக கண்டறியபட்டது.
வெயில் தணிந்த செப்டெம்பர் மாதத்தில் ஷார்ஜாவின் அல் தாகித் பாலைவனத்தில் அசீமி அரிசி நாற்றுகள் நடப்பட்டன.
கடல்நீர் குடிநீராக்காப்பட்டு சொட்டுநீர் பாசனம் உதவியுடன் நீர்ப்பாசனம் நடைபெற்றது.
எந்த பூச்சிக்கொல்லியும், உரமும் அவசியம் இன்றி மே மாதம் அறுவடை நடைபெற்று கால் ஏக்கர் நிலபப்ரப்பில் 763 கிலோ அரிசி வெற்றிகரகமாக அறுவடை செய்யப்பட்டது.
இனி சில ஆண்டுகளில் கோதுமை, காப்பி எல்லாம் விளைவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
ஆக அறிவியலால் அதையும் மாற்ற முடியும் என்பதும் நிருபணம் ஆகியுள்ளது.
- நியாண்டர் செல்வன்
- பாலைவனம் மேலும் பரவாமல் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பது குறித்து மாணவர்களுக்கு போட்டிகள் மூலமாகவும் கருத்தரங்கம் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
- மாணவர்கள் மரம் நடுதல் குறித்தும் பூமி வெப்பமாதல் குறித்தும் ஈர நிலங்களை காப்பது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பாலைவன தடுப்பு தினம் மற்றும் வறட்சி தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. 1994 முதல் ஐநா சபையின் அறிவுறுத்தலின்படி இந்த நாள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது.
பாலைவனம் மேலும் பரவாமல் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பது குறித்து மாணவர்களுக்கு போட்டிகள் மூலமாகவும் கருத்தரங்கம் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் மரம் நடுதல் குறித்தும் பூமி வெப்பமாதல் குறித்தும் ஈர நிலங்களை காப்பது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர். நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி, நாகலூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விழுந்தமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்பிளேண்டிட் நர்சரி பள்ளி, கொளப்பாடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தேசிய பசுமைப்படை சார்பாக இந்த நாள் கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்